Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா வாழவைப்போம் அமைப்பின் உதவிகள் அம்பாறையில்……

Featured Replies

இலங்கைத்தீவிலே குறிப்பாக வடகிழக்கு மாகாணங்களிலே பல நெடுங் காலமாக தமிழர்கள் மீது நன்கு திட்டமிட்டு அரச படைகளாளும், ஏனைய சமூகத்தினராலும் நாங்கள் அடக்கப்பட்டு எமது சகோதரர்களையும், சகோதரிகளையும் இழந்தவர்களாக இந்த நாட்டிலே வாழமுடியாமல் தத்தளித்துக்கொண்டிருக்கும் எமது உறவுகளுக்காக கனடாவில் இருக்கும் வாழவைப்போம் அமைப்பு வாழ்வாதார உதவித்திட்டங்களை எமது பகுதிகளில் நடைமுறைப்படுத்தி வருகின்றது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் கூறினார்.

நேற்று நாவிதன்வெளி பிரதேசத்தில் நடைபெற்ற வாழ்வாதார உதவிகள் வழங்கும் நிகழ்விலும் கலைஞர்களை கௌரவிக்கும் நிகழ்விலும், மாணவர்களுக்கான கொப்பிகள் வழங்கும் நிகழ்விலும் கலந்து கொண்டார்.

கனடாவில் இருக்கும் வாழவைப்போம் அமைப்பானது வாழ்வாதார உதவிகளுக்காகவேண்டி ஒரு இலட்த்தது பதினையாயிரம் ரூபாவினை வழங்கியிருந்தது.

இந்நிகழ்விற்கு கி.மா.சபை உறுப்பினர் த.கலையரசன் பிரதம அதிதியாகவும் மற்றும் நாவிதன்வெளி பிரதேசசபையின் தவிசாளர் எஸ்.குணரெத்தினம் கல்முனை மாநகரசபை உறுப்பினர் எஸ்.ஜெயக்குமார், அ.கமலதாசன், காரைதீவு பிரதேசசபையின்உறுப்பினர் பாஸ்கரன், கலைச்சுடர் கலைக்கழக்த்தின் தலைவர் ஜெகதீசன், மற்றும் வாழ்வாதார உதவி பெறுவோர், கலைஞர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர்.

இன்று புலம்பெயர்ந்து வாழும் எமது உறவுகள் இங்கு இன்னல் பட்டுக்கொண்டிருக்கும் உறவுகளுக்காகவேண்டி பல வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றார்கள் அதில் ஒரு வேலைத்திட்டந்தான் இன்று இப்போதுநடைபெற்றுக்கொண்டிருக்கும் வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்வாகும்.

இன்று எமது மக்கள் படும் துன்பதுயரங்களை புலத்தில் உள்ள எமது உறவுகளுக்கு தெரியப்படுத்தியிருந்தேன் அதற்கு உடன்பட்டு எமது உறவுகள் உடனடியாகவே எமது மக்களுக்காக உதவிக்கரம் நீட்ட முன்வந்தார்கள் இவர்களது இந்த சேவையினை நாம் ஒவ்வொருவரும் நினைவில் வைத்திருப்பது மிகவும் அவசியமானதொன்றாகும்.

இன்று அன்னமலை கிராமத்தில் மிகவும் வறுமைக்கோட்டின்கீழ் வாழ்பவர்கள் அன்று சவளக்கடை கிராமத்தில் இராணுவ முகாமிற்கு அருகில் 53 குடும்பங்கள் வாழ்ந்தார்கள் இவர்கள் திட்டமிட்டு 1990ஆம் ஆண்டு சிறுவர் தொடங்கி முதியவர்வரை படுகொலை செய்யப்பட்டார்கள் அதன்பின்பு அந்தக்கிராமமே இருந்த இடம்தெரியாமல் போனது.

அம்பாறை மாவட்டத்திலே தாய்தந்தையரை இழந்தவர்கள், போராட்டத்திலே ஈடுபட்டு அவயவங்களை இழந்தவர்களுக்கும் உதவிக்கரம் நீட்டுவதற்காக புலம்பெயர் அமைப்புக்கள் பல முன்வந்திருக்கின்றன அவர்களது உதவிகள் அனைத்தும் உரியவர்களுக்கே சென்றடைய வேண்டும் என்பதற்காக உரிய தேர்வுகளை செய்தே இவர்கள் 10 பேரையும் தெரிவு செய்திருக்கின்றோம்.

நாங்கள் தெரிவு செய்த பத்துப்பேரையும் எந்தவிதமான சலுகைகள் அடிப்படையிலும் தெரிவு செய்யவில்லை என்பதனை பகிரங்கமாகவே கூறிக்கொள்கின்றேன் இவர்கள் பெறும் இந்த பணத்தினை உரியமுறையில் பயன்படுத்தி அதன்மூலம் நன்மைகளை பெறும் பட்சத்திலேதான் மேலும் பல உதவிகளை செய்வதற்கு புலம்பெயர் அமைப்புக்கள் முன்வரும் என்பதனை இன்று பயன்பெற்ற பயனாளிகள் கருத்தில் கொள்ளவேண்டும்.

இன்று எமது சமூகம் தொலைக்காட்சி வானொலி போன்றவற்றைபொழுதுபோக்கு சாதனங்களாக பயன்படுத்த தொடங்கி விட்டார்கள் அதன்காரணமாக எமது கலாசாரங்கள் மருவிப்போகும் நிலை உருவாகி வருகின்றது 25 வருடகாலத்திற்கு முன்னர் நாட்டுக்கூத்து, கும்மி, நாடகம் கரகம் என எமது கலைஞர்கள் பலவற்றை மேடையேற்றினார்கள் அது இன்று குறைந்து கொண்டே செல்கின்றது.

இதனை கருத்தில் கொண்டு எமது பிரதேச கலைஞர்கள் அதனை வளர்த்தெடுப்பதற்கு முயற்சி எடுத்து அதனை எதிர்கால சந்ததியினருக்கு கற்றுக்கொடுப்பதற்கு முன்வரவேண்டும் எதிர்காலத்தில் இவ்வாரான கலைகளை வளர்ப்பதற்கு எனது பண்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து உதவி செய்வதற்கும் தயாராகவே இருக்கின்றேன்.

அம்பாறை மாவட்டத்தில் இதுவரை காலமும் மறைக்கப்பட்டிருந்த பலவிடயங்கள் தற்போதூன் வெளி உலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றது இதற்கு முழு மூச்சாக இருந்ததது லங்காசிறி எனும் இணையமாகும் இதன்மூலந்தான் எமது பிரச்சனை சர்வதேச ரீதியாக எடுத்துச்செல்லப்பட்டு எமது மக்களுக்கான உதவிகளை பெற்றுக்கொள்வதற்கு வழிஏற்படுத்தப்பட்டிருக்கின்றது எனவும் கூறினார்.nnvv-600x450.jpg bkkug-600x450.jpg ewr-600x450.jpg hbjj-600x450.jpg hgf.jpg hjh-600x450.jpg kik-600x450.jpg kjh-600x450.jpg kjk-600x450.jpg kk-600x450.jpg oo-600x450.jpg po-600x450.jpg pop-600x450.jpg vvbb-600x450.jpg

 

 

- See more at: http://www.canadamirror.com/canada/36316.html#sthash.MJNQFXUA.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.