Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெரும்பான்மையின வாதம் மஹிந்தவின் புதிய ஆயுதம்

Featured Replies

பெரும்பான்மையின வாதம் மஹிந்தவின் புதிய ஆயுதம்

m-a6e044ae6c6f386017649ae31e93029a7f8e4741.jpg

 

அமெ­ரிக்க ஜனா­தி­பதித் தேர்­தலில் பெரும்­பான்­மை­யி­ன­வா­தத்தை முன்­னி­றுத்தி டொனால்ட் ட்ரம்ப் பெற்ற வெற்­றியின் தாக்கம், இலங்கை அர­சி­யலில் எதி­ரொ­லிக்கத் தொடங்கி விட்­டது.

அண்­மைய நாட்­க­ளாக இலங்­கையில் பெரும்­பான்­மை­யி­ன­வா­தத்தை முன்­னி­றுத்­திய கருத்­துக்­களும், செயற்­பா­டு­களும், தீவி­ர­மாக முன்­னெ­டுக்­கப்­ப­டு­வதைக் காண­மு­டி­கி­றது.

கண்­டியில் பொது பல­சேனா நடத்­திய பேர­ணியில் எதி­ரொ­லித்த இன­வாதக் கருத்­துக்­க­ளிலும் சரி, கொழும்பில் முஸ்­லிம்­களின் இரத்­த­ஆறு ஓடும் என்று ஞான­சார தேரர் விடுத்த எச்­ச­ரிக்­கை­யிலும் சரி, சிங்­களப் பேரி­ன­வா­தத்தின் கோர­முகம் தான் பிர­தி­ப­லித்­தது.

இது போதா­தென்று, முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவும் கூட, வெலி ­ஓயா என்று பெயர் மாற்றம் செய்­யப்­பட்­டுள்ள மண­லாறில், கடந்­த­வாரம் வெளி­யிட்ட கருத்து சிங்­கள மக்­களைத் தூண்­டி­ விடும் தன்­மையைக் கொண்­ட­தாக இருக்­கி­றது.

இப்­போது, மொன­ர­வெவ என்று அழைக்­கப்­படும் மயி­லன்­கு­ளத்தில் குடி­யேற்­றப்­பட்­டுள்ள சிங்­கள மக்­களைப் பார்த்து அவர், நீங்கள் இப்­போது சிறு­பான்­மை­யி­ன­ராக மாற்­றப்­பட்­டுள்­ளீர்கள் என்று கூறி­யி­ருக்­கிறார்.

சிங்­கள மக்­களை சிறு­பான்­மை­யி­ன­ராக மாற்றும் சதியை அர­சாங்கம் முன்­னெ­டுத்­தி­ருப்­ப­தாக அவர் இங்கு கருத்து வெளி­யிட்­டி­ருக்­கிறார்.

இது, தற்­போ­தைய அர­சாங்­கத்தின் மீது குற்­றச்­சாட்டை வீசு­கின்ற செயல் மாத்­தி­ர­மல்ல, சிங்­கள மக்­களை உணர்ச்­சி­ம­யப்­ப­டுத்தும் தந்­தி­ரமும் கூட.

சிங்­களப் பெரும்­பான்­மை­யினப் பிர­தி­நி­தி­களைக் கொண்ட ஒரு அர­சாங்கம், சிங்­கள மக்­களை சிறு­பான்­மை­யி­ன­ராக்­கு­வ­தற்குச் சதி செய்­கி­றது என்­பது எப்­ப­டிப்­பட்ட ஒரு விட­ய­மாக இருக்கும்.

அவ்­வா­றான எந்­த­வொரு காரி­யத்­தையும், எந்­த­வொரு அர­சாங்­கமும் செய்­யாது. ஏனென்றால், அப்­ப­டி­யான செயலில் ஈடு­படும் எந்த அர­சாங்­கத்­தி­னாலும் தனது பத­விக்­கா­லத்தை தொடர முடி­யாமல் போகும், மீண்டும் ஆட்­சிக்கு வரவும் முடி­யாது.

அதை­விட, நாட்டின் சனத்­தொ­கையில் கிட்­டத்­தட்ட மூன்றில் இரண்டு பங்­குக் கும் மேலாக சிங்­கள மக்கள் வசிக்­கின்­ற­போது அவர்­களை சிறு­பான்­மை­யி­ன­ராக்­கு­வது என்­பது அறி­வு­பூர்­வ­மான வகை யில் சாத்­தி­ய­மான விட­ய­மல்ல.

