-
Posts
2554 -
Joined
-
Last visited
-
Days Won
33
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by சண்டமாருதன்
-
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
சண்டமாருதன் replied to தமிழரசு's topic in ஊர்ப் புதினம்
உங்கள் ஆதங்கம் புரிகின்றது. உங்கள் விருப்பபடி சைவம் தன்னை தக்கவைக்கவேண்டுமானால் அது தன்னை மீழ் சீரமைப்பதால் மட்டுமே முடியும். முதலில் சைவமா இந்துவா என்ற குழப்பநிலைக்கு முடிவு அவசியம். இந்திய இந்துத்துவம் என்ற பெரும் சகதியில் குதிக்க முற்படுகின்றார்கள். இந்த நிலை தொடர்ந்தால் மத மாற்றத்தை தடுப்பது சாத்தியமற்றது. பல வருடங்களாக மடுமாதாவை அண்டி பல்லாயிரம் அகதிகள் இருந்தார்கள். அவர்களுக்கு நிறுவனமயப்பட்ட ஒரு மதம் பாதுகாப்பையும் உதவிகளையும் வழங்கியது. அதில் சிலர் மதம் மாறினால் அதில் தவறு எதுவும் இல்லை.இதே காரியத்தை சைவம் செய்திருந்தால் மக்கள் அதிலிருந்திருப்பார்கள். உங்கள் மதத்திற்கு என்று ஒரு தலமை இருக்கவேண்டும் அதில் ஜனநாயகம் இருக்கவேண்டும். கொள்கை இருக்கவேண்டும் அதில் சாதிகள் இல்லை எல்லோரும் சமம் என்ற கட்டுப்பாடு இருக்கவேண்டும். இது எதுவுமே இல்லையே ! உங்கள் மதத்துக்கு யார் தலைவர் கொலைகாரச் சங்கராச்சாரியா இல்லை மன்மதன் நித்தியானந்தாவா இல்லை யார்? இல்லை சாய்பாபாவா? என்ன கட்டமைப்பு உள்ளது? யார் நெறிப்படுத்துவது? சைவ வெள்ளாளர் என்கின்றார்கள் சைவப் பிள்ளைமார் என்கின்றார்கள் இது இரண்டும் சைவத்தோட தனது சாதியை முனன்வைக்கின்றது. அங்கேயே நீபெரிது நான் பெரிது என்ற நிலை தோன்றுகின்றது. ஒரு காலத்தில் பொருளாதர அடிப்படையில் பிள்ளைமார்களையும் பணக்காரனையும் மக்கள் சார்ந்திருக்கும் வரை அவர்கள் சொன்ன சொல்லுக்கு கட்டுப்படலாம் இப்போது தானே தனது பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சூழலில் தனது மதத்தையும் அவனவனே தீர்மானித்துக்கொள்வான். மதம் என்பது சட்டை போன்றது என்பார்கள். அவனவனுக்கு விரும்பிய சட்டையை அவனவன் அணிந்தகொள்வான். உங்களிடம் சுத்தமான அழகான சட்டை இருந்தால் அதிகமானவர்கள் வாங்கி விரும்பி அணிந்துகொள்வார்கள். அந்தச் சட்டையை போடாதே என்பதற்கும் என்னிடம் நல்ல சட்டை இருக்கின்றது என்பதற்கும் வித்தியாகசம் இருக்கின்றது. எந்த வழி சிறந்தது என்பத நீங்களே தான் தெரிவு செய்யவேணும். -
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
சண்டமாருதன் replied to தமிழரசு's topic in ஊர்ப் புதினம்
