Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. தேசியத் தலைவர் அவர்களுடன் காஸ்ட்ரோ (மாவீரர்)
  2. திரு. நெடியவன்
  3. சாகசக் கண்காட்சியின் போது நான்காம் ஈழப்போர் படையத் தொடக்கப் பயிற்சிக் கல்லூரியின் அதிகாரிகள் பயிற்சி நிறைவு விழா
  4. ..
  5. ???
  6. கருணா கும்பலுக்கு சாத்திய பின்னர்... தென் தமிழீழத்தை தரிப்பிடமாக கொண்ட படையணிகளின் சீருடையினை இவர்கள் அணிந்துள்ளதை நோக்குக
  7. (நிகழ்வு அறியில்லை) சமாதான காலம்
  8. விடுமுறை நாளில் வீட்டிற்கு நடந்து செல்லும் புலிவீரனொருவன் சமாதான காலம் "ஒரு நாளில் புலிவீரர் ஊர் வருவார் வந்து தலை சாய்த்து போர்க்கதைகள் சொல்வார்"
  9. ->Kotravan Karikaalan தமிழீழக்கடற்படையின் சிறப்புத்தளபதி சங்கர்_சூசை. (16_10_1963) வடமராட்சி பொலிகண்டி எனும் நெய்தல்நிலப்பிரதேசத்தில் தில்லையம்பலம் ஐயாவிற்கு ஒரு மகனுக்குப்பிறகு பதின்மூன்று ஆண்டுகளுக்குப்பிறகு 1963_ம் ஆண்டு ஒக்ரோபர்மாதம் 16_ம்நாள் இரண்டாவது மகனாக அவதரித்தவர்தான் சிவநேசன் என்ற இயற்பெயரையும் காந்தி என்ற செல்லப்பெயரையும்கொண்டு பின்னாளில் தமிழீழக்கடற்புலிகளின் சிறப்புத்தளபதியுமகவிளங்கிய திரு சூசை அவர்கள். இயக்கத்தில் திறீ சீறோ (3.0) என்ற என்ற சங்கேதக்குறியீட்டில் அழைக்கப்பட்டவர் எஸ் ஓ (S.O) என்ற குறியீட்டுப்பெயரில் அமைப்பிலும் மக்கள்மத்தியிலும் பிரபல்யம் பெற்றிருந்தவர். தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் முதுநிலைத்தளபதிகள் பலர் இருந்தபோதிலும் கடுமை, கண்டிப்பு, நிர்வாகத்திறன் முதலான குணாதிசயங்கள், ஆளுமைகள் என்பன இவரின் அடையாளங்ஙள். இயக்கத்தில் சூசையண்ணையின் ஆளுகையின்கிழ் கடமையாற்றியவர்கள் அமைப்பில் ஏனைய தளபதிகளின்கீழ் கடமையாற்றுவது சுலபம். எந்தளவிற்கு அவர் கண்டிப்பானவராக இருந்தாரோ அவ்வளவிற்கு அவரிடம் கருணையும் இருந்தது. விடுதலைப்போராட்டத்திற்கு மக்களது பங்கு எத்தகைய வகிபாகத்தை வகிக்கின்றது என்பதை விளக்குகின்ற தெளிவான அரசியல்க்கருத்துக்களும் அவரது ஜனரஞ்சகமான பேச்சுக்களும் மக்களை பெரிதும் கவர்ந்தன. சில சந்தர்ப்பங்களில் பொறுப்பாளர்கள் அவர்கள் வகித்த பொறுப்புக்களிலிருந்து இறக்கப்பட்டாலும் (காத்து இறக்கப்பட்டால்) சிறிதுகாலத்தின்பின்னர் மீண்டும் அவரது தகுதிநிலைகளுக்கேற்றவாறு கடமைகளை வழங்கி தட்டிக்கொடுத்து வளர்த்துவிடுவதில் அவருக்குநிகர் அவர்தான். சிலசமயங்களில் கடமைகளில் ஏற்படும் தவறுகள், தாமதங்களால் அவரிடம் கடுமையான பேச்சுக்களும் திட்டுக்களும் வாங்குவோம். ஆனாலும் அடுத்தடுத்தநாட்களில் அவராகவே அழைத்து வலுகூலாக கதைத்து குழையடித்து மேன்மேலும் உற்சாகமாக கடமைகளை முன்னெடுப்பதற்கு