Everything posted by நன்னிச் சோழன்
-
உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்... | நெடுந்தொடர்
பாகம் - 8 'முகாமுக்கு செஞ்சிலுவைச் சங்கத்தினர் வருவார்கள், மிகக்கடுமையான நோயாளிகளை திருக்கோணமலை ஆஸ்பத்திரிக்குக் கொண்டு போக வேண்டியிருக்கும், “நாங்கள் எங்களுடைய வாகனத்தில் உங்களை ஆஸ்பத்திரிக்குக் கொண்டுபோகிறோம். ஆனால் இடையில் இராணு வமோ, முஸ்லிம் ஊர்காவல் படையோ உங்களை எமது வாகனத்திலிருந்து இறக்கிக் கொண்டு போனால் எங்களால் ஒன்றும் செய்ய முடியாது. இதற்குச் சம்மதமானால் வாகனத்தில் ஏறுங்கள்” என்று கூறுவார்கள். யாராவது போகச் சம்மதிப்பார்களா? நடப்பது நடக்கட்டும் என்று இங்கே கிடந்து சாக வேண்டியதுதான்!” என்றார்? வாகனங்களில் இருந்து இவ்வாறு யாராவது இறக்கி எடுக்கப்பட்டிருக்கிறார்களா? என்று கேட்டேன். ஆலங்கேணியில் மூன்றுபேரும் ஜெயபுரவில் ஒன்பது பேரும் இவ்வாறு இறக்கி எடுக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் அது சண்டை தொடங்கியவுடன் இ.போ.ச. பஸ்களில் இருந்து என்றார். சரி செஞ்சிலுவைச் சங்கத்தை விடுங்கள். வேறு யார்யாரிடம் இந்த விடயங்கள் தொடர்பாகமுறையிட்டிருக்கிறீர்கள்: என்றேன். பச்சநூர் முகாமுக்கு பாராளுமன்றத் தூதுக்குழுவொன்று அகதிகளைப் பார்வையிட வந்தது. அதில் மாவை சேனாதிராசாவும் வந்திருந்தார். அகதி முகாம் கொடுமைகளை அவரிடம் சொல்லி எமது பாதுகாப்புக்கு ஏதாவது ஏற்பாடு செய்யுங்கள் என்று அவரிடம் அகதிகள் கேட்டார்கள். "எங்களுக்கே பாதுகாப்பு இல்லை உங்களுடைய பாதுகாப்புக்கு நாங்கள் என்ன செய்வது என்றார் மாவை சேனாதிராசா. இதற்குப் பின் அவர்களோடு பேச என்ன இருக்கிறது? என்று வினாவினார். உயர் இராணுவ அதிகாரிகள் யாரிடமாவது இது சம்பந்தமாகக் கதைக்க வில்லையா? என்று கேட்டேன். இந்தப் பகுதியில் சுரேஸ் காசிம் என்ற முஸ்லிம் இராணுவ அதிகாரிதான் எல்லா நடவடிக்கைகளுக்கும் காரணமாக இருக்கிறான். அவனிடமும் மக்கள் கேட்டார்கள். ‘பிடித்துக் கொண்டு போகப்பட்டவர்களின் நிலைமை என்ன மாதிரி?’ என்று அதற்கு அவன் சொன்ன பதில் ‘அகதி முகாம்களில் இருந்து பிடிபடுபவர்களைப் பற்றி மட்டும் எதுவும் கேட்க வேண்டாம். சாப்பாடு இல்லை தண்ணீர் இல்லை இதைப் போன்ற குறைபாடுகளைச் சொல்லுங்கள் நாங்கள் நிறைவேற்றித் தருகிறோம்’ என்று சொல்கின்றான் என்றார் அவர். நானும் சுரேஸ் காசிமைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்தான் என்றேன் நான். 'போன கலவரத்தில் ஆலங்கேணியில் இருந்த ஒரு பெண் பிள்ளையைத் தேடிப் போயிருக்கிறான் சுரேஸ் காசிம். அந்தப் பிள்ளை இயக்கத்துக்கு நல்ல உதவி. வீட்டுக்குப் போய் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டவுடன் அந்தப் பிள்ளையின் தங்கச்சிதான் முன்னுக்குப்போனது. அக்காவுக்கு ஆபத்து என்பதைத் தெரிந்து கொண்டு நான்தான் அவள் என்று சொன்னது. தலையிலிருந்து கால்வரை மூன்று மகஸீன் பொழிந்து தள்ளினான். ஆள் இரண்டாகப் போய்விட்டது என்றார். ‘என்ன இயக்கப் பாஷையெல்லாம் பேசுகிறீர்கள்?’ என்று கேட்டேன். நாளாந்தம் இயக்கத்தோடுதான் பழகுகிறோம். திருக்கோணமலையைப் பொறுத்தவரை இயக்கமும் பொதுமக்களும் வேறு வேறல்ல. எல்லாப் பிரச்சினையும் எல்லோருக்கும் தான் என்றார் அவர். சரி மீண்டும் சந்திப்போம் என்று அவரிடமிருந்து விடைபெற்றுக்கொண்டோம். போகும் வழியில் பதுமனுக்கு ஒரு செய்தி கிடைத்தது. 22-09-90 அன்று புதுக்காவே என்ற இடத்தில் சிங்கள ஊர் காவல் படையினர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதில் மூன்று ஊர் காவல் படையினர் கொல்லப்பட்டதாயும் இரண்டு சொட் கண்கள், எட்டுத்தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டதாயும் அச்செய்தியில் விபரமாக எல்லாம் குறிப்பிடப் பட்டிருந்தது. நாம் போய்ச் சேர்ந்த முகாமில் இருதினங்கள் தங்கினோம். பின்னர் 24-09-90 அன்று பிற்பகல் எமது பணயம் ஆரம்பமானது. இப்பயணத்தில் 1979 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து இயக்கத்துடன் ஈடுபாடு கொண்ட ஒருவரைச் சந்தித்தோம். அன்றிலிருந்து இவரும் எமது பயணத்தில் இணைந்து கொண்டார். இவரது பெயர் துரைநாயகம். நான்கு பிள்ளைகளின் தந்தை. சிறிலங்கா, இந்திய இராணுவங்களிடம் பிடிபட்டு சிறையில் இருந்தவர். திருமலை பற்றிய புள்ளி விபரங்கள் நிறையவே வைத்திருந்தார். எந்தச் சம்பவத்தைக் கேட்டாலும் திகதி வாரியாகக் கூறுவார். அவ்வளவு ஞாபகசக்தி படைத்தவர். பொதுமக்களை நாங்கள் சந்தித்த பின்னர்தான் திருமலையில் எவ்வளவு குடும்பஸ்தர்கள் முழுநேர உறுப்பினர்களாக பணியாற்றுகின்றார்கள் என்பதை உணர முடிந்த். இவர்களை வெறும் ஆதரவாளர்களாக கருதமுடியாது. ஆயுதங்களையும் தூக்கிக் கொண்டு தமது கடமைகளில் முழுமூச்சாக ஈடுபடுவார்கள். “கலியாணம் மட்டும் முடிக்காமலிந்தால் உங்களைவிட நான் தீவிரமாயிருப்பேன்” என்று வீரம் பேசும் யாழ்ப்பாணத்துக் கடும்பஸ்தர்கள் பலரை நினைத்துக் கொண்டேன். இந்தப்பாதை அட்டைகள் முதலைகள் உள்ள பாதையென்றார் பதுமன். கறுப்பு நிறமான அட்டைகள் உடலில் பிடித்துக்கொள்ளும் அப்படியே எமது உடலில் உள்ள இரத்தத்தை உறிஞ்சியெடுக்கும் இலேசில் பிடுங்கியெறிய முடியாது. பிடுங்கியதும் உடம்பிலிருந்து இரத்தம் ஓடிக்கொண்டேயிருக்கும். நிறுத்துவரு கஷ்டம் என்றார். முதலைகள் பற்றிக்கேட்டபோது கும்புறு பிட்டியைச் சேர்ந்த ராஜன் என்ற போராளி முதலைக்குப் பலியாகியுள்ளான். 