Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

‘‘இது என் சகோதரர்களின் கதை!’’

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1lf9.jpg

தவறான பொருளில் நாம் அதிகம் பயன்படுத்தும் வார்த்தைகளில் ஒன்று ‘புரட்சி’. ஒடுக்கப்பட்ட மக்கள் தங்கள் விடுதலைக்காகக் கிளர்ந்து எழும்போது உருவாகும் மக்கள் கலகமே புரட்சியாக மாறுகிறது. அப்படித் தங்கள் விடுதலைக்காகக் கிளர்ந்து எழும் மக்களின் உணர்ச்சிமிக்க வரலாறு தான் The battle of algiers!

1957. விடுதலைப் போராளிகள் ஒளிந்திருக்கும் குடியிருப்புப் பகுதியைச் சுற்றி வளைக்கிறார்கள் ராணுவ வீரர்கள். அங்கிருக்கும் வீடுகளிலிருந்து அப்பாவி மக்களைத் துப்பாக்கி முனையில் வெளி யேற்றுகிறார்கள். ஒரு வீட்டினுள் நுழைந்து, அங்கிருக்கும் ஒரு சுவரில் சலவைக்கல் செயற்கையாக ஒட்டப்பட்ட அந்த இடத்தைச் சூழ்கிறார்கள். உள்ளே மறைவிடத் தின் இருளுக்குள், அலி உள்ளிட்ட விடுதலை இயக்கத்தினர் நான்கு பேர் ஒளிந்திருக்கிறார்கள். வெளியே நிற்கும் ராணுவ அதிகாரி, ‘அலி... நீ இனிமேல் தப்பிக்க முடியாது. உன் இயக் கத்தார் அனைவரும் பிடிபட்டு விட்டார்கள். ஆயுதங்களைப் போட்டுவிட்டு வெளியே வா!’ என அழைக்கிறார். தன் வாழ்வின் கடைசி நிமிடங்களில் இருக்கும் போராளியான அலியின் நினைவு கள் துவங்குகின்றன.

1954. தேசிய விடுதலை முன்னணியின் அறிவிப்பு வெளியாகிறது. ‘மக்களே, நாம் பிரெஞ்சு அரசின் காலனி ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற வேண்டும். ரத்தம் சிந்து வதைத் தவிர்க்க, அவர்கள் நம்முடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். நம் தேசத்தையும் சுதந்திரத்தையும் காப்பது நம் கடமை! சகோதரர்களே... ஒன்றிணையுங்கள்!’ என்ற அறிவிப்பு வெளியாகும் போது, தெரு ஓரத்தில் நின்று கொண்டு இருக்கும் அலியை போலீஸ் மடக்கிப் பிடிக்கிறது. சிறுசிறு குற்றங்கள் செய்து பலமுறை ஜெயிலில் இருந்த அவனை போலீஸ் மீண்டும் சிறையில் அடைக்கிறது. சிறையில் குற்றவாளிகளுடன் இருக்கும் அலி, விடுதலைப் போராளி ஒருவரை போலீஸார் அழைத்துச் செல்வதையும், அந்தப் போராளியின் தலையை கில்லெட்டில் வைத்துத் துண்டிப்பதையும் ஜன்னல் வழியாகப் பார்த்து அதிர்ச்சி அடைகிறான். விடுதலை ஆகி வெளியில் வந்ததும், விடுதலை இயக்கத்தில் சேர்கிறான்.

3ie4.jpg

1956, ஜூன் காலை 10.32. சாலையில் போலீஸைப் பின் தொடரும் இளைஞன், போலீஸைக் கொன்று அவரிடம் இருந்த துப்பாக்கியை எடுத்துச் செல்கிறான். காலை 11.40. பொதுமக்கள் நான்கு பேர் போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்து, அதிகாரிகளைக் கொன்று ஆயுதங்களைக் கைப்பற்றுகிறார்கள். மாலை 4.15. நகரத்தின் முக்கிய வீதிகளில் பிரெஞ்சு போலீஸார் இறந்துகிடக்க, ஆயுதம் ஏந்திய இளைஞர்கள் சுட்டுக்கொண்டு இருக்கிறார்கள். பிரெஞ்சு உயர் அதிகாரிகள் அன்றே கூடி விவாதிக்கிறார்கள். போலீஸ் நிலையங்களுக்குப் பாதுகாப்பு அதிகரிக்கப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் வீட்டிலிருந்து தெருவுக்கு வரும் பாதைகள் கம்பிவேலிகளால் மூடப்படுகின்றன. மக்கள் அடையாள அட்டையோடு ஒவ்வொருவராக வரிசை யில்தான் வர வேண்டும். போலீஸாரின் கெடுபிடி அதிகரிக்கிறது.