உந்துசக்தியளிப்பார். பொதுமக்களிடத்திலிருந்தும் போராளிகளிடமிருந்தும் நாளாந்தம் பல கடிதங்கள் வந்துகொண்டேயிருக்கும். ஒவ்வாருநாட்களும் காலையில் துயிலெழுந்து முதல்வேலையாக அந்தக்கடிதங்களை ஒவ்வொன்றாக வாசித்து அதற்கான நடவடிக்கைகளை கடித உறைகளில் எழுதிவைப்பார். (பின்னர் அது சம்பந்தப்பட்ட பொறுப்பாளர்களுக்கு அனுப்பிவைக்கப்படும்) அதன்பின்னரே அவர் காலை உடற்பயிற்சியில் ஈடுபடுவார். சிலசமயங்களில் துயிலெழுவதற்கு தாமதமானாலும் உடற்பயிற்சியை முடித்துக்கொண்டு கடிதங்களை வாசிப்பது வழக்கமானது. காலையில் 5.30 இற்கு ஒலிபரப்பாகும் IBC வானொலி செய்தியறிக்கைமுதல் இரவு 8.30 இற்கு ஒலிபரப்பாகின்ற புலிகளின்குரல் செய்தியறிக்கைவரை சூரியன் FM செய்திகள் உள்ளிட்ட அனைத்து வானொலிச்செய்திகளும் கசற்றில் ஒலிப்பதிவு செய்யப்படும். அதனை அவரது மெய்பாதுகாவலர்களில் ஒருவர் செய்வார். சூசையண்ணை தனது கடமைகள் சந்திப்புக்களை முடித்துக்கொண்டு இரவு எத்தனைமணியானாலும் அவர் நித்திரைக்குச்செல்லும்பொழுது ஒலிப்பதிவு செய்யப்பட்ட அனைத்து வானொலிச்செய்திகளையும் செவிமடுத்துக்கேட்டுவிட்டுத்தான் துயில்கொள்வது வழக்கம். கடற்புலி போராளிகள் மாவீரர்கள் குடும்பங்களில் மிகவும் வறுமைப்பட்ட குடும்பங்களுக்கு கடற்புலிகளின் வருமான நிதியிலிருந்து கடற்புலிகளின் நிதிப்பிரிவிற்கு ஊடாக மாதாந்த கொடுப்பனவுத்தொகைகளை வழங்கிவந்தார். கடற்தொழிலாளர்களின் சமூகக்கட்டமைப்பான கடற்தொழிலாளர் கூட்டுறவுச்சங்கங்களின் சமாசங்களின் வளர்ச்சியிலும் அவரது வகிபாகம் காத்திரமானது. ஒருகாலப்பகுதியில் முல்லைமாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசமும் வடமராட்சிக்கிழக்கு கடற்தொழிலாளர் கூட்டுறவுச்சங்கங்களின் சமாசமும் பெரும்நிதிநெருக்கடியை சந்தித்தபொழுது கடற்புலிகளின் நிதியிலிருந்து பல இலட்சம்ரூபா நிதியினை குறித்த இரு சமாசங்களுக்கும் கடனாக வழங்கி அந்த நிறுவனங்கள் பலமான கட்டமைப்பாக வளர்ச்சியடைவதற்கு முதன்மையானவராகத்திகழ்ந்தார். (அந்த கடன் நிதி பின்னர் கட்டம்கட்டமாக மீளச்செலுத்தப்பட்டுவிட்டது) இவ்வாறு அவரைப்பற்றி கூறிக்கொண்டேபோகலாம். எனது ஒரு தசாப்தகால போராட்டவளர்ச்சியில் அவரது வழிகாட்டல் நிறையவே உண்டு. குறிப்பிட்டகாலமாவது அவருக்குகீழ் செயற்பட்டிருக்கின்றேன் என்பதில் நான் பெருமைகொள்கின்றேன். அவரது இளையமகன் சங்கர் 2007_ம் ஆண்டு எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்தொன்றில் சாவைத்தழுவிக்கொண்டார். அதன்பின்னர் சூசையண்ணை தனது பெயரை சங்கர்_ சூசை என பதிவாக்கிக்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது. 58_வது அகவைநாள்காணும் தமிழீழக்கடற்படையின் முதன்மைத்தளபதிக்கு உளம்நிறைந்த அகவைநாள் நல்வாழ்த்துக்கள்.
