Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. முத்துக்குளித்தலில் பட்டம் ஒன்று சிலோன் - மன்னார் வளைகுடா, 1904
  2. மன்னார் மாவட்டத்தின் முசலி கோட்ட செயலாளர் பிரிவிற்குட்பட்ட மறிச்சுக்கட்டி என்னுமிடத்தில் பட்டங்களில் முத்துக்குளித்துவிட்டு திரும்பும் தமிழர்கள் 1900<
  3. யாழ்ப்பாணத்தோணி வகையைச் சேர்ந்த அன்னபூரணி 20ம் நூற்றாண்டின் தொடக்கம்
  4. யாழ்ப்பாணத்தோணி, சூயஸ் கால்வாயில் பிரித்தானியா சென்ற பின்னர் இத்தோணிக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை. இத்தோணியின் அணியமும் மேற்புறமும்.
  5. யாழ்ப்பாணத்தோணி 20ம் நூற்றாண்டின் தொடக்கம் நவீன கால தொழிநுட்பமும் பழங்கால தொழிநுட்பமும் சேர்ந்து கட்டப்பட்ட தோணி. யாழ்ப்பணத்திலிருந்து கொழும்பு சென்றிருந்த வேளை எடுக்கப்பட்ட நிழற்படம்
  6. யாழ்ப்பாணத் தோணி யாழ், தமிழீழம் பின்னால் ஒர் உரு வகை நிற்கிறது
  7. சலங்கு வகையைச் சேர்ந்த பர்வதபத்தினி யாழ், தமிழீழம் ஈழத்தில் இதன் பயன்பாடு பற்றி முதற்பக்கத்தில் தகவல் வழங்கியுள்ளேன். சென்னையைச் சேர்ந்த ஆனந்தரங்கப்பிள்ளை என்பவரல் தொடர்ந்து 25 ஆண்டுகள் (1736- 61) எழுதப்பட்ட நாட்குறிப்பில் இக்கடற்கலமானது படகு என்று பொருள்படும்படியாக எழுதப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே இக்கடற்கலமானது படகு வகையில் தமிழ்நாட்டில் பாவிக்கப்பட்டுள்ளது (https://kizhakkutoday.in/tag/%e0%ae%86%e0%ae%a9%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%88-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%95/). ஆகவே தமிழரின் இருவேறு தேசங்களில் இருவேறு வகையான கடற்கலங்களை இச்சொல் குறித்துள்ளது என்பது தெளிவாகிறது. 1743 அவ்ரீல் 9 பங்குனி 30 செவ்வாய்க்கிழமை பிரெஞ்சு மற்றும் இங்கிலீஷ்காரர்கள் பிராந்தியத்திற்கு உட்பட்ட பரங்கிப்பேட்டை, கூடலூர், திருப்பாதிரிப்புலியூர், தேவனாம்பட்டணம், வாகூர் (பாகூர்), தென்னல், வில்லியனூர், அரும்பார்த்தபுரம், ஊசுட்டேரி உள்ளிட்ட இடங்களில் மராத்தியர்களின் கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறின. குறிப்பாக, பரங்கிப்பேட்டை இவர்களது பிரதான இலக்கானது. காரணம், அது ஒரு வணிகத் துறைமுகம். இங்கிருந்து கப்பல்கள், படகுகள் மூலம் சரக்குகள் அனுப்பப்பட்டன. பரங்கிப்பேட்டையை முற்றுகையிட்டுக் கொள்ளையிட்ட மராத்தியப் படை, சலங்குகளின் பேரிலே இருந்த துணிக் கட்டுகளைக்கூட விட்டுவைக்கவில்லை. அந்த நேரத்தில் ஆனந்தரங்கரின் துணிக் கட்டுகள் ஏற்றப்பட்டிருந்த சலங்கு சேற்றிலே சிக்கி இருந்ததால், பிள்ளையின் சரக்குகள் மட்டும் கொள்ளை போகாமல் தப்பிப் பிழைத்தன! .................................. 