Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆசியாவில் விரிவடையும் கடல் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் - இதயச்சந்திரன்

Featured Replies

indo-%20sri%20komalikal.jpg

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனனின் இலங்கை விஜயமும், அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவின் புது டெல்லிப் பயணமும், அரசியல் தளத்தில் பல உரையாடல்களை ஏற்படுத்தியுள்ளது.
13 வது திருத்தச் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரும் வகையில், தென்னிலங்கையில் உருவாகும் கடுமையான நிலைப்பாடு குறித்து இருவரும் விவாதித்துள்ளார்கள்.

வட மாகாணசபைத் தேர்தலுக்கு முன்பாக , 13 இல் திருத்தங்கள் கொண்டுவரப்படுவதை இந்தியா விரும்பவில்லை என்கிற செய்தி பசிலிடம் கூறப்பட்டுள்ளது. அவ்வாறான நடவடிக்கை, இந்தியத் தரப்பிக்கு சிக்கலை ஏற்படுத்தலாம் என்பதால், இந்த விடயத்தில் இந்தியாவானது கடுமையான நிலைப்பாட்டினைக் கொண்டுள்ளது போலொரு தோற்றப்பாடு காண்பிக்கப்பட்டுள்ளது.

இந்தியப்பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியை சந்திப்பதற்கான சந்தர்ப்பம் கிட்டாத பசில், வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்சித்துடன் மட்டும் உரையாடிய விவகாரம், 13 இல் மாற்றம் கொண்டுவரும் இலங்கை அரசின் நிலைப்பாடு குறித்து, இந்தியா அதிருப்பதி கொண்டுள்ளது என்பதனை உணர்த்துவதாக அமையாது. 

இருப்பினும், மக்களோடு உரையாடி, சரியானதொரு முடிவினை எடுப்போம் என்று இந்தியத்தரப்பிற்கு பசில் அளித்த விளக்கத்தின் மறுபக்கத்தில், 13 வது திருத்தச் சட்டம் தொடர்பாக சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தும் திட்டம் அரசிற்கு இருப்பதை உணர்த்துவது போலுள்ளது.

அதேவேளை, பசிலின் பயணத்தின் பின்னர் இலங்கைக்கு வருகைதந்த சிவசங்கர் மேனன், கூட்டமைப்பு, முஸ்லிம் காங்கிரஸ் போன்ற வட- கிழக்கு மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளோடு 13 குறித்து பேசியுள்ளார்.

அத்தோடு சனாதிபதியுடன் அவர் உரையாடியபோது, காணி காவல்துறை அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குவது தொடர்பான விடயம் முக்கியத்துவம் பெற்றதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அங்கும், 'இது குறித்து விவாதிப்பதற்கு நாடாளுமன்ற தெரிவுக்குழுவே சிறந்த பொறிமுறை' என்கிற நிலைப்பாட்டில் சனாதிபதி உறுதியாக இருந்துள்ளார். 
இவைதவிர, தெரிவுக்குழுவிற்குள் செல்லுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்கிற ஆலோசனையையும் மேனனிடன் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
எப்படியாவது கூட்டமைப்பை, நாடாளுமன்ற தெரிவுக்குழிக்குள் வீழ்த்திவிட வேண்டுமென்பதில் ஆளும் தரப்பு தீவிரமாகத்தானிருக்கிறது. தீர்வு குறித்த விவகாரத்தினை இழுத்தடிப்பதற்கு, தெரிவுக்குழு தேவையானதொன்றாக இருப்பதை இது உணர்த்தும்.

கொழும்பு பயணத்தின் நிகழ்ச்சிநிரலில், இந்திய-இலங்கை ஒப்பந்தத்திலுள்ள 13 வது திருத்தம் தொடர்பாகப் பேசப்படும் என்று ஊடகப்பரப்பில் பெரிதாகப் பேசப்பட்டாலும், கடல் சார் பாதுகாப்பு ஒப்பந்தமொன்று கைசாத்திடப்பட்ட விவகாரத்தை இரண்டாம் நிலைக்குத் தள்ளிவிட முடியாது. ஏனெனில் மேனனின் பயணத்தின் முக்கிய அம்சமே அதுதான்.

இந்துசமுத்திரப் பிராந்தியத்தில், இந்தியாவைச் சூழவுள்ள நாடுகளில், தனது பொருண்மிய ஆதிக்கத்தின் ஊடாக காலூன்றும் சீனாவின் தந்திரோபாய நகர்வுகள் குறித்து, இந்தியா கவலையடைவதை பல ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.
சீனாவுடனான இருதரப்பு வர்த்தகத்தை $100 பில்லியனாக இந்தியா உயர்த்தினாலும், தனது பிராந்திய மேலாதிக்கத்தையும், தேசிய பாதுகாப்பினையும் எவருக்கும் விட்டுக் கொடுக்க இந்தியா உடன்படாது என்பதுதான் யதார்த்தம்.
அந்தவகையில்,இலங்கை மற்றும் மாலைதீவோடு இணைந்து இந்தியா மேற்கொண்ட 'கடல் போக்குவரத்து பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம்' , முக்கியமானதொரு நகர்வாகக் கருதலாம்.

