Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. [size=6]முலைகளின் ஆல்பம்[/size] [size=4] சுகுணா திவாகர் [/size] [size=5]பேருந்து படிக்கட்டு விளிம்பில் நின்றுகொண்டிருந்த நான் சடாரென்று கோணம் மாற்றினேன் எனக்கும் மேலே கைதூக்கி நின்ற பெண்களின் மார்புகளை ரசிப்பதற்காய். சற்றுநாள் முன்னரே மணமாகித் தாய்வீடு வந்திருந்த எதிர்வீட்டுப்பெண்ணின் மார்பு ரசித்தேன் மாசமாயிருப்பாளோ என்னும் உறுத்தலோடேயே. கல்லூரியில் கண்ட கழுத்துமேல் துப்பட்டா போர்த்திய கொழுத்த முலைகள் இன்றைய இரவை ஈரப்படுத்தக்கூடும். திரைகளெங்கும் நாயகிகள் முலைகளாய் உணரப்படுகிறார்கள். அடிக்கடி ஆடைகளைச் சரிசெய்துகொள்வது வேறு நம் கனவுகளின் பரப்பை அகலப்படுத்துகின்றன. மார்புகள் இல்லாது போனால் எல்லாப் பெண்களோடும் உறுத்தலின்றிப் பழகலாம் போலும். எப்போதேனும் தட்டுப்படும் மார்புகளின் ஸ்பரிசம் கிளர்ச்சியூட்டும் வேளையில். இப்படி எண்ணத்தோன்றும் வெறித்து நோக்கும் ஆண்களின் கண்களே முலைக்காம்புகள் ஆயினவோ.[/size] (நன்றி : கருப்பு 2002) http://midakkumveli..../blog-post.html
  2. பலர் வாங்கத் தயாராக இருப்பதால், பெயருக்கு முன்னுக்கோ, பின்னுக்கோ இடலாம்!
  3. [size=6]யாதுமாகி …[/size] [size=4]ஷம்மி முத்துவேல்[/size] [size=5] நாற்புறச்சட்டகத்தின் பின் இருப்பது தெரியாமல் பேசிக்கொள்கிறார்கள் .. நிறமிகளின் பின்னே நரை மறைத்து நிரந்தரமாகவே அவை சென்று விட்டதாகவே நினைத்து கொள்கிறார்கள் … கண்ணோரச் சுருக்கங்களையும் மோவாயின் தளர்ந்த தசைகளையும் நீவி இழந்தவைகளை கண நொடிகளில் பிடித்து விட்டதாக கற்பனை நிஜங்களில் சஞ்சாரம் செய்கிறார்கள் குழந்தையிடமும் சிறியவர்களிடமும் மட்டுமே தம் கோபங்கள் மற்றும் மூர்க்கங்கள் விதைத்து இயலாமையை கோபச்ச்சுமைதாங்கியில் சமைத்து பரிமாறுகிறார்கள் .. தோல்விகளை திரையிட்டு மறைத்து வெற்றிவேஷங்களை மட்டுமே வெளியிடுவர் .. புழக்கடை தனதாயின் அதிலும் சுகந்தமே வீசுவதாக பறைசாட்டுவர் … சமயத்தில் ஆன்மீகமும் …சமயத்தில் நாத்திகமும் இவர்கள் இருபோர்வை அணிந்து கொள்வர் … “தன்னை ” சுற்றியே உலகு அமைத்து சூரியனை சுழலவிடுவர் … சற்றே அயரும் நேரத்தில் நீயே நான் எனவும் மாற்றிக்கொள்வர் சிலவரிகளில் நீங்கள் வாசிக்கும் பொருட்டு அவர்கள் உங்கள் அருகிலோ, அல்லது நீங்களாகவோ அல்லது நானாகவோ இருக்கக்கூடும் .. [/size] http://puthu.thinnai.com/?p=11669
