Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஸ்கிரீனன் சாய்ஸ்: 2014-ன் சிறந்த திரைப் படைப்புகள்

Featured Replies

 
pic_2258947f.jpg
 
தமிழ் சினிமா ஆர்வலர்களுக்கு நிறைவையும், எதிர்கால படைப்பாளிகளுக்கு நம்பிக்கையையும், விமர்சகர்களின் பாராட்டையும் பெற்ற 2014-ன் சிறந்த படைப்புகள் இவை. படத்தின் தலைப்பு - ஆங்கில அகரவரிசை அடிப்படையில் இங்கே பட்டியலிட்டுள்ளேன். உங்களிடம் ஒரு பட்டியல் இருக்கலாம். அதை கீழே கருத்துப் பகுதியில் பதியலாம்.
 
பர்மா
 
கார் திருட்டு, கார் பறிமுதல் என்ற அதிகம் பரிச்சயம் இல்லாத கதைக் களத்தில் புகுந்து விளையாடிய புத்தம் புது படைப்பு இது. 98 நிமிடங்களில் கதை சொன்ன விதம், இயல்புத் தன்மை, விறுவிறுப்பு, திரை மொழி முதலானவற்றில் மிகுந்த சிரத்தையுடன் உருவாக்கப்பட்ட படைப்பு இது. சரியான நேரத்தில் சரியான உத்தியுடன் ப்ரொமோஷன்ஸ் செய்யப்பட்டிருந்தால், சாதாரண ரசிகர்களிடமும் இப்படம் கவனத்தைக் கவர்ந்திருக்கக் கூடும். இந்த ஆண்டின் கவனிக்கத்தக்க புது முயற்சிகளுள் ஒன்று - பர்மா.
 
குக்கூ
 
எளிய மனிதர்களின் காதல் என்ற ஒரு வரிக் கதை முழு நீளப் படமாக்கி இருந்தது 'குக்கூ'. கண் பார்வை இல்லாதவர்களின் வாழ்க்கை, காதல், பாடுகள், தன்னம்பிக்கை என அவர்களின் உலகம்தான் இந்தப் படம். புதுமுக இயக்குநர் ராஜுமுருகன் எதார்த்தமான திரைக்கதை அமைப்பில் கண் தெரியாத மாற்றுத்திறனாளிகளின் காதலை காமெடி கலந்து கூறியிருந்தார். மாற்றுத் திறனாளிகள் படம் என்றாலே சோகமாக இருக்கும் என்ற எண்ணத்தை முறியடித்த படம் 'குக்கூ'.
 
கோலி சோடா
 
இந்தாண்டு தயாரிப்பாளர், விநியோகஸ்தர் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் என அனைத்து தரப்பினரையும் சந்தோஷத்தில் ஆழ்த்திய முதல் திரைப்படம் 'கோலி சோடா'. மிகக் குறைந்த பட்ஜெட், சுவாரசியமான திரைக்கதை, இமான் அண்ணாச்சியின் காமெடி கலந்த எதார்த்தமான வசனங்கள் என பார்ப்பவர்களின் மனதை கொள்ளைக் கொண்டது. எந்த நட்சத்திரமும் இல்லாமல் வெறும் 5டி கேமராவால் 10 பேருடன் கோயம்பேடு மார்க்கெட்டில் எடுத்த படமாக்கப்பட்ட படம். எளிமையானவர்கள் வலிமையானவர்களாக மாறுவதும், தனக்கான அடையாளம் தேடும் கருத்தும் எல்லாரையும் கவர்ந்தது. ஒளிப்பதிவாளரான விஜய் மில்டன் இயக்குநராக முதல் பந்திலேயே சிக்சர் அடித்தார்.
 
ஜீவா
 
கிரிக்கெட் பின்னணியில் எவ்வளவு அரசியல் இருக்கிறது, திறமையானவர்கள் எவ்வாறு சாதி அடிப்படையில் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்பதைச் சுட்டிக்காட்டிய படம் 'ஜீவா'. ஆர்யா மற்றும் விஷால் இணைந்து வெளியிட்டதால் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியது. இப்படத்தில் காதல் காட்சிகளைக் குறைத்து, முழுமையாக கிரிக்கெட் வீரர்களின் தேர்வின் பின்னால் நடக்கும் அரசியலை முழுமையாக கூறியிருந்தால் இந்திய திரையுலகம் கவனித்தக்க படமாக இருந்திருக்கும்.
 