4np3.jpg

1956, ஜூலை 20. காலை 11.20. பரிசோதிக்கப்படும் பொதுமக்களின் வரிசையில் பர்தா அணிந்த பெண் ஒருத்தி வருகிறாள். பெண் என்பதால், தொட்டுப் பரி சோதனை செய்யவிடாமல் அங்கிருந்து வெளியே வந்ததும், பர்தாவுக்குள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து ஓர் இளைஞனிடம் கொடுக்கிறாள். அவன் ஒரு போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொல்கிறான். காலை 11.50. பழங்கள் விற்கும் மார்க்கெட். ஒரு பழ வியாபாரி யின் கூடையில் ஒளித்துவைக்கப்பட்ட துப்பாக்கியை எடுக்கும் இளைஞன் அங்கு ரோந்து வரும் அதிகாரியை சுட்டுக் கொல்கிறான். பிற்பகல் 1.30. 15 வயதுள்ள ஒருவன் ஒரு போலீஸ் அதிகாரியைப் பின்தொடர்கிறான். சந்தேகப்படும் அவர் அவனைப் பரிசோதிக்கிறார். அவ னிடம் ஆயுதங்கள் இல்லை என்றதும், அவனைப் போ என விரட்டுகிறார். அவன் அங்கிருக்கும் குப்பைத் தொட்டியில் கிடக்கும் துப்பாக்கியை எடுத்து அவரைச் சுட்டுக் கொன்று விட்டு, துப்பாக்கியைக் குப்பைத் தொட்டியிலேயே போட்டுவிட்டுத் தப்பிக்கிறான். விடுதலை இயக்கம் இப்படிச் சாதாரண மக்க ளின் பங்களிப்புடன் மக்கள் இயக்கமாக மாறத் துவங்கு கிறது.

5bq1.jpg

ஜனவரி 10, 1957. போராளிகளை ஒழிக்க, பல போர்களில் வெற்றி கண்ட கர்னல் மேத்யூ தனது அதிரடிப் படையுடன் நகரத்துக்குள் அணி வகுத்து வருகிறார். பிரெஞ்சு மக்கள் ஆரவாரித்து அவரையும் படையினரையும் வரவேற்கிறார்கள். கர்னல் தன் படைவீரர்களுக்கு எப்படிப் போராளிகளைப் பிடிக்க வேண்டும் என்றும், அங்கிருக்கும் நாலு லட்சம் அராபியர்களில் தீவிரவாதி யார் என்பதைக் கண்டறிய வேண்டும் என்றும் வகுப்பு எடுக்கிறார். நகரம் முழுக்கத் தேடுதல் வேட்டை துவங்குகிறது.

7gf4.jpg

மார்ச் 4, 1957. இயக்கத்தின் இரண்டாம் நிலைத் தலைவர்களான அலியும் ஜாபரும் தேடப்படும்போது இயக்கத்தின் முக்கியத் தலைவரான பென்மெஹிதி கைதாகிறார். கைது செய்யப்பட்ட அவருடன் சேர்ந்து கர்னல் மேத்யூ பத்திரிகையாளர் களைச் சந்திக்கிறார். ‘‘பெண்களின் கூடையில் வெடிகுண்டுகளை வைத்து வெடிக்கவைப்பது கோழைத்தன மாக இல்லையா?’’ என்று பத்திரிகையாளர்கள் கேட்கிறார்கள். ‘‘அப்பாவி மக்கள் மீது விமானங்களிலிருந்து குண்டு வீசுவது வீரமா? உங்கள் விமானங்களைக் கொடுங்கள். எங்கள் பெண்களின் கூடைகளைத் தருகிறோம்’’ என்கிறார் மெஹிதி. மறுநாளே அவர் சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக அறிவிப்பு வருகிறது. பத்திரிகையாளர்கள் அதைச் சந்தேகித்து கர்னல் மேத்யூவிடம் கேள்விகள் கேட்கிறார்கள். அவர்கள் கேள்விக்குப் பதில் அளிக்கும் கர்னல் மேத்யூ, ‘‘நான் உங்கள் எல்லோரிடமும் கேட்க வேண்டிய ஒரு கேள்வி இருக் கிறது. இந்த நாட்டில் பிரெஞ்ச் ஆகிய நாம் இருக்க வேண்டுமா? வெளியேற வேண்டுமா? இருக்க வேண்டும் என்பது உங்கள் பதில் எனில், நாங்கள் செய்கிற எதையும் கேள்வி கேட்காதீர்கள்’’ என்கிறார். பத்திரிகையாளர்கள் அமைதியாகிறார்கள். கைது செய்யப்பட்ட அனைவரும் அந்த நிமிஷத்திலிருந்து கடுமை யாகச் சித்ரவதை செய்யப் படுகிறார்கள். இதற்குப் பதிலடி கொடுக்கும்விதமாகப் போராளிகளும் நகரத்தில் கடுமை யான தாக்குதலை நடத்துகிறார்கள்.

6fw9.jpg

செப்டம்பர் 24, 1957. ஜாபர் மறைந்திருக்கும் இடத்தை கர்னல் மேத்யூவின் ராணுவம் கண்டுபிடிக்கிறது. வீட்டை விட்டு வெளியே வரவில்லை எனில் அந்தக் கட்டடத்தில் இருக் கும் அப்பாவி மக்களும் கொல்லப் படுவார்கள் என்று அறிவிக்கப்படு கிறது. அப்பாவி மக்களின் உயிரைக் காக்க, சரணடைகிறார் ஜாபர்.

இயக்கத்தில் எல்லோரும் பிடிபட்ட நிலையில், ஒரு அதிகாலையில் அலி தான் மறைந்திருக்கும் இடத்திலிருந்து தப்பிப்பதற்காகத் திட்டமிடுகிறான். ஆனால், திடீரென துப்பாக்கிகள் வெடிக்கும் சத்தம் கேட்க, அங்கு ராணுவம் நுழைகிறது. அலி யுடன் அங்கிருந்த நால்வரும் வேக மாகச் சுவருக்குள் இருக்கும் சின்ன மறைவிடத்தில் ஒளிந்துகொள்ள, அங்கிருக்கும் பெண் அவர்கள் ஒளிந்த இடத்தை சலவைக்கல்லால் மூடு கிறாள். இதையறிந்து சுவரின் அருகே வரும் கர்னல் மேத்யூ, அலி சரண் அடையாவிட்டால் அந்தக் கட்ட டமே தகர்க்கப்படும் என்று மிரட்டு கிறார். சுவரின் இருளுக்குள் தன் வாழ்வின் கடைசி நிமிடங்களில் இருக்கும் அலியின் நினைவுகள் நிறை வடைந்து, நிஜத்துக்கு வருகின்றன.