  4. [size=5]துரோகம்[/size] சுழியன் இந்த கூர்வாள் நண்பர்களுக்கானது. துரோகத்தால் முதுகில் கிழிக்க பிரத்யேகமாய் வடிவமைத்தோம் நாங்கள் சேர்ந்து, சேர்ந்து விளையாடினோம் துரோகத்தின் ஒவ்வொரு பாடத்தையும் செயல்முறை விளக்கமாய் செய்து, செய்து பார்த்தோம் ஒவ்வொரு முதுகாய் தேடித் தேடி குத்தினோம் உதிரம் தெறிக்க கொலையாகுபவர்கள் பதறிச் சரிவதை நிதானமாய் ரசித்தோம் "ஒருநாள் எங்களுக்குள்ளான பரஸ்பர நம்பிக்கை பொய்க்கும் போது எங்களை நாங்களே குத்திக் கொல்வோம்" .... ... ... ... என ஆவலாய் காத்திருக்கும் உங்கள் முதுகு தான் எங்களின் அடுத்த இலக்கு ! http://suzhiyam.blog.../blog-post.html
  5. திருமணநாள் பரிசுகள் ஆர்.அபிலாஷ் திருமணநாள் பரிசுகள் குழந்தைத்தனத்தால் புத்தொளிர்கின்றன. வருடங்கள் முன் பின் சென்று தூசு படிந்து நிறம் மங்கி வரும் ஒரு குழந்தையின் பாதுகாக்கப்பட்ட விளையாட்டுப் பொருட்களைப் போல் இன்று மாலை பழைய பரிசுகளுடன் அமர்ந்திருக்கிறேன். மஞ்சளான மாலை அழுகும் இலைகளின் சலசலப்புடன் இரவில் வெடிக்கும் பூக்களின் வாசனையையும் கொண்டு வருகிறது. மாடி ஜன்னலுக்கு வெளியே நூறு நூறு கட்டிடங்களுக்கு அப்பால் ஒரு சோர்வுற்ற சூரியன் இறுதியாய் ஆஸ்பத்திரிக்கு திரும்பும் தளர்ந்து வீழ்ந்த உடலைப் போல் எதையாவது பற்றிக் கொள்ள விழைகிறான். எதிர்பாராது மழை பெய்யத் துவங்குகிறது தயாரற்ற மனிதர்கள் கூரைகள் தேடி சிதறுகிறார்கள். கால் இடறி தடுமாறுகிறேன் உனது பரிசுப் பொருட்கள் கலந்து விடுகின்றன எனதுடன். மீண்டும் மீண்டும் அவற்றை இரு பகுதியாய் பிரிக்க முயன்று தோல்வியடைகிறேன் பின் காலவரிசைப்படி கலைத்துக் கலைத்து அடுக்குகிறேன். மழை நிற்க வெகுநேரமாகிறது வெப்பம் கிளம்பி பின் பனி பொழியும் போது திகைத்துப் போய் பரிசுப் பொருட்கள் மத்தியில் தற்காலிகமாய் எல்லாரும் மறந்து போன ஒரு குழந்தையைப் போல அமர்ந்திருக்கிறேன். வாசலில் மெல்ல தும்மியபடி நுழைகிறாய். உன்னிடமிருந்து பரிசுப் பொருளை வாங்கி அருகில் வைத்து உனக்கான புதுப் பரிசைக் குவியலில் தேடி தோற்று வேறுவழியின்றி கண்களில் மன்னிப்பை வைத்தபடி அங்கு ஆகப் பழசான பரிசு ஒன்றைப் பொறுக்கி நீட்டுகிறேன் அதில் மிகச்சரியாய் குறிக்கப்பட்டுள்ளது இன்றைய தேதி... http://www.uyirmmai....s.aspx?cid=5483
  6. அழுமூஞ்சியாக இல்லாவிட்டால் முடியும்! More Reply Options ஐ அழுத்திப் பின்னர் அழுத்தினால் முகக்குறிகள் வரும்!
  7. நாம் நல்ல பிள்ளைகள்.. பூச்சி புழுக்களைக் கிண்ட அண்டுவதில்லை! அத்தோடு விசயம் தெரிந்தவர்கள் பொறுப்பாளர்களாக இருப்பதால் பூச்சிகள் பொசுங்கிவிடும்!
  8. விசுகு ஐயா.. எனது கிரகிக்கும் ஆற்றலை நீங்கள் எத்தனை வீதம் கிரகிப்பீர்கள் என்றெல்லாம் நான் கணக்கில் எடுப்பதில்லை! வாசிக்கும் கருத்துக்களில் ஒவ்வொரு வசனத்திற்கும் கருத்துக்கள் எழுதுவதை விட சில முக்கிய வசனங்களிற்கு மாத்திரமே சிலவேளை பதில் எழுதத்தோன்றும்.. என்றாலும் எனக்கும் பன்னாடைக் குணம் தமிழன் என்றபடியால் இருக்கும் என்பதையும் மறுப்பதற்கில்லை!
