Jump to content

ஈசன்

கருத்துக்கள பார்வையாளர்கள்
  • Posts

    2624
  • Joined

  • Last visited

  • Days Won

    5

Everything posted by ஈசன்

  1. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தமிழ் சிறி.
  2. புயலுக்குப் பின் சமாதானம். பிற மதங்களை மதிப்போம். நன்றி.
  3. இந்து சமயத்தை அவமதித்து கிறீஸ்தவ ஆதரவாளராக வைக்கப்படும் கருத்துகளுக்கு நீங்கள் எந்தப் பதிலும் வைக்கவில்லை தமிழ்சூரியன்.
  4. நாகரீகத்திற்கு நன்றி தமிழ் சூரியன். கல் எறிந்தவன் நானல்ல.
  5. ஈன்றபொழுதின் பெரிதுவக்கும் தன்மகனை மாளான் எனக் கேட்டதாய்.
  6. அசிங்கமா... ??!! யார் சொன்னது ?? உலகின் முதலாவது மனித சந்ததியே பெற்ற தாயை புணர்ந்து தான் வந்ததாக "புனித" பைபிள் அழகாகச் சொல்கிறதே !! இந்த அழகை விபரிக்க அப்பப்பப்பா.... என்ன அழகு.. என்ன அழகு !!!
  7. சொன்னது யாரு... பக்கத்து வீட்டு சலீம் பாய். ஜேசு பிறந்து 500 வருஷத்திற்கு பிறந்த முகம்மது... முன்னால பிறந்தவர் பின்னால பிறந்தவரின் "அவடார்" இந்தூண்டு கொசுறு மாட்டருக்கு நாம முட்டிக்கிறோம் இல்ல...
  8. ரொம்பத்தான் பாதிக்க‌ப்பட்ட பார்ட்டியா இருக்குமோ ? தனியா ஒரு அறைக்குள்ள கூட்டிகொண்டுபோய் அதுதானே ?? சிறுவர் பாலியல் மதனபுரம். http://www.theage.com.au/victoria/one-in-20-priests-an-abuser-inquiry-told-20121022-2816q.html .
  9. திருக்குறள் சமண நூல் அல்ல என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன. முதலாவது குறளே அதற்குச் சான்று. சமணத்தில் பரமாத்மாவின் இயல்புகள் திருக்குறளின் கடவுள் வாழ்த்தில் உள்ள ஓவ்வொரு குறளில் இருந்தும் விலகியது. கடவுள் வாழ்த்து சைவத்தின் பக்தி மார்க்க நெறியே. அதைவிட திருவள்ளுவர் திருக்குறளின் 3 இல் ஒரு பகுதியை காமத்திற்கு ஒதுக்கியுள்ளார். குளித்தால் உடலின் கிருமிகள் அழிந்து போம் என்று குளியாதிருக்கும் சமணர் ஒருவர் காமத்துப்பால் இயற்றினால்.... திருக்குறள், கம்பர் எழுதிய இராமாயணம், தேவார திருவாசகங்கள் என்று எண்ணற்ற இந்து / சைவ நூல்கள் தமிழை வளர்த்தது வரலாறு. இந்து மதம் ஒரு பெரிய விருட்சம். அதில் கன்னடத்தில் சிவனை வணங்குபவர்களும், வங்காளத்தில் காளியை வணங்குபவர்களும், தெலுங்கில் கிருஷ்ணனை வணங்குபவர்களும் உள்ளார்கள். வந்தேறு குடிகள் எம் மொழியை நீச பாசை என்றால் நாம் அவர்களுக்காக எம்மொழியையோ, எம் மதத்தையோ கைவிடத் தேவையில்லை. ஏனென்றால் இது வந்தேறு குடிகளின் மதமல்ல. எங்கள் ஆயிரம் முப்பாட்டர்களின் மதம். சைவத்தில் சாதீயம் மதத்தில் இல்லை. அது மனிதரில் இருக்கிறது. சைவம் ஒருவனை தாழ்ந்தவன் என்று