யார் யாருக்கு எத்தனை பச்சை என்று தெரியவில்லை. அதனால் பச்சை புள்ளிகளை பெற்ற அனைவரையும் வாழ்த்துகிறேன். அதிக பச்சைகளை பெற்றவர்களுக்கு எல்லாம் பச்சையாக தெரியுமாதலால் தெருவில் கவனமாக சிவப்பையும் கவனித்து உங்கள் பயணத்தை தொடர்ந்து இன்னும் அதிக பச்சைகளை இங்கு பெற்று கொள்ளுமாறு வேண்டி கொள்ளுகிறேன்.
கவனம்! கவனம்! கவனம்! தமிழினத்திற்கு இழைத்த அநீதிகளுக்கும் படுகொலைகள், பாலியல் வன்முறைகளுக்கு எதிராக பேசினால், நீதி கேட்டால் உயிரை எடுப்போம் என்று......... இல்லை இல்லை என் எஜமான் உங்கள் உயிரை எடுப்பார் என்று ஒரு ஜனநாயகவாதி எச்சரிக்கை விட்டுள்ளார்.
ஏனென்றால் அவர்கள் உண்மையில் எதிர்த்தது விடுதலைப்புலிகளை அல்ல. தமிழனம் கெளரவமாக வாழ்வதை அவர்கள் எதிர்த்து எதிர் கருத்து வைத்தார்கள். விடுதலை புலிகளை எதிர்த்திருந்தால் புலிகளின் வீழ்ச்சியுடன் ஓய்ந்திருப்பார்கள். இன்னமும் தமிழன் வாழ்வதால் அவர்களும் ஓயவில்லை. தாங்கள் ஓய்ந்து விட்டால் கெளரவமான அரசியல் தீர்வை தமிழர்கள் அடைந்து விடுவார்களோ என்று பயப்படுகிறார்களே்.