அவ்­வா­றான ஒரு திட்­டத்தை யாரா­வது செயற்­ப­டுத்த வேண்­டு­மானால், சிங்­கள மக்கள் பெரும் எண்­ணிக்­கையில்- இலட்­சக்­க­ணக்கில் கொலை செய்­யப்­பட வேண்டும், அவர்­களின் சந்­ததி வளர்ச்­சி யைத் தடுக்க வேண்டும். இந்த இரண் டின் மூலமும் கூட, ஒரு அர­சாங்கம் தமது பத­விக்­கா­லத்­துக்குள் சிங்­க­ள­வர்­களை சிறு­பான்­மை­யி­ன­ராக்கி விட முடி­யாது.

பெரும்­பான்­மை­யி­னரைச் சிறு­பான்­மை­யி­ன­ராக்கும் திட்­டத்தை, நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு பல தலை­மு­றைகள்- பல நூற்­றாண்­டுகள் முயற்­சிக்க வேண்­டி­யி­ருக்கும்.

ஆனால், மஹிந்த ராஜபக் ஷவோ, இப்­ப­டி­யொரு நீண்­ட­கால செயல்­மு­றையை அற்ப அர­சியல் நல­னுக்­காக மிக எளி­தாக செயல்­போல எடுத்துக் கூறி­யி­ருக்­கிறார்.

சிங்­கள மக்­களை சிறு­பான்­மை­யி­ன­ராக்கும் செயற்­றிட்­டங்­களை இப்­போ­தைய நவீன உலகில் நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு ஒரு­போதும் சாத்­தி­ய­மில்லை. ஏனென்றால், மனித உரி­மைகள், அடிப்­படை உரி­மைகள், இனப்­ப­டு­கொலை, இனச்­சுத்­தி­க­ரிப்பு என்று ஏரா­ள­மான சட்ட நடை­மு­றைகள் இப்­போது அறி­மு­க­மா­கி­யி­ருக்­கின்­றன.

இப்­ப­டிப்­பட்ட நிலையில், மஹிந்த ராஜ பக் ஷ மண­லாறில் உள்ள சிங்­கள மக்­களைப் பார்த்து, சிங்­க­ள­வர்­களை சிறு­பான்­மை­யி­ன­ராக்க அர­சாங்கம் முனை­வ­தா­கவும், வடக்கில் நீங்கள் இப்­போது சிறு­பான்­மை­யி­ன­ராக்­கப்­பட்டு விட்­டீர்கள் என்றும் கூறி­யி­ருக்­கிறார்.

வடக்கில் சிங்­க­ள­வர்கள் எந்தக் காலத்­திலும் பெரும்­பான்­மை­யி­ன­ராக இருந்த வர­லாறு இல்லை.

மண­லாறு என்ற தமி­ழரின் பூர்­வீக நிலத்தில் 1980களின் தொடக்­கத்தில் ஜே.ஆர். அர­சாங்கம் சிங்­க­ள­வர்­களைக் குடி­யேற்­றிய பின்னர், அது வெலி­ஓ­யா­வாக மாறி­யது.

மொன­ர­வெவ என்று இப்­போது சிங் கள மக்கள் குடி­யி­ருக்கும் பகுதி முன்னர் மயி­லன்­குளம் என்ற தமிழ்ப் பெயரில் இருந்­தது. அங்கு புதிய விகா­ரையைக் கட்டி, சிங்­கள மக்­களைக் குடி­யேற்றி விட்டால், அவர்­க­ளது பூர்­வீக வாழ்­வி­ட­மாக அது மாறி­விட முடி­யுமா?

வடக்கில் சிங்­க­ள­வர்கள் சிறு­பான்­மை­யி­னர்தான் என்­பதில் எந்த சந்­தே­கமும் இல்லை. அதனை மஹிந்த ராஜபக் ஷ எதற்­காகக் கூற வேண்டும். இன­வாதக் கண்­ணோட்­டத்தில் அந்தக் கருத்தை திணிக்க முனைந்­தி­ருக்­கிறார்.

ஒட்­டு­மொத்த இலங்­கை­யிலும் சிறு­பான்­மை­யி­ன­ராக்­கப்­ப­டு­வ­தான கருத்­தையே அவர் ஏற்­ப­டுத்த முனைந்­தி­ருக்­கிறார்.

