Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிசேன-ரணில் அரசாங்கத்தின் இராஜதந்திர இலக்கு: தோல் இருக்க சுளை பிடுங்கும் தந்திரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிசேன-ரணில் அரசாங்கத்தின் இராஜதந்திர இலக்கு: தோல் இருக்க சுளை பிடுங்கும் தந்திரம்

தத்தர்

169e6e61-0b9d-4ef6-a6fe-67c2724e3a241.jp

சர்வதேச நிலைமைகளையும் உள்நாட்டு நிலைமைகளையும் சரிவர இணைத்து ஈழத் தமிழினத்தை ‘தோல் இருக்க சுளை பிடுங்கும்’ வகையில் இன அழிப்பில் வெற்றிபெற சிறிசேன-ரணில்-சந்திரிகா அரசாங்கம் கனகச்சிதமான மூலோபாயங்களை வகுத்துள்ளது. இதனை சரிவர அடையாளம் காணவேண்டியது முதற்கண் அவசியமாகும்.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை ஒரு விபத்தல்ல, அது இராஜபக்ஷாக்களின் மூளையில் உதித்த ஒரு கண்டுபிடிப்பும் அல்ல. 1987ஆம் ஆண்டு ஜே.ஆர். - லலித் அதுலத்முதலி அரசாங்கத்தில் Operation Liberation என்ற பெயரில் இனப்படுகொலை இராணுவ நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன் முதல் கட்டமாக Operation Liberation Vadamarachchy என்ற பெயரில் தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலை அரங்கேற்றப்பட்டது. ஆனால் அன்றைய பனிப்போர் சூழலில் இதனை தொடர இந்திய அரசு அனுமதிக்காத நிலையில் அவ்வினப்படுகொலைக்கான இராணுவ நடவடிக்கையை அரசு கைவிட நேர்ந்தது.

ஆனால் அந்த Operation Liberation என்ற இராணுவ நடவடிக்கை முறையைத்தான் தமக்கு வாய்ப்பான சர்வதேச சூழலில் இராஜபக்ஷ அரசாங்கம் முழு அளவில் முள்ளிவாய்க்காலில் அரங்கேற்றியது. அதேவேளை இராஜபக்ஷ அரசாங்கம் பின்பற்றிய தீவிர சீன சார்பு கொள்கையின் விளைவாக சிங்கள அரசு மேற்குலகின் நல்லுறவை இழந்தது. இந்நிலையில் போர்க்குற்றத்தின் பேரால் இராஜபக்ஷ அரசாங்கத்தின் மீது மேற்குலகின் அழுத்தங்கள் அதிகரித்த போதிலும் பலமான சீன அரசு ஆதரவின் பின்னணியில் இராஜபக்ஷாக்கள் மேற்குலகை பொருட்படுத்தாது நிமிர்வுடன் நடந்தனர். இதனால் எப்படியோ இனப்படுகொலை பின்னணியில் சிங்கள அரசு சர்வதேச சமூகத்தின் முன் அவமானத்திற்கு உள்ளானது. இதில் சர்வதேச ரீதியான தனிமைப்பாடும் சிங்கள அரசுக்கு ஏற்பட்டது.

முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் மூலகர்த்தாக்கள், அதனை சிங்கள இராணுவ இயந்திரத்தில் ஓர் அங்கமாக்கியவர்கள் முதலில் ஜே.ஆர். – லலித் அதுலத்முதலி தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம்தான்.

எப்படியோ சிங்கள அரசுக்கு சர்வதேச அரங்கில் ஏற்பட்டுள்ள அவமானத்தையும், தனிமைப்படுத்தப்பட்ட நிலையையும் ஒருபுறம் போக்கவேண்டிய காலகட்ட கட்டாயம் சிங்கள ஆட்சியாளர்களுக்கு இருப்பதுடன் மறுபுறம் ஈழத்தமிழரின் தேசியத் தன்மையை தோல் இருக்க சுளை பிடுங்கும் பாணியில் அழித்தொழிக்கவும் முழுவீச்சில் முற்படுகின்றனர்.