85 ஆம் ஆண்டு அந்தச் சம்பவம் நிகழ்ந்தது என்று கூறினார் அவர். பெரும்பாலும் விலங்குகளைத் தான் முதலை பிடிக்கும் என்றாலும் பெரிய முதலைகள் மனிதர்களை இழுத்துக் கொண்டு போகும் என்றார். "முதலைபிடித்து யாராவது தப்பியுள்ளார்களா?” என்று கேட்டேன், அப்போது துரை நாயகம் குறுக்கிட்டு "வள்ளி என்ற பெண்ணை முதலை பிடித்தது. பெரிய போராட்டமே நடத்தித்தான் அப் பெண்ணைக் காப்பாற்றமுடிந்தது இப்போதும் அந்தப்பெண் உயிருடன் இருக்கிறார். இப்போது அவரை “முதலை வள்ளி’ என அழைப்பார்கள்" என்றார்- பொருத்தமான பெயர்- வேறு என்ன மிருகங்களால் தொல்லை எனக் கேட்டேன். பாம்பு, யானை, கரடி இவைதான் மிகக் கூடிய தொல்லை கொடுக்கக் கூடியன. மட்டக்களப்புத் தளபதி கருணாவைக்கூட கரடி ஒரு தடவை பிடித்தது” என்றார் பதுமன். மட்டக்களப்பில் உள்ள கரடியனாற்றைச் சேர்ந்த துமிலன் (விஜய குமார்) என்ற போராளி பாம்பு கடித்து இறந்த சம்பவம் எனக்கு ஞாபகம் வரவே திருமலையில் யாருக்காவது பாம்பு கடித்ததா என்று கேட்டேன், ‘‘சமீபத்தில் கூட காயமடைந்த ஒரு போராளியைக் கொண்டு வரும் போது இராணுவத்தினர் தாக்கினார்கள். இராணுவத்தினருடன் மோதிக் கொண்டு ஒரு பற்றைக்குள் போகும் போது ஒருவனுக்கு பாம்பு கடித்தது. இருக்கும் இடத்தில் பாம்பு. எதிரில் இராணுவம். போராளிகளின் நிலை எப்படியிருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்' என்றார். தொடர்ந்து “இப்படி காயமடைந்தவர்களைக் கொண்டு வரும்போது மட்டும் பன்னிரண்டு போரா ளிகளை இழந்துள்ளோம்' என்றார். சிங்கள இராணுவம், சிங்கள ஊர்காவல்படை, முஸ்லிம் ஊர்காவல்படை, அட்டை, பாம்பு, கரடி, யானை, காட்டிக் கொடுப்போர் இப்படி எத்தனை விலங்குகளுடன் தான் போராட்டத்தை நடத்த வேண்டியுள்ளது என் நினைத்துக் கொண்டேன். (தொடரும்)
-
உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்... | நெடுந்தொடர்
பாகம் - 7 தம்பலகாமத்தில் ஜோண் சில்வா என்றொருவன் இருக்கிறான். தமிழர் மத்தியிலேயே இவனும் இருந்து வந்திருக்கிறான். பட்டிமேட்டில் உள்ள பிள்ளையார் கோயில் காணியில்தான் இவனது வீடு இருந்தது இவனுக்கு இரண்டு பெண்களும் ஆண்பிள்ளையும் உண்டு. இவனது மகனை றாலாமி' என அனைவரும் அழைப்பர். இவனது பெயர் விஜேதாஸ. என்ன காரணத்தினாலோ ஜே. வி. பி. யினர் றாலாமியைச் சுட்டு விட்டனர். தம்பலகாமத்தில் நிறைய மாடுகள், எருமைகள் உண்டு. இங்கு பாலை வாங்கி அதைக் கொழும்புக்கு அனுப்பி வியாபாரம் செய்வதுதான் ஜோண் சில்வாவின் தொழில். அதனால் இவன் பெரிய பணக்காரனாகி விட்டான். அத்துடன் தம்பலகாமம் கோணேசர் கோயிலுக்குச் சொந்தமான காணியில் விவசாயம் செய்துவந்தான். ஆரம்பத்தில் இவனுக்கு குத்தகைக்கு வயலைக் கொடுத்து வந்த கோணேசர் கோயில் நிர்வாகம் பின்னர் குத்தகையை ஏலத்தில் விட ஆரம்பித்தது. ஏலத்தில் இவனுக்கு நிலம் நிலம் கிடைக்காமல் போயிற்று. பின்னர் தமிழர்களுக்குச் சொந்தமான காணியில் போய் அத்துமீறியிருந்தான் அத்துமீறி இருக்கும் இவனை வெளியேற்ற தமிழரான உதவி அரசாங்க அதிபர் முயற்சித்தார். இவனுக்கும் உதவி அரசாங்க அதிபருக்கும் பலப்பரீட்சை நிகழ்ந்தது. அன்றிலிருந்து தம்பலகாமத்துக்கு சிங்களவரே உதவி அரசாங்க அதிபராக இருக்கிறார். சட்ட விரோதமாகக் குடியேறிய சிங்களவனைக் காப்பாற்ற உதவி அரசாங்க அதிபர் பதவிக்கு தொடர்ந்து சிங்களவரை அரசு நியமிக்கிறது என்றார். தம்பலகாமம் கோயிலுக்கு எத்தனை ஏக்கர் வயல் உள்ளது?' என்று கேட்டேன். 'ஆயிரம் ஏக்கர் வரையில் இருக்கும்' என்றார். தொடர்ந்து தம்பலகாமம் கோயில் வீதியில் அரசமரம் ஒன்று நின்றது. தற்போது அது வெட்டப்பட்டுவிட்டது. அரசமரம் அங்கே இருந்தபடியால் தம்பலகாமம் கோயிலுக்குச் சொந்தமான காணியின் அரைப்பங்கு சிங்களவர் வர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று கூறி சிங்களவரை குடியேற்றும் முயற்சிகளில் ஜோண்சில்வா ஈடுபடுகிறான் என்றார். அது சாத்தியப்படக் கூடிய விஷயமா? என்று கேட் டேன். "ஏன் இன்று 13ஆம் கட்டை, ஜெயந்திபுர எல்லாம் சிங்களவர் குடியேறவில்லையா? குடியேறிய பின் சிங்களப் பெயரை வைத்தால் அதன் பின் அது சிங்களக் கிராமம்தானே! அதுதானே இங்குள்ள நடை முறை என்றார். அரசமரம் நின்ற இட மெல்லாம் சிங்கள இடமாம்; புதிய விளக்கம் (பின்னர்நான் சந்தித்த துரைநாயகம் என் பவரும் அரசமரத்தை வெட்டியதாகக் குற்றஞ்சாட்டப்பட்டவர். பாராளுமன்றத்தில் கூட சிறில் மத்யூ இந்தப் பிரச்சினையை எழுப்பியிருந்தார். திரு. துரைநாயகம் ஒரு கட்டத்தில் "முளைக்கும் ஒவ்வொரு அரச மரத்தையும் வெட்டுவதன்மூலம் எதிர் காலத்தில் வெட்டுப்படவிருக்கும் தமிழரின் எண்ணிக்கையை வெட்டுகிறோம்' என்று விளக்கம் கொடுத்தார்.) “அதெப்படி”? என்று நான் கேட்டபோது 'அரசமரம் இருக்கும் இடமெல்லாம் புத்த விகாரை இருக்கவேண்டும். புத்தவிகாரை ன் மணி ஓசை கேட்கும் இடமெல்லாம் சிங்களவருக்குச் சொந்தமான நிலம் என்று சிறில் மத்யூ ஒரு கட்டத்தில் கூறியிருந்தார். சிறில் மத்யூ ஊட்டிய இன வாத விதைதான் இன்று தானே முளைக்கும் அரசமரத்தைச் சுற்றியுள்ள இடமெல்லாம் சிங்களவருக்குச் சொந்தமான இடமென்று வாதிட வைக்கிறது' என்று விளக்கம் கொடுத்தார். சிங்கள ஊர்காவல்படையி னரைத் தூண்டி விடுவது ஜோண்சில்வாதான் என்றார். சிங்கள ஊர்காவல் படையால் இந்தமுறையும் தொந்தரவு உண்டா? என்று கேட்டோம் - தற்சமயம் மிகப்பிரச்சினையானவர்கள் முஸ்லிம் ஊர்காவல்படையினர் - முன் னர் சிங்கள இராணுவம், சிங்கள ஊர்காவல்படை என்றிருந்து பின்னர் இந்திய இராணுவம் என்றிருந்து தற்பொழுது முஸ்லிம் ஊர்காவல்படை தமிழர் அழிப்பை பொறுப்பேற்றிருக்கிறது. எப்போதும் தமிழர்களுக்கு அழிவைத்தான் ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறார்கள். தமிழின அழிப்பில் நடிகர்கள்தான் மாறியிருக்கிறார்களேயொழிய பாத்திரங்கள் மாற வில்லை என்றார் விரக்தியுடன். இந்திய இராணுவம் அப்படியென்ன வித்தியாசமாகச் எல்லா இடமும் செய்தது? தமிழரைச் சுட்டது போல இங்கேயும் சுட்டிருக்கும்!' என்றேன். தம்பலகாமம் கள்ளிமேட்டைச் சேர்ந்த நவரட் ணம் என்பவரை உடம்பில் துணியால் சுற்றி ரின்னர் ஊற்றித் தீமூட்டியது. இப்படி வேறெங்காவது செய்துள்ளதா? என்று சினத்துடன் கேட்டார். கோவிக்க வேண் டாம். இதையொத்த சம்பவங்கள் பலதைச் செய்துள்ளது தான். ரின்னர் ஊற்றிக் கொளுத்தியது நான்இப்போது தான் அறிகிறேன். சரி நீங்கள் ஜோண்சில்வாவைப் பற்றிக் கூறுங்கள் என்றேன். 