Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்தியா பிழையான சமிக்ஞைகளை பிழையான நபர்களுக்கு அனுப்பி வைப்பதனை நிறுத்த வேண்டும்: கோத்தாபய ராஜபக்ஸ

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய ஊடகமொன்றுக்கு பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஸ அளித்த செவ்வியின்  தமிழக்கம்

 

images-14-150x150.jpg         இலங்கையை கடுமையாக இராணுவமயப்படுத்தலுக்கு உள்ளாக்கியதாகவும் இலங்கையின் பௌதீக அளவிற்கு பொருத்தமற்ற வகையில் இராணுவத்தை விஸ்தரித்து உள்ளதாகவும் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கள் பற்றி உங்களது கருத்து?

 

இராணுவமயப் படுத்தப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச் சாட்டுக்களில் உண்மையில்லை.

 

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் இலங்கை இராணுவம் விரிவாக்கப்பட்டது. பயங்கரவாத்திற்கு எதிரான யுத்தத்தை வெற்றி கொள்வதற்காக இவ்வாறு இராணுவத்தை விஸ்தரிக்க நேரிட்டது.

 

அமெரிக்காவின் எப்.பி.ஐ புலனாய்வுப் பிரிவு கூட இலங்கையின் தமிழீழ விடுதலைப் புலிகளை உலகின் மிகக் கொடிய பயங்கரவாத அமைப்பு என அடையாளப்படுத்தியிருந்தமையை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

 

இவ்வாறான ஓர் பயங்கரவாத அமைப்பினை தோற்கடிப்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. தரைவழியாகவும், கடல் வழியாகவும், வான் வழியாகவும் தாக்குதல் நடத்தியே புலிகளை இல்லாதொழிக்க நேரிட்டது.

 

பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுக்கும் நிலப்பரப்புக்களை பாதுகாக்க பாரியளவு ஆளணி வளமொன்று தேவைப்பட்டது. இந்த காரணத்திற்காகவே இராணுவத்தினரின் எண்ணிக்கையை அதிகரித்தோம். எனினும், யுத்தத்தின் பின்னர் இராணுவத்தின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை.

 

யுத்தத்தின் பின்னர், புலி எதிர்ப்பு அமைப்புக்கள் வடக்கு கிழக்கில் ஆயுதம் ஏந்துவதற்கு நாம் சந்தர்ப்பம் அளிக்கவில்லை.

 

எங்களுக்கு தேவையென்றால் புலிகளுக்கு எதிரான தரப்பினர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு எதிரான தரப்பினர் போன்றவர்களை ஆயுதம் ஏந்தி வடக்கு கிழக்கில் சஞ்சரிக்க அனுமதித்திருக்க முடியும்.

 

புனர்வாழ்வு அளிக்கப்பட்ட 11000 முன்னாள் போராளிகள் இவ்வாறு ஆயுதங்களை ஏந்தியிருப்பதாக உலகிற்கு காண்பித்து, புலி எதிராளிகள் ஆயுதம் ஏந்த அனுமதித்திருக்க முடியும்.

 

புலிகளுக்கு எதிரான தரப்பினரிடமிருந்து பாதுகாப்பு அளிக்கவும் ஆயுதங்கள் தேவைப்பட்டன.

 

புலி எதிர்ப்பு தரப்பினர் ஆயுதங்களை தொடர்ந்தும் ஏந்தியிருக்க அனுமதித்திருந்தால் வடக்கு கிழக்கு மாகாணங்களின் தேர்தல் முடிவுகள் தலைகீழாக மாற்ற மடைந்திருக்கும். நாமே இந்த நாட்டில் பயங்கரவாதத்தை இல்லாதொழித்து ஆயுதக் கலாச்சாரத்திற்கு முற்று புள்ளி வைத்து ஒட்டு மொத்த நாட்டிற்கும் சுதந்திரம் பெற்றுக் கொடுத்தோம்.

 

எங்களது அரசாங்கத்தின் வெற்றிகள் காரணமாகவே இன்று எந்தவொரு வாக்காளரும் தனக்கு விருப்பானவரை தெரிவு செய்யக் கூடிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

 

நீங்கள் நாட்டை ஏதேச்சாதிகார ஒருநிலைப்படுத்த நிலைக்கு தள்ளியதாக குற்றம் சுமத்தப்படுகின்றதே?

 

நான் அவ்வாறு நினைக்கவில்லை. நாம் அரசாங்கத்தில் அங்கம் வகித்தோம். அரசியல் ரீதியில் விரோதமானர்கள் எதிரிகளின் நல்லவிடயங்கள் பற்றி வழமையாக பேசுவதில்லை.

