-
Posts
1785 -
Joined
-
Last visited
-
Days Won
9
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by Surveyor
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Surveyor replied to தமிழரசு's topic in சிரிப்போம் சிறப்போம்
-
எல்லோரும் சுவர் எழுப்பினாலும் சில இடங்களில் இதைப் இப்போதும் பார்க்க முடிகிறதே.
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Surveyor replied to தமிழரசு's topic in சிரிப்போம் சிறப்போம்
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Surveyor replied to தமிழரசு's topic in சிரிப்போம் சிறப்போம்
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Surveyor replied to தமிழரசு's topic in சிரிப்போம் சிறப்போம்
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Surveyor replied to தமிழரசு's topic in சிரிப்போம் சிறப்போம்
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Surveyor replied to தமிழரசு's topic in சிரிப்போம் சிறப்போம்
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Surveyor replied to தமிழரசு's topic in சிரிப்போம் சிறப்போம்
என்ன ஒரு திமிர்த்தனம். போராட்டங்கள் செய்வதற்கு கோவில் வீதியைப் பயன்படுத்தக் கூடாதென்றால் திருவிழாக் காலங்களில் பொதுமக்களுடைய வீதியைத் தடைசெய்வதற்கு இவர்களிற்கு என்ன அருகதை இருக்கிறது? -
Ops ஒழிக!மோடி ஒழிக!Peta ஒழிக!பங்கஜம் ஒழிக!பெப்சி ஒழிக!" "யோவ்!எல்லாம் ok. நடுல அது யாரு பங்கஜம்?" "என் wife சார், கண்டுக்காதீங்க"
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Surveyor replied to தமிழரசு's topic in சிரிப்போம் சிறப்போம்
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Surveyor replied to தமிழரசு's topic in சிரிப்போம் சிறப்போம்
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Surveyor replied to தமிழரசு's topic in சிரிப்போம் சிறப்போம்
இது அந்த கைப்பைக்கு எடுத்த விளம்பரப் படம்போல இருக்குது. -
-
சுவி அண்ணை, இதயத்தை தொலைத்து கேள்விப்பட்டிருக்கிறேன்.....அது என்ன புதுசா இதயம் ஓடுது என்கிறீர்கள்.
-
வரப்புயர நீர் உயரும்.... நீர் உயர நெல் உயரும்.... நெல் உயர குடி உயரும்.... குடி உயர கோல் உயரும்.... கோல் உயர கோன் உயரும்.............. வரப்பு முக்கியம் கண்டியளோ
-
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
-
-
-