'ஜோண்சில்வாவினால் ஊக்குவிக்கப்படும் சிங்கள ஊர்காவல்படை போன கலவரத்தில் புதுக்குடியிருப்பில் மட்டும் முப்பத்து மூன்று பேரைக் கொன்றது' என்றார். கொஞ்சம் விளக்கமாகக் கூறுங்கள் என்றேன். போன கலவரத்தில் கோயிலடியில் அகதிகளாக இருந்தவர்களிடம் இராணுவம் வந்து நீங்கள் பழைய தொழில்களைச் செய் யலாம். இனிப் பிரச்சினையில்லை என்றனர். அதை நம்பி, புதுக்குடியிருப்பில் உள்ள அரிசிமில் ஒன்றுக்கு வேலைக்குப் போன தமிழர்கள் 33 பேரை ஊர்காவல் படை கடத்திக்கொண்டு போய்ச் சுட்டது. அதுமட்டுமல்ல பாரிசவாதத்தினால் பாதிக்கப்பட்டு படுக்கையில் இருந்த மில் உரிமையாளர் சபாரட்ணத்தின் கைவிரலில் மோதிரம் இருப்பதைக் கண்டு விரலையும் வெட்டிக் கொண்டு போனது என்றார். இம்முறையும் இப்படி ஏதும் திட்டமிருக்குமா? என்று கேட்டேன். பட்டிமேட்டில் உள்ள ஸ்ரீ சாரதா வித்தியாலயத்துக்கு வந்து அகதிப்பிள்ளை களைப் படிக்கச் சொல்கிறார்கள். அது இராணுவமுகாமுக்குக் கொஞ்சம் தொலைவிலுள்ளது. படிக்கப்போகும் பிள்ளைகளை அப்படியே அள் ளிக்கொண்டு போகும் திட்ட மிருக்கும் என்பதால் பிள்ளைகள் படிக்கப் போகவில்லை என்றார். ஏன் இராணுவ முகாமிலேயே பிடிக்கிறார்கள் தானே என்று கேட்டேன். இராணுவ முகாம் பக்கத்தில் உள்ள இடத்தில் என்றால் தாங்கள் மறுமொழி சொல்ல வேண்டியிருக்கும்; கொஞ்சம் தள்ளியென்றால் தங்களுக்கு இதைப்பற்றித் தெரியாது. ஊர்காவல்படை தான் கொண்டு போயிருக்கலாம் என்று இராணுவத்தினர் தப்பிக்கப் பார்ப்பார்கள். இப்படித்தானே போன கலவரதில் மில்லில் இருந்து கொண்டு போய் முப்பத்து மூன்று பேரைக் கொன்றவர்கள் என்றார். தமிழின அழிப்பில் தான் எத்தனை வகை என்று எண்ணிக் கொண்டேன். அகதிமுகாம்களில் நடக்கும் விடயங்கள் பற்றி இதற்கு முடிவு காண சுயமாக ஏதாவது செய்தார்களா? என்று கேட்டேன். இதற்கு என்ன செய்ய முடியும். பொறுப்பான செஞ்சிலுவைச் சங்கம் போன்றவையே கையைவிரிக்கும் போது என்றார். (தொடரும்)
-
Unofficial Tamil Eelam flag in 1988
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
first letter of ltte.jpg
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
விடுதலைப்புலிகளின் இலச்சினையை முதலில் வரைந்த மோகனதாஸ்!
இந்தக் கட்டுரையானது புலிகளின் "விடுதலைப் புலிகள்" என்ற மாதயிதழின் குரல் 21 இல் 1991 ஆண்டு வெளியான புலிக்கொடியின் வரலாற்றோடு ஒத்துப்போகாமல் முற்றிலும் வேறொரு வரலாற்றை கூறுகிறது. https://tamilnation.org/tamileelam/defacto/tamilnationalflag.pdf கட்டுரையாசிரியரான வர்ணகுலத்தான் (பொன். சிவா?!) புலிகளின் காலத்திலிருந்து அவர்தம் வரலாறுகள் சிலவற்றை எழுதுபவராக அறியப்பட்டாலும் இவரின் இக்கட்டுரை புலிகளின் அலுவல்சார் (official) வரலாற்றோடு ஒத்துப்போகாமல் வேறு திசையில் வரலாற்றை சொல்கிறது எனபதை வாசகர்களுக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். (மேலும் 1976ம் ஆண்டில் வன்னியிலிருந்த தலைவர் எப்போது 1977 இல் இந்தியா சென்றார் என்பதும் இரு கட்டுரைகளையும் கேள்விக்குள்ளாக்கிறது.)
-
Sinhala kurangku velai
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
liberation tigers of tamil eelam first coloured symbol
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
first non coloured symbol
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
-
விடுதலைப் புலிகளின் சேணேவிகள் - தெறோச்சிகள் படிமங்கள் | LTTE Artillery - Howitzer images
140 mm தெறோச்சி & 152 mm தெறோச்சி
- 51 replies
-
- eelam artillery
- eelam howitzer
- johnson artillery brigade
- kittu artillery brigade
-
Tagged with:
- eelam artillery
- eelam howitzer
- johnson artillery brigade
- kittu artillery brigade
- liberation tigers of tamil eelam
- long range weapons ltte
- ltte
- ltte artillery
- ltte howitzer
- ltte images
- sri lanka artillery
- srilankan artillery
- tamil artillery
- tamil eelam army
- tamil eelam artillery
- tamil eelam howitzer
- tamil howitzer
- tamil tigers
- tamil tigers images
- ஆட்லறி
- கௌவிட்சர்
- சேணேவி
- சேணேவிகள்
- தமிழீழம்
- தெறோச்சி
- புலிகளின் கௌவிட்சர்
- புலிகளின் சேணேவி
- புலிகளின் சேணேவிகள்
- புலிகளின் தெறோச்சி
- புலிகள்
- விடுதலைப் புலிகளின் சேணேவிகள்
- விடுதலைப் புலிகள்
- விடுதலைப்புலிகள்
-
Naval vessels of the Sea Tigers of Liberation Tigers of Tamil Eelam (LTTE) | Documentary
Note: Plz click on the image for better quality Number Class Name IBM/OBM (No. of Engines) Image Craft Names (discovered so far) Total built Note Low Profile Planing Trimaran 1 (class name lost in time) OBM (1) 1) 2) (craft name lost in time) At least 2 The Sri Lankan military captured all of these in damaged condition 2 (class name lost in time) OBM (1) (craft name lost in time) At least 1 3 (class name lost in time) OBM (1) (craft name lost in time) At least 1
- 30 replies
-
- de-facto tamil eelam
- eelam navy
- liberation tigers military
- low profile vessels
-
Tagged with:
- de-facto tamil eelam
- eelam navy
- liberation tigers military
- low profile vessels
- ltte boats
- ltte stealth boats
- ltte submarine
- ltte submarines
- ltte sucide boats
- ltte suicide vessal
- sea black tigers boats
- sea tigers
- sea tigers boats
- sea tigers eelam
- sea tigers sri lanka
- sea tigers srilanka
- tamil eelam naval crafts
- tamil eelam navy
- tamil tigers
-
Naval vessels of the Sea Tigers of Liberation Tigers of Tamil Eelam (LTTE) | Documentary
Note: Plz click on the image for better quality Number Class Name IBM/OBM (No. of Engines) Image Craft Names (discovered so far) Total built Note Low Profile Vessels 1 (class name lost in time) OBM (1) (craft name lost in time) At least 1 2 (class name lost in time) OBM (1) 1) 2) (craft name lost in time) At least 2 3 (class name lost in time) IBM (1) 1) 2) (craft name lost in time) At least 2
- 30 replies
-
- de-facto tamil eelam
- eelam navy
- liberation tigers military
- low profile vessels
-
Tagged with:
- de-facto tamil eelam
- eelam navy
- liberation tigers military
- low profile vessels
