Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! எல்லா(Hello)… வணக்கம் தோழர்களே... இன்று நாம் பார்க்கப்போவது ஈழத்தமிழர்களால் போரின் போது உருவாக்கப்பட்டு சமர்க்களங்களில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு வகையான உந்துகணைகள் மற்றும் சேணேவிகள் பற்றியே. முதலில் சேணேவி(Artillery) பற்றி பார்ப்போம். இவர்கள், சேணேவிகளில் நெடுந்தூர வீச்சுக் கொண்ட தெறோச்சிகள்(Howitzer) முதல் குறுந்தூர வீச்சுக் கொண்ட கணையெக்கிகள்(Mortar) வரை விளைவித்திருந்தனர்(produce). இவற்றிற்கான எறிகணைகளையும்(Shell) அவர்களாகவே மானுறுத்தியிருந்தனர்(Manufacture) என்பது குறிப்பிடத்தக்கது. செம்மைப்படுத்தப்பட்ட சேணேவி (improvised artillery) 1) இது 106 மி.மீ பின்னுதைப்பற்ற சுடுகலனின் குழலைக் கொண்டு உருவாக்கப்பட்டதாகும்.. இதன் காவுவண்டியானது புலிகளால் இதற்கென்று சிறப்பாக வடிவமைக்கப்பட்டதாகும். உள்நாட்டில் விளைவிக்கப்பட்ட சேணேவி ( Indigenously produced Artillery) கீழ்கண்ட சேணேவிகள் எதற்குப் பயன்படுத்தப்பட்டன என்பது பற்றி எனக்குத் தெரியாது! தயவுகூர்ந்து இது பற்றி அறிந்தவர்கள் தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்.. 1. இந்த உந்துகணை கணையெக்கியை 360 பாகையில் கிடைமட்டமாக சுழற்ற இயலும். மேலும் இதற்கு காவுவண்டி பொருத்தப்பட்டுள்ளது. கழுத்துப்பகுதி: சக்கரத்துடன் கூடிய அடிப்பகுதி: இந்த அடிப்பகுதி ஆனது புலிகளின் உந்துகணை ஏவுபலைகையின் அடிப்பகுதியினை ஒத்தது ஆகும். இதன் அடிப்பகுதியில் உள்ள அந்த இரு தண்டுகளையும் விரித்து ஒடுக்கலாம். நுனிக்குழாய்: 2)இதே போன்று மற்றொன்று பின்னால் தெரிகிறது பாருங்கள்.. அதுவும் இதே வகையைச் சேர்ந்ததே…. 3). இந்த உந்துகணை கணையெக்கியை 360 பாகையில் கிடைமட்டமாக சுழற்ற இயலாது. 4) புலிகளிடம் இருந்த மற்றொரு வகையான உந்துகணை கணையெக்கி.. இது எதற்குப் பயன்பட்டது என்பது பற்றிய செய்திகள் ஏதும் எனக்குத் தெரியவில்லை. இந்த உந்துகணை கணையெக்கியை 360 பாகையில் கிடைமட்டமாக சுழற்ற இயலாது. '3 படங்களை ஒருங்கிணைத்தே இப்படத்தினை உருவாக்கினேன்' மேற்கண்ட படைக்கலத்தின் அடிப்பகுதி: → மேலுள்ள அனைத்துப் படங்களும் திரைப்பிடிப்பே! பாபா கணையெக்கி - Baba Mortar இது 1980களின் பிற்பகுதியில் விளைவிக்கப்படட்டது ஆகும். இதை விளைவித்தவர் புலிகளின் அப்போதைய தொழில்நுட்ப பிரிவு பொறுப்பாளர் கப்டன் வாசு ஆவார். இதில் செம்மைப்படுத்தப்பட்ட 120 மிமீ எறிகணைகளானவை எறிகணைகளாக பயன்படுத்தப்படுகின்றன. மேலும் சுற்றுகளில் தார் இருந்ததால், அவை தரையில் மோதியபோது தீயினை ஏற்படுத்தின. 