  9. திகில் படங்களை அடிக்கடி பார்த்தால் திடுக்கிட மாட்டீர்கள்! விசுவாசத்திற்காக தூரநோக்குள்ள மாற்றங்களை உள்வாங்காது இருந்தால் யாழும் காணாமல்போகும். யாழைக் காணாமல் போகச் செய்ய யாழுக்கு வெளியிலிருந்து எவரும் வரத்தேவையில்லை. உள்ளே இருப்பவர்களே போதும்!
  10. முகங்கள் ப.பார்த்தசாரதி ஒவ்வொருநாளும் பல முகங்களைக் கையிலேந்தி அலைகிறேன் யாருக்கும் தெரியாமல் அவற்றை மறைத்து வைத்து மீண்டும் அணிந்துகொள்கிறேன். ஒவ்வொருவருக்காய் ஒவ்வொரு முகம் மாட்டி அலைகிறேன். எந்த முகம் என்முகம் என்பது யாருக்கும் தெரியாமல் சமமாக பாவித்து வருகிறேன் ஒருவருக்குத் தெரிந்த முகம் மற்றவர்களுக்குத் தெரிய வாய்ப்பு கொடுக்காமல் கையிலிருந்து மாட்டிக் கொள்கிறேன் சில துளி வினாடிகளில் நல்லவன் கெட்டவன் வஞ்சகன் சாது அப்பாவி வெகுளி என ஒவ்வொருமுகங்களுக்கும் பெயர் வைத்து தினமும் அதற்கு உணவூட்டி வளர்த்து வருகிறேன் ஒரு நாள் அகக்கண்ணாடியில் என் சொந்த முகம் பார்க்கையில் அது வெளிறிப் பழுதடைந்து அழுகி அகோரமாய் என்னைப் பார்த்து சப்தமாய் சிரித்தபடியே இறந்துகொண்டிருந்தது ஒவ்வொருநாளும் பல முகங்களைக் கையிலேந்தி அலைகிறேன் யாருக்கும் தெரியாமல் அவற்றை மறைத்து வைத்து மீண்டும் அணிந்துகொள்கிறேன். http://www.uyirmmai....s.aspx?cid=5448
  11. எனக்குப் பல பச்சைகளை குத்தும் இரகசியம் தெரியும் (ஒரே பெயரில்), ஆனால் சொல்ல்லமாட்டேன்!
  12. முகமூடிகள் ராமலக்ஷ்மி ஒன்றல்ல இரண்டல்ல ஒருநூறு முகமூடிகள் அணிந்தது அறியாதபடி தோலோடு சங்கமமாகி சதையோடும் எலும்போடும் ஊடுருவி பளபளத்த முகமூடிகளுக்கே எத்தனைப் பாராட்டுக்கள் புகழாரங்கள் அத்தனையும் ரசித்தபடி இரவிலும் களைந்திட மனம்வராத நேசமாகி உயிரோடு ஒன்றிப்போய் உலகுக்கான அடையாளமாகி ஏதோ ஒருநாளில் ஏதோ ஒருசம்பவத்தில் விழித்துக் கொள்கிற ஆழ்மன விகாரம் கிழிக்கத் தொடங்குகிறது முகமூடிகளைத் தன்னிச்சையாக ஒவ்வொன்றாக அன்றி ஒட்டு மொத்தமாக சுற்றம் மறந்து நிதானம் இழந்து மதி மழுங்கி மற்றவர் வருத்தி மனவெறி அடங்கிய வெற்றிக் களிப்பில் எதிரே இருந்த கண்ணாடியை எதேச்சையாய் ஏறிட பேதலித்து அலறுகிறது சுயமுகம் தன்கோரம் தானே காணச் சகியாமல். *** உடைந்து போன பொம்மையைக் கையில் வைத்தபடி விசும்பிக் கொண்டிருந்த குழந்தையைச் சுற்றி இறைந்து கிடக்கும் விளையாட்டுச் சாமான்களைப் போலக் கலைந்து கிடந்தது வீடு கழற்றி எறியப்பட்ட முகமூடிகளால் கலங்கி நின்ற மனதை ஆற்றுப்படுத்த வந்த ஆத்ம பந்தங்கள் தேற்ற மறந்து கழற்றத் தொடங்கின ஆத்திரத்துடன் தத்தமது முகமூடிகளை குவிந்த முகமூடிகளுக்குள் அமுங்கி மூச்சுத் திணறி மீட்கக் கோரி வெளி நீண்ட கையை ஆதுரமாய் பற்றித் தூக்கிவிட்ட மகானுபாவர், ”வருத்தம் விடு! மனிதருக்காகவே படைக்கப்பட்டவைதாம் இவை. சேர்ந்து கிடப்பதில் இன்னும் சிறப்பானதாய்த் தேர்ந்தெடுத்து அணிந்துகொள்ள கிடைத்த வாய்ப்பாகப் பார்” உபதேசித்தார் நழுவத் தொடங்கிய தன் முகமூடியை கெட்டியாகப் பிடித்தபடி. http://www.uyirmmai....s.aspx?cid=3097