- ltte boats
- ltte stealth boats
- ltte submarine
- ltte submarines
- ltte sucide boats
- ltte suicide vessal
- sea black tigers boats
- sea tigers
- sea tigers boats
- sea tigers eelam
- sea tigers sri lanka
- sea tigers srilanka
- tamil eelam naval crafts
- tamil eelam navy
- tamil tigers
-
உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்... | நெடுந்தொடர்
பாகம் - 6 இராணுவ முகாமுடன் இணைந்ததாக அல்லது அருகில் இந்த அகதி முகாம்கள் இருப்பதால் எப்போதும் மரண பயத்துடனேயே வாழ வேண்டியுள்ளது. இராணுவத் தினரின் அல்லது முஸ்லிம் ஊர்காவல் படையினரின் 'மூட்' எப்படியிருக்கும் என்பதைப் பொறுத்தே வாழ்வு நிர்ணயிக்கப்படுகின்றது என்றார். 'எங்கேயாவது ஏதாவது பிரச்சினை நடந்தால் அகதிமுகாமுக்குள் வந்து அப்போது தாங்கள் தீர்மானிக்கும், அல்லது ஏற்கனவே அவர்களின் தீர்மானத்தில் உள்ளவர்களைக் கைது செய்து கொண்டு போய்விடுவார்கள். முன்னரெல்லாம் இவர்களை பூஸாவுக்கோ, வெலிக்கடைக்கோ கொண்டு செல்வார்கள். இப்போது கொண்டு செல்லப்படுபவர்கள் உயிருடன் திரும்புவதில்லை என்றார். கதை இங்கேயே முடிந்து விடுகிறது என்றார். சிலவேளை பலர் ஊர்க்காவல் படையால் அல்லது இராணுவத்தால் தாக்கப்படுவார்கள். இதைத்தான் செய்கிறார்கள் என்றால் பெண்கள்மீது இவர்கள் இழைக்கும் கொடுமைதான் கடவுளுக்கே பொறுக்காது’ என்றார். முதன்முதல் சுங்கான் குழியைச் சேர்ந்த ஞானசேகரம் பகவதிப் பிள்ளை என்ற பெண்ணை முஸ்லிம் காவல் படையினர் கற்பழித்தார்கள். 2-8-90 இல் சீனன் குடாவில் சசி என்ற பெண்ணை சிங்கள ஊர்காவல் படை யினர் கற்பழித்தார்கள் என்றார். தொடர்ந்து ‘அகதி முகாமுக்குள் முஸ்லிம் ஊர்காவல் படையினர் வருவார்கள். இந்த அகதிமுகாம்கள் மேலே கிடுகினால் வேயப்பட்டு படங்கினால் சுற்றிவர கட்டப்பட்டுமிருக்கும். படங்கை விலத்தி வருவார்கள் இவர்களைக் கண்டதும் பயத்தினால் பெண்கள் முகத்தைத் திருப்பி குப்புறப்படுப்பார்கள். டோர்ச் லைட்டை அடித்து முகத்தைக் காட்டு, முகத்தைக் காட்டு என்பார்கள். முஸ்லிம் ஊர்காவல் படையினர் தாங்கள் தீர்மானிக்கும் பெண்ணைக் கொண்டு போவார்கள். கொண்டு போகும் பெண்களை உயிருடன் விடுவதில்லை. சிலவேளை முகாமுக்குள்ளேயே வைத்தும் கற்பழிப்பார்கள். சுற்றிவர குழந்தைகள் இருக்கும். கதறக் கதற ஒரு பெண்ணைக் கற்பழிக்கும் போது அதைப் பார்க்கும் குழந்தைகளின் மனோநிலை எப்படிப் பாதிக்கப்படும்? இதையெல்லாம் பார்த்துக்கொண்டு எப்படி அங்கு இருப்பது?’ என்று கேட்டார். குடும்பங்களே சிதறிப்போய்விட்டன. பெரும்பாலான ஆண்கள் மனைவி பிள்ளைகளை விட்டு முல்லைத்தீவுக்கு போய் விட்டனர். புதுக்குடியிருப்பில் சிலர் எண்ணெய் வியாபாரம் செய்கிறார்கள். வவுனியாவில் வாங்கி வந்து புதுக்குடியிருப்பிலோ யாழ்ப் பாணத்திலோ விற்கிறார்கள். யாழ்ப்பாணத்திலிருந்து திருமலைக்கு வரும் திருமலை மாவட்டப்போராளிகள் மூலமாகவும், திருமலையில் இருந்து யாழ்ப்பாணம் செல்பவர்கள் மூலமாகவும் தான் யார் யார் உயிருடன் இருக்கிறார்கள்; முகாமில் என்ன நடக்கிறது? என்பதைத் தெரிந்து கொள்ள முடியும் என்றார். 'எந்த ஊர் மக்கள் புதுக்குடியிருப்பில் இருக்கிறார்கள்?' என்று கேட்டேன். 'பெரும்பாலும் தம்பலகாமம் ஆட்கள்தான் அங்கே இருக் கிறார்கள்' என்றார். பெண்களைக் கொண்டு பேகும் போது தமிழீழம் தானே கேட்டீர்கள். எல்லாம் கிடைக்கும் வாருங்கள் என்று முஸ்லிம் ஊர்காவல் படையினர் கூறுவார்கள் என்று குறிப்பிட்டார்கள். (கோவில் குடியிருப்பைச் சேர்ந்த கந்தசாமி என் பவருடைய 18 வயது மகள் 15-10-90 அன்று இவ்வாறு பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்டதாகவும், இலங்கை சபையில் போக்குவரத்துச் சபையில் கடமையாற்றும் பாக்கியராசா என்பவரின் மகளை முஸ்லிம் ஊர்காவல் படையினர் தோளில் போட்டுக் கொண்டு போனதாகவும், அவர் உயிருடன் திரும்பவில்லை எனவும் பின்னர் அறிந்தோம்.) தங்களை அலங்காரம் செய்து கொள்ளும் இளம் வயதுப் பெண்பிள்ளைகளெல்லாம் தங்களை அசிங்கமாகக் காட்ட என்னென்ன மாதிரிக் கோலத்தை மாற்றிக் கொள்கிறார்கள் என்பதையும் விளக்கினார். தலை இழுக்காமல், முகத்தில் கரி பூசி... என்றெல்லாம் கூறினார். இந்தப் பிள்ளைகளுக்கெல்லாம் சகோதரங்கள் உண்டு ஆனபடியால் முகாமிலிருந்து கொண்டு செல்லப்பட்ட பெண்பிள்ளைகளின் பெயரைக் கேட்க வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டார். (ஆரம்பத்தில் நிலைமையை இயல்பாகக் கதைத்தவர் பெயர்களை நான் குறிப்புப்புத்தகத்தில் குறித்ததும் நிறுத்திக் கொண்டார்) 'எனக்கும் பெண் பிள்ளைகள் உண்டு. எங்களுடைய சமூக அமைப்பு இன்னும் மாறவோ, காலத்துக் கேற்ற மாதிரி வளர்ச்சியடையவோ இல்லை - நீங்கள் இந் தத்தர்மசங்கடமான நிலையை புரிந்து கொள்ள வேண்டும்' என்று அவர் வேண்டிக்கொண்டார். சரி ஆண்களுக்கு நடந்ததைக் கூறுங்கள் என்றேன். 5.9.90 அன்று கந்தளாய் அகதி முகாமில் சித்திரவேல் கனகலிங்கம் என்பவர் இராணுவத் தால் தாக்கப்பட்டார். 9.9.90 அன்று தம்பலகாமம் அகதி முகாமைச் சேர்ந்த கந்தசாமி, ஐயாத்துரை ஆகியேர் முஸ்லிம் ஊர்காவல் படையால் கொலை செய்யப் பட்டு 98 கொலனி வயல் வெளியில் பிணமாகக் கிடந்தனர். 96 ஆம் கொலனியைச் சேர்ந்த ஐயாத்துரை என்பவரும் அகதி முகாமிலிருந்து வெளியே செல்லும் போது கைது செய்யப்பட்டார். இவருக்கு வயது 57. மற்றும் முத்துக்குமா ரு (மேற்கு - கொலனி 42 வயது) ராசதுரை (முள்ளியடி - 45 வயது), பேபி ராசா (மேற்கு - கொலனி - 28 வயது). சந்திரசேகரம் (நடுப்பன் திடல் - 36 வயது), ராசதுரையின் மகள் (முள்ளி யடி 13 வயது), கோணநாய கம் (கள்ளிமேடு - 32 வய து). ஜயா (மேற்குக்கொலனி - 28 வயது), சகோதரர்களான மேற்குக் கொலனி வாசிகளான 30 வயதான பாலகிருஷ்ணன், 26 வயதான கோபால கிருஷ்ணன் இவர்களெல்லாம் இராணுவத்தினராலும் முஸ்லிம் ஊர்காவல் படையினராலும் 9 ஆம் மாதத்தில் பிடித்துச் செல்லப்பட்டவர்கள். ஆட்கள் அவ்வளவு தான்! என்றார். கிண்ணியாப் பக்கம் நிலைமை என்னமாதிரி? என்று கேட்டேன். கிண்ணியா, சின்னக்கிண்ணியாவைச் சேர்ந்த 86 குடும்பங்களைச் சேர்ந்த தமிழர்கள், முஸ்லிம் மக்களின் பாதுகாப்புக்கருதி பணயக் கைதிகள் நிலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்றார். எங்கே தடுத்துவைத்துள்ளனர்? என்றேன், கிண்ணியா நெற்களஞ்சியத்தில் தான் அந்தத் தடுப்புமுகாம் உண்டு. இவர்களைப்பற்றியும் கந்தளாயில் உள்ள அகதிகள் பற்றியும் அறிவது கொஞ்சம் கஷ்டம் என்றார். “சிங்களவரால் ஏதும் தொந்தரவில்லையா?” என்று கேட்டேன். தொந்தரவு இல்லையா? ஜோண் சில்வா என்று ஒருவன் இருக்கிறான்… என்றவாறே தொடர்ந்தார். (தொடரும்)