ஆனையிறவு வெளியில் பறக்கிறது புலிக்கொடி கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவின் நிர்வாகத்தின் கீழ் அமைந்துள்ள ஆனையிறவு வெளியில் இன்று அதிகாலை தொடக்கம் தமிழீழத் தேசிய கொடி பறந்து கொண்டிருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கை இராணுவத்தினரின் ஆனையிறவு ஆக்கிரமிப்பிற்கெதிராக 2000 ஆம் ஆண்டு மார்ச் 26ம் திகதி தமிழீழ விடுதலைப் புலிகளால் ஓயாத அலைகள் மூன்று என்ற தாக்குதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இத்தாக்குதலின் மூலம் ஆனையிறவுப் படைத்தளம் தமிழீழ விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது. 35 நாட்களின் பின்னர் தமிழீழ விடுதலைப் புலிகளின் முழுக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட ஆனையிறவுப் படைத்தளமானது, பத்தாயிரத்திற்கும் அதிகமான இலங்கை இராணுவத்தினரின் பாதுகாப்பில் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. குறித்த வெற்றியை நினைவுபடுத்தும் வகையில் இன்று புலிக்கொடியை பறக்க விட்டிருக்கலாம் என்று கருதப்படுகின்றது. அத்தோடு தேசியத்தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்தநாள் இன்று என்பது குறிப்பிடத்தக்கது. விடுதலைப் புலிகளின் கொடி 1977ம் ஆண்டு தொடக்கம் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கொடியாக இருந்து வருகிறது. தமிழீழ விடுதலைப் போரில் வீரமரணமடைந்தவர்களை நினைவுகூர்ந்து மாவீரர் நாளில் (நவம்பர் 21 1990) முதல் தடவையாக பிரபாகரனது பாசறையில் ஏற்றி வைக்கப்பெற்றது. நாட்டைப் போற்றி வணங்குதற்கு ஈடாக தேசியக்கொடிக்கு வணக்கம் செலுத்தப்படுகின்றது. தேசியக்கொடியை வணங்குவது, நாட்டை வணங்குவது போலாகும். நாட்டின் தலைவர், படை, ஆட்சி என்பவற்றைவிடவும் உயர்ந்ததாகத் தேசியக்கொடி மதிக்கப்படுகின்றது. எனவேதான் எந்தவொரு நாட்டிலும் எந்தச் சிறப்பு நிகழ்வுகளின்போதும் நாட்டின் தலைவர், படை வீரர், அரசுப் பணியாளர், குடிமக்கள் அனைவரும் கொடிவணக்கம் செய்கின்றனர். http://www.tamilwin.com/show-RUmtzBRaSWnx2C.html
-
ஒருமுறை ஒன்றாய் கூடி எங்களை அழவிடுங்கள்! [ புதன்கிழமை, 25 நவம்பர் 2015, 05:16.21 PM GMT ] நாங்கள் இந்த நாட்டின் பிரஜைகள் ஆனால் எங்களுக்கு இந்த நாட்டில் உள்ள எல்லா இன மக்களுக்கும் இருக்கின்ற உரிமை எங்களுக்கு இல்லை. நாங்கள் எங்களது உரிமைகளை வென்றெடுப்பதற்காக போராடிய இனம் எங்களது பிள்ளைகள் எங்களது உறவுகள் எங்கள் மீது திணிக்கப்பட்ட வன்முறைக்கு எதிராக ஆயுதம் ஏந்தச் சென்றவர்கள் அவர்களை நாங்கள் ஆயுதம் ஏந்தச் சொல்லவில்லை. என மாவீரர்களின் தாயார் கதறுகின்றார்கள். ஆனால் அவர்கள் எங்கள் பிள்ளைகள். அவர்கள் இறந்தால் அவர்களை நினைத்து அழுவதற்கு எமக்கு உரிமை வேண்டும். எங்கள் இனத்தில் இலட்சக்கணக்கான பிள்ளைகள் உயிரிழந்து உள்ளார்கள். அவர்களை நினைத்து ஒரு விளக்கு கூட ஏத்தக் கூடாது என கூறுவது என்ன நியாயம்? எங்களின் உள்ளக் குமுறல்களை அடக்கியாள நினைப்பதுதான் நல்லாட்சியா? இதுதான் அரசின் நல்லிணக்கமா? என உயிரிழந்த விடுதலைப்புலி போராளிகளின் தாய்மார்கள் தங்களின் உள்ளக் குமுறல்களை வெளிப்படுத்தியுள்ளனர் மாவீரர் மாதமான இந்த மாதத்தில் விடுதலைப்புலிகளின் காலத்தில் உயிரிழந்த