'பாபா கணையெக்கியினுள்(Mortar) எறிகணையினை போராளிகள் தாணிக்கின்றனர்(Load)' 'அந்த கணையெக்கியின் முழுப் படம்' → மேலுள்ள அனைத்துப் படங்களும் திரைப்பிடிப்பே! பாபா கணையெக்கியின் 120 மிமீ எறிகணைகள். 'எறிகணையினை ஏந்தியிருக்கும் புலிவீரன்' பசீலன் 2000 உந்துகணை கணையெக்கி (Pasiilan 2000 Rocket Mortar) புதுப்புனைந்தவர்: கேணல் ராயு / குயிலன் எண்ணிக்கை: 11 (ஆதாரம்) இது முற்றிலும் விடுதலைப் புலிகளால் உள்நாட்டில் உருவாக்கப்பட்டது. இதைக் குத்துவதற்கென்றே புலிகளிடம் தனிப் பிரிவே இருந்தது. அதன் பெயர் 'பசீலன் மோட்டார் பிரிவு' என்பதாம். இதுதான் ஈழத்தமிழரின் முதலாவது சேணேவிப் பிரிவு(Artillery unit) ஆகும். இது புலிகளால் 80களில் பயன்படுத்தப்பட்ட பாபா கணையெக்கி எனப்படும் கணையெக்கியின்(mortar) கால்வழியே(successor) ஆகும்.. இதற்கான எறிகணையினைக் கூட புலிகள் உள்நாட்டில்தான் விளைவித்திருந்தனர். இந்த எறிகணையின் வெடிப்பொலியானது எதிரிகளை கொல்கிறதோ இல்லையோ அவர்களின் காதுகளை செவிடாக்கி செந்நீரை வரவழைக்கும் என்பதே முதன்மையான புலனம்.. இந்த பேரொலியைக் கேட்கும் பாதிபேர் அந்த இடத்திலே நெஞ்சிடி வந்து புத்தனின் பாதத்தைக் காணச் சென்றுவிடுவார்கள்.. அப்படி ஒரு பேரிடி கேட்கும், இது வீழ்ந்துவெடிக்கும் இடத்தில்! அது மட்டுமல்ல இதை ஏவுபவருக்கும் இதே சிக்கல் உண்டு, ஆனால் அது எதிரிக்கு ஏற்படுவதைவிட குறைவானதே!... பிற்காலங்களில் ஏவுபவருக்கான இந்த சிக்கல் சரிசெய்யப்பட்டு விட்டது. இது புலிகளின் உருமறைப்பு (camouflage) மற்றும் மறைக்கும் தாக்குதல்(conceal attacking) பாணிக்கு ஏற்ப தெறோச்சி(artillery) அல்லது பல்குழல் போன்றவற்றால் ஏற்படுத்தப்படும் நிலையான முகவாய் எரிப்புகளைப் (muzzle flares) போன்று இதன் எறிகணை வெளியிடுவதில்லை. ஆனால் தொடக்க காலங்களில் குத்தும்(fired) போது ஏற்படுத்தும் பேரொலியானது இதன் இருப்பிடத்தை காட்டிகொடுக்கும் வாய்ப்பிருந்து பின்னர் சரிசெய்யப்பட்டது. இது வெடிக்க வேண்டுமெனில் செங்குத்தாக அதன் நுனி தரையை நேராக மோதுவதாக வீழவேண்டும். இதனால் இதன் தொடக்க காலங்களில் செங்குத்தாக வீழாத எறிகணைகள் வெடிப்பதில்லை.. ஆனால் ஒருசில ஆண்டுகளில் இந்த சிக்கல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு சரிசெய்யப்பட்டது. 1) இதுதான் தமிழீழத்தின் முதலாவது பசீலன் 2000 உந்துகணை கணையெக்கி. இது பேரரையன் ராயு அவர்களின் மேற்பார்வையில் சோதிக்கப்பட்டது. 