ஜிகர்தண்டா
 
ஒவ்வொரு இயக்குநருக்கும் இரண்டாவது படம் அக்கினிப் பரீட்சை என்பார்கள். அந்தப் பரீட்சையில் வெற்றிகரமாகத் தேறினார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். மிகப்பெரிய போராட்டத்திற்கு பிறகு வெளியான 'ஜிகர்தண்டா' படத்திற்கும் பெரிய வரவேற்பு கிடைத்தது. படத்தின் முக்கியமான அம்சம் நம் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாகவே ஆகிவிட்ட சினிமா மோகத்தின் மீதான கிண்டல். ரவுடியில் தொடங்கி சாவு வீட்டில் ஒப்பாரியில் இருக்கும் பெண் வரை சினிமா, சினிமாக்காரர்கள் என்றதும் வாயைப் பிளப்பதை இயக்குநர் ‘அசால்டாக’ காட்டியிருக்கிறார்.வசூல் ரீதியில் மிகப்பெரிய அளவில் போகவில்லை என்றாலும் பார்ப்பவர்களால் யூகிக்க முடியாத வகையில் திரைக்கதை அமைத்து அதில் ஜெயித்தும் காட்டினார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.
 
கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்
 
சினிமா கனவைத் துரத்தும் இளைஞர்கள் தங்கள் முதல் படத்தை எடுப்பதற்காகக் கதையைத் தேடி அலைந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் எப்படித் திரைக்கதையை உருவாக்குகிறார்கள்? சொந்த வாழ்க்கையில் அவர்கள் சந்திக்கும் சவால்களைத் தாண்டி அவர்கள் சினிமா கனவு நிறைவேறியதா, இல்லையா என்பதுதான் படத்தின் கதைக்களம். இப்படத்தில் கதையே கிடையாது என்று வித்தியாசமாக விளம்பரப்படுத்தப்பட்ட படம். மக்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும், வசூல் ரீதியிலும் வரவேற்பு கிடைத்தது.
 
காவியத்தலைவன்
 
மேடை நாடகக் கலைஞர்களை நிஜத்தில் பார்த்து ரசிக்க நமக்கு கொடுத்துவைக்கவில்லையே என்னும் ஏக்கம் ’காவியத் தலைவன்’ படத்தை பார்க்கும்போது அதிகரித்தது. அத்தகைய உணர்வை ஏற்படுத்தியதற்கு விமர்சகர்களால் பாராட்டப்பட்ட படம், படத்தை உருவாக்கிய விதத்தில் கவனம் ஈர்த்தது. ஆனால் வசூல் ரீதியில் படம் தோல்வியடைந்தது. திரைப்படம் என்பது இயக்குநரின் ஊடகம் என்பதை நிரூபணம் செய்யும் படமாக காவியத் தலைவன் நல்லதொரு அனுபவத்தைத் தந்தது.
 
மெட்ராஸ்
 
தொடர் தோல்வி படங்களால் துவண்டு இருந்த கார்த்தியை நிமிரச் செய்த படம் 'மெட்ராஸ்'. வடசென்னையில் இருக்கும் குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் இருக்கும் ஒரு பெரிய சுவர். அதில் விளம்பரம் எழுத இரண்டு அரசியல் கட்சிகளுக்குள் நடக்கும் அதிகாரப் போட்டியும், அதனால் நடக்கும் கொலைகளும்தான் ‘மெட்ராஸ்’ படத்தின் மையம். கார்த்தி இப்படத்தில் ஒரு நாயகனாக இல்லாமல், கதாபாத்திரமாக பிரதிபலித்தது ப்ளஸ் ஆக அமைந்தது.
 
முண்டாசுப்பட்டி
 
புகைப்படம் எடுத்துக்கொண்டால் ஆயுள் குறையும் என்பது இரண்டு தலைமுறைக்கு முன்பு நம்மிடம் நிலவிவந்த (மூட)நம்பிக்கைகளில் ஒன்று. அதுதான் இப்படத்திற்கான அஸ்திவாரம். இந்தாண்டு படங்களின் வரிசையில் முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்த படம் இது ஒன்று தான். வழக்கமான சினிமா கதைக் களத்திற்கு மாற்றான ஒன்றைத் தேர்வுசெய்து நகைச்சுவை ததும்ப அதைக் காட்சிப்படுத்தியிருந்த விதத்தில் அறிமுக இயக்குநர் ராம்குமாருக்கு பாராட்டு கிடைத்தது.
 