  10. "யாரோ ஒரு இயக்க டொக்கராம், அவர் தானாம் நிறையபேரை காப்பாற்றினாராம். எனக்கு பேர் மறந்துபோச்சுதடா. அவரும் இன்னொரு டொக்கரும் தான் அந்தப்பிள்ளையை காப்பாற்றினவ. உனக்கு அவரை தெரியுமோடா” ----செய்தியாளர் சகிலா போர்முடிவுற்று ஒன்பது ஆண்டுகளாகிறது. மெல்ல மெல்ல ஒவ்வொருவரும் பேசுகிறார்கள். மனம் பதறும் சம்பவங்களை வேதனையுடன் பகிர்கிறார்கள். இறுதியுத்தகாலப்பகுதியில் செய்தியாளராக கடமையாற்றியவர் சகிலா. செய்தியாளராக பணியாற்றியவர்களில் ஒரே பெண் செய்தியாளரும் இவரே. குடும்பத்தில் இருவர் மாவீரர்கள். யுத்தத்தின் பின் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை. சிறையில் இருந்து விடுதலையாகியதும் அவளுக்கு கிடைத்த சமூகப்புறக்கணிப்பு. பல துயரங்களை சுமந்த ஒரு பெண்ணாகி என்னுடன் பேசும் போது “ ஒருதரும் என்னோடு பேசுவதில்லை, எனக்கு காசு ஒன்றும் வேண்டாம். நீ அடிக்கடி பேசிறியடா” என்று அப்பாவிதனமாக கேட்கும் சகிலாவின் துணிச்சல் மிக்க ஊடகப்பணிக்காகவே அவர் மதிக்கப்படவேண்டியவர். அதிகாலை நேரம், அனேகமான மக்கள் நித்திரையில் இருக்க, அனேகமான மக்கள் அங்கயும் இங்கயும் என்று மாறி மாறி ஓடிக்கொண்டிருந்த நேரமது. எறிகணைகள் வீழ்ந்து படுகாயமடைந்துகொண்டிருப்பார்கள். குண்டுசத்தங்கள் கேட்கும் திசையை நோக்கி சகிலாவின் கமரா விரைந்து செல்லும். 24.03.2009 அன்று காலை 5 மணி புதுமாத்தளன் நீர்ப்பரப்பினை தாண்டி படையினரின் நிலைகளில் இருந்து ஏவப்பட்ட ஆர்.பி.ஜி உந்துகணை ஒன்று வைத்தியசாலையின் பின்புறத்தில் வசித்த பெண் ஒருவரின் கால்கள் துளைத்துக்கொண்டு வெடிக்காத நிலையில் இருந்துள்ளது. யுத்த காலத்தில் வெளியான நிழற்படங்களில் இதைப் பார்த்திருப்பீர்கள். சத்தம் கேட்கும் திசையை நோக்கி ஓடிச்சென்ற உறவினர்கள் வெடிக்காத நிலையில் இருந்த உந்துகணையோடு காயமடைந்த பெண்ணை வைத்தியசாலைக்குக் கொண்டு வந்திருந்தனர். அங்கு கடமையிலிருந்த மருத்துவர்கள் உடனடியாக செயற்பட்டு அப்பெண்ணைக் காப்பாற்றியிருந்தனர். இது எவ்வளவு பெரிய சவால் நிறைந்தது என்று அனைவருக்கும் தெரியும். அன்று அந்த உந்துகணை வெடித்திருந்தால் வைத்தியசாலையில் வைத்தியர்கள் உட்பட பலர் இறந்திருப்பார்கள். “அக்கா நீங்கள் எப்படி பயமில்லாமல் அதில நிண்டீங்கள்? “ என்று கேட்க! “உனக்கு தெரியாதடா, நான் விடியப்பறமே எழும்பிடுவன், பகலில் சனம் என்று, அதில ஒரு கிணற்றடியில குளிக்கபோறனான். வழமையாக வெள்ளனவே நான் வைத்தியசாலைக்கு போடுவன். அன்றும் அப்படிதான் போனன். நான் பயப்பிடேல. எப்படியாவது