Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையின் புதிய அரசாங்கத்தை அரவணைப்பதில் ஓபாமா நிர்வாகம் அதிகமான ஆர்வத்தை வெளிப்படுத்துகிறதா?

Featured Replies

JohnKerry05022015_1_CI.jpg

அமெரிக்காவின் ஜனநாயம்மனித உரிமைகள் தொழிலாளர் ஆகியவற்றிற்கான உதவி இராஜாங்க செயலாளர் டொம் மலினொவ்ஸ்கி இலங்கைக்கு சமீபத்தில் விஜயம் மேற்கொண்டார்.அவரது விஜயத்தை உற்றுநோக்கும் போது அதுமிகவும் ஆக்கபூர்வமானதாக அமைந்துள்ளதாக தெரிகின்றது.

இலங்கையின் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த பாரிய மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படும் முல்லைதீவிற்கு அவர் விஜயம் மேற்கொண்டார்.

தனது இலங்கை விஜயத்தின் போது அவர் ஊடகவியலாளர்கள் மத்தியில் பகிர்ந்துகொண்ட விடயங்களை வைத்துப்பார்க்கும்போது புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் இலங்கையில் நடைபெற்றுவரும் மாற்றங்கள் குறித்து அவர் உற்சாகமடைந்திருப்பதாக புலனாகியுள்ளது. அவர் இலங்கைப் பத்திரிகை ஒன்றிற்கு எழுதிய கட்டுரையில் அவர் இன்னும் நம்பிக்கையுடன் இருப்பதை வெளிப்படுத்தினார். பகிரங்கமாக வெளியிட்ட கருத்துக்களைவிட அந்தக் கட்டுரையில் அவர் அதிகளவு நம்பிக்கையை வெளியிட்டிருந்தார்.

ஜனவரி ஆரம்பத்தில் இடம்பெற்ற தேர்தலில் அதிகளவிற்கு எதேச்சாதிகார போக்குடையவராக மாறிவந்த மகிந்த ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டது குறித்து ஒபாமா நிர்வாகம் சந்தேகத்திற்கு இடமின்றி மகிழ்ச்சி அடைந்துள்ளது. மகிந்த ராஜபக்ச காலத்தில் இரு நாட்டு உறவுகளும் கசப்பானவையாக மாறி உள்ளதால் புதிய நிர்வாகத்தின் கீழ் மாற்றம் ஏற்பட வேண்டும் என்பது குறித்து ஒபாமா நிர்வாகம் உறுதியாக உள்ளது.

இலங்கையில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம் குறித்து அமெரிக்காவின் ஏனைய முக்கிய அதிகாரிகள் வெளியிட்ட கருத்துக்கள் போன்றே மலினொவ்ஸ்கி இன் கருத்துக்களும் காணப்படுகின்றன.

அதேவேளை சர்ச்சைக்குரிய மனித உரிமைகள் மற்றும் யுத்தக்குற்றத்திற்கு பொறுப்புக் கூறுதல் போன்ற விடயங்கள் காரணமாக இரு நாட்டு உறவுகள் எவ்வளவு தூரம் வளர்ச்சி காணும் என்பது குறித்து ஒபாமா நிர்வாகம் மத்தியில் காணப்படும் நிச்சயமற்ற தன்மையையும் அவர் வெளிப்படுத்தினார்.

புதிய அரசாங்கத்தின் சீர்திருத்த நடவடிக்கைகள் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக அமையாத இந்ததருணத்தில் பொறுமையும் நிதானமும் அவசியம்.

அதேவேளை நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும், சுயாதீன ஆணைக் குழுக்களை ஏற்படுத்தும் 19வது திருத்தத்தை நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளமை ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றகரமான விடயமாகும்.

இது இலங்கையில் இன்னும் அதிகளவான ஜனநாயக சீர்திருத்தம் ஏற்படும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

இதன் காரணமாக அடுத்த ஏழு மாதங்களுக்கு ஒபாமா நிர்வாகம் தொடர்ந்தும் நம்பிக்கையுடன் காணப்படும் இலங்கை மீதான ராஜதந்திர அழுத்தங்களை குறைக்கும் என எதிர்பார்க்கலாம்.

சிறிசேன விரைவில் பாராளுமன்றத்தை கலைப்பார் என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதன் பின்னர் பாராளுமன்றத் தேர்தல் யூன் மாதமளவில் நடைபெறலாம்.

தேர்தல் பிரசாரங்கள் உத்தியோகபூர்வமாக ஆரம்பமானதும் வாசிங்டன் தலையீடுகள் எதனையும் தவிர்க்க விரும்பும். அதேவேளை அமைதியான நீதியான சுதந்திரமான வெளிப்படையான தேர்தலை நடத்துமாறு அது சிரிசேன அரசாங்கத்தை கேட்டுக் கொள்ளலாம்.

2009 ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவந்த இலங்கை யுத்தக் குற்றங்களுக்காகவும் யுத்தத்தின் பின் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்காகவும் கடும் சர்வதேச அழுத்தங்களை எதிர் கொண்டுள்ளது.