நெடுஞ்சாலை
 
நெடுஞ்சாலையில் ஓடும் வாகனங்களில் தொடரும் திருட்டு, அருகில் ஒரு காவல் நிலையம், அதன் அருகே ஒரு டெல்லி தாபா உணவகம்.. இந்தப் பின்னணியைக் கொண்டு ஒரு திரைப் பயணத்தைக் கொடுத்திருந்தார் இயக்குநர் கிருஷ்ணா. உதயநிதி ஸ்டாலின் இப்படத்தை வாங்கியவுடன் படத்திற்கான எதிர்பார்ப்பு கூடியது. வெளியானதும், நெடுஞ்சாலை மக்கள் மத்தியில் போதிய வரவேற்பு பெறவில்லை என்றாலும் விமர்சகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. நெடுஞ்சாலைத் திருட்டைச் சாதுர்யமாக காட்சிப்படுத்திய இயக்குநர், காதல், மனமாற்றம் போன்றவற்றிலும் கவனம் செலுத்தியிருந்தால் படம் சிறப்பாக அமைந்திருக்கும்.
 
பண்ணையாரும் பத்மினியும்
 
உயிரற்ற ஒரு பொருள் மீது மனிதர்களுக்கு ஏற்படும் இனம் தெரியாத பாசத்தையும் அதனால் ஏற்படும் பரிதவிப்பையும் அன்யோன்யமான காதலோடு கலந்து சொன்னது 'பண்ணையாரும் பத்மினியும்’. குறும்படமாக முதலில் வெளிவந்து, அதற்கு கிடைத்த வரவேற்பால் வெள்ளித்திரைக்கு வந்த படம் இது. திரைப்படமாக மக்களிடையே வரவேற்பு பெறாவிட்டாலும், விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. திருவனந்தபுரம், பெங்களூரு திரைப்பட விழாக்களில் இப்படம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.
 
பிசாசு
 
பேய்ப் பட ரசிகர்களுக்கு வித்தியாசமான பேயை அறிமுகப்படுத்தும் படம் ‘பிசாசு’.பேய் என்று கொடூரமாக இருக்கும் என்பதை எல்லாம் விடுத்து பேய்க்குள்ளும் ஒர் ஈர மனம் உண்டு என்று கூறினார் இயக்குநர் மிஷ்கின். பாடல்களையும் காமெடி ட்ராக்கையும் ஒதுக்கிவிட்டு, அசல் சினிமா அனுபவத்தைத் தர முனையும் மிஷ்கினின் முயற்சி பாராட்டப்பட வேண்டியது.
 
சதுரங்க வேட்டை
 
ஈமு கோழி, மண்ணுளிப் பாம்பு, ரைஸ் புல்லிங், எம் எல் எம் என்று பல விதமான வடிவங்களில் மோசடிகளின் தன்மைகளை அவற்றின் செயல்முறைகளோடு அம்பலப்படுத்திய படம். லிங்குசாமி வாங்கியதால் இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு உண்டானது. விறுவிறுப்பான திரைக்கதை, விழிப்புணர்வூட்டும் சித்தரிப்பு ஆகியவை படத்தின் பலம். காட்சிகளில் நம்பகத்தன்மையையும் மெருகையும் கூட்டியிருந்தால் சிறந்த திரைப்பட அனுபவத்தைக் கொடுத்திருக்கும்.
 
தெகிடி
 
குற்றவியல் படிப்பு, துப்பறியும் களம் ஆகியவற்றை வைத்துக்கொண்டு வெளிவந்த விறுவிறுப்பான திரில்லர். கதையோடு ஒன்றிய காதலையும் இணைத்திருந்தார். தெகிடி என்றால், வஞ்சம், சூது, ஏமாற்றுதல் என்றெல்லாம் பொருளாம். ஏமாற்றுவதைப் பற்றிய படம் ஏமாற்றவில்லை. வசூல் ரீதியிலும் இப்படத்திற்கு வெற்றி கிடைத்தது.
 
வெண்நிலா வீடு
 
வெற்றி மகாலிங்கம் இயக்கத்தில் வெளியான இப்படம் பெண்களின் இரவல் நகை மோகத்தால் வரும் பிரச்சினைகள், ரியல் எஸ்டேட் திருட்டுத்தனங்கள் உள்ளிட்ட விஷயங்கள் விலாவாரியாகவும் அதே நேரத்தில் சுவாரசியமாகவும் அலசப்பட்ட படம். குடும்பச் சூழலை மையப்படுத்தும் இப்படத்திற்கு விமர்சகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது.
 
  • தொடங்கியவர்

2014-ல் தமிழ் சினிமாவும் 2015-ன் எதிர்பார்ப்புகளும்: ஒரு வெகுஜனப் பார்வை

commercialhero_2258943f.jpg

 

ஆண்டுதோறும் தமிழ் சினிமாவில் 150-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின்றன. ஆனால், 2014-ல் மட்டும் 200-க்கும் மேற்பட்ட நேரடித் தமிழ்ப் படங்கள் வெளியானது.