ஆக இப்ப இலங்கையில் நடந்த இனப்படுகொலைகளை அந்தக் காலத்திலே கழுதைப்பால் குடித்து ஞானம் பெற்ற சம்மந்தர் ஞானத்தால் உணர்ந்து பௌத்தர்களை கொன்றார்? சம்மந்தர் கொன்றது தமிழ்ச் சமணர்களையும் பௌத்தர்களையும். சம்மந்தர் மாணிக்கவாசகர் சுந்தரர் மூவரும் பார்ப்பனர்கள். இன்று இந்திய இந்துத்துவம் எப்படி சிண்டு முடிந்து சாதிவாரியாக பிரித்து இந்தியாவை தமது வசமாக்கி ஆழக்ன்றதோ அப்படியே அன்றும் சமணம் பௌத்தம் சைவங்களுக்கள் சிண்டு முடிந்த தேசத்தைக் கொலைக்களமாக்கினார்கள். தமிழ் மன்னர்களுக்குள் மோதல்களுக்கு அடிப்படைச் சூத்திரதாரியானார்கள். நீங்கள் கேட்கின்றீர்கள் சம்மந்தர் கழுவேற்றியதில் என்ன தவறு என்று. இதையே சிங்களம் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள்? உங்கள் கருத்துப்படி இது சிங்களவரின் முறையல்லவா? இது ஒன்றும் தொடர்பில்லாதது இல்லை. பார்ப்பனர்கள் அந்தக் காலத்திலேயே இலங்கையில் இருந்து வந்த பௌத்த துறவிகளை சோழன் செக்கில் அரைத்துக்கொன்றான் என்றொரு பிட்டை போட்டுவைத்துவிட்டார்கள். அது முள்ளிவாய்க்கால் வரைக்கும் நன்கு வேலை செய்தது. அதுக்குத்தான் நீங்கள் இப்போத எண்ணை ஊற்றுகின்றீர்கள். இந்தக் கருத்தையே மறைமலை அடிகள் மறுத்து உண்மையை தமது ஆராய்ச்சிமூலம் வெளிக்கொண்டுவந்தார். சோழன் அப்டிச் செய்யவில்லை மாறாக அவர்களுக்கு சைவத்தின் தொன்மையை புரியவைத்த அவர்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பிவைத்தான் என்ற வரலாற்றை அவர் பதிவு செய்தார். (பர்க்க சிவஞ்ஞான பேத ஆராய்சி மற்றும மாணிக்கவரசகர் காலம் - மறைமலை அடிகள்) மேலும் இலங்கை பௌத்தர்களின் வாதமான இலங்கையில் பௌத்தமே தொன்மையானது என்ற வாதத்திற்கு கோணேஸ்வரம் திருக்கேதீஸ்வரம் அதன் பழமை பாடல் பெற்ற காலம் போன்றவற்றை ஆராய்ந்து முன்வைத்த இலங்கையில் தமிழர்களின் தொன்மையை பதிவு செய்கின்றார். இவ்வாறான ஏதாவது ஒன்றை அக்கபூர்வமாக உங்கட ஓவலர் கூட்டம் செய்ததுண்டா? நீங்கள் சாதீயை மையப்படுத்திய மதத்தை மையப்படுத்திய மிகக் குறுகிய நிலையைத்தாண்டி எந்தக்காலத்திலும் இனத்துவ நிலைக்குச் சென்றதில்லை. அவனவன் விரோதத்தை கழைய என்ன செய்யலாம் என்று யோசிக்கையில் நீங்களோ சம்மந்தன் கழுவேற்றியதில் என்ன தவறு என்கின்றீர்கள். சம்மந்தன் முதல் செய்தானா இல்லை மகிந்தன் முதல் செய்தானா? யார் தொடங்கிவைத்தது உங்கள் கருத்துப்படி? சம்மந்தன் போன்ற பார்ப்பன சூழ்ச்சியில் செத்து மடிந்தது அத்தனைபேரும் தமிழர்களே அவர்களையும் கொண்டுபோய் சிங்களவனுடன் ஒப்பிடும் கேவலமான நிலையை என்ன வென்று சொல்வது? -
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
சண்டமாருதன் replied to தமிழரசு's topic in ஊர்ப் புதினம்
140000 தமிழரை எங்கே பௌத்தர்கள் கொலை செய்தார்கள்? அவர்கள் என்ன சிங்கள மொழியை பேசிய பௌத்தர்களா? -
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
சண்டமாருதன் replied to தமிழரசு's topic in ஊர்ப் புதினம்