8pd0.jpg

வெளியில் அந்த சுவரைச் சுற்றி ராணுவ வீரர்கள் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளைப் பொருத்து கிறார்கள். கர்னல் மேத்யூ வெளி யில் நின்று, ‘அலி... வெளியே வந்துவிடு. கடைசியாக இன்னும் 30 நொடி தருகிறேன். அதற்குள் சரண டைந்து விடு’ என்கிறார். உள்ளிருக்கும் அலி மன உறுதியுடன் இருக்கிறான். கட்டடத்தில் இருக்கும் அனைவரும் வெளியேற்றப்படுகிறார்கள். சுற்றி இருக்கும் வீடுகளில் இருக்கும் மக்கள் தங்கள் வீடுகளின் மேல் கூடி நின்று பிரார்த்திக்கிறார்கள். கடைசியாக வீட்டுக்குள் இருந்த ராணுவ வீரர்களும் வெளியே ஓடிவருகிறார்கள். அலியுடன் ஒளிந்திருக்கும் சிறுவன் அலியை இறுகக் கட்டிக்கொள்கிறான். கட்டடம் வெடித்துச் சிதறுகிறது. போராளிகளின் இயக்கத்தை அடியோடு ஒழித்துவிட்டோம் என்று கர்னல் மேத்யூவும் அதிகாரிகளும் அங்கிருந்து வெளியேறுகிறார்கள்.

டிசம்பர் 11, 1960. இரண்டு வருடம் எதுவும் இல்லாமல் அமைதியாக இருந்து, எப்படி உருவானது என்பதற்கான காரணமே இல்லாமல் திடீரென மக்கள் கலகம் வெடிக்கிறது. கிழிந்த துணிகளாலும், பழைய சட்டைகளா லும் ஒரே இரவில் தயாரிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கொடிகளுடன் சிறுவர்களும், பெண்களும் உள்ளிட்ட மக்கள் கூட்டம் எழுச்சியுடன் ஆர்ப் பரிக்கிறது. ராணுவம், பீரங்கி வண்டிகள், துப்பாக்கிச் சூடு எதனா லும் அடக்க முடியவில்லை. டிசம்பர் 21.1960 எங்கும் புகை மண்டலம். ஒரு அதிகாரி ஒலிவாங்கியுடன் ‘‘உங்க ளுக்கு என்னதான் வேண்டும்?’’ என்று கத்துகிறார். ‘‘சுதந்திரம்’’ என்ற குரல் கூட்டாக ஒலிக்க, கலையும் புகையி லிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் எழுச்சியுடன் முன்வருகிறார்கள். ஜூலை 2, 1962&ம் ஆண்டு சுதந்திரம் கிடைத்து, அல்ஜீய நாடு உருவாகிறது. தங்கள் தேசியக் கொடியுடன் ஒரு பெண் சந்தோஷமாக நடனமாட, படம் நிறைவடைகிறது.

மக்கள் எழுச்சியை அந்த உணர்வு மாறாமல் பதிவுசெய்த விறுவிறுப்பான இப்படத்தின் ஒவ்வொரு காட்சியும் முக்கியமானவை. மூன்று பெண்கள் வெடிகுண்டை வைப்பதற்காகச் செல்லும் காட்சிகளும், வெடிகுண்டு வெடிப்பதற்கு முன் அந்த ஓட்டலில் இருக்கும் மனிதர்களின் முகபாவங் களைக் காட்டும் விதமும் இயக்குநரின் திறமைக்கான சாட்சிகள். படம் முழுக்க சிறுவர்களும், குழந்தைகளும் காட்சிப்படுத்தப்பட்ட விதம் அற்புதமானது!

சுவருக்குள் ஒளிந்திருக்கும் போராளிகள் முகத்தில் ஒளிரும் ஒளியை அவர்களுக்குள் தகிக்கும் லட்சியத்தின் சுடராக உணர வைக்கும் ஒளிப்பதிவும், என்ய மொரிக்கானின் பின்னணி இசையும் அற்புதம். புரட்சி தோற்றுவிட்டதாக ஒரு ராணுவ வீரன் அறிவிக்கையில், அவனுக்குத் தெரியாமல் அந்த மைக்கை ஒரு சிறுவன் எடுத்துச் சென்று ‘நம் போராட்டம் வெல்லும்’ என்று சொன்னதும், கூடியிருந்த பெண்கள் குலவை யிட... மக்கள் எழுச்சியுறுகிற காட்சி நம்மைச் சிலிர்க்க வைக்கிறது.

உலக சினிமாவில் முக்கிய அரசியல் படமான இது, பிரான்ஸில் தடை செய்யப்பட்டது. வெனிஸ் விழாவில் ‘தங்கச் சிங்கம்’ விருதுபெற்ற இந்த பிரெஞ்சு மொழிப்படம் 1966&ல் வெளியானது. இதன் இயக்குநர் இத்தாலியைச் சேர்ந்த ஜில்லோ பொன்டேகார்வோ (Gillo Pontecorvo).