'வானை நோக்கி சீறிச்செல்லும் முதலாவது எறிகணை' 2) இந்த பசீலன் 2000 உந்துகணை கணையெக்கியை 360 பாகையில் கிடைமட்டமாக சுழற்ற இயலாது. இந்நிழற்படமானது 90களில் எடுக்கப்பட்து ஆகும் 'இரண்டு புலி வீரர்கள் மேசை போன்ற ஒன்றின் மீது ஏறி நிற்கின்றனர்.. கீழே ஒரு வீரன் பசீலனுக்கான எறிகணையினை சுமந்தபடி நிற்கின்றார்' 'பசீலனுக்கான எறிகணை தாணிக்கப்படுகிறது (loaded), உறையூர்-2000 ஊர்தியில்' 3) இதே போன்ற விதத்தைச் சேர்ந்த பசீலன் 2000 கணையெக்கிகள் புலிகளிடம் 2 இருந்துள்ளது. மேலதிகமாக இருந்ததா என்று அறியமுடியவில்லை. இந்த உந்துகணை கணையெக்கியை 360 பாகையில் கிடைமட்டமாக சுழற்ற இயலாது. 'சில்லுக்கு அருகில் இருப்பதுதான் இதற்கான எறிகணை' மேற்கண்டதின் பின்பகுதி: 4) இதே போன்ற விதத்தைச் சேர்ந்த பசீலன் 2000 கணையெக்கிகள் புலிகளிடம் 2 இருந்துள்ளது. 1)இந்த பசீலன் 2000 உந்துகணை கணையெக்கியை 360 பாகையில் கிடைமட்டமாக சுழற்ற இயலாது. 2) இந்த பசீலன் 2000 உந்துகணை கணையெக்கியை 360 பாகையில் கிடைமட்டமாக சுழற்ற இயலாது. 'சிங்களத் தரைப்படை வீரன் பசீலன் 2000 கணையெக்கியில் உள்ள ஒரு சக்கரத்தினை தன் கையால் சுற்றுகிறார். இந்த சக்கரத்தினை சுற்றுவதால் இதன் குழல் தாழ்ந்துயரும்.' 5) பசீலன் 2000 உந்துகணையின் மற்றொரு விதம். இந்த பசீலன் 2000 உந்துகணை கணையெக்கியை 360 பாகையில் கிடைமட்டமாக சுழற்ற இயலாது. மேலும் இதன் சுடுகுழல் கட்டையாகவும் உள்ளது. மேற்கண்ட பசீலனுக்கான எறிகணைகள்: பசீலனுக்கான எறிகணைகள்: குறியீட்டுப் பெயர்: அக்கா(Akkaa) | புலன கிட்டிப்பு(credit😞 புஸ்பகுமார் சற்குணநாதன் (Pushpakumar Satkunanathan) எறிகணை நீளம்: 5' நெடுக்கம்(range): 8-12 km வெடியுளை(war head): < 50 kg வெடியுளை வகை : TNT 'பசீலன் எறிகணையை தூக்கி நிறுத்தும் பசீலன் மோட்டார்(கணையெக்கி) பிரிவுப் போராளி ' குறியீட்டுப் பெயர்: மாமா(Mama) | புலன கிட்டிப்பு(credit):: புஸ்பகுமார் சற்குணநாதன் (Pushpakumar Satkunanathan) எறிகணை நீளம்: ஆனால் இது மேலே உள்ள எறிகணையை விட உயரம் குறைந்தது. நெடுக்கம்: தெரியவில்லை வெடியுளை: தெரியவில்லை மேற்கண்ட எறிகணையை விட இது உயரம் குறைந்தது. குறியீட்டுப் பெயர்: சின்னவன்(Sinnavan) | புலன கிட்டிப்பு(credit):: புஸ்பகுமார் சற்குணநாதன் (Pushpakumar Satkunanathan) எறிகணை நீளம்: ஆனால் இது மேலே உள்ள எறிகணையை விட உயரம் குறைந்தது. நெடுக்கம்: தெரியவில்லை வெடியுளை: தெரியவில்லை மேற்கண்டதை விடச் சிறியவை இவை: வகை 4 எறிகணை:- மாமா & வகை 4 எறிகணை: 2) பசீலனுக்கான பிறிதொரு வகையைச் சேர்ந்த எறிகணை: எறிகணை நீளம்: ஆனால் இது மேலே உள்ள எறிகணையை விட உயரம் குறைந்தது. நெடுக்கம்: தெரியவில்லை வெடியுளை: தெரியவில்லை வான்குண்டு 1) வான்குண்டு (Aerial Bomb) நீளம்: 10' நெடுக்கம்: தெரியவில்லை வெடியுளை: 300 kg வெடியுளை வகை : C4 இது ஒரு வகையான வான்குண்டு. இதுவும் விடுதலைப் புலிகளால் முற்றிலும் உள்நாட்டில் உருவாக்கப்பட்டது தான். 