தமிழை வளர்த்ததில் சமண பௌத்த மதங்களின் பங்கை விலத்திப் பாரக்க முடியாது. திருவள்ளுவரையும் இளங்கோ அடிகளினதும் முக்கியத்தவம் வெளிப்படையானது. சம்மந்தமே இல்லாமல் உளறுவது மட்டுமில்லாமல் சம்மந்தன் என்ற கிரிமினல் பல ஆயிரத்துக்கும் மேற்பட்ட சமணர்களை கழுவேற்றியதில் என்ன தவறு என்று கேட்கும் உங்களுடன் என்ன கருத்தாடலை செய்ய முடியும்? கழுவேற்றப்பட்ட அனைத்து மக்களும் தமிழ்மொழியை பேசிய தமிழர்களே ! அன்றைக்கு சமணர் பௌத்தர் என்று கழுவேற்றியதும் தமிழர்களே அதன்பிறகு சேரன் சோழன் பாண்டியன் என்று மாறிமாறிக்கொன்று குவித்ததும் தமிழர்களே கடந்த காலத்தில் ஈழத்தில் தோன்றிய 32 இயக்கமும் கோவணத்தை இறுக்கி கட்டிக்கொண்ட மாறி மாறி போட்டுத்தள்ளியதும் தமிழர்களையே.. இனி இஸ்லாம் கிருத்தவம் இந்து என்று போட்டுத் தள்ள முனைவதும் தமிழர்களுக்குள்ளாகவே ! உலகம் முழுக்க உருண்டு பிரண்டாலும் இந்தக் காட்டுமிராண்டிக்கூட்டம் திருந்தவே திருந்தாது.. எந்த ஒரு இனத்திடம் இருந்தும் எந்த நாகரீகத்தையும் கற்றுக்கொள்ளாது.. எந்த ஒரு அழிவிலிருந்தும் எந்தப் பாடத்தையும் கற்றுக்கொள்ளாது.. சைக்கோ கூட்டம். -
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
சண்டமாருதன் replied to தமிழரசு's topic in ஊர்ப் புதினம்
http://tamizl.com/?p=61871 இராவணன் தமிழ் மன்னன் என்கின்றார்கள். நீங்களோ இராவணனை சிங்களவர்களுடன் சம்மந்தப்படுத்தி இந்துத்தவா ராமனுடன் ஐக்கியமாகின்றீர்கள். இது ஏன்? இராவணன் எமது பரம்பரை சிவனை வழிபடுகின்றவன் என்று சொல்லவேண்டியதுதானே? அதில் ஏதேனும் கௌரவப்பிரச்சனை உண்டோ? கம்பன் கழக ஜெயராசு ஏதாவது சொன்னாரோ? அப்படியானால் இதுவரை காலமும் இந்திய சிங்கள பேரினவாதத்திற்கு உதவியதும் தமிழர்களை அழித்ததும் அழிக்க உற்றதுணையாய் நின்றதும் ராஜீவ் சோனியா செய்த தவறு மற்றபடி ஈழத்து இந்தூக்கள் மீது இந்திய இந்தூக்கள் அளவு கடந்த பாசத்துடன் இருக்கின்றார்கள்? . வடநாட்டவன் எவனோ அவனுக்கு தெரிந்த மொழியில் பூசையை செய்யட்டும் தமிழன் ஏன் தனக்குத் தெரியாத பாசையில் ஏன் பூசை செய்யவேணும்? இதைத்தானே நூறு வருடங்களுக்கு மேலா கேக்கிறாங்கள். என்ர தாய்மொழியில் பாடுவதற்கு நேரம் ஒதுக்கி கொடுக்க அவன் யார்? உங்கட மதத்தில உள்ள சாதீயத்தை களைவதைப்பற்றி கதைக்கேக்க ஏன் அதைவிட்ட பௌத்தத்திலும் இஸ்லாத்திலும் சாதி இருக்கு என்று வேறு எங்கோ இழுத்துக்கொண்டு போகின்றீர்கள்? ஆக உங்கட மத்தில உள்ள கோளாறுகளை திருத்த முன்வர மாட்டீர்கள் அங்கயும் இருக்கு இங்கயும் இருக்க என்று சாக்குப் போக்கு சொல்வீர்கள் இதைத்தான் சுருக்கமாக சொல்லியாச்சு. நீங்கள் நாவலர் பிள்ளைமாரின் மிச்ச சொச்சம். உங்ளை திருத்த அந்த சிவனாலும் முடியாது. கடசியா நாலு தமிழன் மிச்சமிருந்து சிங்களவன் அவர்களைக் கொல்ல வரும்போதும் நான் அந்தச் சாதி நீ அந்தச் சாதி என்று கத்திக்கொண்டே சாவீர்கள். -