அந்தப்பிள்ளையை தூக்கிகொண்டு வரவேணும் என்று அதில் கிடந்த துணியில கிடத்தி தான் தூக்கிகொண்டு வந்தது. வைத்தியசாலைக்கு கொண்டுவந்தவுடன்; அதில் இருந்த எல்லாரும் ஓடிட்டினம். யாரோ ஒரு இயக்க டொக்கராம், அவர் தானாம் நிறையபேரை காப்பாற்றினாராம். எனக்கு பேர் மறந்துபோச்சுதடா. அவரும் இன்னொரு டொக்கரும் தான் அந்தப்பிள்ளையை காப்பாற்றினவ. உனக்கு அவரை தெரியுமோடா” இன்றும் அதே வழமையான பாணியில் எல்லாரையும் அன்பாக கேட்டார். சகிலா அக்கா ஊடகத்துறையினை விட்டு விலகியிருந்தாலும் அவர் நிச்சயம் மதிக்கப்படவேண்டிய ஒருவர். இணையங்களில் நீங்கள் பார்க்கின்ற இறுதியுத்தகால புகைப்படங்களை பலவற்றினை சகிலாவே எடுத்திருந்தார். நான், ஏன் சகிலா அக்காவை மதிப்புகுரியவராக பார்க்கிறேன். என்பதையும் சொல்கிறேன். பழைய மாத்தளன், புதுமாத்தளன், இடைக்காடு, அம்பலவன்பொக்கணை(பொக்கணை என்று அழைப்பது வழமை), வலைஞர்மடம், களுவாவாடி, இரட்டைவாய்க்கால், தனிப்பனையடி, முள்ளிவாய்க்கால் மேற்கு, முள்ளிவாய்க்கால் கிழக்கு,வட்டுவாகல் மேற்கு ஆகிய பிரதேசங்களே இறுதி யுத்தகாலப்பிரதேசங்களாகும். இதில் வட்டுவாகல் மேற்கு மட்டும் இறுதி நாட்களிலேயே மக்கள் அதிகளவு ஒதுங்கிகொண்ட பிரதேசமாகும். இப்பிரதேசங்களை நான்; நான்காக பிரிக்கின்றேன். 01)பழைய மாத்தளன், புதுமாத்தளன், இடைக்காடு, அம்பலவன்பொக்கனை 02)வலைஞர்மடம்,களுவாவாடி,இரட்டைவாய்கால் 03)தனிப்பனையடி,முள்ளிவாய்க்கால் மேற்கு,முள்ளிவாய்க்கால் கிழக்கு 04)வட்டுவாகல் மேற்கு இப்பிரதேசங்களில் முதல் பிரிவில் உள்ள பிரதேசங்கள் 2009 ஏப்பிரல் 20,21 ஆகிய நாட்களில் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் செல்கிறது. அத்துடன் பல்லாயிரக்கணக்கான மக்கள் படையினரின் பகுதிக்கு சென்று விட்டார்கள். இதில் அம்பலவன்பொக்கணைப்பிரதேசத்திலேயே சகிலா அக்காவும் அவரது தாயாரும் வசித்து வந்திருந்தனர். சிறிலங்கா படையினர் அம்பலவன்பொக்கணையை அண்மித்துக்கொண்டு இருக்கும் பொழுது தமிழீழ விடுதலைப்புலிகளின் காவலரண்கள் வலைஞர்மடம் பகுதியினை அண்மித்து அமைக்கப்பட்டிருந்தது. வலைஞர்மடத்தினை தாண்டி முள்ளிவாய்க்காலுக்கு எவரும் அன்றையநாளில் வரமுடியாதநிலை, அம்பலவண்பொக்கணையில் இருந்த பெரும்பாலானவர்கள் படையினரின் பக்கமும் முள்ளிவாய்க்கால் பக்கமும் முதல்நாள் சென்று விட்டனர். அதற்குள் அகப்பட்டிருந்த சகிலா அக்காவும் தாயாரும் உண்மையிலே படையினரின் பக்கமே செல்லவேண்டும். முள்ளிவாய்க்கால் வருவதற்கு வழியேதும் இல்லை. வருவதென்றால் விடுதலைப்புலிகளின் காவலரண்களைத்தாண்டித்தான் வரவேண்டும். அது