Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2006 உடன்டிக்கையால் அமெரிக்காவின் யுத்தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டியிருக்கும்: ஜே.வி.பி

Featured Replies

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கும் முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ரொபட் ஓ பிளேக்குக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையின்

உள்ளடக்கங்களை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என்று ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி.யான அனுர குமார திசாநாயக்க நேற்று சபையில் அரசாங்கத்தை வலியுறுத்தினார்.

ஜெனீவாவில் பிரேரணை நிறைவேறியிருப்பதன் மூலம் குறைந்த பட்சம் பொருளாதாரத் தடையைக் கூட விதிக்க முடியாதென அமைச்சர் பேராசியர் பீரீஸ் கூறியிருக்கின்றார். இதன் மூலம் இதுவரை காலமும் அமைச்சர்களால் கூறப்பட்டு வந்த சர்வதேச யுத்த நீதிமன்றம், மற்றும் மின்சாரக் கதிரை ஆகிய அனைத்துக் கதைகளும் பொய்த்து விட்டதாகவும் அவர் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஜெனீவா பிரேரணை தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றை சமர்ப்பித்து உரையாற்றுகையிலேயே அனுர குமார திசாநாயக்க எம்.பி. மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் கூறுகையில், இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட பிரேரணை ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இந்த பிரேரணை விவகாரம் தொடர்பில் அமைச்சர்கள் வெளியிடுகின்ற கருத்துக்கள் ஒன்றுக் கொன்று முரண்பட்டவையாகவே உள்ளன.

எவ்வாறிருப்பினும் இந்த பிரேரணை நிறைவேற்றமானது எமது நாட்டின் ஆட்புல ஒருமைப்பாடு தொடர்பான உள் நாட்டுப் பிரச்சினைகளில் சர்வதேசத்தின் தலையீடுகளுக்கு நுழைவாயிலை அமைத்திருக்கின்றது.

இவ்வாறான நிலையில்தான் எமது நாடு ஒரு முக்கியத்துவம் மிக்க கட்டத்தை எட்டியிருக்கின்றது என்று எண்ணத் தோன்றுகின்றது. ஆனாலும் அமைச்சர்களோ பொறுப்பற்ற வகையில் முரண்பட்ட கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இதனால் நாடு சார்ந்த பிரச்சினை மேலும் சிக்கலுக்குள்ளாகியுள்ளது.

வல்லாதிக்க நாடாக இருக்கின்ற அமெரிக்கா தனது உற்பத்திகளை பொருளாதாரத்தை வளப்படுத்திக் கொள்வதற்காக ஏனைய நாடுகளின் மீது ஆதிக்கத்தை செலுத்துகின்றது.

ஐக்கிய நாடுகள் சபையானது எமது நாட்டுக்குத் தேவைப்படுகின்ற ஒரு நிறுவனமாகும். எனினும் அது நியாயமானதாக சுயாதீனமானதாக சுதந்திரமானதாக இயங்கும் நிறுவனமாக இருத்தல் அவசியமாகும்.

எனினும் தற்போதைய ஐ.நா. நிறுவனம் அவ்வாறு இல்லை. அவ்வாறானதொரு நிறுவனத்தின் கீழான மனித உரிமைகள் பேரவையில் தான் எமது நாட்டுக்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டிருக்கின்றது.

முன்னாள் அமெரிக்கத் தூதுவர் ரொபட் ஓ பிளேக் இலங்கையில் இருந்தபோது அவருக்கும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்குமிடையில் உட்ன்படிக்கை யொன்று கைச்சாத்திடப்பட்டது. அந்த உடன்படிக்கையில் பிராந்திய ரீதியான யுத்தம் ஒன்று மூளும் பட்சத்தில் இலங்கை அரசாங்கத்தின் ஆதரவு அமெரிக்காவுக்கே சார்ந்திருக்கும் என்று கூறப்பட்டிருக்கின்றது.

அது மாத்திரமின்றி இலங்கையின் வளங்களைப் பயன்படுத்துகின்ற உரிமையும் அமெரிக்காவுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த உண்மையை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும்.

இதேவேளை, இலங்கையில் தமிழ் சிங்கள மற்றும் முஸ்லிம் ஆகிய மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பது இந்தியாவின் அபிலாசையல்ல. அதன் அபிலாசையெல்லாம் இலங்கைப் பிரச்சினையின் மூலம் தனது அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வது மட்டுமாகத்தான் இருக்கின்றது.

30 வருட யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் நாட்டில் மாற்றம் ஒன்று உருவாகும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அதேபோன்று வடக்கு கிழக்கினை கட்டியெழுப்புதல், சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்துதல், ஜனநாயகத்தை ஸ்தாபித்தல், மீள்குடியேற்றம், சமூக வாழ்வு அபிவிருத்தி உள்ளிட்ட விடயங்களை நிறைவேற்றும் விதம் குறித்து நாம் அரசாங்கத்துக்கு எழுத்து மூலம் அறிவித்தோம். எனினும் அரசாங்கம் அதனை கவனத்திற் கொள்ளவில்லை.

யுத்த களத்தில் இறந்தவர்கள், காணாமல் போனவர்கள் தொடர்பில் நியாயமான விசாரணைகளை மேற்கொள்வதற்கென ஆணைக்குழுவொன்றினை ஸ்தாபிக்குமாறு கூறினோம். எனினும் தருஷ்மன் அறிக்கை வரும் வரையில் அரசு தனது செயற்பாடுகளை தாமதித்தே வந்தது.

யுத்தத்தின் பின்னரான நாட்டை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம், ஐ.தே.க., ஜே.வி. பி. மற்றும் த.தே.கூ. ஆகிய கட்சிகளை இணைத்துக் கொண்டு தேசிய வேலைத் திட்டம் ஒன்றை முன்னெடுக்குமாறு நாம் முன் வைத்த யோசனையும் நிராகக்கப்பட்டது.

அரசாங்கம் எல்லா விடயங்களிலும் மறுபுறமாகவே செயற்பட்டது. யுத்தம் வெற்றி கொள்ளப்பட்ட மமதையில் இருந்த அரசாங்கம் ஏனைய செயற்பாடுகளை மறந்து ஜனநாயகத்துக்கு முரணான செயற்பாடுகளிலேயே ஈடுபட்டது.

ஓமந்தை முதல் யாழ்ப்பாணம் வரையில் 22 இராணுவ முகாம்களை அமைத்து ஒரு இராணுவ நிர்வாகத்தையே உருவாக்கியிருந்தது.

வெள்ளை வேன் கலாசாரத்தை கட்ட விழ்த்துவிட்டதும் அரசாங்கம் தான். அரசாங்கமானது வட பகுதிகளில் இராணுவம் தொடர்பான நிலைப்பாடுகளை இன்னுமே புரிந்து கொள்ளாதிருக்கின்றது என்றார்.

http://akkinikkunchu.com/new/index.php

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.