தங்களது மகன்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியதாகவும், ஆனால் கடந்த பல ஆண்டகளாக அவர்களுக்கு ஒரு விளக்கு கூட ஏற்றி அஞ்சலி செலுத்த முடியவில்லை. மேலும், தங்களது உறவினர்களை புதைத்த புதைகுழிகளை இராணுவம் அழித்துவிட்டதால் தங்களது பிள்ளைகளுக்கு ஒரு நினைவிடம் கூட இல்லை என்றும், தங்களது ஏக்கத்தை வெளிப்படுத்திய வயதான தாய்மார் சிலர் தங்கது செய்திகளையோ தங்களையோ வெளிக்காட்ட வேண்டமெனவும் முடிந்தால் தங்களது உள்ளக் குமுறல்களை உலகிற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் தெரியப்படுத்துமாறு கூறியுள்ளனர். அவர்கள் கேட்பது நியாயமா? முதலில் இந்த நாட்டில் நடைபெற்ற யுத்தத்தில் ஈடுபட்ட இரண்டு இனங்களைச் சேர்ந்த போர் வீரர்களுக்கும் அஞ்சலி செலுத்துவதற்கான சமமான உரிமையை அரசாங்கம் வழங்கவேண்டும் என்பதே தமிழர்களின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாகவுள்ளது. அதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கினால் நாட்டில் நல்லிணக்கம் உருவாகுவதற்கு சிறந்த வழியாக இருக்கும். முதலில் தமிழ் மக்களை ஒரு இடத்தில் கூடி ஒப்பாரிவைக்க விடுங்கள். அவர்களின் ஆழ்மனங்களுக்கு உள்ளே பதிந்து கிடக்கும், தேங்கிக்கிடக்கும் உணர்வுகளை ஏக்கங்களை கவலைகளை சொல்லி அழுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுங்கள். தமிழ் மக்கள் தங்களது 30 வருட அவலங்களை ஒரு இடத்தில் கூடி சுதந்திரமாக அழுது தீர்க்கட்டும். அவர்கள் அழாதவரை அவர்களின் இருமாப்பக்களும் நெஞ்சுரமும் இன்னும் அதிகரிக்குமே தவிர அது குறையப்போவதில்லை. எனவே தமிழர்களை ஒருமுறை அழவிடுங்கள். நல்லாட்சி அரசே தமிழர்களை ஒருமுறை அழவிடுங்கள். இதுவே தமிழர்கள் மனதில் ஆழப்பதிந்து கிடக்கும் ஏக்கம். எனவே ஒரு முறை அவர்களை அழ விடுங்கள். கார்த்திகைப் பூக்கள் பூத்துக் குழுங்கும் கார்த்திகை மாதமென்றால் வடகிழக்கில் உள்ள தமிழர்களுக்கு ஒரு உணர்வு பூர்வமான மாதமாகும். ஒருபுறம் தமிழ் கடவுளாக முருகனுக்கு கார்த்திகை தீபம். மறு புறம் தமிழர்களுக்காக போராடிய தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரின் பிறந்ததினம். எல்லாவற்றிற்கும் மேலாக தமிழர்களின் விடுதலைக்காய் தன்னை அர்ப்பணித்து ஆகுதியான மாவீரர்களுக்கான மாவீரர் நாள்வாரம் எனக் கார்த்திகை மாதம் தமிழர்களுக்கான மிக முக்கியம் வாய்ந்த மாதமாக திகழ்கின்றது. கடந்த இராணுவ ஆக்கிரமிப்பு காலங்களில் இராணுவ கட்டுப்பாட்டில் இருந்த பலர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மற்றும் மாவீரர் நாள் போன்றவற்றையெல்லாம் இந்த கார்த்திகை தீபத்திருநாளில் விளக்கேற்றி உணர்வு பூர்வமாக அனுஸ்டித்துவருவதாக கூறி இலங்கை இராணுவம் இந்த கார்த்திகை தீபம் ஏற்வதற்கெ தடைவிதித்து வந்திருந்தது. தமிழர்களின் உணர்வுகளை எப்படியெல்லாம் அடக்கியாள சிங்கள