1740 டிசம்பர் 27 மார்கழி 16 செவ்வாய்க்கிழமை நாள் இதல்லாமல் பெத்திரி அடங்காமல் பின்னையும் வெகு சனங்கள் ஆத்தங்கரையிலே வந்து அவ்விடத்திலே இருக்கிற தோணியின் பேரிலே ஏறினார்கள். நாற்பது ஐம்பது பேர் ஏறுகிற தோணியிலே ஆபத்து வேளையான படியினாலே படகு ஒண்ணுக்கு 200, 250, 300 இந்தப்படியாக ஒன்று மேலே ஒன்று ஏறினார்கள். ஆனபடியினாலே படகு தாங்காமல் தரையிலே தட்டிப்போய் கிடக்கிறது. அப்புறம் அசையவில்லை. இதல்லாமல் சக்கரயப்ப முதலி புடவை சீலை கட்டுகள் ஒரு சலங்கு, நாச்சியப்ப முதலி புடவைக் கட்டுகள் ஒரு சலங்கு, ஆண்டியப்ப முதலி புடவை கட்டு ஒரு சலங்கு. ஆனந்தரங்கப் பிள்ளையவர்கள் புடவை கட்டு ஒரு சலங்கு, குஞ்சா பிள்ளை சலங்கு. இதல்லாமல் சில்லரை வர்த்தகரது இரண்டு சலங்கு மேலே கட்டுகளேத்தி ஆத்திலே கட்டி வைத்திருந்தது. ............. அந்த வேளையிலே ஓடிப்போவோமென்று ஆத்திலே விழுந்த பேருக்குள்ளே பனிரெண்டு பேர் செத்தார்களாம். இதல்லாமல் ஆத்திலே கட்டியிருந்த சலங்குகளை யெல்லாம் கரையிலே இழுத்து அதிலே இருந்த புடவை கட்டுகளெல்லாம் கொள்ளையிட்டுக் கொண்டு போனார்கள். ஆனால் ஆனந்தரங்கப்பிள்ளையவர்கள் யோகத்திலே அந்த ஒரு சலங்கு மாத்திரம் அப்புறம் சேத்திலே கிடந்த படியினாலே தப்பி அவர்கள் காரியக்காரரும் தப்பினார்கள். மத்தப்பேர் சகல சனங்களும் மராட்டியன் கையிலே அகப்பட்டு சகலமும் பறிகொடுத்து இம்சைப்பட்டார்கள்.
  8. பல்வேறு விதமான கடற்கலங்கள் (எதனுடைய வகைப்பெயரும் எனக்குத் தெரியாது) காங்கேசன் துறைமுகம், யாழ். தமிழீழம் 1963/1/15
  9. வத்தை ஒன்று கடற்கரை ஓரமாக நிறுத்தப்பட்டுள்ளதைக் காண்க வத்தையை வலித்துக்கொண்டு கடலேறும் ஐயா. பின்னால் விசைப்படகுகள் நிற்கின்றன ஏரிப்புறக்கரை
  10. தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில், பட்டுக்கோட்டை வட்டத்தில் அமைந்துள்ள ஏரிப்புறக்கரை & அதிராம்பட்டினத்தில் பாவிக்கப்பட்ட வத்தை 1900+ பண்டகர்(Dr.) புளூ(blue) என்னும் ஆங்கிலேயர் வத்தையினை இவ்வாறு சித்தரிக்கின்றார். Dr. Blue Says, "Vattai, are flat-bottomed, have a box-like transverse section and are near-wall-sided over much of their length. "They range in size from around 13.72m long, with a beam of 2.13m and a depth of 1.37m, to the smallest vessels of c. 5.18m x 1.07m x 0.76m. However, irrespective of their size, they are all similar in shape with very high bows, and two or three masts each with a settee-lateen sail, a balan"
  11. வத்தை இந்த வகை வத்தைகள் இராமேஸ்வரத்தில் பாவிக்கப்படுகின்றன.
  12. குளச்சல் துறைமுகத்தின் கரையில் வலிய வள்ளங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. 1900s கடலினுள் ஓர் கப்பல் நிற்கிறது
  13. மற்றொரு பழங்காலத்து வள்ளம். இது இது கடந்து வந்த பாதை நெடியது. மற்றொன்று:

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.