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
சண்டமாருதன் replied to தமிழரசு's topic in ஊர்ப் புதினம்
http://www.youtube.com/watch?v=DxwqAYSsKjY -
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
சண்டமாருதன் replied to தமிழரசு's topic in ஊர்ப் புதினம்
நல்ல உதாரணம் ஒன்றை சுட்டிக்காட்டியுள்ளீர்கள். தாம் இந்து என்பதை இந்திய இந்துத்துவம் ஒருபோதும் ஏற்றதும் இல்லை இனிமேலும் ஏற்கப்போவதில்லை என்பதை இவர்கள் உணரப்போவதில்லை. ஒரு இந்தியப் பார்ப்பனனுக்கு இஸ்லாத்தின் மீதிருக்கும் வெறுப்பை விட ஈழத்தவர் மீதான வெறுப்பு அதிகம் என்பது இவர்கள் மண்டையில் என்றும் ஏறப்போவதில்லை. இலங்கைத் தமிழன் இராவண வம்சம் என்ற வெறுப்பில் பார்க்கும் வடநாட்டவர்களே அதிகம். இந்திய அதிகாரவர்க்கம் ஈழத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட சூழ்ச்சிகளி்ல் இந்த உள்ளீடும் தாராளமாக இருக்கின்றது. இன்றுவரை இலங்கைப்படைகள் தமிழக மீனவர்களை கொன்றுதள்ளுகின்றது. இந்திய அதிகாரவர்க்கம் எந்த வகையிலும் இந்த விசயத்தில் இலங்கையை நெருக்கடிக்குள்ளாக்கியது கிடையாது. இந்திய இந்துத்துவத்தை பொறுத்தமட்டில் தமிழ மீனவனை விட இலங்கைப் பவுத்தர்களின் நட்பே மேலானது. இந்திய இந்துத்துவம் பற்றிய புரிதல் யாழ்பாணத்தில் தம்மை இந்து என்று பிதற்றுபவர்களிடம் சற்றும் கிடையாது. இந்திய இந்துத்துவம் என்பது இந்தியாவை சாதிவாரியாக கூறுபோட்டு மதவாரியாக பிளவுகளை ஏற்படுத்தி மக்களை சிதைத்து சூட்சும அரசியலூடாக வெறும் இரண்டு மூன்று வீத பார்ப்பான் இந்திய மைய அரசியலை ஆழ்வதற்கான உத்திதான் இந்துத்துவம். இந்துத்துவம் என்பது சூட்சும அரசியல் தவிர ஆன்மீகம் கிடையாது. ஈழத்தவர்கள் தமது சைவத்தை அதன் குறைகளை கழைந்து தனித்துவத்துடன் நல்லதொரு ஆன்மீகமாக வளர்த்தெடுத்திருக்கலாம். ஆனால் தமது தலைகளை கொண்டுபோய் இந்துத்துவாக்களிடம் ஓட்டுவதில் குறியாய் உள்ளனர். இதற்கும் ஒரு காரணம் உண்டு அது இந்தியாவில் பார்ப்பான் சாதியில் மேலோங்கியிருப்பதைபோல் ஈழத்தில் இவர்கள் இந்துத்துவத்தை வைத்து சாதியின் மேன்மையில் உயர்வை காட்ட முற்படுவதே அதன் பிரதான காரணம். சமஸ்கிருதத்தில் தான் அர்ச்சனை செய்யவேண்டும் கங்கணம் கட்டுபவர்கள் இவர்கள். தமிழ்நாட்டுப் பிள்ளை மார்களும் ஆதீனங்களும் பபார்ப்பனனுக்க செம்பு தூக்கி சமஸ்கிருதத்தில் தான் அர்ச்சனை வேண்டும் என்று தொடர்ந்து கூறிவருகின்றனர். இவர்களுக்கு பக்கபலமாய் கடிதங்களும் ஆலோசனை ஆதரவுகளும் வழங்குவதில் காலகாலமாக யாழ்ப்பாண பிள்ளைமார்கள் பின்நிற்பதில்லை. பின்னர் வெட்கமே இல்லாமல் தமிழும் சைவமும் இரு கண்கள் என்பார்கள். இந்த கூறுகெட்ட தனத்தை என்னவென்று சொல்வது!! http://eswaramoorthy.webs.com/naadumnaveenarum.html