ஒருமுறை, ஜியாக்ரஃபிக் தொலைக்காட்சியில் பார்த்த ஒரு காட்சி பிரமிப்பாக இருந்தது. பலம் பொருந்திய காட்டெருமை ஒன்றை நூற்றுக்கணக்கான தேனீக்கள் மொய்த்துக் கொட்டுகின்றன. காட்டெருமை இறந்து தரையில் விழுகிறது.

மேலோட்டமான பார்வையில், அதிகாரம் பலம் பொருந்தியதுதான். ஆனால், ஒற்றுமையாக எழும் மக்கள் சக்தியின் முன் பாவம், அது என்ன செய்ய முடியும்?

9uw8.jpg ‘‘இது என் சகோதரர்களின் கதை!’’

உலகெங்கிலும் ஒடுக்கப் படுகிற தேசிய இனங்களின் விடுதலைப்போருக்கு ஒரு விதையாக ஊன்றப்பட்டு இருக்கிறது இந்தப் படம். பிரெஞ்ச் காலனி ஆதிக்கத் திலிருந்து விடுதலை பெறப் போராடுகிற அல்ஜீயர்ஸ் என்கிற இனக் குழுவின் கதைதான் இது. இதை அல்ஜீ யர்ஸின் படமாக மட்டுமே பார்க்க முடியாது. பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறப் போராடிய அயர்லாந்து மக்களின் போராட்டத்துக்கும், இஸ்ரேலின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறப் போராடுகிற பாலஸ் தீனியர்களின் போராட்டத்துக்கும், எனது சகோதரர்கள் சிங்கள ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறப் போராடுகிற ஈழ விடுதலைப் போருக்கும் இந்தக் கதை பொருந்தும்.

ஆறுகளில் தண்ணீர் ஓடுகிறது; மக்கள் விடுதலை வரலாறுகளிலோ போராளிகளின் குருதியும், அடிமைப்பட்ட மக்களின் கண்ணீரும் கலந்து ஓடுகிறது. விடுதலை என்பதன் உண்மையான அர்த்தம், மக்களிடமிருந்து உருவாகிற போராளிகளால்தான் தீர்மானிக்கப்படுகிறது என்பதை இந்தப் படத்தைப் பார்த்தபோது உணர்ந்தேன்.மீண்டும் மீண்டும் விழுகிற அடியைப் பொறுத்துக்கொள்கிற வரைதான் மனதில் பயம்; கண்களில் மிரட்சி. திமிறி எழுந்துவிட்டாலோ, மரணம் மட்டும்தான் எதிர்காலத்தாய கத்துக்கான விதை. ஏனென்றால், நாட்டுக்காக உயிரை விடுவது உத்தமம். ஆனால், உயிரை விட ஒரு நாடு வேண்டாமா?

‘‘உங்களுக்கு என்ன வேண்டும்?’’ என்று அதிகாரி கேட்க, ‘‘விடுதலை’’ என மொத்தக் கூட்டமும் ஆர்ப்பரிக்கிறபோது, அந்தக் குரல் ஈழத்திலிருந்து கேட்பதாகத்தான் எனக்குப் படுகிறது. இந்தப் படம் 90 சதவிகிதம் ஈழப் பிரச்னையோடும் போராட் டத்தோடும் பொருந்திப்போகிறது. அதனால் உணர்வுபூர்வமாக இந்தப் படத்தோடு என்னால் ஒன்ற முடிகிறது! சீமான்

10ed4.jpg புரட்சி’ இயக்குநர்!

இத்தாலியில், யூத தம்பதிகளுக்கு மகனாக 1919 நவம்பர் 19--_ம் தேதி பிறந்தவர் பொன்டே கார்வோ. வாழ்க்கையில் பல போராட்டங்களைச் சந்தித்தவர் இவர். இத்தாலியில் பாசிஸம் அதிகாரத்துக்கு வந்த காலங்களில், புரட்சிகர இயக்கங்களோடு தொடர்பு உடையவராக இருந்தார். வேதியியல் துறையில் பட்டம் பெற்ற இவர், பத்திரிகையாளராகத் தன் கலை வாழ்க்கையைத் தொடங்கினார். ஐந்து திரைப்படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும், உலக சினிமா வரலாற்றில் தனக்கென அழியாத தனி இடத்தை ஏற்படுத்திக் கொண்டவர் இவர்.

இத்தாலிய பாசிஸ சட்டங்களுக்குக் கட்டுப்படாமல் அங்கிருந்து தப்பி ஓடி பிரான்ஸில் தஞ்சம் அடைந்தவர் என்பதாலோ என்னவோ, அடக்குமுறைக்கு எதிரான படங்களாகவே இவருடைய படங்கள் இருக்கின்றன. ‘‘பொழுதுபோக்குப் படங்கள் நம் தரத்தைக் குறைப்பவை. வேகமான எடிட்டிங்கும், விதவிதமான ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ§ம் இருப்பதால் கமர்ஷியல் படங்கள் மிகவும் குழந்தைத்தனமானவையாகத் தெரிகின்றன. அவை நமக்கு எதையுமே சொல்வதில்லை’’ என்கிற பொன்டே கார்வோ, இந்த வருடம் அக்டோபர் மாதம், ரோம் நகரில் இறந்துபோனார்.

http://www.vikatan.com/

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

போஸ்ட் இன் தி மவுன்ட்டெய்ன்ஸ்

உங்கள் அப்பாவிடம் உங்களுக்குப் பிடிக்காத விஷயம் எது?