எங்கும் சொல்லவில்லை. காஷ்மீரில் உள்ள சைவசமய சமூகத்தில் சாதி அமைப்பு இல்லை. தமிழ்நாட்டின் சாதி அமைப்பும் யாழ்ப்பாண சாதி அமைப்பும் வித்தியாசமானவை. ஆனால் இரண்டு இடங்களிலும் சைவ சித்தாந்தம் ஒன்று. அப்படியானால் சாதியின் தோறுவாய் சம‌யமா இல்லை ஏனைய சமூக காரணிகளா ? அதே நேரம் நாரீகம், கல்வி வளர்ச்சி என்பன சாதீயத்தின் கிடுக்கிப் பிடியை நன்றாகத் தளர்த்தி உள்ளன. இது சைவத்தைக் கைவிட்டாதல் நிகழவில்லை என்பதைக் கவனிக்க. இது சைவமே சாதீயத்தைப் போணுகின்றது என்பவர்களுக்கு கசப்பான விசயம். அதே நேரம் சைவத்தை விட்டு விலகிய பச்சோந்திகள் தமது சாதிப் பெருமைகள் பேசுவதையும் கவனிக்க. மதம் தேசிய அடையாளம் அல்ல. அவுஸ்திரேலிய வெள்ளை இன கிறீஸ்தவனும் அமெரிக்க வெள்ளை இனக் கிறீஸ்தவனும் தேசியத்தால் வேறு. ஆனால் அடையாளத்தால் ஒன்று. வருந்தத்தக்க உண்மை. சில சமயம் பேசாதிருத்தலின் விலை பேசுதலின் விலையவிட மிக அதிகமாக இருக்கிறது.
  10. அதே போல், கிறிஸ்தவமும் இஸ்லாமும் பரஸ்பரம் கடும் ஒவ்வாமை கொண்டவை. ஆனால் இந்துக்களாகிய நாம் மற்ற மதங்களை அழிக்க முனைவதில்லை. இங்கே கடவுளுக்காக இந்துக்கள் சண்டை போடப்போவதில்லை. எம்மை விடுங்கள் என்பதே எம்முடைய வாதம். மதம் என்பது எம்முடைய அடையாளம். மதம் எமது வாழ்க்கை முறை. மதம் எமது வரலாறு. மதம் எமது கலாச்சாரம். மதமே எமது மொழியின் ஊற்று. இத்தனையையும் எம்மால் தொலைக்க முடியாது. இத்தனையையும் தொலைத்து என்னால் ஒரு வேற்று இனத்தவரை (யேசுவை) வணங்க முடியாது. என் பெருமை என் மதத்தை பற்றி இருப்பதில் இருக்கிறது. ஒரு வேற்று இனத்தவன் என்னை ஒரு தனித்துவமான கலாச்சார வரலாறு இல்லாத ஒரு பிலிப்பினோவையோ அல்லது கிறீஸ்தவ பெயர் வைத்த ஆபிரிக்கனையோ அல்லது ஆங்கிலப் பெயர் வைத்த சீனனையோ பார்பது போல் பார்க்க முடியாது. இங்கே நான் என்பது என் இனத்தின் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகால‌ பெருமை மிக்க வரலாறுகளின் திரட்டு. கிறீஸ்தவனாக மதம் மாறி வெள்ளை இனம் எம்மை ஆண்டார்கள் அவர்கள் போ என்றார்கள் நான் ஆம் என்றேன் என்று தலையாட்டி அவர்கள் மதத்தையும் அவர்கள் பெயரையும் எனக்கும் என் சந்ததிக்கும் வைத்து அடிமை வாழ்க்கை வாழ்ந்த வரலாற்றைக் காவும் ஒரு... புண்ணாக்கு அல்ல. நாம் நாமாக இருப்போம். நீங்கள் நீங்களாக இருங்கள். .
  11. ரகுநாதன், ஏன் இந்த சிங்களம், தமிழ் என்று மொழிச்சண்டை ? நாம் எல்லாருமே சிங்களத்தைப் பேசி சிங்களவராய் மாறி இருக்கலாமே. சிங்களம், தமிழ் இரன்டுமே சும்மா சப்தங்கள் தானே ?