இதற்காக ஓர் இரட்டை அணுகுமுறை மூலோபாயத்தை சிறிசேன-ரணில் அரசாங்கம் பின்பற்றுகிறது. சிங்கள அரசு சர்வதேச அரங்கில் அடைந்திருக்கும் இனப்படுகொலையின் பேராலான அவமானத்தை போக்கி சிங்கள அரசின் தனிமைப்பாட்டை இல்லாது செய்வதும், போர்க்குற்றத்திற்கான சர்வதேச விசாரணையை இல்லாது செய்வதும் முதற்கண் இலக்காக உள்ளது. அதற்கு இரட்டை அணுகுமுறையை பின்பற்றவேண்டி உள்ளது.

முதலாவதாக ஜனநாயக மீட்பு என்பதன் பெயரால் கடும்போக்கு சிங்கள இனவாதிகளை மிதப்படுத்துவதற்கு ஏற்ற அரசியல் நிறுவன மாற்றங்களை செய்வது. இரண்டாவதாக மிதவாத தமிழ்த் தலைவர்களை அணைத்து அவர்களை அரசியலில் வலுவுள்ளவர்களாக ஆக்குவதன்மூலம் ஒருபுறம் தமிழ்த் தேசிய உணர்வை எழவிடாமல் தடுத்து, பையவே தமிழ்த் தேசிய இனத்தை தோல் இருக்க சுளை பிடுங்குவது போல் பிடுங்கிவிடுவது.

சிங்கள இனவாதிகளுக்கு எதிரான ஜனாநாயக மீட்பு அமைப்புக்கள், தமிழ் மிதவாத தலைவர்களை அரவணைத்தல் ஆகிய இருவிடயங்களையும் உலக அரங்கில் முன்னிறுத்துவதன் மூலம் தமிழ்த் தேசிய இனத்தின் மீதான ஒடுக்குமுறை முழுவடிவம் பெறமுடியும்.

169e6e61-0b9d-4ef6-a6fe-67c2724e3a244.jp

ஒருபுறம் சிங்கள கடும்போக்கு இனவாதிகளை மிதப்படுத்துவது, மறுபுறம் தமிழ் மிதவாதிகளை அரசியல் சக்தியாக்குவது என்ற இரண்டின் மூலமும் புத்திபூர்வமாக சர்வதேச அனுசரணையுடன் இன அழிப்பை வெற்றிகரமாக்க சிறிசேன-ரணில் அரசாங்கம் முனைகிறது.

தமிழ்த் தலைவர்களை அணைப்பதன் மூலம் தமிழ்த் தேசிய இனத்தை கருவறுப்பதில் ஐக்கிய தேசிய கட்சி கடந்தகாலத்தில் பல வெற்றிகளை ஈட்டியுள்ளது. சுதந்திர இலங்கையில் தமிழ்த் தலைவர்களை இறுக அணைத்து பல தமிழர்களை அமைச்சரவையில் வைத்துக்கொண்டு தமிழருக்கு எதிரான அரசியலை மிகத் திறம்பட செயற்படுத்தினார் டி.எஸ்.செனநாயகா. தமிழ் அமைச்சர்களின் அனுசரணையுடன் பாரிய கல்லோயா குடியேற்ற திட்டத்தை கிழக்கில் 1949ஆம் ஆண்டு டி.எஸ்.செனநாயகா நிறைவேற்றினார். இதன் மூலம் இன்று கிழக்கில் மூன்றில் ஒரு பங்கு சனத்தொகை சிங்கள இனமாக மாறியதுடன் கிழக்கின் மொத்த சனத்தொகையில் தமிழர் வெறும் 40 வீதம் என்ற அளவில் அங்கு சிறுபான்மையினமாக ஆக்கப்பட்டு விட்டது. இது வெற்றிகரமான ஒரு இன அழிப்பு திட்டமாகும்.

1965ஆம் ஆண்டு தமிழரசுக் கட்சியுடன் ஐக்கிய தேசிய கட்சி இணைந்து தேசிய அரசாங்கம் என்றதன் பேரில் கூட்டரசாங்கம் அமைத்த போதிலும் தமிழ் மக்களுக்கு வழங்கத் தயாராக இருப்பதாக 1965ஆம் ஆண்டு ஒப்புக்கொண்ட மாவட்ட சபை திட்டத்தை எவ்வித அரசியல் நாகரீகமும் இன்றி அப்பட்டமாக 1967ல் கைவிட்டது. ஆனால் அவ்வாறு கைவிட்ட பின்பும் தமிழரசுக் கட்சியை அணைத்து 1969ஆம் ஆண்டு வரை அரசாங்கத்துடன் வைத்திருந்தது மட்டுமின்றி 1970ஆம் தேர்தல் வரை தனது 5 ஆண்டுகால ஆட்சியையும் பூர்த்தி செய்யும் வகையில் தமிழரசுக் கட்சியின் ஆதரவை தொடர்ந்து தக்க வைக்கவும் ஐ.தே.கவால் முடிந்தது.