ஏதோ ஒரு விஷயமாவது இருக்கிறது எல்லோருக்கும். காரணம், குறிப்பிட்ட வயதுக்கு மேல் அப்பாவுடன் தனியாக இருப்பதும், அவருடன் நேரத்தைச் செலவிடுவதும் அரிது. இதனால், இருவருக்கும் இடையில் ஒரு முரண்பாடு எப்படியோ முளைத்துவிடுகிறது. இந்த முரண்பாடு எப்படிச் சரியாகிறது எனும் கதைதான், ‘

1980. அடர்ந்த மலைப் பிரதேசம். ஓர் இளைஞனின் குரல் ஒலிக்கத் துவங்குகிறது. ‘‘மலைப்பகுதியின் தபால்காரனாக என் வாழ்க்கை, முக்கியத்துவம் இல்லாத ஒரு காலைப் பொழுதில் துவங்கியது. முதன்முறையாக நான் வீட்டைவிட்டு வெளியே கிளம்புகிறேன் என்கிற கவலை அப்பாவிடம் இருந்தது. எனக்கும்கூட அது கவலை அளிப்பதாகவே இருந்தது’’ என்ற குரல் தேய, இளைஞனான மகன் வருகிறான்.

தபால்களை இடம்வாரியாக வரிசைப்படுத்திக் கட்டிவைத்துக்கொண்டு இருக்கும் அப்பா அவனிடம் பேசத் துவங்குகிறார்... ‘‘மலை மீது போய்த் திரும்பும் தூரம் மொத்தம் 230 மைல். 3 நாட்கள் ஆகும். இது உன்னோட முதல் நாள். அதனால் எப்படிப் போகணும்னு ஒரு மேப் தயாரிச்சிருக்கேன்’’ என்று வரைபடத்தைக் காட்டுகிறார். அதை வாங்கிக்கொண்டு மகன் கிளம்புகிறான்.

தபால்காரரான அப்பா தன்னுடன் எப்போதும் அழைத்துப்போகும் புட்டி என்கிற நாயையும் அன்று மகனுடன் போகச் சொல்கிறார். நாய் போக மறுத்து, அவருடனே நிற்கிறது. அப்பா ஒரு முடிவு செய்தவராக, தன் மகனுக்கு வழிகாட்ட தானே கிளம்புகிறார். இப்போது நாயும் அவர்களுடன் கிளம்புகிறது. அம்மாவிடம் விடைபெறுகிறான் மகன். தபால் பையைத் தூக்கிக்கொள்கிறான். அப்பா துணைக்கு வர, நாய் பாதை காட்டி முன்னே செல்ல, பனிப்புகை படர்ந்த நீண்ட மலைப் பாதைகளில் தொடங்குகிறது பயணம்.

நெடுந்தூரம் நடந்து ஓர் இடத்தில் இளைப்பாறுகிறார்கள். ‘‘களைச்சுப் போயிட்டியா?’’ என்று அப்பா மக னிடம் கேட்க, ‘‘இல்லை” என்று புன்ன கைக்கிறான். அப்பா வலியெடுக்கும் தன் மூட்டுகளைத் தடவிவிட்டுக் கொள்கிறார். கொண்டுவந்த தண் ணீரைத் தன் உள்ளங்கையில் ஊற்றி நாய்க்குக் குடிக்கக் கொடுக்கிறார்.

மீண்டும் தொடர்கிறது பயணம். ‘சிறு வயதில் அப்பா பெரும்பாலான நாட்கள் வீட்டுக்கு வருவதில்லை. என்னை அவர் அடித்ததே இல்லை. கண்டித்ததும் இல்லை. ஒரு மாதத் துக்கு ஒருமுறைதான் வீட்டுக்கு வருவார். அவரை நான் வேறு யாரோ போல்தான் உணர்ந்தேன். அவருக்கும் எனக்கும் நிறைய இடைவெளி இருந்தது. அவரை நான் ஒருமுறைகூட அப்பா என்று அழைத்தது இல்லை’ என்று நினைத்தபடியே நடக்கிறான் மகன்.

ஒரு கிராமத்தை அடைகிறார்கள். அங்கு யாருமே இல்லாததைக் கண்டு மகன் ஆச்சர்யம் தெரி விக்கிறான். ‘‘எல்லோரும் வேலைக்குப் போயிருப்பாங்க. நாம ஒண்ணும் விருந்தாளி இல்லையே, நம்மை வரவேற்க!’’ என்கிறார் அப்பா. காத்திருப்பதில் பொறுமை இழக்கும் மகன், ‘‘இன்னும் எவ்வளவு நேரம் இங்கேயே காத்திருப்பது?’’ என்று கேட்கிறான். கொஞ்ச நேரத்தில் அந்தக் கிராமத்தின் செயலாளர் ஒருவர் வருகிறார். அவருக்கு மகனை அறி முகப்படுத்துகிறார். அந்த ஊருக்கான செய்தித்தாள்களையும், கடிதங்களை யும் எடுத்துக் கொடுக்கிறான் மகன். கிராமச் செயலாளர், அப்பாவின் சேவையைப் புகழ்ந்து பேசுகிறார். அப்பாவை இவன் பெருமையுடன் பார்க்கிறான்.