-
தவிபு கரந்தடிப் போர்முறைக் காலப் படிமங்கள் | LTTE Guerrilla Warefare Period Images
தேசியத் தலைவருடன் "மாமனிதர்" கவிஞர் காசி ஆனந்தன்
- 381 replies
-
- eelam guerrilla
- eelam guerrillas
- eelam history
- eelam images
-
Tagged with:
- eelam guerrilla
- eelam guerrillas
- eelam history
- eelam images
- eelam military
- eelam rebels
- eelam tamils
- eelam war
- guerrilla
- guerrilla warefare
- guerrilla warefare eelam
- liberation tigers of tamil eelam
- liberation tigers of tamileelam
- ltt
- ltte
- ltte guerrilla
- ltte guerrillas
- ltte images
- ltte pirabhakaran
- sri lankan army
- sri lankan guerillas
- tamil
- tamil eelam
- tamil eelam army
- tamil eelam history
- tamil eelam images
- tamil eelam liberation
- tamil eelam liberation struggle
- tamil eelam military
- tamil eelam tamils
- tamil guerilla
- tamil guerrillas
- tamil images
- tamil liberation army
- tamil ltte
- tamil military
- tamil new tigers
- tamil rebels
- tamil tiger rebels
- tamil tigers
- tamil tigers images
- tamil warriors
- tamils
- tamils army
- tamils military
- ஈழ கெரில்லா
- ஈழ கெரில்லாக்கள்
- கரந்தடி போராளிகள்
- கரந்தடி வீரர்கள்
- கரந்தடிப்படை
- கெரிலா
- கெரில்லா தமிழ்
- கெரில்லாக்கள்
- கெரில்லாப் படை
- கெரில்லாப்படை
- தமிழீழ போராளிகள்
- தமிழீழ விடுதலை இயக்கம்
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- தமிழீழ விடுதலைப் போராட்ட வீரர்கள்
- தமிழீழ விடுதலைப் போராளிகள்
- தமிழ் ஈழ விடுதலைப் புலிகள்
- தமிழ் கெரிலா
- தமிழ் கெரிலாக்காள்
- தமிழ் புலிகள்
- தமிழ் போராளிகள்
- தமிழ்ப் புலிகள்
- புலி
- புலிகள்
- புலிவீரர்கள்
- போராளி
- போராளிகள்
- விடுதலைப் புலிகள்
- விடுதலைப்புலிகள்
-
தவிபு கரந்தடிப் போர்முறைக் காலப் படிமங்கள் | LTTE Guerrilla Warefare Period Images
- 381 replies
-
- eelam guerrilla
- eelam guerrillas
- eelam history
- eelam images
-
Tagged with:
- eelam guerrilla
- eelam guerrillas
- eelam history
- eelam images
- eelam military
- eelam rebels
- eelam tamils
- eelam war
- guerrilla
- guerrilla warefare
- guerrilla warefare eelam
- liberation tigers of tamil eelam
- liberation tigers of tamileelam
- ltt
- ltte
- ltte guerrilla
- ltte guerrillas
- ltte images
- ltte pirabhakaran
- sri lankan army
- sri lankan guerillas
- tamil
- tamil eelam
- tamil eelam army
- tamil eelam history
- tamil eelam images
- tamil eelam liberation
- tamil eelam liberation struggle
- tamil eelam military
- tamil eelam tamils
- tamil guerilla
- tamil guerrillas
- tamil images
- tamil liberation army
- tamil ltte
- tamil military
- tamil new tigers
- tamil rebels
- tamil tiger rebels
- tamil tigers
- tamil tigers images
- tamil warriors
- tamils
- tamils army
- tamils military
- ஈழ கெரில்லா
- ஈழ கெரில்லாக்கள்
- கரந்தடி போராளிகள்
- கரந்தடி வீரர்கள்
- கரந்தடிப்படை
- கெரிலா
- கெரில்லா தமிழ்
- கெரில்லாக்கள்
- கெரில்லாப் படை
- கெரில்லாப்படை
- தமிழீழ போராளிகள்
- தமிழீழ விடுதலை இயக்கம்
- தமிழீழ விடுதலைப் புலிகள்
- தமிழீழ விடுதலைப் போராட்ட வீரர்கள்
- தமிழீழ விடுதலைப் போராளிகள்
- தமிழ் ஈழ விடுதலைப் புலிகள்
- தமிழ் கெரிலா
- தமிழ் கெரிலாக்காள்
- தமிழ் புலிகள்
- தமிழ் போராளிகள்
- தமிழ்ப் புலிகள்
- புலி
- புலிகள்
- புலிவீரர்கள்
- போராளி
- போராளிகள்
- விடுதலைப் புலிகள்
- விடுதலைப்புலிகள்
- LTTE Flag - November 01, 1994
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
- last flag of liberation tigers of Tamil Eelam aka LTTE or Tamil Tigers
From the album: என்னுடைய ஆவணத்திற்கான படிமங்கள்
- 'தமிழன் கனவு' என்ற ஈழத் தமிழரின் எதிர்காலத்தை அன்றே எதிர்வுகூறிய புத்தகம்
தமிழன் கனவு நூல் கிடைத்தது... எமது இனத்தில் எதிர்காலத்தை அப்படியே கூறும் நூல்.... முற்றாக வாசித்தேன்... எழுதியிருப்பது விளங்குகிறது, ஆனால் விளங்கவில்லை. https://noolaham.org/wiki/index.php/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%B5%E0%AF%81- யாழ்ப்பாணத்துக்கு படையெடுக்கும் மாற்றுக் கருத்தாளர்கள்! அ.நிக்ஸன்
யாழ்ப்பாணத்துக்கு படையெடுக்கும் மாற்றுக் கருத்தாளர்கள்! -- ---- ----- *இவர்கள் தமிழர்களை சிதைக்கும் அரசியல் கருவிகள். *செம்மனி பேசும் நிலையில் ரணில் கைது *முறிந்த பனைமரக் குழுக்களின் தொடர்ச்சி *ஜெனீவா கூட்டம் ஆரம்பிக்கவுள்ள நிலையில்... -- ---- --- மாற்றுக் கருத்து என்ற போர்வையில் தமிழர்களின் "அரசியல் விவகாரம்" என்ற பிரதான இலக்கை திசை திருப்ப - மலினப்படுத்த பலர் பலவிதமான விடயங்களைக் கையில் எடுக்கின்றனர். 