 
இவற்றில் கமல், விக்ரம், சிம்பு நடித்த படங்கள் மட்டும் வெளிவரவில்லை. இதைத் தவிர்த்துப் பார்த்தால் ரஜினி, அஜித், விஜய், சூர்யா, கார்த்தி, விஷால், ஆர்யா, ஜெயம் ரவி, ஜீவா, தனுஷ், விஜய் சேதுபதி, ஜெய், சிவகார்த்திகேயன், சசிகுமார், விமல், விதார்த், அதர்வா , விக்ரம் பிரபு என அனைத்து முக்கிய நடிகர்களின் படங்களும் வெளியாகின.
 
ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடித்த 'ஐ' படம் 2014-ல் வெளியாகும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. தவிர்க்க முடியாத சில காரணங்களால் 'ஐ' படம் கடந்த ஆண்டு ரிலீஸ் ஆகவில்லை. விக்ரமின் கடுமையான உழைப்புக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும் என இப்போதுவரை எதிர்பார்க்கப்படுகிறது.
 
அதேபோல், கமல்ஹாசன் நடிப்பில் 'விஸ்வரூபம் 2', 'உத்தம வில்லன்' 'பாபநாசம்' ஆகிய மூன்று படங்கள் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால், ஒரு படம்கூட ரிலீஸ் ஆகவில்லை என்பதுதான் ஆகப்பெரிய வருத்தம்.
 
சிம்பு நடித்த 'வாலு' படத்தின் ரிலீஸ் தேதி பல முறை தள்ளிப் போடப்பட்டது. தற்போது சிம்புவின் பிறந்தநாளான பிப்ரவரி 3-ம் தேதி 'வாலு' ரிலீஸ் ஆகிறது.
 
'கோச்சடையான்', 'லிங்கா' என இரண்டு படங்கள் ரிலீஸ் ஆனதால், ரஜினிக்கு இது முக்கியமான ஆண்டுதான். 'கோச்சடையான்' படத்திற்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. ஆனால், ரஜினியை படத்தில் பார்க்கமுடியவில்லை என்று ரசிகர்கள் சொன்னதால் உடனடியாக ஒரு படத்தில் நடிக்கும் கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார் ரஜினி.
 
அந்தத் தருணத்தில் பொன்.குமரன் கதை சொல்ல, கே.எஸ். ரவிகுமார் இயக்க 'லிங்கா' உருவானது. 'லிங்கா' படத்தில் ஃபிரேமுக்கு ஃபிரேம் ரஜினி இருந்தார். ஆனால், அது முழுமையான ரஜினி படமாக இல்லை என்பதுதான் ரசிகர்களின் கருத்தாக இருந்தது. ஆனாலும், ரஜினி படம் என்பதால் 'லிங்கா'வைக் கொண்டாடத் தவறவில்லை.
 
அஜித் நடித்த 'வீரம்' படத்துக்கு மிகப் பெரிய ரெஸ்பான்ஸ் கிடைத்தது. குடும்பப் பின்னணியில் உள்ள படத்தில் அஜித் நடித்ததை பெரிதும் ரசித்தனர்.
 
விஜய் நடிப்பில் 'ஜில்லா', 'கத்தி' என இரண்டு படங்கள் ரிலீஸ் ஆனது. பொங்கலில் ரிலீஸ் ஆன 'ஜில்லா'வைக் காட்டிலும், தீபாவளிக்கு ரிலீஸ் ஆன 'கத்தி' படத்துக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. 100 கோடி வசூல் செய்த படங்களில் 'கத்தி' இடம்பிடித்தது.
 
தொடர் தோல்விப் படங்ளைத் தந்த தனுஷ் 'வேலையில்லா பட்டதாரி' படத்தின் மூலம் மாஸ் ஹிட் தந்து, தன்னை முழுக்க நிரூபித்தார். ரஜினியின் ஸ்டைலை இமிடேட் செய்கிறார் என்று சொல்லப்பட்டாலும், தனுஷூக்கு அந்த ஸ்டைல் எந்தவிதத்திலும் உறுத்தவில்லை.
 
'மெட்ராஸ்' படம் மூலம் கார்த்தியும் நன்கு கவனிக்கப்பட்டார். விக்ரம் பிரபுவின் 'அரிமா நம்பி', 'சிகரம் தொடு' , 'வெள்ளக்கார துரை' ஆகிய மூன்று படங்கள் ரிலீஸ் ஆனது. சமீபத்திய இளம் நடிகர்களில் கதை தெரிவு செய்யும் முறையில் விக்ரம் பிரபு தனித்துத் தெரிகிறார்.
 