அந்த ஊரிலிருந்து தபால்களை வாங்கிக்கொண்டு கிளம்பும்போது, மக்கள் திரண்டு நிற்கிறார்கள். ‘‘உன்னைப் பார்க்கணும்னுதான் வந்திருக்காங்க. வரவேற்கணும்னு கேட்டியே, அதான் வந்துட்டாங்க’’ என்று அப்பா சொல்ல, அவர்களைப் பார்த்துப் புன்னகைக்கிறான். ‘‘இது என் மகன். இனிமேல் நான் வர மாட்டேன். இவர்தான் உங்க புது போஸ்ட்மேன்!’’ என்கிறார். கிராமத்து மக்கள் புன்னகைக்கிறார்கள். அப்பா தன் சட்டைப் பையில் வைத்திருக்கும் இனிப்புகளைக் குழந்தைகளுக்குக் கொடுக்கிறார். இருவரும் கிளம்ப, அவர்கள் பார்வையிலிருந்து மறையும் வரை கிராமத்து மக்கள் பார்த்தபடி நின்று வழியனுப்புகிறார்கள். அங்கே அவருக்கு இருக்கும் அங்கீகாரத்தை நினைத்து மகன் பெருமைப்படுகிறான். இருவரும் அடுத்த கிராமத்தை நோக்கி நடக்கத் துவங்குகிறார்கள்.

மலைகளையும் இயற்கையையும் பார்த்துக்கொண்டே அப்பாவைப் பின் தொடர்கிறான் மகன். அம்மாவைப் பற்றி நினைத்துப் பார்க்கிறான். இந்த மலைக் கிராமத்தைச் சேர்ந்த அம்மா, ஒரு நாள் மழையில் கால் சுளுக்கிக் கொண்டு மலைப்பாதையில் மாட்டிக் கொண்டதையும், வழியில் தபால் கொடுக்க வந்த அப்பா அவளைக் காப்பாற்றியதையும், அவர்களுக்குள் முதல் பார்வையிலேயே காதல் வந்த தையும் அம்மா சொன்னதை நினைத்துப் பார்க்கிறான்.

வழியில் அப்பா ஒரு குறுக்குப் பாதையில் இறங்குகிறார். மலை யோரம் இருக்கும் அந்த வீட்டில் பார்வை இழந்த பாட்டி ஒருத்தி தனியாக இருக்கிறாள். அவளுக்கு வணக்கம் சொல்லித் தன் பையில் இருக்கும் கடிதத்தை அப்பா எடுக் கிறார். அவர் குரலைக் கேட்டதும் மகிழ்ச்சியடையும் பாட்டி, கடிதத்தை வாங்கிப் பிரிக்கிறாள். உள்ளிருக்கும் பணத்தை எடுத்துக்கொள்கிறாள். மகன் இதையெல்லாம் வியப்புடன் பார்க்கிறான். கடிதத்துடன் ஒரு வெற்றுத்தாள் இருக்கிறது. அதைக் கடிதம் என்று நினைத்து அப்பாவிடம் அவள் கொடுக்கிறாள். அப்பா அதை ஊரிலிருக்கும் அவளது பேரன் அன்புடன் எழுதியதைப் போலப் படித்துக் காட்டுகிறார். மகிழ்ச்சி அடையும் பாட்டியை மகன் பரிதாப மாகப் பார்க்கிறான். அவளிடம் தன் மகனை அறிமுகப்படுத்தும் அப்பா, மீதிக் கடிதத்தை இவன் படிப்பான் என்று சொல்ல, இவனும் வெற்றுத் தாளைக் கடிதமாகப் படிக்கிறான். பாட்டியிடம் விடைபெற்றுக்கொண்டு இருவரும் கிளம்புகிறார்கள். ‘இது போல இரண்டு வாரத்துக்கு ஒருமுறை கடிதம் கொடுத்துடு’’ என்கிறார் அப்பா.

வயல்வெளிகள் சூழ்ந்த, மலையின் மீதிருக்கும் சமவெளிக்கு வருகிறார் கள். ஓர் அழகிய இளம்பெண் அவர்களை வரவேற்கிறாள். சின்ன வயதிலிருந்து அவளைத் தனக்குத் தெரியும் என்கிற அப்பா, அவளிடம் தன் மகனை அறிமுகம் செய்கிறார். அன்று இரவு அந்த ஊரில் நடக்கும் திருவிழா விருந்தில் கலந்துகொள் கிறார்கள். மகனுக்கும் அந்தப் பெண்ணுக்கும் ஒரு நட்பு உருவா கிறது. மறுநாள் காலை அங்கிருந்து கிளம்புகிறார்கள். ‘‘இந்த ஊருக்கு வந்து இந்தப் பெண்ணைப் பார்க் கும்போதெல்லாம் உன் நினைவுதான் வரும். இருவரும் சந்தித்தால் நட்பு உருவாகும் என்று எனக்குள் தோன்றிக் கொண்டே இருக்கும்’’ என்கிறார் அப்பா.

அடுத்த ஊர் நோக்கிக் கிளம்புகிறார்கள். வழியில் இருக்கும் ஆற்றங்கரை மரத்தில் தொங்கும் தபால்பெட்டியை அப்பா திறக்கி றார். சில கடிதங்களில் ரூபாய் ஒட்டப்பட்டிருக் கிறது. ‘இப்படி இருந்தால் இந்தப் பணத்துக்கு ஸ்டாம்ப் வாங்கி ஒட்டுங்கள்’ என்று அர்த்தம் என்கிறார். மகன் தலையசைக்கிறான்.

