Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ்கூறும் நல்லுலகம் கவனிக்கத் தவறிய சாதனை

Featured Replies

library%20569.jpg

 

 

தூத்துக்குடியைச் சேர்ந்தவரும் 32 ஆண்டுகளாக அமெரிக்காவில் உள்ள ஹவாயில் வசித்து வரும் வைதேகி ஹெர்பர்ட் என்பவர் தமிழுக்கு ஆற்றியுள்ள அரிய சாதனையை தமிழ் சமுதாயம் வியந்து பாராட்டவில்லை. ஆனால் கனடாவின் ரொறன்ரோ பல்கலைக்கழகமும், தமிழ் இலக்கியத் தோட்டமும் அவருக்கு விருது வழங்கி கௌரவித்துள்ளன.

 

அவர் இதுவரை பதினெட்டு சங்க இலக்கியங்களில் பன்னிரண்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். மற்ற ஆறு இலக்கியத் தொகுப்புகளும் விரைவில் மொழிமாற்றம் செய்யப்படும் என்றும் வைதேகி சார்லஸ் ஹெர்பர்ட் தெரிவித்துள்ளார். இவர் அமெரிக்காவில் மருத்துவத் துறையில் மேலாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். ஆங்கிலப் பள்ளியில் படித்த போதும் இவருக்கு தமிழ் மேல் தணியாத ஆர்வம் இருந்தது என்று அவர் கூறுகிறார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்த முனைவர் ஜார்ஜ் ஹார்ட்டின் உடன் ஏற்பட்ட நட்பு இவருடைய ஆர்வத்தை மேலும் அதிகரிக்க வைத்தது. ஜார்ஜ் ஹார்ட்டின் சங்க இலக்கியப் பாடல்களை மேற்கோள்காட்டி பொருளையும் சொல்லி அசத்துவார் என்று கூறும் வைதேகி வேலை, குடும்பம் காரணமாக சங்க நூல்களை முழுமையாகக் கற்க வாய்ப்பில்லாமல் போனது என்று கூறுகிறார். பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின் இவர் முழுநேரப்பணியாக சங்க இலக்கியங்களை மொழி மாற்றம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.

 

சென்னை ராணி மேரி கல்லூரியில் உதவிப் பேராசிரியராக இருக்கும் முனைவர் இரா.ருக்மணியிடம் இவர் 103 வரிகள் கொண்ட முல்லைப் பாட்டை கற்றுத் தேர்ந்தார். இவர் முதலில் முல்லைப் பாட்டையும், நெடு நல்வாடையையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். அவற்றை ஜார்ஜ் ஹார்ட்டினின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தார். அவருடைய பாராட்டுகளினால் உந்தப்பட்ட இவருக்கு மற்ற இலக்கியங்களையும் மொழி பெயர்க்கும் நம்பிக்கை ஏற்பட்டது. பின்னர் பதிற்றுப்பத்து தொகுப்பை மொழி பெயர்த்து ஜப்பானிய தமிழ் அறிஞர் முனைவர் டாகனோபு டாகாஷிக்கு அனுப்பியுள்ளார். அவருடைய பாராட்டும் இவருக்குக் கிடைத்துள்ளது. சென்னையில் உள்ள கொன்றை பதிப்பகம் இவருடைய மொழிபெயர்ப்புகளை வெளியிட்டு வருகிறது. தன்னுடைய சொந்தப் பணத்தில்தான் இவர் இவற்றை வெளியிட்டு வருகிறார். அமெரிக்காவில் உள்ள திருமூர்த்தி என்பவரின் நிறுவனம் இந்தப் பணிகளை ஏற்று செய்து வருகிறது. இவருடைய மொழி பெயர்ப்பில் புறநானூறு குறைந்த விலையில் சிறந்த பதிப்பாக அமெரிக்காவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணிக்காக இவர் அரசிடம் இருந்து எந்த உதவியையும் பெறவில்லை என்பதுடன் இவர் அதை எதிர்பார்க்கவுமில்லை. இவருடைய நூல்கள் திருமூர்த்தி நிறுவனத்தின் மூலம் மின் - நூல்களாகக் கொண்டு வரும் இவருடைய திட்டமும் நடைமுறைக்கு வந்துள்ளது.

 

அமேசான் இணையதளத்தில் இருந்து இவருடைய நூல்களை பதவிறக்கிக்கொள்ளலாம். ஆர்வ முள்ளவர்கள் www.learnsangamtamil.com என்ற இணையதளத்தில் இவருடைய நூல்களைப் படித்துக்கொள்ளலாம் சங்க இலக்கியத்துக்கென்றே ஒரு அருஞ்சொல் அகராதியை இவர் உருவாக்கியுள்ளார். தமிழ்ச்சங்க பாடல்களில் விறலி எனும் சொல்லுக்கு நேரடியாக ஆங்கில வார்த்தை கிடைக்காத நிலை இவரை இந்த முயற்சிக்கு உந்தியது. தமிழுக்கு செம்மொழி அங்கீகாரம் கிடைத்த போதும், அடுத்தடுத்து வந்த தமிழக அரசுகள் சங்க இலக்கியத்துக்கு போதிய அளவுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்றும் அவர் சுட்டுகிறார். சங்க இலக்கியத்தைப் பொருத்த வரை யாருமே ஒரு நூலுக்கு மேல் மொழிபெயர்த்ததில்லை என்று வைதேகி ஹெர்பர்ட் சொல்கிறார். தனது மொழிபெயர்ப்பு நூல்களால் வர்த்தக ரீதியில் தனக்கு எவ்விதப்பயனும் கிடைக்காது என்பதை உணர்ந்துள்ளதாகவும் அவர் கூறினார். தமிழ் மீதும், தமிழ் இலக்கியங்கள் மீதும் இவருக்குள்ள காதலும், அவர் ஆற்றி வரும் அரிய பணியும் பாராட்டுக்குரியதாகும்.

 

தமிழக அரசு அவருடைய பணிகளை அங்கீகரித்து பாராட்டு தெரிவித்து விருது வழங்கி கவுரவிக்கும் என்பது நமது அவா. ஒரு பல்கலைக்கழகம் செய்ய வேண்டிய வேலையை தமிழகத்தை விட்டு வெளியேறி 32 ஆண்டுகளாக அமெரிக்காவில் வாழும் ஒரு பெண் செய்து வருகிறார். இரண்டாயிரம் ஆண்டுகளாக யாருமே செய்யாத பணியைச் சிறப்புடன் செய்து வரும் அவருடைய தமிழ்த்தொண்டு வாழட்டும், வளரட்டும். புகைப்படக் குறிப்பு: வைதேகி சார்லஸ் ஹெர்பர்ட் கனடா ரொறன்ரோ பல்கலைக்கழகமும், கனடா தமிழ் இலக்கியத் தோட்டம் அமைப்பும் அவருக்கு விருது வழங்கி கௌரவித்தன. விருதுடன் வைதேகி ஹெர்பர்ட் 

 

malarum.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.