 

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக நாம் போராடினோம் என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. எனினும் நாம் தமிழ் மக்களுக்கு எதிராக யுத்தம் செய்யவில்லை.

 

உண்மையில் தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து நாமே தமிழ் மக்களை மீட்டெடுத்தோம்.

 

தமிழீழு விடுதலைப் புலிகள் இயங்கி காலத்தில் தமிழ் மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க சந்தர்ப்பம் கிட்டியதா?

 

2010ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் எமது அரசாங்கத்தின் இராணுவத் தளபதியாக கடமையாயற்றியவருக்கு வடக்கு கிழக்கு மக்கள் பெருமளவில் வாக்களித்தார்கள்.

 

2015ம் ஆண்டில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் ஜனாதிபதிக்கு பதிலாக இறுதிக் கட்ட யுத்தத்தின் போது பாதுகாப்பு அமைச்சராக செயற்பட்ட வேட்பாளருக்கே அதிகளவில் வாக்களித்துள்ளனர்.

 

இந்த இரண்டு காரணிகளுமே போதும் நாம் நாட்டை ஆபத்தான நிலையில் இட்டு ஆட்சி செய்யவில்லை என்பதனை நிரூபிப்பதற்கு

 

நீங்களும் உங்களது சகோதரர் மஹிந்த ராஜபக்ஸவும் எதேச்சாதிகார போக்கில் ஆட்சி நடத்தியதாகவும், எதிர்த்தரப்பினர் தொடர்பில் நள்ளிரவு தேடுதல்கள், கண்காணிப்புக்கள், அடக்குமுறைகள் மேற்கொண்டதாக குற்றம் சுமத்தப்படுகின்றது. இது குறித்து உங்களது கருத்த என்ன இலங்கை எந்தக் காலத்தில் சர்வாதிகார ஆட்சியில் இருந்ததில்லை?.

 

நான் பணியாற்றிய அரசாங்கம் ஜனநாயக ரீதியான அரசாங்கமேயாகும். நாட்டில் நடைபெற்ற சுயாதீனமானதும் நீதியானதுமான தேர்தல்களை எமது அரசாங்கமே நடத்தியது.

 

2005ம் ஆண்டு ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டதன் பின்னர் ஆண்டு தோறும் தேர்தல்கள் நடத்தப்பட்டன, அவை சுயாதீனமானதும் நீதியானதுமான முறையில் நடை பெற்றவையாகும்.

 

தேர்தல் சுயாதீனமானதும், நீதியானதுமான முறையில் நடைபெற்ற காரணத்தினாலேயே நாம் 2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தோல்வியைத் தழுவினோம்.

 

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் நள்ளிரவில் தேடுதல் நடத்தப்பட்டது உண்மை என்ற போதிலும் அதன் பின்னர் அவ்வாறு தேடுதல்கள் நடத்தப்படவில்லை. தொலைபேசி உரையாடல் ஒட்டு கேட்டல் மற்றும் கண்காணிப்பு தொடர்பிலான குற்றச்சாட்டுக்கள் சிலரின் கற்பனாவாதமாகும்.

 

கடந்த அரசாங்கத்தில் நான் பதவி வகித்த காலத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் காழ்ப்புணர்ச்சியுடன் எந்த சந்தர்ப்பத்திலும் பழிவாங்கப்படவில்லை, தண்டிக்கப்படவில்லை.

அனைத்து எதிர்க்கட்சி அரசியல்வாதிகளுடனும் ஜனாதபதி மஹிந்த சுமூகமான உறவினை பேணி வந்தார்.

அதன் காரணமாகவே பெரும் எண்ணிக்கையிலான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஆளும் கட்சியில் இணைந்து கொண்டனர்.

 

அரசாங்கத்தை கடுமையாக விமர்சனம் செய்து வந்த மங்கள சமரவீர போன்றவர்கள் கூட அரசாங்கத்தில் இணைந்து கொள்ளக்கூடிய சாத்தியங்கள் ஏற்பட்டன. இவ்வாறான சாத்தியங்கள் உருவாவதற்கு நாம் எதிர்க்கட்சியினருடன் குரோதம் பாராட்டாமையே காரணமாகும்.

 

நான்காம் கட்ட ஈழப்போர் முடிவடைந்து ஆறு ஆண்டுகள் கடக்க உள்ள நிலையில் நீங்கள் ஏதேனும் வித்தியாசமாக செய்தீர்கள் என உணர்கின்றீர்களா?

 

இல்லை.