வழியில் பாலம் இல்லாத ஒரு நதியைக் கடக்க வேண்டும். அப்பா வைத் தோளில் தூக்கிக்கொண்டு நீரில் நடக்கிறான் மகன். புட்டி முன் னால் நீந்திச் செல்கிறது. தன் மகனின் அன்பை நினைத்துக் கலங்குகிறார் அப்பா. கரையில் இறங்கிய தும், குளிர் காய்வதற்கான சுள்ளிகளைக் கவ்வி வருகிறது புட்டி. நெருப்பு மூட்டி, குளிர் காய்ந்துகொண்டு இருக்கும்போது, அப்பா அவன் பிறந்த நாளை நினைவுபடுத்திப் பேசு கிறார்... ‘‘நீ பிறக்கும்போது கூட நான் வெளியூரில்தான் இருந்தேன். அம்மா நீ பிறந்திருப்பதாகக் கடிதம் எழுதியிருந்தாள். எனக்குத் தாங்க முடியாத மகிழ்ச்சி. எத்தனையோ கடிதங்களை நான் கொடுத்திருக்கிறேன். ஆனால், எனக்கு வந்த கடிதம் அது ஒன்றுதான். அப்போதே, என் மதிய உணவு அலவன் ஸில் எல்லோருக்கும் விருந்து கொடுத்தேன்’’ என்று அப்பா சொல்ல, அவரது அன்பை நினைத்து நெகிழ்கிறான் மகன்.

‘அப்பாவுக்கு என்னைப் பிடிக்காது. அதனால்தான் எப்போதும் வெளியூரி லேயே இருக்கிறார் என்று நினைப்பேன். திருவிழாக் காலங்களில் நிறையப் பட்டாசுகள் வாங்கிக் கொண்டு வருவார். அதை எல்லாம் எவ்வளவு கஷ்டத் தில் வாங்கி வந்திருப்பார் என்பது இப்போதுதான் தெரிகிறது’ என்று உணர்கிறான்.

‘‘கிளம்புங்க அப்பா, நேரமாச்சு!’’ என்கிறான். ‘‘என்ன சொன்னே?’’ என்கி றார் அவர் பதற்றமும் பரவசமுமாக. ‘‘அப்பா, கிளம்புங்க! நேரமாச்சுன்னு சொன்னேன்’’ என்று பையைத் தூக்கிக் கொண்டு நடக்க, அப்பா அவனையே பார்க்கிறார். அருகில் படுத்திருக்கும் நாயி டம், ‘‘புட்டி கேட் டியா... கடைசியில என்னை அப்பான்னு சொல்லிட்டான்’’ என்கி றார் மகிழ்ச்சியாக!

அன்று இரவு வழியில் இருக்கும் ஒருவரின் வீட்டில் தங்கு கிறார்கள். அப்பாவும் மகனும் தங்கள் பாதங்களைச் சுடுநீரில் கழுவிக் கொண்டே பேசுகிறார்கள்... ‘‘இந்தக் கடினமான பாதையில் நாம் நடந்து செல்வது, மத்தவங்களுக்குக் கஷ்டமா தெரியலாம். ஆனா, வழியில் நாம் அருமையான மக்களைச் சந்திக்க முடியுது. அதன் மூலம் இந்த வேலை யில் நீ புது அர்த்தத்தைக் காண முடியும். அவர்களோட வாழ்க்கை முறை நமக்குப் புதுப் புது விஷயங்களைக் கத்துக் கொடுக்கும்’’ என்கிறார்.

‘‘அம்மாவுக்கு அடிக்கடி உடல்நலம் சரியில்லாமப் போகுதுப்பா. டாக்டர் கிட்டே போகச் சொன்னாலும் போறதில்லை. நீங்க அவங்க ளைக் கூட்டிட்டுப் போங்க’’ என்கிறான். சரியெனத் தலையசைக்கிறார் அப்பா. அன்று இரவு அயர்ந்து தூங்கும் தன் மகனைப் பெருமை யுடன் அருகில் அமர்ந்து பார்த்துக் கொண்டே இருக்கிறார்.

அடுத்த நாள் காலை மகன் எழுந்து, தன் அஞ்சல் பையை எடுத்துக்கொண்டு தனியாகக் கிளம்புகிறான். அம்மா அவன் கிளம் பிச் செல்வதைப் புன்ன கையுடன் பார்க் கிறாள். அப்பா வாச லில் வந்து பார்த் திருக்க, அவன் பின் னால் ஓடும் நாய் திரும்பி அப்பாவிடமே வருகிறது. அதைத் தடவிக் கொடுத்து ‘போ’ என்று அனுப் புகிறார். அது தூரத்தில் போய்க்கொண்டு இருக்கும் மகனின் பின்னால் ஓட, இருவரையும் பெருமையாகப் பார்க் கிறார் அப்பா.

நீண்ட மலைப் பாதை. முதுகில் கடிதப் பையைச் சுமந்தபடி அவன் நடந்து செல்ல, பெருகும் இசை யுடன் நிறைவடைகிறது படம்.

ஒரு பயணத்தின் மூலம் நம் மனதில் நிகழும் மாற்றங்களையும், இயல் பான மனிதர்களைச் சந்திப்பதன் மூலம் நமக்குள் நிகழும் நுணுக்கமான உணர்வுகளையும் தெளிவாகப் பதிவு செய்யும் படம் இது. மூட்டு வலியால் அயர்ந்து உட்கார்ந்திருக்கும்போது, கடிதங்கள் காற்றில் பறக்க, அதைப் பிடிப்பதற்காக அப்பா எழுந்து ஓடுகிறபோது அவருக்குள் இருக்கும் அர்ப்பணிப்பு உணர்வு நம்மை உத்வேகப்படுத்துகிறது.