இந்தப் புத்தகத்தில் சைவருக்கும் நவீன சைவருக்கும் இடையிலான வாக்குவாதம் உள்ளது. நவீன சைவம் என்பது சோமசுந்தர நாயக்கர் தொட்டு வள்ளலார் மறைமலலையடிகள் என தொடர்ந்து சைவத்தை சீரமைக்கவும் தமிழ் மொழியை முதன்மையாக்கி தமிழ்த்தேசீயத்துக்கு அடிகோலவும் வழிவகுத்த ஒரு தரப்பு. எங்கே சாதி ஒழிந்துவிடுமோ என்று இது அத்தனைக்கும் முரணாக இருந்தது அடுத்த தரப்பு. சீர்திருத்தத்திற்கு முற்றுமுழுதாக எதிர்ப்பாளர்களாக இருந்ததில் நாவலரின் தலையாய பங்கில் இருந்து ஏராளமான யாழ்ப்பாண பிள்ளைமார்களின் பங்களிப்பு இருந்தது. தொடர்ந்தும் இருந்து வருகின்றது. இங்கே சிலர் இருக்கின்றர்கள் தடாலென தந்தை பெரியாரை தாக்குவதில் குறியாய் இருப்பவர்கள். இந்த நவீன சைவத்தின் அடுத்த கட்ட வடிவம் தான் பெரியாரின் எழுச்சி என்பது இவர்களுக்குப் புரியாது. இந்த சைவப் பிள்ளைமார்களை திருத்தவே முடியாத என்ற நூற்றாண்டுக்குமேற்பட்ட முயற்சியின் தோல்வியே கடவுளே இல்லை என்ற முடிவு நோக்கித் தள்ளியது. எனவே, சைவத்தையே அதன் சாதீய வர்க்க அடிப்படைகளில் இருந்து சீர்திருத்த முடியாதபோது அதுவே இப்போது இந்துத்துவவா என்று பலிபீடத்தில் கொண்டுபோய் தலையை வைக்கும் போது அதையா திருத்த முடியும்? திருத்த முடியாத இந்தக் குப்பையை தலைமுழுகுவதை தவிர வேறு மார்க்கம் இல்லை என்பது எப்போதோ எடுக்கப்பட்ட முடிவு. ஆன்மீகத்துக்கு மதம் தேவையில்லை. நானும் நீயும் இந்து ஆனால் நான் உன்னைத் தொடமாட்டேன் தொட்டால் தீட்டுப்பட்டுவிடும் என்ற இந்துமத நிலை உலகின் எந்த மூலையிலும் கிடையாது. எவன் எந்த மதத்துக்கு போனால் என்ன விட்டால் என்ன. மனிதாபிமானத்தை மனிதநேயத்தை விரும்புகின்றவன் இந்த மதத்தில் இருந்துகொண்டே அதை கருவறுக்க வேண்டும். -
இந்துக்களை விழிப்படையுமாறு கோரி துண்டுப்பிரசுரம்
சண்டமாருதன் replied to தமிழரசு's topic in ஊர்ப் புதினம்
சாதி என்னும் சாத்தானை இந்து மதம் ஆணிவேராகக் கொண்டிருப்பதால்தான் அது சாத்தான் ஆகின்றது. இலங்கையில் பேரினவாதம் தமிழர்களின் கோவணத்தை அவிட்டு அம்மணமாக விட்டிருக்கும் நிலையில் சிவசேனை ஒரு கேடா? மூஞ்சசூறு தான் போக வழியைக் காணாதபோது விழக்குமாத்தை காவிக்கொண்ட போக நினைப்பதுபோல் தமிழர்கள் சிங்கள அடிமைத்தனத்தில் இருந்த விடுபட முடியாத நிலையில் மத எழுச்சி ஒரு கேடா? சிங்களம் அடுத்த கட்ட இனவழிப்புக்கும் சுத்திகரிப்பிற்கும் பிரிவினைவாதத்திற்கும் வழிகோலுகின்றது. மதவெறியை தூண்டிவிட்டு இஸ்லாமியர் கிறிஸ்த்தவர் இருந்து என்று மோதலை ஏற்படுத்தி எஞ்சியுள்ள தமிழர்களை காவுவாங்க நினைப்பதற்கு இந்து மத வெறியர்களும் காரணமாகின்றனர். புலிக்கு விசிலடித்ததுபோல் இந்து மத எழுச்சிக்கு புலம்பெயர் நாட்டில் இருந்த விசிலடிக்கட்டும். வறுமைப்பட்ட மக்கள் கழுத்தறுபட்ட