 

பாதுகாப்புச் செயலாளர் என்ற ரீதியில் யுத்தத்திற்கு தேவையான இராணுவ தளவாடங்கள் ஆயுதங்கள் பெரும்பகுதியை நீங்கள் சீனாவிடம் கொள்வனவு செய்தீர்கள். கடந்த ஒரு தசாப்த காலமாக இவ்வாறு ஆயுதங்கள் கொள்வனவு செய்யப்படுகின்றது. இந்தியா உதவி செய்யாத காரணத்தினால் இவ்வாறு ஆயுதங்களை கொள்வனவு செய்தீர்களா அல்லது உங்களது சுய அறிவின் அடிப்படையில் எடுத்த தீர்மானமா?

 

1980கள் முதல் இலங்கையில் ஆட்சி செய்த அரசாங்கங்கள் யுத்த நோக்கத்திற்காக சீனாவிடமிருந்தே ஆயுதங்களை கொள்வனவு செய்துள்ளன.  அதே நடவடிக்கை எமது அரசாங்கத்தின் கீழும் முன்னெடுக்கப்பட்டது.

 

2006ம் ஆண்டில் இறுதிக் கட்ட யுத்தம் ஆரம்பமானது போது தமிழக அழுத்தங்கள் காரணமாக இந்தியாவினால் எமக்கு ஆயுதங்களை விற்பனை செய்ய முடியவில்லை.

 

இந்திய ஆயுதங்களை வழங்கியிருந்தால் இந்தியாவிடமிருந்தே நிச்சயமாக ஆயுதங்களைப் பெற்றுக்கொண்டிருப்போம். இந்திய பாதுகாப்புச் செயலாளர் விஜய் சிங்கிற்கு நான் டெல்லியில் வைத்து இது குறித்து விளக்கியிருந்தேன்.

 

எனது விளக்கத்தை அவரும் ஏற்றுக்கொண்டார். யார் விரும்பி வழங்குகின்றார்களோ அவர்களிடம் ஆயுதங்களை பெற்றுக்கொள்வதில் தவறில்லை.

 

2006ம் ஆண்டு 2008ம் ஆண்டு காலப்பகுதியில் இந்தியாவிற்கும் உங்களுக்கும் இடையில் சிறந்த தொடர்பு காணப்பட்டது. எனினும், இறுதிக் கட்ட யுத்த காலத்தில் இந்த உறவில் விரிசல் ஏற்பட்டது. இதற்கான காரணம் என்ன சற்று விளக்க முடியுமா?

 

யுத்த நிறைவின் போதும் அதன் பின்னரும் இந்தியாவுடனான உறவுகளில் விரிசல் எதுவும் ஏற்படவில்லை.

 

எவ்வாறெனினும், இறுதி சில ஆண்டுகளாக இந்தியா இலங்கை தொடர்பில் தப்பான அபிப்பிராயத்தை உருவாக்கிக்கொண்டது.

 

சீனாவுடன் இலங்கை பேணி வரும் உறவினை இந்தியா பிழையாக விளங்கிக்கொண்டது.

சீனாவுடன் நாம் சிறந்த உறவுகளைப் பேணி வருகின்றோம். கடந்த சில ஆண்டுகளில் சலுகை அடிப்படையில் சில அபிவிருத்தித் திட்டங்களை சீனா எமக்கு வழங்கியிருந்தது.

 

இந்த அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதனை இந்திய கொள்கை வகுப்பாளர்கள் பிழையாக விளங்கிக்கொண்டுள்ளனர்.

இலங்கை சீனாவின் பக்கம் சாய்வதாக இந்தியா கருதிவிட்டது.

 

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது இந்தியாவின் ஒத்துழைப்பு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது?

 

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது இலங்கை எதிர்நோக்கிய பிரச்சினைகள் குறித்த இந்தியாவின் புரிதல் மிகவும் முக்கியமானதாக அமைந்தது.

 

பரஸ்பர புரிந்துணர்வின் அடிப்படையில் ட்ரோக்கியாஸ் என்னும் அமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது.

 

இந்தியாவின் சார்பில் வெளியுறச் செயலாளர், பாதுகாப்புச்செயலாளர் மற்றும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோர் இதில் அங்கம் வகித்தனர்.

 

இலங்கையின் சார்பில் நானும், எனது சகோதரர் பெசில் ராஜபக்சவும், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் அங்கம் வகித்தோம் ட்ரோக்கியாஸ் எந்த நேரத்திலும் எந்தவொரு விடயம் பற்றியும் தொலைபேசி ஊடாக உடனடியாகத் தொடர்பு கொண்டு பேசக்கூடிய ஓர் கட்டமைப்பு காணப்பட்டது.