மகன் அப்பாவைத் தூக்கிக்கொண்டு நீரில் நடக்கும் காட்சியில், சிறு வயதில் தன் மகனை அது போல் தூக்கிக்கொண்டு நடந்த காட்சி நினைவுக்கு வர, அவர் கண்கலங்கும் இடம் நம்மையும் நெகிழ வைக்கிறது. கடைசிக் காட்சியில் மகன் அயர்ந்து தூங்கும்போது, அப்பா அருகில் அமர்ந்து அவனை அன்புடன் பார்ப்பதும், தூக்கத்தில் அவன் காலைத் தன் மேல் போட்டதும் மகிழ்ச்சி அடைந்து அவ னைப் பற்றிய நினைவுகள் காட்சியாக விரிவதும் கவிதை.

மலையில் அடுத்தவரின் கடிதங்களைக் கொடுக்க கால் கடுக்க நடந்து செல்லும் தபால்காரரைப் போல, போன தலைமுறையில் வாழ்ந்தவர்கள் எந்தத் துறையைச் சார்ந்தவராக இருந்தாலும், செய்கிற வேலை யில் பணத்தைக் கடந்து ஓர் அன்பும் ஈடுபாடும் இருந்தது அவர்களுக்கு. ஆனால், பலனை எதிர் பார்த்தே இயங்குகிற சமகாலத்தில் அந்த ஈடு பாட்டையும் அர்ப்பணிப்பு உணர்வையும் நாம் எங்கு தவறவிட்டோம்? எப்படி அதைத் திரும்பப் பெறப் போகிறோம்?

‘செயற்கையில் மதிப்பில்லை!’

சீனாவின் தலைநகரான பீஜிங்கில் 1958&ல் பிறந்தார் ஜ்யான்கி ஹ்யூ சீனாவின் ஐந்தாம் தலைமுறை இயக்குநர்களில் முக்கியமானவராகக் கருதப்படும் இவர், திரைப்படத்தில் கலை இயக்குநராக இருந்து, பிறகு இயக்குநரானவர்.

‘That Postman, That man, That Dog’ என்ற கதையை அடிப்படையாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டது. சீனாவின் ஆஸ்கர் எனக் கருதப் படும் விருதான ‘சைனீஸ் கோல்டன் ரூஸ்டர்’ விருதில் நான்கு விருதுகளைப் பெற்ற இந்த சீன நாட்டுப் படம், 1999&ல் வெளியானது. மான்டிரின் மொழியில் எடுக்கப்பட்ட படம் இது.

ஜ்யான்கி ஹ்யூ, இதுவரை ஏழு படங்களை இயக்கியுள்ளார். அத்தனையும் சீனத்தின் மண் வாசனையை உலகம் நுகரக் கொடுத்தவை. ‘‘செயற்கையான பொழுதுபோக்குப் படங்களின் மீது எனக்கு எப்போதுமே மதிப்பில்லை. எளிமையான மனித உறவுகளும் அவற்றுக்குள்ளி ருக்கும் முரண்பாடுகளுமே என்னைக் கவர்கின்றன’’ என்ற இவர் இயற்கையைப் படம் பிடிப் பதில் ஆர்வமுடையவர். இந்தப் படத்தின் திரைக் கதையை எழுதியவர் இவரது மனைவி க்யூ ஷி.

கதையும் முக்கியம்; களமும் முக்கியம்!

சேவைப் பணியாளர்களைக் கிராமத்தில் கொண்டாடுவார்கள். பிரசவம் பார்க்க வருகிற மருத்துவத் தாதி, கிராமத்து டீச்சர் மாதிரி கொண் டாடப்படுகிற இன்னொரு நபர் தபால்காரர். காரணம், உறவுகளையும் உணர்வுகளையும் கொண்டுவந்து சேர்க்கிறவர் அவர்தான். பலருக்கும் செய்திகளைச் சுமந்து வருவதோடு, சிலருக்கு அவரே வாசித்துக் காட்டுவதால், அவர்களின் சந்தோஷங்களிலும் துன்பங்களிலும் ஒரு குடும்ப உறுப்பினர் போலப் பங்கேற்கிறார்.

உலகம் முழுக்க, நகரங்களுக்கு வெளியே கிராமங் கள்தோறும் எல்லோரது நேசத்துக்கும் தேடுதலுக்கும் உரிய நபராக இருக்கிற தபால்காரரை வைத்து மிக இயல்பாக இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் ஜ்யான்கி ஹ்யூ. திரைக்கதையில் கொஞ்சம் தவறியிருந்தாலும் டாக்குமென்ட்டரி ஆகியிருக்கும் வாய்ப்புள்ள படம். அதனால்தான் விஷ§வலாகச் செய்வதற்கு வாய்ப்புள்ள மலைப்பாதைகளையும் அதை ஒட்டிய பகுதிகளையும் தேர்ந்தெடுத்துச் செய்திருக்கிறார். ஒரு சினிமாவுக்குத் திரைக்கதை எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியம் கதை நிகழும் களமும் என்பதை இதன் மூலம் உணர முடியும்.

நம் உணர்வுகளை மீட்டி, ஒரு புது அனுபவமாக நமக்குள் விரிகிறது இந்தப் படம்.

& இயக்குநர் ராதாமோகன்

vikatan.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.