கடினமான காரியம். இந்த நேரத்தில் தான் தற்துணிவோடு வலைஞர்மடம் கடற்பகுதிக்கு சென்று கடலுக்குள் இறங்கி கழுத்தளவு தண்ணியால் தனது தயாரையும் முள்ளிவாய்க்கால் பகுதிக்கு அழைத்துச்சென்றமையானது. சகிலா அக்கா ஊடகப்பணி மீது வைத்த அதீத அக்கறை தான் காரணம். இறுக்கமான சூழல், சாப்பாடு பிரச்சினை, வயதான பெற்றோர்களை பராமரிப்பதில் சிரமம். குழந்தைப்பிள்ளைகளுக்கான உணவுப்பொருட்கள் இல்லை. காயமடைந்தவர்கள் மீண்டும் மீண்டும் காயமடைகிறார்கள். இந்த நெருக்கடி நிலையில் தான் அப்பகுதியில் வசித்த பல ஊடகவியலாளர்கள் மற்றும் ஊடகப்பணியாளர்கள் படையினர் பக்கம் சென்றிருந்தனர். படையினரின் பக்கம் செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தும் அங்கே செல்லாமல் இறுதிநாள் வரைக்கும் அந்தப்பணியை செய்திருந்தார். இன்றுவரைக்கும் அனைவரும் இறுதியுத்தகால படங்களை பார்க்கின்றீர்கள் என்றால் அதற்கு சகிலா அக்காவின் உழைப்பும் அதில் நிறையவே இருக்கின்றது. (சகிலா அக்கா பற்றிய விரிவான பகுதி நூலில் வெளிவரும்) -->சுரேன் கார்திகேசு
  11. முதல்நாள் மாலை முள்ளிவாய்க்கால் வைத்தியசாலை பகுதியை ராணுவத்தினர் கைப்பற்ற அங்கிருந்து சுமார் 3 மைல் தொலைவில் உள்ள இரட்டைவாய்க்கால் ராணுவ சோதனை நிலையத்தை நடந்து வந்தடைந்தோம். அங்கு விசேடமாக விசாரிக்கப்பட்டு பின்னர் ராணுவ பஸ் வண்டியின் ஊடாக ஓமந்தை நோக்கி வந்தோம். வரும் வழி எங்கும் புதுக்குடியிருப்பு விசுவமடு தர்மபுரம் பரந்தன் கிளிநொச்சி போன்ற நகரங்கள் போரினால் சின்னாபின்னப்பட்டு கிடந்ததை காணக்கூடியதாக இருந்தது. நூற்றுக்கணக்கானவர்கள் மிக நெரிசலாக ஏற்றப்பட்டு பயணிக்கும்போது ஒரு சிலரை தவிர அனைவரும் சுவாசிப்பதற்கு சிரமப்பட்டு பயணிக்க வேண்டிய தாயிற்று. பஸ் கனகராயன்குளம் பகுதியை அண்மித்த போது சிறுபிள்ளைகள் தண்ணீர் வேண்டும் என அழுதார்கள். காலை 4 மணியளவில் பஸ் வண்டி ஓமந்தை சோதனை சாவடி வந்தடைந்தது. ஆயிரக்கணக்கான மக்களினால் அப்பகுதி நிரம்பி காணப்பட்டது. ராணுவ அதிகாரி ஒருவரிடம் நாங்கள் வைத்தியர்கள் எனக் கூறினோம். நித்திரை இன்றி உங்கள் வரவுக்காக காத்திருக்கிறேன் என கூறினார். எங்களை ஒரு மரத்தடியில் இருக்கும்படி கூறினார். அங்கே சிதறிக்கிடந்த பிஸ்கட் பெட்டிகளை எடுத்து விரித்து படுத்து உறங்கினோம். அன்று பகல் முழுவதும் பலர் எங்களை விசாரித்தார்கள் மிரட்டினார்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்டார்கள். அங்கு செய்தவற்றை கூற