 

இலங்கையின் யுத்த நிலைமைகளை பெசில் ராஜபக்சவே இந்தியாவிற்கு அடிக்கடி தெளிவுபடுத்தி வந்தார்.

 

தமிழீழ விடுதலைப் புலிகளினால் ஏற்படக்கூடிய ஆபத்து குறித்து இந்தியாவும் அறிந்து கொண்டிருந்தது. இந்த புரிதல் எமக்கு உதவியாக அமைந்தது.

 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இந்தியாவின் நிலைப்பாடு உங்களை ஏமாற்றமடையச் செய்ததா?

 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இந்தியா இலங்கைக்காக குரல் கொடுத்திருக்க வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு. நாடு அடிப்படையிலான தீர்மானங்களுக்கு ஆதரவளிப்பதில்லை என்ற இந்தியாவின் கொள்கைக்கு அமைய இவ்வாறு செய்திருக்க வேண்டும்.

 

எனினும் தமிழக அரசாங்கத்தினால் பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்கள் காரணமாக இந்தியா இவ்வாறு இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் செயற்பட நேரிட்டது.

 

இந்தியாவிற்கு வேறு வாய்ப்புக்கள் இருக்கவில்லை என்பதே எனது நிலைப்பாடு.

 

இந்தியாவின் நட்புறவும், ஒத்துழைப்பும் இலங்கைக்கு எவ்வளவு முக்கியமானது?

இந்தியாவின் நட்புறவும் ஒத்துழைப்பும் மிகவும் முக்கியமானது. எனினும் இந்தியா இதனை பிழையாக விளங்கிக்கொண்டமை வருத்தமளிக்கின்றது.

 

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் சில தசாப்தங்களாகவே முரண்பாடுகள் காணப்படுகின்றன. எனினும் மரபு ரீதியாக இலங்கை இரண்டு நாடுகளும் சிறந்த உறவினைப் பேணி வருகின்றது.

 

தற்போதைய அரசாங்கமோ அல்லது மேற்குலக நாடுகளோ உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அல்லது பழிவாங்கும் என்ற அச்சம் உண்டா?

 

இல்லை. மேற்குலக நாடுகளோ அல்லது வேறும் தரப்பினரோ பழிவாங்குவார்கள் அல்லது எதிராக செயற்படுவார்கள் என அஞ்சவில்லை.

 

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை முன்னெடுத்த போதே ஆபத்துக்களை உணர்ந்திருந்தேன்.

 

பயங்கரவாத்திற்கு எதிராக யுத்தம் செய்து நாட்டை மீட்டெடுத்துள்ளோம்.

 

நாம் செய்த தியாகங்களை இலங்கை மக்கள் தொடர்ந்தும் மதித்து வருகின்றனர்.

 

தோதலில் வெற்றியீட்டுகின்றோம் தோல்வி அடைகின்றோம் என்பது பெரிய விடயமல்ல. இரண்டாம் உலகப் போரை வென்றெடுத்த வின்சடன் சேர்ச்சில் தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.

 

இதன் காரணமாக பிரித்தானிய மக்கள் சேர்ச்சிலின் சேவையை நிராகரித்து விட்டதாக அர்த்தப்படாது.

 

தமிழீழ விடுதலைப் புலிகள் மீளவும் தலைதூக்கக்கூடிய அபாயம் உண்டா?

 

நாம் ஆட்சியில் இருந்த காலத்தில் இந்த விடயம் குறித்து நாம் மிகுந்த அவதானத்துடன் செயற்பட்டு வந்தோம்.

 

அந்த அவதானம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டியதுஅவசியம்.

 

தமிழகத்தில் பிரிவினைவாதிகள் முகாம்களை அமைக்க இந்தியா அனுமதியளிக்கக் கூடாது.

 

தமிழ் பிரிவினைவாத கொள்கைகள் கோட்பாடுகள இந்தியாவின் ஊடாகவே இலங்கைக்குள் பிரவேசித்தது.

 

தமிழக தமிழ்ப் பிரிவினைவாதம் இலங்கையை விடவும் பழமையானது.

1980களில் தமிழ் பிரிவினைவாதிகளை ஊக்குவித்து இந்தியா பாரிய தவறிழைத்துவிட்டது.

 

இந்தியா பிழையான சமிக்ஞைகளை பிழையான நபர்களுக்கு அனுப்பி வைப்பதனை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

 

 

http://tamil24news.com/news/2015/02/09/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9E%E0%AF%88%E0%AE%95/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.