சாகநேரிடும். என்னுமொரு முள்ளிவாய்க்கால் மத அடிப்படையில் உருவானால் அது ஆச்சரியமான விசயம் கிடையாது. ஒருவேளை மதவெறியின் பிரகாரம் இலங்கையில் இந்துக்கள் அழிக்கப்பட்டால் இந்திய இந்துத்தவம் ஒருபோதும் காப்பாற்ற வராது. கடந்த காலத்தில் சிங்களப்பேரினவாதத்தை ஊக்குவித்ததுபோல் தமிழர்களின் அழிவுக்கு அது என்னும் வழிகோலும். எந்த ஒருவன் இந்துதுவா என்று ஈழத்தில் ஆரம்பிக்கின்றானோ அவன் தமிழர்களை அழிக்கக் கங்கணம் கட்டுகின்றான் என்று பொருள். உனது மதம் சதி பேதங்களற்று நன்னெறியுடனும் மனிதாபிமானத்துடனும் இருந்தால் ஏன் அடுத்த மதத்திற்கு போகப்போகின்றார்க்கள்? நீங்களே சமண பௌத்த மதங்களில் இருந்து சைவத்துக்கும் சைவத்தில் இருந்த இந்துவுக்கு மதம் மாறியவர்கள்தான். உங்களுக்கே நீங்கள் யார் என்ற அடிப்படைக்கு அர்த்தம் தெரியாதநிலையில் மத மாற்றத்திற்கு குய்யோ முறையோ என்று கூச்சலிடுகின்றீர்கள். திருவள்ளுவர் சமண மதத்தவர். அவர் ஒருபோதும் மதத்தை தமது எழுத்தில் முன்வைத்ததில்லை. இளங்கோ அடிகள் பௌத்தத்தை சார்ந்தவர்.அவர் படைத்த இலக்கியங்கள் அது சார்ந்தது. தீண்டத்தகாத சமூகத்தைச் சேர்ந்த திருவள்ளுவருக்கு புனூலைப்போட்டு இந்துவாக்கிவிட்டீர்கள். அதற்கு நியாயப்படுத்தல்கள் வேறு ! அயிரக்கணக்கான பௌத்த சமணர்களை கழுவேற்றிய கிரிமினல்கள் பின்னர் நாயன்மார்களாகிவிட்டனர். சைவ இந்து மத வரலாற்றில் எந்த உண்மையோ நியாயமோ அறமோ மனிதாபிமானமோ கிடையாது. அதை கிண்டக் கிண்ட நாறும். இரத்தம் மணக்கும். அதற்கு வக்காலத்து வாங்க முடியாது. -
நாடு கடந்த அரசோ அது சார்ந்தவர்களோ இல்லை புலத்து தேசீயக் கோஸ்டிகளோ தமிழ்த்தேசீயத்தை வழிநடத்தக் கூடிய நிலையில் இல்லை. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் அது சார்ந்தவர்களும் அப்படியே. இதற்கெல்லாம் பிரதான காரணம் இவர்கள் அனைவரும் மையவாதச் சகதிக்குள் புதைந்து கிடப்பவர்கள். எக்காலத்திலும் தமிழர்களுக்கு துரும்பளவு நன்மையும் இவர்களால் ஏற்படாது. கவிஞர் ஜெயபாலன் போன்றவர்கள் இஸ்லாமியத்தமிழர்களின் ஐக்கியப்பாட்டை வலியுறுத்துகின்ற அதே வேளை இந்தியாவின் நல்லுறவை வளர்ப்பதிலும் கவனமாக இருப்பவர். இஸ்லாமியத் தமிழர்களின் ஐக்கியப்பாடும் இந்திய ஆதரவும் இன்றி தமிழர்களுக்கு விமோசனம் என்ற கற்பனைக்கே இடமில்லை. (மையவாதிகள் நல்லூரை சுற்றி 10 ஏக்கர் நிலத்தை தமிழீழமாக தந்தால் போதும் என்பர்கள். அவர்களுக்கு இவை புரியாது) அந்தவகையில் கவிஞர் ஜெயபாலன் போன்றவர்களே தற்போதைய சூழலில் தமிழ்த்தேசியத்தை வழிநடத்த முன்னெடுக்க சரியான நபர்கள். சரியான முறையில் சிந்திக்க வல்லவர்கள். அவர்கள் பணி தொடரவேண்டும். பேரினவாதிகளிடம் இருந்தும் மையவாதிகளிடம் இருந்தும் தமிழர்களின் விடுதலைநோக்கிய பயணம் தொடர்வது காலத்தின் கட்டாயம்.