  13. ஞாபங்கள் முடிவில் ராசை நேத்திரன் சம்பளத்தை நோக்கிய மாத மாத வாழ்க்கை பயணம் எளிதாய் மனித வாழக்கையின் நாட்களை நொடிப்பொழுதில் தின்று விடுகிறது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவே வாழ்க்கை பயணம் என்று மாறிவிடுவதில் சாதிக்க பிறந்த மனிதன் எங்கே யோசிக்க சாதனையின் படிக்கட்டுக்களை திடும் என திரும்பி பார்க்கிறேன் பள்ளிப்பருவம் மறக்க தொடங்கி அனிச்சையாய் ஓடிக்கொண்டு இருக்கிறேன் ..... இது போலவே இன்னும் சிறிது நாட்களில் கல்லூரி காலம், உயிர் நண்பனின் நட்பு, உறவின் பாலம் கொஞ்சம் கொஞ்சமாய் தேயத்தொடங்கிவிடுகிறது நாட்காட்டியை போலவே ஞாபங்களும்....... http://www.vaarppu.com/view/2571/
  14. பிறந்தநாள் வாழ்த்துக்கள் சாத்ஸ்!
  15. ராஜவன்னியனுக்கு உளங்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  16. சகாறா அக்கா மேக்கப் போடாமல் எழுதினால் "தம்பி".. மேக்கப் போட்டுக்கொண்டு எழுதினால் "அண்ணா".
  17. தனிமை என்னும் மதுபானம்… கவிதா நான் அவளது இறுதி வேர். என்னிடம் இருக்கிறது, அவள் விட்டுச் சென்ற தனிமையின் எச்சங்கள். அவளை புசித்து பெருகிய அவளது தனிமைகள் என்னிடம் தமது ரகசியங்களை வெளியிட்டுக் கொண்டன. புராதான சுவை கொண்ட அந்த தனிமைகளை சிறு மதுக் குவளைகளில் ஊற்றி உங்களுக்கு பருகத் தருகிறேன். உங்கள் போதையின் பிறழ்வுகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறாள் தனிமை தின்ற மீதமாய் அலைந்து கொண்டிருக்கும் அவள். http://neerottam.wor...ae%ae%e0%af%8d/
  18. இன்று பிறந்தநாளைக் கொண்டாடும் நிழலிக்கும் அபிஷேகாவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  19. நகரங்கள் தேவ அபிரா இலையுதிர்காலத்தின் எதிர்பாராத வெப்பம் தவழ்கையில் இந்த நகரத்தை வந்தடைந்தேன். நகரத்தின் காலடியில் நகர்கிறது நதி. கரையோர உணவகங்களில் நடுகுடைகள் விரிந்துள்ளன. முறுகச்சுட்ட பாணில் உருகி வழியும் பாலாடைக் கட்டிகளுக்கருகில் மென் பொன் மதுக்குவளையை இருத்தி நங்கைகள் விரைந்து பரிமாறுகிறார்கள். பங்குச்சந்தை காய்கிறது. வங்கிகள் சரிகின்றன. ஆயினும் கொழுத்த முகங்களின் எண்ணைப்படிவுகளில் இலையுதிகாலச்சூரியன் பளபளக்கிறது. மிதவைப்படகின் தோசைக்கடைகளில் சிறுவர்கள் காத்திருக்கிறார்கள். நூற்றாண்டுகளாக