ஆர்யா, விஷால், 'ஜெயம்' ரவி ஆகியோர் ஓரளவு கவனிக்க வைத்தார்கள். 'அஞ்சான்' படம் சூர்யாவுக்கு, நமக்கும் ஏமாற்றத்தையே தந்தது. 'ரம்மி', 'பண்ணையாரும் பத்மினியும்', 'வன்மம்' ஆகிய மூன்று படங்களில் நடித்திருந்தாலும், விஜய் சேதுபதியின் முழுமையான ஃபெர்பாமன்ஸைப் பார்க்கவே முடியவில்லை.
 
வடிவேலு ரீ என்ட்ரியான 'தெனாலிராமன்' படம் மகிழ்ச்சியைத் தந்ததே தவிர, கொண்டாட்டத்தைத் தரவில்லை. சந்தானம் ஹீரோவாக நடித்த 'வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்' படம் சிரிக்கவைத்தது.
 
'கோலிசோடா',' 'மெட்ராஸ்', 'ஜிகர்தண்டா', 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்' , 'முண்டாசுப்பட்டி', 'சதுரங்க வேட்டை', 'பண்ணையாரும் பத்மினியும்', 'ஜீவா' , 'பிசாசு' ஆகிய படங்கள் 2014ம் ஆண்டின் முக்கியமான படங்களாகக் கருதப்படுகின்றன.
 
2015-ன் எதிர்பார்ப்புகள்?
 
ரஜினியின் படம் குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. கமலின் மூன்று படங்களும் இந்த ஆண்டு வெளியாகும். அஜித்தின் 'என்னை அறிந்தால்' ஜனவரி 29-ல் ரிலீஸ் ஆகிறது.
 
விஜய் - சிம்புதேவன் படம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியாகும். விக்ரமின் ';ஐ' படம் ஜனவரி 9ல் ரிலீஸ் ஆகிறது. விஜய் மில்டன் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் 'பத்து எண்றதுக்குள்ள' படமும் இந்த ஆண்டு ரிலீஸ் ஆக உள்ளது. சிம்புவின் 'வாலு' பிப்ரவரி 3ல் ரிலீஸ் ஆகிறது.
 
சூர்யாவின் 'மாஸ்', கார்த்தியின் 'கொம்பன்' , தனுஷின் 'அனேகன்', 'மாரி', விஜய் சேதுபதியின் 'ஆரஞ்சுமிட்டாய்', 'மெல்லிசை', 'இடம் பொருள் ஏவல்' , ஆர்யா - விஜய் சேதுபதியின் 'புறம்போக்கு', சிவகார்த்திகேயனின் 'காக்கி சட்டை', 'ரஜினி முருகன்' , 'ஜெயம்' ரவியின் 'ரோமியோ ஜூலியட்', 'தனி ஒருவன்', 'பூலோகம்', 'அப்பாடக்கரு', சித்தார்த்தின் 'எனக்குள் ஒருவன்' உள்ளிட்ட பல படங்கள் ரிலீஸ் ஆகின்றன.
 
ஜி.வி.பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் 'பென்சில்', 'டார்லிங்' ஆகிய இரு படங்கள் இந்த ஆண்டு வெளியாக உள்ளது.
 
சேரனின் ஜேகே எனும் நண்பனின் வாழ்க்கை சி2 ஹெச் மூலம் வெளியாகிறது. ரோகிணி இயக்கத்தில் 'அப்பாவின் மீசை' பிப்ரவரியில் வெளியாக உள்ளது.
 
பாலாவின் 'தாரை தப்பட்டை', பாலாஜி சக்திவேலின் 'ரா ரா ராஜசேகர்' வெற்றிமாறனின் 'விசாரணை', மணிகண்டனின் 'காக்காமுட்டை' நீயா நானா ஆண்டனி தயாரிக்கும் 'அழகு குட்டி செல்லம்' ஆகிய படங்களும் வெளியாக உள்ளன.
 
ரஜினி படம் தவிர கமல், அஜித், விஜய், சூர்யா, கார்த்தி, தனுஷ், ஆர்யா, விஷால், 'ஜெயம்' ரவி, சிம்பு, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், விக்ரம் பிரபு, அதர்வா, கௌதம் கார்த்திக் உள்ளிட்ட அனைத்து ஹீரோக்களின் படங்களும் வெளியாவதற்கான சாத்தியங்கள் உள்ளன.
 
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.