தேசம் முற்பட்டாலும் அது வேறோரு வடிவம்பெற்று வெளிவந்தமையே அதிகம். அந்தவகையில் இந்த நல்லாட்சி அரசாங்கம் கூட தமிழ் மக்கள் தங்களின் உயிர் நீத்த பிள்ளைகளுக்கோ அல்லது உறவினர்களுக்கோ அஞ்சலி செலுத்த அனுமதிக்கவில்லை. விடுதலைப் புலிகள் வானத்தில் இருந்து நேரடியாக குதித்தவர்களோ அல்லது வேறு நாட்டில் இருந்து இங்கு வந்தவர்களோ அல்ல. அவர்கள் இந்த நாட்டின் பிரஜைகள் என்பதுடன் அவர்கள் தமிழ் மக்களுக்காக போராடிய தமிழ் பிள்ளைகள். எப்படி சிங்களத் தாய்க்கு இராணுவ வீரன் ஒருவன் எப்படிப் பிள்ளையோ, அப்படித்தான் தமிழ் தாய்க்கு விடுதலைப்புலி வீரன் ஒரு பிள்ளை இதை முதலில் அரசாங்கம் ஏற்றுக்கொள்வேண்டும் இதை ஏற்றுக் கொள்ளாத அரசாங்கம் தமிழ் மக்களுக்கான உரிமைகளை எப்படி கொடுக்கப்போகின்றது? எனவே தமிழர்களிடம் தேங்கிக்கிடக்கும் உணர்வுகளை ஏக்கங்களை கவலைகளை சொல்லி அழுவதற்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுங்கள். தமிழ் மக்கள் தங்களது பல்லாண்டுகால அவலங்களை ஒரு இடத்தில் கூடி சுதந்திரமாக அழுது தீர்க்கட்டும் அதற்கான சுதந்திரத்தை பெற்றுக்கொடுங்கள். மரணித்த என் மகனுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்த அனுமதி கிடைக்குமா? கதறியழுத தாய் போராட்டத்தில் உயிர் நீத்த என் மகனுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்த இந்த நல்லாட்சியில் அனுமதி கிடைக்குமா என ஏக்கத்துடனும் எதிர்பார்ப்புடனும் இருக்கின்றாள் இரண்டு பிள்ளைகளை பறிகொடுத்த தாய். தனது இரண்டு பிள்ளைகளையும் இழந்த துயரத்தில் இருந்த தாய்க்கு தனது கணவனையும் இழக்க நேரிட்டது, இதனால் மிகவும் மனமுடைந்து தனது வீட்டு சுவரில் மாட்டியிருக்கும் படத்துக்கு கூட விளக்குகொழுத்த பயத்தில் இருப்பதாக தெரிவித்தார். நாங்கள் இந்த அரசாங்கத்திடம் கேட்பது இறந்த எங்கள் பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்தும் உரிமையை, என்னைப் போன்று இன்று எத்தனையோ தாய்மார்கள் கண்ணீர் விட்டு கதறுகின்றார்கள் தங்களின் மகள் மற்றும் மகன், கணவன்மார்களின் உருவப்படத்துக்கு ஒரு விளக்கு ஏற்றி அஞ்சலி செலுத்துவதற்கு. எங்களின் மனதில் இந்த நல்லாட்சி அரசாங்கம் நிலைத்து நிற்கவேண்டுமாயின், நாங்கள் கேட்கும் இந்த கோரிக்கையை செவிமடுத்து நல்லதொரு பதிலை தெரிவிக்க வேண்டுமென்றார். http://www.tamilwin.com/show-RUmtzBRZSWnw7I.html
-
மாவீரர் தினம்! ஏற்றப்படுவது தீபங்கள் அல்ல உள்ளத்து தீக்காயங்கள்! விடுதலை இயக்கத்தின் முதல் மாவீரன் லெப்.சங்கர் தன்னுயிரைத் துறந்த நாளின் ஞாபகத்தினை அடியொற்றி அனுஷ்டிக்கப்படும் மகத்தான நாளே மாவீரர் தினம் என அழைக்கப்படுகின்றது. மாவீரர் தினம் ஆரம்பத்தில் அனுஷ்டிக்கப்படுவதற்கும், தற்போது அனுஷ்டிக்கப்படுவதற்கும் ஒரே காரணம் நிச்சியமாக இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். மாவீரர் தினம் தோன்றியமைக்கு பின்வரும் சம்பவம் காரணமாக இருக்கலாம். ஒரு நாள் அதிகாலை, யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள ஒரு வீட்டைச் சுற்றிச் சிங்கள இராணுவம் முற்றுகையிடுகிறது. 