தமிழ், முஸ்லிம் மக்­களால் தான் தோற்­க­டிக்­கப்­பட்டேன் என்­பதை பகி­ரங்­க­மாக கூறி­யவர் மஹிந்த ராஜபக் ஷ. அவர் இப் ­போது சிங்­கள மக்­களைக் குறி­வைத்து அவர்­களின் வாக்­கு­களைக் குறி­வைத்து செயற்­படத் தொடங்­கி­யி­ருக்­கிறார்.

அவ­ரது அடிப்­படை நோக்கம், தூய பெரும்­பான்­மை­யி­ன­வாதம் என்று குறிப்­பி­டலாம். தனிப் பெரும்­பான்­மை­யின மக்­களின் ஆத­ர­வுடன் அதி­கா­ரத்தைப் பிடிப்­பது அவ­ரது இலக்­கா­காகத் தெரி­கி­றது.

அமெ­ரிக்­காவில், பெரும்­பான்­மை­யி­ன­ரான வெள்­ளை­யின மக்­களின் ஆத­ர­வு டன் டொனால்ட் ட்ரம்ப் எப்­படி ஆட்­சி யைப் பிடித்­தாரோ அது போலத்தான், மஹிந்­தவும் சிங்­கள மக்­களின் உணர்­வு ­களைத் தட்­டி­யெ­ழுப்பி, தனியே அவர்­க ளின் பலத்­துடன் அதி­கா­ரத்தைப் பிடிக்க முனை­கிறார்.

ட்ரம்பின் வெற்­றிக்குப் பின்னர், மஹிந்த ராஜபக் ஷவின் தற்­போ­தைய ஆலோ­ச­கரும், இலங்­கையின் முன்னாள் இரா­ஜ­தந்­தி­ரி­யு­மான கலா­நிதி தயான் ஜய­தி­லக, அமெ­ரிக்கத் தேர்­தலை பெரும்­பான்­மை­யின மக்கள் ஒரு பாட­மாகக் கொள்ள வேண்­டு­மென்று கூறி­யி­ருந்தார்.

அதே கருத்தை, முன்னாள் பாது­காப்புச் செயலர் கோத்­தா­பய ராஜபக் ஷவும் வலி­யு­றுத்­தி­யி­ருந்தார்.

ஆக, மஹிந்த ராஜபக் ஷ தரப்பு, சிறு­பான்­மை­யின மக்­களின் ஆத­ரவை ஒதுக்கித் தள்ளி விட்டு, தனித்துப் பெரும்­பான்­மை­யின மக்­களின் ஆத­ர­வுடன் அதி­கா­ரத்தைப் பெறு­வ­தற்குத் திட்­ட­மிட்­டி­ருக்­கி­றது என்றே கொள்ள வேண்­டி­யி­ருக்­கி­றது.

இந்த திட்­டத்தை அவர்கள் நிறை­வேற்ற வேண்­டு­மானால், இலங்­கையில் இன­வாதப் பிர­சா­ரங்கள் உச்­ச­நி­லையை அடைய வேண்டும். இனங்­க­ளுக்­கி­டையில் பகைமைநிலை தோற்­று­விக்­கப்­பட வேண்டும்.

பெரும்­பான்­மை­யின மக்­க­ளுக்கும் சிறு­பான்­மை­யி­னங்­க­ளுக்கும் இடையில் ஒரு கொதி நிலை காணப்­பட வேண்டும். உணர்­வு­பூர்­வ­மான அந்தக் கொதி­நி­லை­யி­லி­ருந்­துதான், அதி­கா­ரத்­துக்­கான ஆணை கிடைக்கும் என்று ம ஹிந்த ராஜபக் ஷ தரப்பு வலு­வாக நம்பத் தொடங்­கி­யி­ருக்­கி­றது.

பெரும்­பான்­மை­யி­ன­வா­தத்தின் ஊடாக அர­சியல் அதி­கா­ரத்தைக் கைப்­பற்றும் முயற்­சிக்­காக, சிறு­பான்­மை­யி­னங்கள் பலி­யா­டு­க­ளாக மாற்­றப்­ப­டு­கின்ற நிலை உரு­வாக்­கப்­பட்டு வரு­கி­றது.

இந்தச் சூழலை, ஆபத்­தான ஒரு நிலைக்குள் இலங்கைத் தீவு சிக்கிக் கொள்ளப் போவ­தற்­கான முன்­ன­றி­விப்­பா­கவும் கருத முடியும்.