முயற்சித்தோம். அப்படி கூறும் போது அவர்கள் கடுமையாக கோபப்பட்டார்கள். உங்கள் கதையை முடித்து விடுவோம் என சிலர் கூறினார்கள். என்ன கூற வேண்டும் எனக்கு தெரியவில்லை. அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு சில பதிலைக் கூறினேன். சந்தோசப்பட்டார்கள். விசாரணை செய்பவர் ஒரு கதிரையை தூக்கிக்கொண்டு ஒரு பகுதிக்கு செல்லுவர். அவர் கதிரையில் இருக்கும் போது அவரின் முன்னால் சிறு பிள்ளை போன்று கைகளை கட்டிய வண்ணம் இருந்து பதில் அளிக்க வேண்டி இருந்தது. மாலை வரை பல தடவைகள் விசாரிக்கப்பட்டு பின்னர் போலீஸ் வாகனம் ஒன்றில் வவுனியா நோக்கி அனுப்பி வைக்கப்பட்டோம்... --> Thangamuthu Sathiyamoorthy
  12. ஓயாத அலைகள் இரண்டு வெற்றி நினைவுத்தூண் கிளிநொச்சி ஒட்டிசுட்டான் வீதியில் உள்ள காக்கா கடைச் சந்தி (கிளிநொச்சி குளச்சந்தி) 2004 நவம் 27 திறக்கப்பட்டது
  13. லெப்.-Lt. செந்தூரன் அவர்களின் சிலை, செந்தூரன் சிலையடி, இரணப்பாலை, முல்லை 'சிங்களவன் தமிழீழ மண்ணை ஆக்கிரமித்த போது, 2009இல்' இந்த சிலைக்குப் பின்னால் எமது மக்களின் போராட்ட பற்றின் வீரியம் இருப்பது பலரறியாதது. இவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு பகுதிக் கட்டளையாளராய் இருந்து பின்னர் ஈழ மண்ணிற்கு வந்த இந்தியக் காவாலிகளின் சுற்றிவழைப்பின் போது குப்பி கடித்து வீரச்சாவடைந்தார். அவரின் நினைவாய் இரணைப்பாலை மக்கள் தாமாகவே அவரிற்கான திருவுருவச் சிலையினை நிறுவினர். இதுதான் மக்களின் பேராதரவு என்பது. கதை இப்படி இருக்க.. இந்தச் சிலைக்கு சிங்கள ஆக்கிரமிப்படையின் ஓட்டை ஊடகங்கள் 2009 ஆம் ஆண்டு ஒரு கதை எழுதின. ஆம், ஒரு திரிபுக் கதை. அது முதலில் சிங்கள பாதுகாப்பு அமைச்சின் வலைத்தளத்தில்(Defence.lk) வெளியாக அதை தென்னிலங்கை ஊடகங்கள் சத்தியெடுத்தன. கதை யாதெனில், இந்த சிலையானது தலைவர் மாமாவின் சிலையெனவும் அவர் உயிரோடு இருக்கும்போதே தவிபுவினர் அவருக்கு சிலை வைத்துவிட்டனர் எனவும் ஒரு நாள் முழுக்க பொங்கின. அதன் பிறகு என்ன நடந்ததோ தெரியவில்லை, அந்த செய்தி அப்படியே நூந்துபோய்விட்டது.
  14. ஆனையிறவில் அமைக்கப்பட்டிருந்த சின்னம் பளையில் இருந்த ஆட்டிவத்த என்ற சேணேவித்தளம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவடைந்த 2 தரைக்கரும்புலிகளின் நினைவாக அச்சேணேவித்தளம் இருந்தவிடத்தில் எழுப்பப்பட்ட நினைவுக்கல். இஃது அவர்களின் பெற்றோரால் 28/03/2003 அன்று திரைநீக்கம் செய்யப்பட்டது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.