1982ம் ஆண்டு அக்டோபர் மாதம் சாவகச்சேரியில் பொலிஸ் நிலையத்தைத் தாக்கியபோது காயமடைந்த விடுதலைப்புலிகளுக்கு அந்த வீட்டில் வைத்துச் சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து இராணுவத்தினரால் அந்த வீடு முற்றுகையிடப்படுகிறது. அவ் வேளையில் அங்கிருந்த ஒரு இளைஞன் முற்றுகையிட்டவர்களை நோக்கி, தான் வைத்திருந்த கைத்துப்பாக்கியால் சுட்டவாறே வீட்டு மதிலைத் தாண்டிக் குதித்து ஓடுகிறான். அவனை நோக்கிச் சிங்கள இராணுவத்தினரின் துப்பாக்கி வேட்டுக்கள் சரமாரியாகத் தீர்க்கப்படுகின்றன. அப்போது அந்த இளைஞனின் வயிற்றில் ஒரு குண்டு பாய்கிறது. படுகாயமுற்ற நிலையிலும் கூட அவன் இராணுவத்தினரிடம் அகப்பட்டு விடக்கூடாது என்ற இலட்சிய உறுதியோடு இரண்டு மைல்தூரம் இடைவிடாமல் ஓடி தன் இயக்கத் தோழர்களின் இருப்பிடத்தை அடைகிறான். விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலகட்டமாகையால் அப்போது அங்கு போதிய மருத்துவ வசதி ஏற்படுத்தப்படவில்லை. அவசர அவசரமாக முதலுதவிகள் செய்யப்பட்ட நிலையில் அவனை தோழர்கள் விசைப்படகு மூலம் கடல்மார்க்கமாகத் தமிழகத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள். இராணுவத்தினரின் தேடுதல் நடவடிக்கை, முற்றுகை இவற்றைத்தாண்டி தமிழகம் செல்ல ஒரு வாரமாகிறது. தமிழகத்தில் தலைவர் பிரபாகரனைக் கண்டு பேசும்வரை அவன் நினைவு தப்பவில்லை. இருந்தபோதிலும் வயிற்றில் ஏற்பட்ட காயத்தின் நிலை மோசமடைந்தது. அவனைப் பிழைக்கவைக்க அவனது தோழர்கள் எடுத்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. தலைவரும், தோழர்களும் கண்கலங்கி நிற்க 27-11-1982 அன்று, மாலை 6.05 மணிக்கு அந்த இளைஞன் இயக்கத்தில் முதற் களப்பலியாகும் பெருமையை அணைத்துக்கொள்கிறான். இதே நாள் இதே நேரமே தமிழீழ மாவீரர் நாளாக நினைவு கூரப்பட்டு, மாவீரர் நினைவுச்சுடர் ஏற்றப்படுகிறது. இந்நிலையில் அன்று ஒருவனின் மரணத்தில் ஆரம்பித்த மாவீரர் தினமானது இன்று பலரின் நினைவலைகளை ஞாபகப்படுத்தும் தினமாக கொண்டாடப்படுகின்றது. இந்நிலையில் 2009 ம் ஆண்டுக்குப் பிறகு தமிழ் மக்களை பொறுத்த வரையில் இழந்த தமது உறவுகளை ஞாபகப்படுத்தவேண்டும் என்பதற்காக மட்டுமா மாவீரர் தினத்தினை கொண்டாடுகின்றார்கள்? என்றால் அதனை முழுமையாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஒவ்வொரு வருடமும் பேரினத்திற்கு தமது தேவைகளை எடுத்துச்சொல்லும் தினமாகவே மாவீரர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது. பேரினம் தமிழினத்தின் தேவைகளை உணர்ந்து, தமிழ் மக்களது தேவைகளை பெற்றுக்கொடுத்திருந்தால் மாவீரர் தினமானது