தமிழ்த் தலைவர்களை அணைத்து, தமிழர்களை தோற்கடிக்கும் தந்திரத்தில் எப்போதும் ஐக்கிய தேசிய கட்சி முதன்மையான வெற்றியை ஈட்டியுள்ளது. இப்பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகவே தற்போது சிறிசேன-ரணில்-சந்திரிக அரசாங்கம் சிங்கள கடும்போக்காளர்களை ஜனநாயக நிறுவன மீட்பால் கட்டுப்படுத்துதல், தமிழ் மிதவாதிகளை அரசியல் அதிகாரம் உள்ளவர்களாக்கி தமிழ்த் தேசிய சக்திகளை எழவிடாமல் தடுப்பது, இவற்றின் மூலம் போர்க்குற்றம் பற்றிய சர்வதேச விசாரணையை இல்லாமல் செய்து சிங்கள அரசை காப்பது, இறுதி அர்த்தத்தில் 'தோல் இருக்க சுளை பிடுங்குவதுபோல்' தமிழினத்தை அழிப்பது என்ற மூலோபாய இலக்குக்களின் அடிப்படையில் செயற்பட்டு வருகிறது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வாயிலாக வடக்கில் புலிக்கொடி பறக்காமல் செய்யும் பணியை தாம் நிறைவேற்றியுள்ளதாக ரணில் விக்ரமசிங்க சுதந்திர தினத்தின் பின்னான பத்திரிகையாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார். இதற்கு மேலும் ஒரு படி சென்று தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் சிங்கக் கொடியை ஏந்தினர் என்பது அதிகம் கவனத்திற்குரியது. 1970களில் சிறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சிக் காலத்தில் சிங்கக் கொடிகளை எரிக்குமாறு தமிழ் இளைஞர்களை தூண்டிய அதே தமிழ்த் தலைவர்களின் கையில் சிங்கக்கொடியை ஏந்தச் செய்தமை சிறிசேன-ரணில் அரசாங்கத்தின் முக்கிய சாதனைகளில் ஒன்றாகும்.

டி.எஸ்.செனநாயக அரசாங்கத்துடன் தமிழ்த் தலைவர்கள் நல்லிணக்கம் காட்டி ஒத்துழைத்ததன் விளைவு மலையக தமிழ்மக்களின் வாக்குரிமை, குடியுரிமை பறிக்கப்பட்டமையும், சிங்களக் குடியேற்றத்தின் வாயிலாக கிழக்கு மாகாணம் பறிமுதலானதுமாகும். மேலும் 1965 – 70 ஆண்டுக்கால நல்லிணக்க தேசிய அரசாங்கம் தமிழர்களுக்கு வாலைக்காட்டி மூக்கை நெளித்தது.

அத்தகைய தந்திரோபாய அரசியலின் வளர்ச்சியடைந்த நீட்சியாக தற்போது சிறிசேன – ரணில் அரசாங்கம் நல்லிணக்கம் என்ற பேரால் காட்சியளிக்கிறது.

இப்படியான இரட்டை அணுகுமுறை மூலோபாயத்தின் மூலம் சர்வதேச அரங்கில் சிங்கள அரசு அடைந்திருக்கும் தனிமைப்பாட்டை நீக்குதல், தமிழ்த் தலைவர்களை அணைத்து சர்வதேச போர்க்குற்ற விசாரணையை இல்லாது செய்தல், மேலும் மிதவாத தமிழ்த் தலைமை கருவியாக பயன்படுத்தி தமிழ்த் தேசிய தன்மையை அழித்தல் என்ற அனைத்து இலக்கையும் உள்நாட்டு, வெளிநாட்டு ரீதியில் ஒன்றுதிரட்டி நல்லிணக்கம் என்ற மாயமானால் தமிழினத்தை படுகுழிக்குள் தள்ளி அழித்தொழித்து வெற்றியீட்டுவதே சிறிசேன-ரணில்-சந்திரக அரசாங்கத்தின் இறுதி இலக்காகும்.

http://ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=6&contentid=169e6e61-0b9d-4ef6-a6fe-67c2724e3a24

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.