2009 இற்குப் பின்னர் இத் தன்மை வெவ்வேறு வடிவங்களில் உருவெடுத்து முளைத்துள்ளது. முறிந்த பனைமரக் குழுக்களிடம் இருந்து 1980 களில் ஆரம்பித்தது தான் இந்த மாற்றுக் கருத்து. உண்மையில், விடுதலை வேண்டி நிற்கும் இனம் ஒன்றுக்குள் வரக் கூடிய மாற்றுக் கருத்து என்பது, அந்த இனத்தின் விடுதலை உணர்வுக்கு மற்றொரு வகிபாகத்தில் அறிவுசார்ந்து உரமூட்டுவதாக அமைதல் வேண்டும். ஆனால் ஈழத்தமிழர்களை சிதைப்பதற்கே மாற்றுக் கருத்து - ஜனநாயகம் - என்று கட்டமைக்கப்படுகிறது. இந்த போலியான மாற்றுக் கருத்தாளர்கள் யார் என்று பார்த்தால்---- A) தமிழ் பேசத் தெரியாத ஆங்கிலம் பேசும் தமிழர்களாக இருப்பர். B) அல்லது சிங்களம் கலந்த தமிழர்களாக இருப்பர். C) அல்லது புலி எதிர்ப்பாளர்களாக இருப்பர். D) அல்லது கொழும்பை மையமாகக் கொண்ட சிங்கள இடதுசாரி - முற்போக்கு வாதம் பேசும் தமிழர்களாக இருப்பர். முற்போக்குத் தமிழ் இலக்கியவாதிகள் சிலரும் இந்த மாற்றுக் கருத்தாளர்களுக்குள் அடங்குவர். இந்த போலியான மாற்றுக் கருத்தாளர்கள் என்ன செய்வார்கள் என்றால்---- தமிழ்த் தேசிய நோக்கு நிலை எப்போது எழுச்சி அடைகிறதோ அல்லது தீவிரமாக பேச ஆரம்பிக்கப்படும் சூழல் தென்பட்டால், உடனடியாக யாழ்ப்பாணத்துக்குப் படையெடுப்பார்கள். அல்லது கொழும்பு அரசியலில் ஏதேனும் திடீர் அரசியல் சர்ச்சைகள் நடக்கும் (Sudden Political Controversy) உடனடியாக நடந்த சில உதாரணங்கள் -- 1) செம்மணி விவகாரம் கொழும்பில் உள்ளக ரீதியாக பேச ஆரம்பிக்கப்பட்ட ஒரு நிலையில்தான் ரணில் கைது நடந்திருக்கிறது. 2) இச் சூழலில்தான் மாற்றுக் கருத்தாளர்கள் யாழ்ப்பாணத்துக்கு இறக்குமதி செய்யப்படுகிறார்கள். 3) கொழும்புத் துறைமுக மனித புதை குழி பற்றி பேச ஆரம்பித்துள்ளனர். இது பற்றி சில நாட்களுக்கு முன்னர் கொழும்பில் கூட்டம் ஒன்றும் நடந்துள்ளது. துறைமுக மனித புதை குழி பற்றி தூதுவர்களுக்கும் விளக்கமளிப்பது இந்த மாற்றுக் கருத்தாளர்கள் தான். 4) இந்த மாற்றுக் கருத்தாளர்கள்தான் ஜேவிபி காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோருடன் சமப்படுத்தி வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்கள் பற்றிய நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட தயார்படுத்தி வருகின்றனர். 4) ஆணையாளரின் உருப்படியில்லாத உள்ளக விசாரணை என்ற, அரசாங்கத்தைக் காப்பற்றும் முன்னோடி அறிக்கையைக் கூட (Pioneer Report to Protect the Government) நீர்த்துப் போகச் செய்யும் நோக்கில், மாற்றுக் கருத்தாளர்களின் கூட்டங்கள் - ஆய்வுகள் யாழ்ப்பாணத்தில் அடுத்த மாத ஆரம்பத்தில் இருந்து நடக்கும் வாய்ப்புகள் அதிகம். ஆகவே இலங்கைத்தீவில் மாற்றுக் கருத்தாளர்கள் என்பதன் பொருள், ”ஈழத்தமிழர்களை சிதைக்கும் அரசியல் கருவிகள்” (Political Tools) அ.நிக்ஸன்- பத்திரிகையாளர் https://www.facebook.com/amirthanayagam.nixon- உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்... | நெடுந்தொடர்
பாகம் - 5 பொதுவாகத் திருக்கோணமலை மாவட்டத்தில் ஓர் இடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குப் போவதானால் எத்தனை மைல் நடக்க வேண டும் என்று சொல்லமாட்டார்கள். எத்தனை மணித்தியாலம் நடக்க வேண்டும் என்றே கூறுவார்கள். எட்டு மணித்தியால நடை, பத்து மணித்தியால நடை என்பார்கள். இந்தப் பிரயாண ஆரம்பத்தில் "இந்தப் பிரயாணம் தான் கொஞ்சம் கஷ்டம். பிற்பகல் 2.30க்குப் புறப்பட்டால் அதிகாலை 4.00 மணிக்கு எங்களுடைய நடையில் (திருமலை மாவட்டப் போராளிகளின்) போய்ச்சேரலாம். உங்களுடைய நடைக்கு அதிகாலை 5.30 மணிசெல்லும் என நினைக்கின்றேன் என்றார் பதுமன். இடையில் எங்குமே தங்கமுடியாது. இந்தப் பயணத்தின்பின் நீங்கள் பொது மக்களைச் சந்திக்கக் கூடியதாக இருக்கும் என்றார். 14-9-90 அன்று திருமலையில் கால் வைத்த நாம் 23-9-90 அன்றுதான் பொதுமக்களைக் கண்ணால் காணப்போகின்றோம். (ஏற்கனவே நான் குறிப்பிட்ட வாழைத்தண்டில் இருந்த காய்களை மக்கள் விழுந்தடித்துப் பொறுக்கி முண்டி விழுங்கிய சம்பவம் 25-9-90 பிரயாணத்தின் போது நடந்தது) இதுவரை நாம் சந்தித்த முகாம்களில் இருந்தவர்கள் பொது மக்களைக் காணமுடியாது? அவர்களுடைய உலகம் இந்தக் காடுகளும், போராளிகளும் தான். நான் ஒருநாள் ஒரு போராளியைச் சந்தித்து இதுபற்றி உரையாடியபோது, தற்போதைய போரைவிட ஒரு நெருக்கடி யானநிலை இந்திய இராணுவத்துடனான போரில் இருந்தது என்று குறிப்பிட்டார். தனக்கு இரு மருமக்கள் இருக்கின்றார்கள் என்றும், அவர் களின் நினைவு தன்னை அடிக்கடி வாட்டும் என்றும் குறிப்பிட்டார். தான் அப்போது குடியேற்றப்பட்ட சிங்களவர்கள் இருந்த பகுதியை அண்டிய காடுகளில் இருந்ததால் காலையில் எட்டு மணியளவில் உயரமான மரங்களில் ஏறி நின்று பாலர் பாடசாலைக்குச் செல்லும் சிறு குழந்தை களைக் கண்டு ஆனந்திப்பதாகக் குறிப்பிட்டார். அந்தக் குழந்தைகளைக் காணு ம் போது தனது மருமக்களைப் பார்க்கும் உணர்வு ஏற்படுவதாகவும் கூறினார். “மென்மையான மனது கொண்டவர்களே போராளிகளாகின் றார்கள். அவர்களால்தான் தமது இனத்திற்கெதிரான அடக்குமுறை களைச் சகித்துக்கொள்ள முடிவதில்லை. அதைச் சகித்துக்கொள்ளும் மனம் உடையவர்களே போராட்டத்துக்கு வெளியில் இருப்பவர்கள்” என்று ஒருமுறை போராளி சீலன் (சார்ள்ஸ் அன்ரனி) கூறியது நினைவுக்கு வந்தது. எமது பயணத்தில் இன்னோர் அம்சம் ஓர் இடத்திலிருந்து எம்மை அழைத்துச் செல்லும் போராளிகள் நாம் சென்று அடையப்போகும் முகாமைச் சேர்ந்தவர்களை இடையில் சந்தித்து எம்மை அவர்களிடம் ஒப்படைப்பார்கள். திரு. பதுமனும் அவரது மெய்ப்பாதுகாவலர் சிலரும் மட்டுமே எம்முடன் திருமலை மாவட்ட எல்லைவரை வருவார்கள். ஏனெனில் ஒவ்வொரு முகாமைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும்தான் அந்தப் பகுதிக் காடுகளைப் பற்றித் தெரியும். இடையில் இராணுவத்துடன் மோதல் ஏற்பட்டாலும் அவர்களால் மட்டுமே சரியான பாதையில் எம்மைக் கொண்டு போய்ச்சேர்க்க முடி யும். இன்றைய பிரயாணம் எட்டு இராணுவ முகாம்களைக் கடக்க வேண்டிய பிரயாணம் என்பதைத் தெரிந்துகொண்டோம். ஒரு முகாமைப் பகலில் கடந்துவிட்டோம். இந்தப் பிரயாணத்தில் யாராவது கதைக்கவோ, இருமவோ முடியாது. முகாம்களுக்கு மிக அருகிலேயே எமது பிரயாணம் தொடர்வதால் சப்பாத்து ஒலியைத் தவிர வேறெதுவும் கேட்கவில்லை. ஏற்கனவே செய்த ஏற்பாட்டின்படி எம்மைப் பொறுப்பெடுக்கப் போகும் குழுவும் தனது பிரயாணத்தைத் தொடங்கியிருந்தது. பயணத்தின் இடையில் இராணுவ முகாம்களில் இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டுப் பபிற்சிச் சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தது. இரவானதும் முகாம்களின் வெளிச்சம் பிரகாசமாய்த் தெரிந்தது. மிக