ஏனென்றால், இன­வா­தமே இந்த நாட்டைச் சீர­ழித்­தது, தமி­ழர்கள் இன­வாத நோக்கில் அடக்கி ஒடுக்­கப்­பட்டு நசுக்­கப்­பட்­டதன் விளை­வா­கவே போர் வெடித்­தது.

மூன்று தசாப்­த­காலப் போர் நாட்டை குட்டிச் சுவ­ராக்கி விட்­டுத்தான் ஓய்ந்து போயி­ருக்­கி­றது.

போருக்குப் பின்னர், நிலை­யான அமை­தி யைக் கட்­டி­யெ­ழுப்

பும் வாய்ப்­பி­ருந்­த ­போதும், மஹிந்த

ராஜபக் ஷ அர­ சாங்கம் அதற்­கான கத­வு­க ளைத் திறப்­ப­தற்குப் பதி­லாக, போர் வெற்றி மாயையை சிங்­கள மக்கள் மத்­தியில் திணித்து, அர­சியல் நலன்­களை அறு­வடை செய்­வ­தி­லேயே அக்­கறை செலுத்­தி­யது.

அதன் விளை­வாக, சிங்­கள மக்கள் கூட வெறுத்துப் போகும் நிலை ஏற்­பட்­டது. அதனால் ஆட்­சி­மாற்­றமும் சாத்­தி­ய­மா­னது.

இப்­போது, செய்த தவ­று­களை உணர்ந்து விட்டோம், எங்­க­ளுக்கு இன்­னொரு சந்­தர்ப்பம் தாருங்கள் என்று புதி­ய­தொரு கட்­சியின் மூலம், சிங்­கள மக்­களை நெருங்கத் தொடங்­கி­யுள்­ளது ராஜ­பக் ஷ குடும்பம். தூய இன­வாதச் சிந்­த­னைக்­கு­லிலிருந்து கொண்டு, அதி­கா­ரத்தைக் கைப்­பற்­று­வ­தற்­காக- தெளி­வான திட்­டங்­க­ளுடன் தான் இந்த முயற்சி முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது. 

இலங்­கையில் யாரெல்லாம் வெளிப்­ப­டை­யாக சிங்­கள இன­வா­தத்தை கக்­கு­கி­றார்­களோ, அவர்­க­ளெல்­லோரும் இப்­போது, ஒன்­றாக நிற்­கி­றார்கள்.

சிங்­கள இனம் ஆபத்­தி­லி­ருக்­கி­றது, அழிக்­கப்­படப் போகி­றது, அடி­மைப்­படப் போகி­றது என்ற பீதி­யூட்டும் கருத்­துக்கள் பரப்­பப்­பட்டு, சிங்­கள மக்­களின் இரத்­தத்­துக்கு கொதிப்­பூட்­டு­கி­றார்கள்.

ம ஹிந்த ராஜபக் ஷ, மணலாறில் செய்யத் தொடங்கியுள்ளது அதனைத் தான்.

மட்டக்களப்புக்கு அண்மையில் மகிந்த ராஜபக்ச சென்ற போது, மங்களராமய விகாரைக்குச் சென்றிருந்தார். அதற்குப் பின்னர் தான் அந்த விகாரையின் விகாராதிபதி, தமிழர்களைத் தரக்குறைவாக பேசி, இனவாதக் கருத்துக்களை வெளியிட்டார்.

இப்போது மஹிந்த ராஜபக் ஷ மணலாறுக்குச் சென்று இனவாதம் பேசியிருக்கிறார். முல்லைத்தீவு, வவுனியா மாவட்டங்களின் தமிழர் நிலங்களை விழுங்கி, உருவானதே மணலாறில் உள்ள சிங்களக் குடியேற்றங்கள்.

அங்குள்ள சிங்கள மக்களை மஹிந்த ராஜபக் ஷ உசுப்பி விட்டுள்ளதன் விளைவு என்னவாக இருக்கும் என்பது வரும் நாட்களிலோ வாரங்களிலோ தெரியவரக்கூடும்.

ஆட்சியை இழந்த பின்னர், பெரும்பான்மையினவாதத்தை முன்னிறுத்தி அரசியல் செய்யத் தொடங்கிய மஹிந்தவுக்கு அமெரிக்கத் தேர்தல் முடிவு இன்னும், உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது என்பதை தான் மணலாற்றில் அவர் நிகழ்த்திய உரை வெளிப்படுத்தி நிற்கிறது.

http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-11-27#page-6

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.