'வகை -56 - 2 துமுக்கியுடன்(rifle) நிற்பவர்கள் சிங்கள இராணுவத்தினர்' எறிகணையின் கழுத்துப்பகுதி: எறிகணை 1) ராகவன் 152மிமீ எறிகணை இந்த 152 மிமீ எறிகணைகள் பல்வேறு நெடுக்கத்தில் இருந்தன. அடுத்து, உந்துகணைகள் பற்றிப் பார்போம். இவை புலிகளால் நான்காம் ஈழப்போரில் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. இவையெல்லாம் அவர்களின் உள்நாட்டுப் பொருட்களைக் கொண்டே உருவாக்கப்பட்டன ஆகும். உந்துகணைகள் மற்றும் அதற்குரிய செலுத்திகள் (Rockets & their respective launchers) 1) பண்டிதர் 1550(Pandithar 1550) இதன் வெடியுளையில் மூன்று முனைகள் உண்டு. புதுப்புனைந்தவர்: சார்ள்ஸ் அன்ரனி (மாவீரர்) 'பண்டிதர்' என்னும் பெயர்காரணம்: விடுதலைப் புலிகளின் உறுப்பினர் லெப்.கேணல் பண்டிதர் அவர்களின் நினைவாகச் சூட்டப்பெற்றது பட்டப் பெயர்: சமாதானம்(Samaathaanam) பெயர்க்காரணம்: அதன் ஒலி மற்றும் அது தரும் தாக்கம் ஆகிய இரண்டும் இரு தரப்புகளுக்கும் இடையில் சமாதானத்தை உண்டாக்குமளவு சக்தியானது என்றுதான் அப்படி அழைக்கப்பட்டது. வெடியுளை: 214 kg வெடியுளை வகை : C4 உந்துகணை நீளம்: 14' நெடுக்கம்: 6 km இருப்பில் இருந்த இழுவையுடன் கூடிய ஏவுபலகைகள் (launchpad with trailer): 15 நேரடி தாக்கம்: 50m சுற்றுவட்டத்தை அழிக்கும் இந்த உந்துகணைகள் விடுதலைப் புலிகளால் முற்றிலும் உள்நாட்டில் உருவாக்கப்பட்டவை ஆகும். அதனை துக்கி தாணிப்பதற்கு(load) குறைந்தது இருவர் என்றாலும் வேண்டும்.. இந்த உந்துகணையை இயக்க சுமார் ஆறு பேர் தேவை. இதனை இயக்கும் இடத்தில் இயக்குபவர்கள் நிக்கமட்டார்கள், சுமார் 50 மீற்றர் துரத்தில் நின்றுதான் இயக்கவைப்பர்கள். இது இலக்கில் வீழ்ந்து வெடிக்கும் போது பாரிய ஒலி கேட்கும் ,அதன் துண்டுகள் கூட படையினரில் படத்தேவையில்லை இது வெடிக்கும் போது எழும் சத்தமே படையினரை கொன்றுவிடும் . இந்த உந்துகணைகள் முதன் முதலில் முகமாலை முன்னரணில் உள்ள படையினர் மீதுதான் சோதித்துப் பார்க்கபட்டது . அதன் பின்னர் தான் இந்த உந்துகணையின் மானுறுத்தல்(manufacturing) அதிகரிக்கபட்டு மன்னார் ,வவுனியா, மணலாறு போன்ற களமுனைகளுக்கு அனுப்பிவைக்கபட்டது. ஆனால் சமாதானம் பின்னர் பயன்படுத்தப்படவில்லை. அவற்றை காவிச்செல்வது, செயல்படுத்துவது போன்ற செயற்பாடுகளுக்கு மேலதிக போராளிகள் தேவைப்பட்டதால் முகமாலை முன்னரங்கு பகுதி சண்டைகளோடு உள்ளூர் விளைவிப்புக்கள் நிறுத்தப்பட்டன. 