அருகருகே இருந்த இந்த இராணுவ முகாம் ஏழும் ஒரே இரவில் கடக்க வேண்டியவை இந்த ஏழு முகாமில் எந்த முகாமைச் சேர்ந்த இராணுவத்தினர் எமது பாதையில் படுத்திருந்து தாக்கினாலும் சண்டை செய்வதைத் தவிர வேறு வழியே இல்லை. முழுவதும் வயல்கள். இரவு வந்ததும் ஒருவாறு நான்கு முகாம்களைக் கடந்து விட்டோம். ஐந்தாவது முகாமை நோக்கி நேராக நடக்கவேண்டும். முகாமுக்கு நூறு யார் தூரத்திலேயே எமது பாதை மாற்றப்பட்டது. அந்த இடத்தில் எம்மைப் பொறுப்பேற்க அடுத்த குழு தயாராக இருந்தது. புதிய குழுவுடன் இணைந்து பிரயாணத்தைத் தொடர்ந்தோம். ஆறாவது முகாமை அண்மித்ததும் அங்கிருந்து துப்பாக்கிச் சூட்டுச் சத்தம் கேட்டுக் கொண்டேயிருந்தது. பயத்தினால் இரவில் அவ்வாறு இடையிடையே சுடுவார்கள் என்பதைத் தெரிந்து கொண்டோம். இதன்பின் தான் சிரமம்தெரிந்தது. முழுக்க சேறுகள் நிறைந்த பாதை. அப்போதுதான் நாம் ஒரு பொது மகனைக் கண்டு கொண்டோம். அப்பாடா! இப் பொதுமகன் எமக்கு வழிகாட்ட வந்தவர், இப் பகுதியை அங்குலம் அங்குலமாகத் தெரிந்துகொண்டவர். பெரும்பகுதி முழங்கால் அளவு சேறு, துப்பாக்கிகளையும், முதுகில் தொங்கும் சுமையான பைகளையும் சுமந்துகொண்டு போராளிகள் படும்பாடு பெரும்பாடுதான். பொத்துப்பொத்தென்று விழுவார்கள் உடல் முழுவதும் சேறு பிரளும். சேற்றை எண்ணிச்சப்பாத்தைக் கழற்றினால் பின்பு வரும் வயல்களில் உள்ள தொட்டால் சுருங்கி கால்களை விறாண்டும். திருப்பி சப்பாத்தைப் போட முடியாது. அடுத்த சில நிமிடங்களில் சேறைச் சந்திக்க வேண்டியிருக்கும். வழிகாட்டியாக இருப்பவர் ஒவ்வொரு இடத்திலும் நின்று இங்கே முள்ளுக்கம்பி உண்டு, இங்கே பள்ளம் உண்டு என்று இரகசியமாகக் கூறுவார். முதுகில் சுமை. நடைக் கஷ்டம். நடக்கும்போதே இப்போராளிகள் தூங்குவதும் உண்டு. தூக்க நடை நடப்பவர்கள் வயல் வரம்புகளில் இடறி விழுவார்கள். வரிசையாகச் செல்லும் போது சிலர் நின்ற நிலையிலேயே தூங்குவார்கள். பின்னால் வருபவர் முதுகில் தட்டி முன்னே போ என்று சமிக்ஞை செய்யவேண்டும். இந்தப் பகுதியில் நடக்கும்போது (எமக்கு அடுத்த பயணத்தில்) ஒருவர் தூக்கத்தில் ஒரு கிணற்றில் விழுந்து விட்டார். ஒருவாறு எட்டு முகாம்களையும் கடந்து விட்டோம். ஆனால் போக வேண்டிய இடம் இன்னும் உண்டு. அதிகாலை 3.15 மணியளவில் சோர்ந்து படுத்து விட்டோம். அப்பாடா என்ன சுகம்! இப்போதும் சிலர் காவலில் நின்றார்கள். மீண்டும் காலை 6.45க்கு பயணம் தொடங்கியது. இந்தப் பயணம் காலை 10.30 வரை நீடித்தது. இரவு மாத்தயா அவர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து கொண்டுவந்த முட்டைமாவில் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து உள்ளங் கையில் கொட்டிச் சாப்பிட்டதைத்தவிர வேறுசாப்பாடே இல்லை. இனிக்கதைக்கலாம் என்றார் பதுமன். "என்ன பதுமன் இவ்வளவு கஷ்டமா?” என்று கேட்டோம். ‘உங்களுக்காகத்தான் இந்தப்பாதை. இல்லாவிட்டால் கழுத்தளவு தண்ணீர், சேறு, காடுகளுக்குள்ளால் தான் போகவேண்டும்!' என் றார். வழிவழியே ஆற்றங்கரைகள், காடுகளில் மக்கள் கூட்டம்கூட்டமாக இருப்பதைக் கண்டோம். இவர்கள் அகதி முகாமுக்கு போகவில்லையா? என்று வழிகாட்டியாக வந்த அந்தப் பொதுமகனைக் கேட் டோம். 'நான்கூட ஒருநாள் அகதிமுகாமில் இருந்துள்ளேன். ஆனால் முஸ்லிம் ஊர் காவல் படையினரின் தொல்லை டொறுக்கமுடிய வில்லை. அது தான் ஓடிவந்து விட்டேன் என்னைப்போல் வெளியேறியவர்கள்தான் இவர்கள்!' என்றார். ‘அகதி முகாம்களில் என்னதான் நடக்கிறது?" என்று கேட்டேன். எதையென்று சொல்ல...' என்றவாறே தொடர்ந்தார். (தொடரும்)- உதிக்கும் திசை நோக்கி உன்னத பயணம்... | நெடுந்தொடர்
பாகம் - 4 நீங்கள் குறிப்பிடும் பகுதியிலுள்ள மக்கள் உயிர் வாழ்வதற்கு ஏதோ சாப்பிட வேன்டும்தானே? என்ன செய்கிறார்கள்? என்று கேட்டேன். வேதனையுடன் பெருமூச்சு விட்டவாறே தொடர்ந்தார். ஈச்சமரத்தின் குருத்தை வெட்டிச் சாப்பிடுகிறார்கள். காட்டில் கிடைக்கும் சில வகைக் கொடிகளின் கீழ் உள்ள கிழங்குகளைப் பிடுங்கிக் கொண்டு வருகிறார்கள், தொலைதூரத்துக்குச் சென்று குளங்களில் மீன்பிடித்து அதை மட்டுமே சாப்பிடுகிறார்கள். இவர்கள் என்ன நடந்தாலும் தமது மண்ணை விட்டுச்செல்லமாட்டார்கள். தமது மண்ணைப் பிரிவது என்பது இவர்களால் முடியாத காரியம். தற்போதைய போரில் கூட இலக்கந்தையில் 10 பேரும், மட்டப்புக்களியில் 35 பேரும் இராணுவத்தினால் கொலைசெய்யப்பட்டு எரிக்கப்பட்டார்கள். ஆனாலும் அகதிகளாகச் செல்வதற்கு இவர்கள் முயலவில்லை என்றார். ஈச்சைமரமும், கிழங்குகளும் மீனும் எத்தனை நாட்களுக்குக் கிடைக்கும் என்று கேட்டேன். ஒரு நாள் அந்தப்பகுதியால் எமது போராளி ஒருவன் சென்றான். ஏதோ தேவைக்கு தீப்பெட்டி தேவைப்பட்டது. ஒரு வீட்டில் சென்று தம்பி தீப்பெட்டி இருக்கிறதா? என்று கேட்டான். "அண்ணை நாங்கள் அடுப்பு மூட்டியே ஐந்து நாட்கள். எங்களிடம் தீப்பெட்டி கேட்கிறீர்களே! என்றான் அந்தச் சிறுவன்" என்றார் ரூபன். நான் அதிர்ந்துபோய் நின்றேன். இதற்கே இப்படி என்றால் இனிச் சொல்லப் போவதை நீங்கள் கேட்டால்... என்றவாறே தொடர்ந்தார். பசியின் கொடுமையால் உப்பூரலில் இருந்து தோப்பூர் என்ற முஸ்லம் கிராமத்துக்கு பிச்சை எடுக்கச் சென்ற முதியவர்களை 13.9.90 அன்று அங்குள்ள முஸ்லிம் ஊர்காவல் படையினர் அடித்துக் கொன்றுள்ளனர். சிலரைக் காயப்படுத்தியுள்ளனர் என்றார் ரூபன். கதிர்காமம் மாரியான் (75 வயது), மாரியான் வைரவன் (75 வயது) இந்த இருவரும் கொல்லப்பட்டுள்ளனர். கந்தன் வைரவன் (70வயது), சீனித்தம்பி கந்தையா (75 வயது), வைரவன் சித்திரவேல் (60 வயது) ஆகியோர் நடமாட முடியாதளவுக்கு காயப்படுத்தப்பட்டுள்ளனர்? அத்துடன் தமிழருக்கு எவரும் பிச்சைகொடுக்கக்கூடாது எனவும் எச்சரித்துள்ளனர் என்றார். இது மட்டுமல்ல அடுத்த நாள் 14.9.90 அன்று காலை காணாமற்போன இவர்களை தேடிப் போன ஆறுபேரையும் முஸ்லிம் ஊர்காவல் படையினர் பிடித்துக் கொண்டனர். இவர்களின் நிலைமை என்னவென்று இன்னும் தெரியவில்லை. எனக்கென்றால் இவர்கள் உயிரோடிருப்பார்கள் என்ற நம்பிக்கையில்லை என்றார். உப்பூரல், முதியவர்கள் கொல்லப்பட்டு, காயமடைந்த அதே தினம் 