நல்லதுக்கோ அல்லது கெட்டதற்கோ இலங்கையின் மனித உரிமைகள் மற்றும் பொறுப்புக் கூறும் விடயம் ஆகியன சர்வதேசத்தின் கவனத்தில் தொடர்ந்தும் இருப்பதை உறுதி செய்யும் பொறுப்பை ஒபாமா நிர்வாகம் எடுத்துக் கொண்டுள்ளது. 

இலங்கையில் அரசாங்கம் மாறியுள்ளது என்பதற்காக அமெரிக்காவின் இந்த நிலைப்பாடு மாறவேண்டிய அவசியம் இல்லை.

தனது இறுதிப் பதவிக்காலத்தில் இரண்டரை வருடங்களே மிஞ்சியிருக்கின்ற நிலையில் ஒபாமா தொடர்ந்தும் இலங்கை மீது அழுத்தங்களைப் பேணுவாரா?

அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஜோன் கெரி  இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்காவின் மிகமுக்கிய தலைவர் ஓருவர் இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்வதை ராஜபக்ச தோற்கடிக்கப்பட்டதற்கான அங்கீகாரமாகவும், மற்றும் புதிய அரசாங்கத்தை அரவணைப்பதற்கான முயற்சியாகவும் கருதலாம்.

19 வது திருத்தம் நிறைவேறுவது நிச்சயமற்றதாக காணப்பட்ட தருணத்திலேயே  கெரி தனது விஜயத்தை உறுதிசெய்தமையும் முக்கியமானது.

மலினொவ்ஸ்கி இப்போதுதான் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்அதனை தொடர்ந்தும் கெரியும் வந்துள்ளார்.

அமெரிக்காவின் மிக முக்கிய அதிகாரியொருவரின் விஜயம் இந்த தருணத்தில் அவசியமானதா?

19 வது திருத்தத்தில் எதிர்பார்க்கப்பட்ட விடயங்கள் பல காணப்படாவிட்டாலும்அதனை நிறைவேற்றியது சிறிசேன மிகப்பெரும் விடயம் என சிலர் விவாதிக்கலாம்இது எதிர்வரும் மாதங்களில் இன்னமும் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்தலாம்இதில் சறுக்கல்கள் பின்வாங்கல்ஏற்பட்டாலும் அது ஓபாமா நிர்வாகத்தை பாதிக்காது

இலங்கையில் எற்பட்ட ஆட்சி மாற்றம் காரணமாக அமெரிக்காவின் அளவுக்கதிகமான உற்சாகமே இலங்கையுடனான அதன் உறவுகளில் முக்கிய அணுகுமுறையாக விளங்கப்போகின்றது.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/119334/language/ta-IN/article.aspx

அமெரிக்க இலங்கை உறவுகள் கெரியின் பயணத்துடன் இந்து சமுத்திரத்தில் மீண்டும் வலுவடைந்து வருகிறது
 
ussvinson-getty_t700_CI.jpg

 

இலங்கை கடற்பரப்பிலிருந்து 225 கடல்மைல் தொலைவில் நிலைகொண்டுள்ள அமெரிக்காவின் அதி நவீன விமானந்தாங்கி கப்பலிற்கு இலங்கை கடற்படை அதிகாரிகள் குழுவினர் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
 
ஜோன் கெரியின் விஜயத்திற்கு முன்னர் இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகள்  இந்து சமுத்திரத்தில் மீண்டும் வலுவடைந்து வருவதை புலப்படுத்தியுள்ளதாக கொழும்புச்செய்திகள் தெரிவிக்கின்றன.
 
பண்டாரநாயக்க விமான நிலையத்திற்கு சி-12 ரக ஹெலிக்கொப்டரை அனுப்பிய அமெரிக்க அதிகாரிகள் இலங்கை கடற்படையினரை அங்கிருந்து குறிப்பிட்ட கப்பலிற்கு அழைத்துச்சென்றுள்ளனர்.
 
அணுசக்தியில் இயங்கும் நிமிட்ஸ் ரக யுஎஸ்எஸ் கார்ல்வின்சன் என்ற விமானங்தாங்கி கப்பலிற்கே அவர்கள் அழைத்துச்செல்லப்பட்டனர்.
 
அமெரிக்காவின் மிகவும் பிரபலமான இந்த விமானதாங்கி கப்பல் பல யுத்தங்களை எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது. 2003 ம் ஆண்டு குறிப்பிட்ட கப்பலில் இருந்தபடியே அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபில்யூ புஷ் ஈராக்கில் சதாம் அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதாக அறிவித்திருந்தார்.
 
ஓசாமா பின் லாடன் கொல்லப்பட்ட பின்னர் அவரது உடல் குறிப்பிட்ட கப்பலில் இருந்தே கடலில் வீசப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
 
குறிப்பிட் கப்பலிற்கு அழைத்துச்செல்லப்பட்ட இலங்கை கடற்படை அதிகாரிகளுடன் கப்பலில் காணப்பட்ட அமெரிக்க அதிகாரிகள் பரஸ்பர இரு நாடுகளுக்கும் தொடர்புடைய விடயங்கள் குறித்து ஆராய்ந்ததாகவும் அதன் பின்னர் இலங்கை அதிகாரிகள் கப்பலின் அதிதிறமை வாய்ந்த நடவடிக்கைகளை பார்வையிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.