'பின்பகுதி.. கீழிருந்து மேனோகிய பார்வை' 'பக்கவாட்டுத் தோற்றம்.. உந்துகணை அதன் ஏவுபலகை மேல் வைக்கப்பட்டுள்ளது. ஏவுபலகை காவுவண்டியுடன் பொருத்தப்பட்டுள்ளது' 'பின்னிருந்து முன்னோக்கிய பார்வை.. உந்துகணை அதன் ஏவுபலகை மேல் வைக்கப்பட்டுள்ளது. ஏவுபலகை காவுவண்டியுடன் பொருத்தப்பட்டுள்ளது' 'காவுவண்டியில் பொருத்தப்பட்டுள்ள ஏவுபலகைகள்' 'காவுவண்டியில் பொருத்தப்பட்டுள்ள ஏவுபலகைகள்' 'முன்பக்கம்.. மூன்று முனைகளும் தெரிகிறது ஆனால் அதில் ஒரு முனை மட்டும் கழற்றப்பட்டுள்ளது' 'உந்துகணை நிலத்தில் வைக்கப்பட்டுள்ளது.. பின்னிருந்து முன்னோக்கிய பார்வை(back to front view)' வெடிக்கும் காட்சி: 2) சண்டியன் (Sandiyan) சமாதனம் போன்று இது படையினருக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தாது . ஆனால் படையினர் இதன் பெயரை சொல்லி அச்சப்படும் அளவிற்கு இதன் தாக்கம் இருந்தது. இந்த உந்துகணை முதன்முதலாக 2000 ஆண்டு 3ம் மாதமளவில் சாள்ஸ் அன்ரனி அவர்களால் முல்லை. சாலை தளத்தில் பரிசோதிக்கப்பட்டு வெற்றிகரமாக உறுதிசெய்யப்பட்டது. புதுப்புனைந்தவர்: சார்ள்ஸ் அன்ரனி (மாவீரர்) உந்துகணை நீளம்: 4' நெடுக்கம்: <15 km வெடியுளை: 65 kg வெடியுளை வகை : C4 தாக்க சுற்றுவட்டம் : 800m 'சண்டியனை ஏவ ஆயத்தமாகும் புலிவீரன்' 'சண்டியனை ஏவிவிட்டு ஏவுபலகையை நகர்த்துகின்றனர் புலிவீரர்கள்' 'நிலையான ஏவுபலகையில் உந்துகணை வைக்கப்பட்டுள்ளது. |பின்னிருந்து முன்னோக்கிய பார்வை' 'நிலையான ஏவுபலகையில் உந்துகணை வைக்கப்பட்டுள்ளது. |பின்னிருந்து முன்னோக்கிய பார்வை' 'நிலையான ஏவுபலகையில் உந்துகணை வைக்கப்பட்டுள்ளது. |பக்கவாட்டுத் தோற்றம்' 'முழுமையடையாத உந்துகணை ஏவுபலகையில் வைக்கப்பட்டுள்ளது. ஏவுபலகை காவுவண்டியுடன் பொருத்தப்பட்டுள்ளது' 'சண்டியன் உந்துகணையின் அடிப்பகுதி. அடிப்பகுதியில் தெரியும் இந்த தந்திரிகை(wire) மூலம் தான் இது இயக்கப்படுகிறது (கொளுத்தப்படுகிறது)' ' 'இங்குதெரியும் மொத்த ஏவுபலகை கொண்ட காவுவண்டிகளின் எண்ணிக்கை = 8' 3) சிங்களப் படைகளால் கைப்பற்றப்பட்ட 'சண்டியன் உந்துகணை'யின் இருபக்கமும் வேறுபாடான இரு உந்துகணைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.. அவை பற்றிய எந்தவொரு புலனமும் தெரியவில்லை. பல்குழல் உந்துகணை செலுத்திகள் (multi barrel rocket launchers) கடைசியாக புலிகளால் உள்நாட்டில் விளைவிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்ட பல்குழல் உந்துகணை செலுத்திகள் பற்றியும் அவற்றில் எறிகணையாகப் பயன்படுத்தப்பட்ட உந்துகணைகள் பற்றியும் காண்போம். ஈழத்தீவிலே முதன்முதலில் பல்குழல் உந்துகணையினை