பேரினத்திற்கு நன்றி நவிழும் நாளாகவே தமிழ் மக்களால் அனுஷ்டிக்கப்பட்டிருக்கும். ஆனால் நடந்தது என்ன? தமிழ் மக்களின் சாதாரண கோரிக்கைகளுக்கு கூட கடந்த கால அரசாங்கங்கள் செவிசாய்க்கவில்லை. மாறாக தமிழின உயிர்களையே சாய்த்தன. ஆனால் தற்போது நல்லாட்சி மலர்ந்துள்ள இச் சூழ்நிலையில் நல்லாட்சி அரசாங்கம் தமிழ் மக்களின் கோரிக்கைகளை நன்கு உணர்ந்து தேவைகளை பெற்றக்கொடுக்க முன்வருமானால், எதிர்வரும் மாவீரர் தினம் நல்லாட்சி அரசாங்கத்திற்கு நன்றி கூறும் நாளாகும் என்பதில் எவ்வ்வித சந்தேகங்களும் இல்லை. தமிழ் மக்களை பொறுத்த வரை தனது மண்ணில் தான் சுதந்திரமாக வாழும் நாள் வர வேண்டும். சிறைபிடிக்கப்பட்ட அனைத்து தமிழ் போராளிகளும் எவ்வித நிபந்தனையும் இன்றி விடுதலை செய்யப்பட வேண்டும். பறிக்கப்பட்ட காணிகளும், உடைமைகளும் திருப்பி வழங்கப்பட வேண்டும். உயிர் அச்சத்தால் பிறந்த நாட்டை விட்டு அந்நிய நாடுகளில் அநாதைகளாக வாழும் தமிழின சொந்தங்கள், மீண்டும் வந்து தமது சொந்த மண்ணில் சோறாக்கி உண்ண வேண்டும். இத்தனை எதிர்பார்ப்புக்களில் தான் மாவீரர் தினத்தினை தமிழ் மக்கள் இன்றும் அனுஷ்டிக்கிறார்கள் என்பதே நிஜம். தமிழ் மக்களின் மாவீரர் தின எதிர்பார்ப்பு மாண்டவர்களை மீட்டி பார்ப்பது மட்டமல்ல. இனியாவது தமிழ் மக்கள் தனது சொந்த மண்ணில் மார்பு தட்டி வாழவேண்டும். இனி பிறக்கும் தமிழ்த்தாயின் செல்ல குழந்தை சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும். இரத்தம் படிந்த தமிழின வரலாறு இனியாவது எவ்வித தோட்டாக்களின் சத்தங்கள் இல்லாமல் எழுத பட வேண்டும். அதுவரையில் எந்த எதிர்ப்பு வந்தாலும், மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படும் என்பதே நிஜம். ஆயுத கூர்முனையில் மாவீரர் தினத்தை தடுக்கலாம். ஆனால் ஆழமாக வேர்கொண்டுள்ள ஆள் மனது காயங்களை என்றும் தடுக்க முடியாது. போராட்டமே வாழ்க்கையாகி போன ஆண்டான் அடிமை முறைமையின் எச்சசொச்சங்களை இன்றும் பழக்கமாக்கிக் கொண்டுள்ள பேரினம், பகைமைகளை மறந்து, தோழமையின் வலிமையினை உணர்ந்து, தமிழ் மக்களின் தேவைகளுக்கு முழுமையாக செவி சாய்த்து, உண்மை பௌத்த நெறியின் பிரகாரம் வாழ தலைப்பட்டால், 2016 ம் ஆண்டின் மாவீரர் தினத்தில் தமிழ் மக்கள், உங்களுக்காக சேர்த்து ஒரு விளக்கு ஏற்றுவார்கள். உள்ளத்தால் போற்றுவார்கள். அதுவரையில் தமிழ் மக்களின் உள்ளத்து தீ காயங்கள் தீபங்களாக ஏற்றப்பட்டுக்கொண்டேயிருக்கும். -திவி- http://www.tamilwin.com/show-RUmtzBRZSWnwzF.html
-
அனைவருக்கும் வணக்கம், இத்திரியில் தொடர்ந்தும் ஊக்கத்துடன் பதிவிட்டுவரும் உறவுகளுக்கு மிக்கநன்றி. இவ்வருட மாவீரர்தின நிகழ்வுகள் பற்றி உங்களுக்கு தெரிந்த இத்திரியில் பதியப்படாத நிகழ்வுகள் பற்றி தெரிந்திருந்தால் அவற்றை இங்கு பதிவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.