  12. திருவிழா...திருவிழா இளமையின் தலைமையில் ஒரு விழா திருவிழா...திருவிழா இளமையின் தலைமையில் ஒரு விழா வேரினிலே நீ பழுத்த பலா விழிகளிலே தேன் வழிந்த நிலா...இதோ திருவிழா...திருவிழா இளமையின் தலைமையில் ஒரு விழா http://no1tamilsongs.com/A-Z%20Movie%20Songs/Naam%20Iruvar/Thiruvizha%20Thiruvizha.mp3
  13. என்னைத் திருத்த முயல்கின்றேன். 1. மனிதனை மதிப்பாக நடத்த முயற்சி செய்கிறேன். 2. என் பிள்ளைகளுக்கு சாதி என்ற பதம் தெரியாது. அப்படி ஒரு நடைமுறை இருப்பதும் தெரியாது. 3. யாரையும் சாதி பார்க்கச் சொல்லவுமில்லை. யாரையும் சாதி பார்க்க வேண்டாம் என்றும் சொல்லவில்லை. 4. என்னால் குறிப்பிட்டளவு மனிதர்களுக்கு நன்மை கிடைக்கும் போது அவர்களின் சாதிப் பின்னனி எவருக்கு நன்மை கிடைக்க வேண்டும் என்பதை தீர்மானிக்காது. 5. சாதிப் பின்னனி காரணமாக யாராவது பலவீனமாக காணப்பட்டால் அச்சந்தர்ப்பத்தில் என்னால் ஏதாவது செய்ய முடிந்து அவர்கள் மனத்தைரியமோ சந்தோசமோ அடையமுடியுமென்றால் நிச்சியம் அதைச் செய்வேன்.
  14. சரி.. பொன்மலர். ஒரு சிறிய திருத்தம். சைவத் தமிழரே விழித்தெழுங்கள்.
  15. 86ம் ஆண்டு ஈழ லட்சியத்திற்காக‌ இந்திய யுத்ததிற்கு ஆலோசனை வளங்கியவர் ஏன் 2002ம் ஆண்டு ஈழ லட்சியத்திற்கு மூடுவிழா நடத்தும் ஆலோசனை வளங்கினார் ? ஞானம் பிறந்தததா அல்லது "நாங்கள் களத்தில் இறங்கிவிட்டோம், இனி ஈழம் வேண்டம்" என்று சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து அவருக்கு "சிக்னல்" கிடைத்ததா ? (தொடரும்)
  16. ராஜீவ் காந்தி ஒரு இந்து அல்ல. இந்துக்களை ஏமாற்ற இந்துவாக நடித்த ஒரு வேடதாரி. காஷ்மீரிலிருந்து கன்னியா குமரி வரை உள்ள எந்த ஒரு இந்துக் குழந்தையும் சூலம் இந்து அடையாளம் என்று சொல்லும். அது சிவனின் ஆயுதம். காளியின் ஆயுதமும் கூட‌. இந்திய இராணுவம் அன்று வந்திருக்காவிட்டால் யாழ்ப்பாணம் சுடுகாடாகி, ஈழப்போராட்டம் 86ம் ஆண்டு முற்றுப்பெற்றிருக்கும். பல் ஆயிரம் யாழ்ப்பாணத்து இளைஞ்ஞ‌ர்கள் கொல்லப்பட்டிருப்பார்கள். இன்னும் பல்லாயிரம் பூசாவில் இன்றும் அடைபட்டு வாழ்ந்து கொண்டிருப்பார்கள். 86ம் ஆண்டு கிழக்கு மாகாணம் பலத்த இனப்படுகொலைக்கு ஆளாகி அங்கு போராட்டம் ஒரு முடிவிற்கு வந்திருந்தது. மக்கள் அனுபவித்த இன்னல்களுக்கு அங்கு ஒரு எல்லையோ அல்லது ஒரு அடிப்படை மனித கௌரவமோ அங்கு இருக்கவில்லை. அத்துலத் முதலி அமெரிக்காவின் முழு ஆதரவுடன் இதைச் செய்தான். இதன் பின் வவுனியாவில் இருந்து இன அழிப்பை தொடங்கி ஆனையிறவை அடைந்தான். முல்லைத்தீவையும் மன்னாரையும் "துப்பரவு" செய்து அந்த இரண்டு மாகாணங்களிலும் விமான இறங்கு பாதைகளை போடும் முயற்சியிலும் இறங்கினான். அந்த