பயன்படுத்தியவர்கள் புலிகளே. இவர்கள் இதை 1987 ஆம் ஆண்டில் இருந்து பயன்படுத்துகின்றனர் இந்திய அமைதிப்படை என்னும் பெயரில் வந்த இந்திய படைகளால் 1987 இல் மேற்கொள்ளப்பட்ட பவான் நடவடிக்கையின் போது புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட உள்நாட்டு பல்குழல் உந்துகணை செலுத்திகள்:- இதன் பிறகு அதாவது 1990 இல் இருந்து புலிகளிடம் மொத்தம் 5 பல்குழல் உந்துகணை செலுத்திகள் இருந்ததாக அறியப்படுகிறது.. அவற்றுள் ஒன்று மட்டுமே வெளிநாட்டில் இருந்து வாங்கப்பட்டது. வெளிநாட்டில் இருந்து வாங்கப்பட்டதை நான் இங்கு இணைக்கவில்லை. ஏனைய நான்கும் உள்நாட்டிலே புலிகளால் உருவாக்கப்பட்டவை.. நான் இங்கு புலிகளால் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ப.கு.உ.செ பற்றி மட்டுமே குறிப்புகளைக் கொடுக்கிறேன். இவற்றினை புலிகள் தங்களின் படகுகளிலும் காவிச்சென்று எதிரியின் தளங்கள் மீது கடலில் இருந்தபடியே உந்துகணைத் தாக்குதல் நடத்துவார்கள். அதிலும் குறிப்பாக திருகோணமலைத் துறைமுகம் மீது கடந்த 2000 ஆம் ஆண்டு நடத்தபட்ட பல்குழல் தாக்குதல் குறிப்பிடத்தக்கதாகும் 1) அறுகுழல் கொண்ட ப.கு.உ.செ எறிகணை: 107mm பெரும வீச்சு நெடுக்கம் (max. firing range): 8km சிறும வீச்சு நெடுக்கம்(min. firing range): 1km குத்தும் வீதம்(rate of fire): 10 சுற்றுகள்/ நிமிடம் இந்த பல்குழல் உந்துகணை செலுத்தியை பார்பதற்கு ஏதோ நிறுவனத்தால் உருவாக்கப்பட்டது போன்று தோற்றமளிக்கிறது. உள்ளூரிலே அவர்களால் இவ்வாறு உருவாக்கப்பட்டமை பெரும் மலைப்பாக உள்ளது. இது காவுவண்டியில்தான் பொருத்தப்பட்டிருந்தது. 'உந்துகணைகள் தாணிக்கப்பட்டுகின்றன (load). தாணிப்பவர் சிங்கள தரைப்படை வீரர்' 'உந்துகணைகள் தாணிக்கப்பட்டுள்ளன' 2) அறுகுழல் கொண்ட ப.கு.உ.செ எறிகணை: 107mm பெரும வீச்சு நெடுக்கம்: 8km சிறும வீச்சு நெடுக்கம்: 1km குத்தும் வீதம்: 10 சுற்றுகள்/ நிமிடம் 3) நாற்குழல் கொண்ட ப.கு.உ.செ 1)ஒற்றைக்குழல் கொண்ட உ.செ எறிகணை: 107mm பெரும வீச்சு நெடுக்கம்: 8km சிறும வீச்சு நெடுக்கம்: 1km குத்தும் வீதம்: 10 சுற்றுகள்/ நிமிடம் இதுவும் காவுவண்டியில்தான் பொருத்தப்பட்டிருந்தது. உசாத்துணை: செ.சொ.பே.மு. தமிழீழ விடுதலைப்புலிகளின் மங்கை படகுக்கட்டுமானத்தின் தயாரிப்பு குறித்த பார்வை forign1 https://www.youtube.com/watch?v=SxLsk4C4MzE&t=163s படிமப்புரவு மேலுள்ள முக்கால் வாசிப் படங்கள் திரைப்பிடிப்பே! Dossier on Ltte YouTube Corrupted Journalism - Photos Pasilan 2000 used by the LTTE * Sri Lanka Guardian (Pasilan 2000 used by the LTTE) சாள்ஸ் அன்ரனியை முகத்துக்கு நேரே திட்டிய சூசை: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன?- 07 Exhibit of captured arms, Muhamalai, Sri Lanka. முல்லைத்தீவு சுதந்திரபுரத்தில் புலிகளின் வெடிபொருட்கள் மீட்பு.... - GTN அருச்சுனா புகைப்படக் கலையகம் https://drgamini.org/2021/02/05/the-siege-of-jaffna-fort-during-the-civil-war-in-sri-lanka-1990/ தொகுப்பு & வெளியீடு நன்னிச் சோழன்
  2. துட்டகாமினியின் கோட்டைக்குள் இருந்துகொண்டு கரும்புலிகள் கதைத்த இறுதி உரையாடல்கள் இதனுள் உண்டு.
  3. நிகழ்படங்கள் - Videos தேசக் காற்றே ஒரு நிமிடம் : https://eelam.tv/watch/த-சக-க-ற-ற-ஒர-ந-ம-டம-theesak-kaarree-oru-nimidam-original-version_UdHJEISrLjUzorR.html மேற்கண்ட நிகழ்படத்தினுள் வீமன் அண்ணாவின் புன்னகையினைக் காண்க! முடிந்தால் இந்த நிகழ்படத்தினை HD-இற்கு மாற்றுக. அநுராதபுரக் கரும்புலிகளின் பயிற்சி: https://eelam.tv/watch/எல-ல-ளன-நடவட-க-க-அந-ர-தப-ர-கர-ம-ப-ல-கள-operation-ellaalan_lkVgTo9b27Mg95b.html 21 கரும்புலிகளின் வீரவணக்க நிகழ்வு - 1 : https://eelam.tv/watch/21-கர-ம-ப-ல-கள-ன-வ-ரவணக-க-ந-கழ-வ-1_hluHIDbmiFOZ1ku.html 21 கரும்புலிகளின் வீரவணக்க நிகழ்வு - 2 : https://eelam.tv/watch/21-கர-ம-ப-ல-கள-ன-வ-ரவணக-க-ந-கழ-வ-2_I1mqx9miKVddDuS.html 21 கரும்புலிகளின் வீரவணக்க நிகழ்வு - 3 : https://eelam.tv/watch/21-கர-ம-ப-ல-கள-ன-வ-ரவணக-க-ந-கழ-வ-3_OHj6C7WK61g6Sv6.html
  4. வீரவணக்க நிகழ்வு "சித்தார்த்தன் சொல்லி வைத்த நிர்வாணம் எதடா? சிங்களவன் நீ தேடும் நிர்வாணம் எதடா?" இந்த ஊடுருவித் தாக்குதலில் வீரச்சாவடைந்த தரைக்கரும்புலிகளின் வித்துடல்களிலிருந்த சீருடைகள் கழையப்பட்டு நிர்வாணமாக உழுபொறியின் பெட்டியொன்றில் வைக்கப்பட்டு சிங்களவரால் அநுராதபுர நகரில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டனர். இனவெறி பீடித்த சிங்கள மக்கள் அதை நின்று இரசித்துப் பார்த்தனர்! இவ்வுயிர்மின்னல்களின் நினைவாக தவிபு வெளியிட்ட வீரவணக்கச் சுவரொட்டி இது ஈழநாதம் நாளேட்டினுள் வைத்து வெளிவந்தது ஆகும். நான் எனது கைகளால் தொட்டுப் பார்த்துள்ளேன்.
  5. அனுராதபுரம் வான்படைத்தளம் மீதான எல்லாளன் நடவடிக்கை வெற்றியாகிய இந்நடவடிக்கையில் கரும்புலிகளால் 11 வான்கலங்கள் அழிக்கப்பட்டும் 15 வான்கலங்கள் ஓடி எழும்ப இயலா நிலைக்கு சேதப்படுத்தவும் பட்டன என புலிகள் அறிவித்தனர். அழிக்கப்பட்ட வான்கலங்கள்: 11 எம்.ஐ. 24 தாக்குதல் உலங்கு வானூர்தி - 1 எம்.ஐ. 17 உலங்கு வானூர்தி - 2 பெல் 212 உலங்கு வானூர்தி - 1 பெல் 206 உலங்கு வானூர்தி - 1 கே 8 தாரை பயிற்சி வானூர்தி - 1 பி.