13.9.90 அன்று நல்லூரில் இருந்து தோப்பூர் சென்ற க. வைரமுத்து (65 வயது), கந்தையா (76 வயது) வைரன் முத்துக்குமார் (46 வயது) ஆகியோரையும் கடுமையான சித்திரவதைக் குள்ளாக்கியுள்ளனர் முஸ்லிம் ஊர்காவல்படையினர். வயது போன இவர்களையே இப்படிச் செய்கிறார்கள் என்றால் மற்றவர்களைப் பற்றிச் சொல்ல வேண்டுமா? இந்தப் பகுதியில் உள்ள மக்களின் பிரதான உணவு சோளம். அண்மைய இராணுவ நடவடிக்கையின்போது இவர்களின் வீடுகளில் இருந்த சோளத்தை இராணுவத்தினர் எரித்துள்ளார்கள். பிச்சைக்குப் போனால் முஸ்லிம் ஊர்காவல் படையினர் கொல்கின்றார்கள். அகதி முகாமுக்குப் போனால் அங்கும் மரணம். இந்த நிலையில் செஞ்சிலுவைச் சங்கம் அகதிமுகாமுக்குப் போனால்தான் நிவாரணம் தரமுடியும் என்று சொல்கிறது என்றார் ரூபன். தொடர்ந்து இதையெல்லாம் நீங்கள் கண்ணால் தானே காணத்தானே போகிறீர்கள் என்றார். அவர் கூறியது போலவே அதற்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைக்கத்தான் செய்தது. திரு. மாத்தயாவின் வருகை திருமலை மாவட்டத்திலுள்ளதமிழ் மக்களுக்குத் தெரிந்து விட்டது. ஆங்காங்கே அகதி முகாம்களிலும், காடுகளிலும் இருப்போர் எப்படியோ நாம் போகும் பாதையில் கூடிவிடு வார்கள். இவர்களுக்கே சாப்பாடு இல்லை. அப்படியிருந்தும் ஒரு வாழைக்குலையுடன் நின்றார்கள். ஏழ்மை நிலையில் இருந்தபோதும் அவர்களின் இந்தப்பண்பு நெகிழ வைத்தது. அவர்கள் கொடுத்த வாழைக்குலையைப் பெற்றுக்கொண்டோம். ட்றக்டரில் இருந்தபடியே அனைவருமாகச் சாப்பிட்டோம். வாழைக்குலையின் அடியில் சிறிய காய்கள் இருந்தன. குறிப்பிட்ட இப்பகுதிக் குள்வந்தபோது தான் தண்டை வெளியே வீசினோம். எங்கிருந்தோ இதைக் கவனித்தவர்கள் போட்டி போட்டுக் கொண்டு ஓடிவந்து இதையெடுத்து ஆளுக்கொரு காய்களாகப் பிடுங்கினார்கள் அவசர அவசரமாக முண்டி அவர் விழுங்கினார்கள். அவர்கள் ஓடி வந்த வேகமும், காய்களைப் பிடுங்கியவிதமும், அவர்களின் கோலமும் எம்மனதில் சம்மட்டியால் அறைந்தது போலிருந்தன. (தொடரும்)- ஜெனீவா தீர்மானத்துக்கு எதிராக கையெழுத்து சேகரிக்கும் சரத் வீரசேகர குழு
எந்த அமர்வாலும் அம்மன் சல்லிக்கும் பயனில்லை ....- Naval vessels of the Sea Tigers of Liberation Tigers of Tamil Eelam (LTTE) | Documentary
Note: Plz click on the image for better quality Number Class Name IBM/OBM (No. of Engines) Image Craft Names (discovered so far) Total built Note Manned Explosive Float/ MEF 1 (Class Name lost in time) OBM (1) Front side: Rear side: 'A Sea Black Tiger waving one last time before going for a mission with his MEF' (craft name lost in time) At least 1 - A small surface explosive cylinder that floats (an LPV) on the water, is propelled by a 2 HP outboard motor (OBM), and guided by a diver/ operator toward its target. It's not a torpedo. Length: 8.2 feet Breadth: 3.8 feet- 30 replies
-
- de-facto tamil eelam
- eelam navy
- liberation tigers military
- low profile vessels
-
Tagged with:
- de-facto tamil eelam
- eelam navy
- liberation tigers military
- low profile vessels
- ltte boats
- ltte stealth boats
- ltte submarine
- ltte submarines
- ltte sucide boats
- ltte suicide vessal
- sea black tigers boats
- sea tigers
- sea tigers boats
- sea tigers eelam
- sea tigers sri lanka
- sea tigers srilanka
- tamil eelam naval crafts
- tamil eelam navy
- tamil tigers
- Naval vessels of the Sea Tigers of Liberation Tigers of Tamil Eelam (LTTE) | Documentary
Sea Black Tigers Vessel The following reply boxes in this forum thread will cover the different types and classes of Sea Black Tigers vessels that were used. The explosive-laden crafts used by them are called 'Sakkai Vandi.' (meaning Explosive Wagon) in Tamil by the Sea Tigers. Note: Plz click on the image for better quality Number Class Name IBM/OBM (No. of Engines) Image Craft Names (discovered so far) Total built Note Human Torpedoes - Under Construction 1 Not named IBM Img. Credits: HI Sutton Real image: Not named 1 2 Not named IBM Not named 1 3 Not named IBM Not named 1 - The vertical tube in the middle is a crude periscope or snorkel for the operator. - The cutout in the mid-section is where the operator would sit.- 30 replies
-
- de-facto tamil eelam
- eelam navy
- liberation tigers military
- low profile vessels
-
Tagged with:
- de-facto tamil eelam
- eelam navy
- liberation tigers military
- low profile vessels
- ltte boats
- ltte stealth boats
- ltte submarine
- ltte submarines
- ltte sucide boats
- ltte suicide vessal
- sea black tigers boats
- sea tigers
- sea tigers boats
- sea tigers eelam
- sea tigers sri lanka
- sea tigers srilanka
- tamil eelam naval crafts
- tamil eelam navy
- tamil tigers
- நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials
தியாக தீபம் திலீபனிற்கான நினைவுக்கல் 26-9-2004 அன்று விடுதலைப்புலிகளால் யாழ்ப்பாணத்தில் எழுப்பப்பட்டது. இது இந்திய துணைத்தூதரகம் யாழில் நிறுவப்பட்டபின் 2012 ஆம் ஆண்டு அவர்களின் உத்தரவிற்கமைவாக அடித்து நொறுக்கப்பட்டது.- நினைவுச்சின்னங்கள் மற்றும் நினைவாலயங்கள் இன் படிமங்கள் | Images of Monuments and Memorials
தியாகதீபத்தின் நினைவிடம் நல்லூர் "நல்லூரின் வீதியில் நடந்தது யாகம் நாலு நாள் ஆனதும் சுருண்டது தேகம் தியாகத்தின் எல்லையை மிஞ்சிய பிள்ளை திலீபனைப் பாடிட வார்த்தைகள் இல்லை" இடிக்கப்பட்டு 7 ஆண்டுகளின் பின் மீண்டும் திறக்கப்பட்டது: 25/08/2003 புதிய நினைவுத்தூணின் படிமங்களே இவையாகும் யாழ் '2004' 'திறப்பு விழாவில்'
Important Information
By using this site, you agree to our Terms of Use.