சமயத்தில் ஈழப்போராட்டம் பளைக்கும் மூளாய்க்கும் இடையில் ஊசலாடிக்கொண்டிருந்தது. சிங்களப்படை உச்ச பலத்தில். குறுகிய ஒரு காலத்தில் வடமராட்சி வீழ்ந்தது. நாலா பக்கத்தில் இருந்தும் முன்னேறும் சிங்களப்படை யாழ்நகரை நோக்கி முன்னேறி யாழ்நகரை, அண்மைய முள்ளிவாய்க்கால் நிலைக்கு கொண்டுவருவதே அத்துலத் முதலியின் திட்டம். யாழ்ப்பாண நகரம் முள்ளிவாய்க்கால் ஆகியிருந்தால் எத்தனை ஆயிரம் உயிர்கள் கொல்லப்பட்டிருக்கும் ? சிங்களப்படையை நிறுத்தக் கூடிய சக்தி புலிகள் அமைப்பிடம் இருக்கவேயில்லை. இந்திய இராணுவம் வந்ததால் யாழ்மக்கள் தப்பினார்கள். போராட்டமும் தப்பியது. அப்போது பிரபாகரனுக்கு 32 வயது. 32 வயதில் பூகோள அரசியல் தெளிவு இருந்திருக்க வாய்ப்பில்லை. அப்படியானால் பிரபாகரனுக்கு இந்தியாவிற்கு எதிராக யுத்தமொன்றைத் தொடங்க ஆலோசனை யார் கூறியது ? பிராந்திய வல்லரசு ஒன்றிற்கு எதிராக யுத்தமொன்றைத்தொடங்கி வெல்லலாம் என்று அரசியல் ஆலோசனை யார் கூறியது ? சிங்களப்படையிடமே பெருத்த இன அழிப்பை சந்தித்து அழிய இருந்த போராட்டத்தை பிராந்திய வல்லரசை எதிர்த்து நிற்க ஆலோசனை யார் கூறியது ? எம்மக்களையும் இந்தியாவையும் பிரிக்க யார் ஆலோசனை கூறியது ? எம்மக்களின் அழிவைக் கூடப் பொருட்படுத்தாமல், வெல்வதற்கான சாத்தியக் கூறுக‌ள் அறவே இல்லாத ஒரு சூழ்நிலையில் 12 லட்சம் இராணுவத்திற்கு எதிராக எம்மக்களை நிற்கவைக்க பிரபாகரனுக்கு யார் ஆலோசனை கூறியது ? இந்த ஆலோசனையின் அடிப்படை நோக்கம் ஈழமா இல்லை இந்திய எதிர்ப்பு வாதமா ? இந்தியாவை பலவீனப் படுத்துவதே அப்போதைய அமெரிக்காவின் திட்டம். அப்படியானால் இந்தியவிற்கு எதிரான போர் அமெரிக்கத் திட்டத்தின் ஓர் அங்கமா ? அப்படியானால் அதுவரை இன அழிப்பில் அழிந்துபோன எம்மக்கள்.. ??? இந்தியவிற்கு எதிரான யுத்தத்தில் அழிய இருக்கும் எம்மக்கள்.. ?? இந்த இந்திய எதிர்ப்பு யுத்த ஆலோசனை வளங்கிய ஆலோசகர் பிரபாகரனின் ஈழலட்சியத்தை "பாவித்து", எம்மக்களை பலிகடாக்களாக்கி, அமெரிக்காவின் இந்திய எதிர் திட்டத்தை நுணுக்கமாக கொண்டு போயுள்ளார். அவர் ஏன் இப்படிச் செய்ய வேண்டும் ?? (தொடரும்) .
  17. புது மாப்பிள்ளைக்கு.. றாப் பாப்ப..ரீ... நல்ல யோகமடா.. றாப் பாப்ப..ரீ... புது மணமகள் தான்.. வந்த நேரமடா.. றாப் பாப்ப..ரீ...
  18. கு.சா. கடைசியாப் போட்ட படத்தப் பார்த்து முதுகில சாதுவா நமைச்சலா இருக்கு என்று சொறியத்தொடங்கினன். இன்டைக்கு இரவு பூரா சொறியல் தான் போல இருக்கே..
  19. இந்த வாழ்க்கை எதற்கு ?? ஐந்தறிவு மிருகத்திற்குத்தான் வாழ்வை முடிக்கத் தெரியாது. மனிதனுக்குமா?
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.