ரி. 6 பயிற்சி வானூர்தி - 2 பீச்கிறாஃவ்ற் வேவு வானூர்தி - 1 ஆளில்லா வேவு வானூர்தி - 2 சேதமாகப்பட்ட வான்கலங்கள்: 15 எம்.ஐ. 24 தாக்குதல் உலங்கு வானூர்தி - 1 செசுனா 150 பயிற்சி வானூர்தி - 4 பி.ரி. 6 பயிற்சி வானூர்தி - 5 சியாமாசெட்டி குண்டுவீச்சு வானூர்தி - 4 ஆளில்லா வேவு வானூர்தி - 1 மேலும், அனுராதபுர வான்படைத்தளத்திற்கு உதவவென வந்த 'பெல் 212' வகை உலங்குவானூர்தியானது நடுவானில் வான்புலிகளின் வானூர்தியை துரத்த முற்பட்ட போது மிகிந்தலை காட்டிற்குள் ஏற்கனவே ஊடுருவி தரிபெற்றிருந்த ராதா வான்காப்புப் படையணியின் வானூர்தி எதிர்ப்பு ஏவுகணை அணி ஒன்றால் சுட்டுவீழ்த்தப்பட்டதில் மிகிந்தலையில் இருந்த மலையில் மோதி நொறுங்கியதோடு அதில் பயணித்த 4 வான்படையினரும் கொல்லப்பட்டனர் என புலிகளின் 'எல்லாளன்' திரைப்படத்தில் காட்டப்பட்டுள்ளது. குறிப்பு: மேலே உள்ள அந்த அழிக்கப்பட்ட 8 விதமான வானூர்திகளின் படிமங்களும் 22/10/2007 அன்று முற்பகல் 11 மணியளவில் வெளிவந்த 'ஈழநாடு' நாளேட்டின் நடுப்பக்கத்தின் (அன்று வெளிவந்தது சிறப்பு பதிப்பாகும். அது இரு தாள்கள் கொண்டது மட்டுமே) இரு மருங்கிலும் அச்சிடப்பட்டு அவற்றின் தகவல்கள் நடுவில் பெட்டி போடப்பட்டு எழுதப்பட்டிருந்ததை நேரிலே எனது கண்களால் கண்டேன். வாசித்தேன். நான் நண்பகல் 1 மணியளவில் தான் நாளேட்டை வாசித்தேன். இந்நடவடிக்கையில் வீரச்சாவடைந்த கரும்புலிகளின் திருமுகங்கள்: சமர் தொடங்கச் சில நொடிகள் முன், ஊடுருவி முன்னகர்ந்து ஓடும் போது, அணித்தலைவன் உதிர்த்த சொற்கள்: அணித்தலைவன்: "சரியா?" வேறொரு கரும்புலி: "ஓம் மச்சான்" அணித்தலைவன்: "அடிபடப்போற...ன்!" வலது மூலையில் இன்னுமொரு கரும்புலி நிற்கின்றார்.. ஆனால் அவர் மறைக்கப்பட்டுள்ளார். இந்த நிழற்படம் எடுக்கும்போது வீமண்ணை ஒரு புன்னகை பூப்பார் பாருங்கோ(தலைவர் மாமாவுடன் உரையாடியபடி படவக்காரனை(cameraman) திரும்பிப் பார்க்கும்போது )... சும்மா அந்த மாதிரி இருக்கும்... 😍 சுபேசன் & வீமன் சுபேசன் & வீமன் 'இ-வ: லெப் கேணல் வீமன், மேஜர் கனிக்கீதன், கப்டன் தர்மினி எ திருமகள்' தலைவரின் மெய்க்காவலாரக இருந்த பிரியன் என்ற போராளியன் வாக்குமூலம்: இத்தாக்குதலிற்கு மொத்தம் 40 கரும்புலிகள் பயிற்சி எடுத்து அவர்களில் 21 பேர் தெரிவு செய்யப்பட்டு அனுப்பப்பட்டனர். அவர்களில் மருத்துவரான மேஜர் இளம்புலியும் ஒருவராவர். இக்கரும்புலிகள் யாவரும் இறுதியாக உணவு உண்டு பிரியாவிடை பெற்றுச் சென்றது விசுவமடு படைத்தளம் ஆகும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.