-
உண்மையான சிங்களப் பேரினவாதத்தின் அடிவருடிகள் மையவாதிகளே ! அதற்கு அடுத்த கட்டமாகவே எவரும் யாருக்கும் அடிவருடிகளாக இருக்கமுடியும். மையவாதம் எப்போதும் பேரினவாதக் கனவுகளை நனவாக்கும். இஸ்லாமியத்தமிழர்களும் ஏனையவர்களும் பிளவுபடவேணும் என்று பேரினவாதம் நினைக்கும் போது மையவாதம் அதை நிறைவேற்றும் பாதையிலேயே சென்றது இன்னும் செல்லும். தமிழர்கள் சிதிலமாக சிதைவுடவேண்டும் என்று பேரினவாதம் நினைக்கும் போது சாதியாக மதமாக பிரதேசவாதமாக வர்க்கமாக தனிமனித காழ்ப்புணர்வுகளாக குரோத விரோதங்களை வளர்த்து பேரினவாதக் கனவை நனவாக்குவதே வரலாறு கண்ட மையவாதச் செயற்பாடாக இருக்கின்றது. - இவை மிகக் தெளிவாக தெரிந்தே நடைபெறுகின்றது என்பது வெளிப்படையான உண்மை. எப்போதும் சொல்வதுபோல் மையவாதமும் பேரினவாதமும் கூட்டாளிகள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
-
பெயரை மாற்றியதற்கு நன்றி. பின்னணி என்று எதுவும் இல்லை. சுகன் என்று வேறு நபரும் யாழுக்கு வெளியே இருக்கின்றார். முன்பே இந்தப் பெயரை மாற்ற நினைத்திருந்தேன். பெயரை வைப்பதும் மாற்றுவதும் சாதாரண விடயம் கிடையாது. நேரம் பார்த்திருந்தேன், நேற்று புரட்டாதி கடசிச் சனி பெயரோடு பிடித்த சனி தொலையட்டும் என்று மாற்றும் படி கேட்டிருந்தேன். இன்று வளர்பிறை முதலாம் நாள் பெயரையும் நிர்வாகம் மாற்றித்தந்துள்ளது.
-
அதுக்குள்ள ஒரு எழுத்தை செருகீட்டிங்களே !! இது மந்தமாருதம் சண்டமாருதம் என்ற சொற்களின் பிடிப்பால் விரும்பிய பெயர்.
-
sukan என்ற எனது பெயரை சண்டமாருதன் என்று தமிழில் மாற்றி விடும்படி நிர்வாகத்தை கேட்டுக்கொள்கின்றேன்.
-
மிக அருமையான விளக்கம்.
-
பாகன் மற்றும் உங்களுக்கிடையிலான கருத்தாடலைவைத்து எனது பொதுவான கருத்தை எழுதியிருந்தேன். பிரதேசவாதம் எமது விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால் தேசம் என்ற பொதுத்தன்மையை சிதைக்கின்றது என்பது உண்மை. அதனடிப்படையில் எனது கருத்து உள்ளது. மற்றபடி ஒருவருடைய பெயர் அவரது தனிப்பட்ட உரிமை மேலும் உங்கள் எழுத்துக்களை அறிந்தவரையில் உங்கள் மீது பிரதேசவாத முத்திரை குத்த முடியாது ஆனால் இந்த பெயரில் இருக்கும் ஊர் உங்கள் எழுத்துக்களுக்கே பிரதேசவாத முத்திரை குத்தி தேசத்தில் இருந்து பிரித்து ஊருக்குள் முடக்கிவிடும் என்ற கவலை இருக்கின்றது.
-
காளை வயசு கட்டான சைசு களங்கமில்லா மனசு - தெய்வப்பிறவி http://www.youtube.com/watch?v=VhW6k3bwpHQ செந்தமிழ் தேன் மொழியாள் - மாலையிட்ட மங்கை http://www.youtube.com/watch?v=9aIsbc2L39w தேன் உண்ணும் வண்டு - அமர தீபம் http://www.youtube.com/watch?v=pysavg47Sfs...feature=related மடி மீது தலை வைத்து - அன்னை இல்லம் http://www.youtube.com/watch?v=B-uTJgjcgWA...feature=related