நகரும் ஆற்றின் ஈரத்தைத் தன்காதலியின் உதடுகளுக்குள் விட்டுக்கொண்டிருந்தான் ஒருவன். இலையுதிர்காலத்தின் வெப்பம் தவற விடக்கூடியதா என்ன? நான்கு தசாப்தங்களின் முன்பு இந்த நதிக்கரையில் எதிரி காத்திருந்தான். விமானங்கள் குண்டுகளைப் பொழிந்தன. நினைவுச்சின்னங்களாக நசுங்கிப்போன அந்தக்காலத்தின் கல்லறையில் ஒரு வாசகம் எழுதப்பட்டிருந்தது "இது எமது நகரம்" என் வாழ்வின் நினைவுத் தடத்தில் உறங்கிக்கிடந்தவென் நகரங்கள் விழித்தன... உறையாதே நடந்து போவென்றன.. காலத்தினூடே பயணம் செய்யும் * நியூற்றினோக்களைத் தேடி குறுகலான சந்துகளினூடே நடந்தேன். நூற்றாண்டுகள் கடந்தும் கடல் கடந்து அள்ளிவந்த செல்வங்கள் இன்னும் சிதறிக்கிடந்தன. தொன்மையை இழந்து நகரத்துள் நசுங்கிக் கிடந்த பூங்காவெளியில் கண்கள் படாமலும் காமம் சுடாமலும் பெண்ணுடல் கிடத்தி வெய்யில் சுகிக்கிறது. என் நகரத்திலோ பூதங்களுக்கஞ்சி ஒடுங்கிய பெண்களின் சாபத்தில் இன்னுமெரிகிறது எரிக்கிறது சூரியன். நினைவுகளின் தகிப்புத்தாளாது நிமிர்ந்து நின்ற நினைவுசின்னத்தின் அடியில் அமர்ந்தேன். அதன் வேர்கள் எத்தனை ஆண்டுகள் நீண்டிருந்தவென்றறியேன். ஆனாலும் அதன் மடியில் இருந்தது ஒரு கவிதை: "இந்த நகரத்தில் அதிக நாள் நான் வாழவில்லை ஆயினும் எனது இளமைக்காலம் இங்கேயிருந்தது நான் எங்கு சென்றபோதும் என்னருகில் இருப்பதும் இந்த நகரமே".* ஓலங்கள் மட்டும் மௌனமாக அலையும் எனது நகரங்களில் என்றாவது ஓர் நாள் நானும் நினவுச்சின்னமொன்றை எழுப்புவேன். ஏனேனில் யுகங்களைக்கடந்து செல்ல விரும்பும் அற்ப மனிதன் நான். மனிதர்களற்ற வெளியில் நுழையும்; சூரியன் விழுந்து சிவப்பாகும் இரவு நதிப்படுக்கையில் நான் சரிந்தபோது, என் காதருகில் கேட்கிறது என் நகரத்தின் ஆழியின் ஓங்காரம். http://thevaabira.blogspot.com/2011/10/blog-post_03.html
  20. ஈசலோடாயினும்... 1.ஒரு மழைநாளிரவில் பிறந்த ஈசல் ஒன்று சற்றே எம்பிப் பறந்தது வானில் .. பக்கத்தில் பறந்துகொண்டிருந்த பறவையைப் பார்த்து நானும் ஒரு பறவையென்று பெருமிதம் கொண்டது கொண்ட வினாடியே ஆயுள் தீர்ந்து விழுந்திறந்தது 2.விழுந்த ஈசல் இறக்கும் முன்பு நினைத்தது ஒரு நாள் வாழ்க்கைக்கு எதற்கிந்த சிறகு? http://ezhuththuppiz...og-post_30.html