இதற்கு முன்பாக, இவ்வருடம் ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதியன்று, இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையே காங்கேசந்துறையின் வடகடலில், 22 வது சர்வதேச கடல்சார் எல்லைக்கோடு (IMBL ) குறித்த சந்திப்பு நிகழ்ந்தது. இந்த IMBL சந்திப்பு, இருநாட்டு கடற்படை உறவினைப் பலப்படுத்தும் வகையில், வருடத்தில் இரண்டு தடவைகள் நடாத்தப்படும்.
அதேவேளை, தற்போது உருவாக்கப்பட்டுள்ள ஒப்பந்தமானது, இந்துசமுத்திரப் பிராந்தியத்தின் கடல் பாதையில் உள்ள கேந்திரமுக்கியத்துவம் வாய்ந்த மாலைதீவையும் இலங்கையையும் உள்ளடக்கியதாக அமைந்திருப்பது கவனிக்கத்தக்கது.

குறிப்பாக, இலங்கை மற்றும் மாலைதீவு கொடிகளைத்தாங்கிய வணிகக் கப்பல்களை கண்காணிப்பதற்கும், அவற்றினை அடையாளம் காண்பதற்கும், இந்தியாவின் 'தொலைதூர கண்காணிப்பு தகவல் நடுவம்' (Indian Long Range Identification & Tracking Data Centre) என்பதன் அனுசரணையைப் பெறுவதோடு, தேடுதல் மற்றும் மீட்புப்பணிகளில் கடல்சார் உறவுகளைப் பலப்படுத்த இவ் ஒப்பந்தம் வழிசமைக்கிறது.
2014 இல் நடைபெறும் அடுத்தகட்ட சந்திப்பில், ஒப்பந்தம் மற்றும் அதுகுறித்தான நடைமுறைச் சிக்கல் என்பன மீளாய்விற்கு உட்படுத்தப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், 'தென்சீனக்கடலைத் தாண்டிய சீனாவின் ஆதிக்க நகர்வுகளை, பாதுகாப்பு ஒப்பந்தங்கள் ஊடாக இந்துசமுத்திரப் பிராந்தியத்தில் கட்டுப்படுத்தலாம்' என்று இந்தியா செயற்படுகிறது என்பதுபோலான தோற்றப்பாடு தென்பட்டாலும், அண்மையில் ஊடகங்களில் கசிந்த ' உத்தேச அமெரிக்க- மாலைதீவு ஒப்பந்தம்' என்கிற விவகாரமும் இங்கு உள்வாங்கப்பட்டிருக்கும் என்று நம்பலாம்.

இதேபோன்று, ஆசியப் பிராந்தியத்தில், உடன்பாடுகள் எட்டப்படாமல் முத்தரப்புப் பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதையும் நோக்க வேண்டும்.

கடல் பாதுகாப்பு குறித்த விவகாரத்தில், பரந்துபட்ட ஒத்துழைப்பினை உருவாக்கும் வகையில், இந்தியா- ஜப்பான்- அமெரிக்காவிற்கு இடையில் முதல் கட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தை 2011 இல் வாசிங்டனிலும், அதன் இரண்டாம் கட்டம் டோக்கியோவிலும், மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை 29 அக்டோபர் 2012 அன்று புது டில்லியிலும் நடந்தது. 
இந்த முத்தரப்பு நகர்வானது, ஆசிய- பசுபிக் பிராந்தியத்தில், கடல் பாதுகாப்புத் தொடர்பான புதிய செயற்பாட்டு வடிவமொன்றினை கட்டமைக்கும் என்று எதிர்வுகூரப்படுகிறது.

தற்போது, ஜப்பானோடு இராஜதந்திர - பொருண்மிய உறவுகளை மேம்படுத்த பலத்த முயற்சிகளை மேற்கொள்ளும் இந்தியாவிற்கு, அமெரிக்காவின் வகிபாகமானது, சீனாவை எதிர்நிலைக்குத் தள்ளிவைக்க அல்லது அந்நியப்படுத்த தேவைப்படுகிறது.

கடல் பாதுகாப்பு என்கிற விடயத்திற்கு அப்பால், இம் முத்தரப்பிற்கு இடையே, ஆபிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தானில், ஒன்றிணைந்த வகையில் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பது குறித்த பேச்சுவார்த்தையும் நடந்துள்ளது.

ஆசியாவில் புதிய அணி சேர்க்கைகள் நடைபெறும் அதேவேளை, கடந்த மாதம் 8 ஆம் திகதியன்று, சீனாவில் நீல நூல்( Blue Book) ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. 350 பக்கங்களைக் கொண்ட இந்நூலில் இந்துசமுத்திரப் பிராந்தியம் குறித்து, சீன அரசால் பெரிதும் மதிக்கப்படும் ஆய்வாளர்கள் எழுதியுள்ளார்கள். 
அது குறித்த விடயங்களை அடுத்த வாரம் பார்க்கலாம்.

 

http://www.pathivu.com/news/25813/57/d,article_full.aspx

  • தொடங்கியவர்

:icon_idea:  :icon_idea:  :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.