  21. எனது மனங்கொத்திப் பறவை ரவி (சுவிஸ்) ---------------------------------------- இன்று நான் சந்தோசமாயிருக்கிறேன் எனது பிரிய மனங்கொத்திப் பறவையின் மீள்வரவில் நான் இலேசாகிப்போயிருக்கிறேன். நான் எதையும் விசாரணை செய்வதாயில்லை. ஏன் பறந்தாய் ஏன் எனைவிட்டு தொலைதூரம் பயணித்தாய் என்பதெல்லாம் எனக்கு பொருட்டல்ல இப்போ. என் பிரிய மனங்கொத்தியே நீ சொல்லாமலே பறந்து சென்ற காலங்கள் நீண்டபோது என் மனதில் உன் இருப்பிடம் பொந்துகளாய் காயங்களாய் வலிக்கத் தொடங்கியதை அறிவாயா நீ. நீ அறிந்திருப்பாய் நீ இரக்கமுற்றும் இருப்பாய். மீண்டும் உன் கொத்தலில் இதமுற்றிருக்கிறேன் நான் கொத்து கோதிவிடு என் மனதை இதுவரையான உன் பிரிவின் காலங்களில் என் மனம் கொத்திச் சென்ற பறவைகளில் பலவும் என் நம்பிக்கைகளின் மீது தம் கூரலகால் குருதிவடிய எழுதிச்சென்ற வரிகளெல்லாம் வலிகள் ஊர்கின்றன. மறக்க முனைந்து மறக்க முனைந்து தோற்றுப்போகிறேன் நான். நான் நானாகவே இருப்பதற்காய் காலமெலாம் வலிகளினூடு பயணிக்கிறேன். சொல்வதற்காய் எனை மன்னித்துவிடு உன் மீள்வரவும் மீள்பறப்பாய் போய்விடும்தான். என்றபோதும் இன்று நான் இதமுற்றிருக்கிறேன் - நீ கோதிய பொந்துள் சிறகை அகல விரித்ததனால்! http://www.vaarppu.com/view/2533/
  22. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் விசுகு அண்ணா.
  23. முத்தக் கவிதைகள்: முத்தம்... ஒரு பெண் தன் பெண்மையை உணர்ந்து மெய் சிலீர்த்திடும் சுதந்திரத்தருணம்! ~*~* ~*~ முத்தம்! அன்பின் வெளிப்பாடு காதலின் கடைக்குட்டி நினைவுக்கோர்வையின் அகவரிசை ஆணாதிக்கத்தின் முற்றுப்புள்ளி யதார்த்தத்தை மீறிய கற்பனை. ~*~* ~*~ முத்தம் ! ஒரு நொடிக்கொண்டாட்டம் காமத்தின் கதவுத்தாழ்பாள் ஏவாளின் ஆப்பிள் பெண் உணர்தலின் முதற்புள்ளி கற்பனையை மீறிய யதார்த்தம். ~*~* ~*~ சவ வீட்டிலும் சத்தமில்லா தெருக்களிலும் பகிரப்படும் முத்தங்கள் வெவ்வேறானவை.. ~*~* ~*~ ஏங்கி நிற்கும் இதய வெற்றிடத்தை எதிர்பாரா ஒற்றை முடிவில் முத்தம் மலர்களால் நிரப்பும். ~*~* ~*~ தடுத்து பழகாதீர்கள் கொடுத்து பழகுங்கள் முத்தங்களை! - அருண்.இரா http://kaattchi.blog...-post_9276.html
  24. பருவமெய்திய பின் மன்னார் அமுதன் -------------------------- பருவமெய்திய பின்தான் மாறிப் போயிருந்தது அப்பாவிற்கும் எனக்குமான பிடித்தல்கள் வாசலில் வரும் போதே வீணாவா! வா வாவெனும் அடுத்த வீட்டு மாமாவும் அகிலாவின் அண்ணாவும் போலிருக்கவில்லை அப்பா மழை வரமுன் குடையுடனும்.. தாமதித்தால் பேருந்து நிலையத்திலும்.. முன்னும் பின்னுமாய் திரிய காரணம் தேவைப்படுகிறது அப்பாவுக்கு துக்கம் தாழாமல் அழுத ஒருபொழுதில் ஆறுதல் கூறுவதாய் அங்கம் தடவுகிறான் அகிலாவின் அண்ணா யாருக்கும் தெரியாமல் மொட்டைமாடிக்கு வா நிலா பார்க்கலாமென மாமா இப்போதெல்லாம் பிடிக்கிறது அப்பாவை http://www.vaarppu.com/view/2496/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.