Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விளையாட்டு பொருட்களால் ‘புற்றுநோய் வரும்’

Featured Replies

article_1494562736-qas.jpg

தரப்படுத்தப்படாத, கட்டுப்படுத்தப்படாத நச்சுப் பிளாஸ்டிக் விளையாட்டுப் பொருட்களால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் ஏற்படுவதால் பெற்றோர் இது குறித்து அவதானமாக இருக்குமாறு நுகர்வோர் உரிமைகள் பாதுகாக்கும் தேசிய அமைப்பின் தலைவர் ரஞ்சித் விதானகே எச்சரிக்கை விடுத்துள்ளார்.   

தற்போது வெளிநாடுகளில் இருந்து பிளாஸ்டிக் விளையாட்டுப் பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவது அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. இவ்வாறு இறக்குமதி செய்யப்படும் விளையாட்டுப் பொருட்கள், எந்தவொரு தரக்கட்டுபாடு அற்ற விதத்தில் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவ்வாறான விளையாட்டுப்பொருட்களால் புற்றுறோய் ஏற்படும் அபாயம் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.   

“இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யும் பொருட்களுக்கு பல நாடுகள் பல்வேறு சான்றிதழ்களை கோரும் நிலையில், இலங்கையானது வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் இவ்வாறான பொருட்களுக்கு எவ்வித தரச் சான்றிதழ்களையும் கோருவதில்லை” என, ஆடைத் தொழிற்சாலைகள் சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் ரொஹான் மாசக்கோரள தெரிவித்துள்ளார்.   

எனவே, இதனைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ள வெளிநாட்டு நிறுவனங்கள், எவ்விதமான இடையூறுகளும் இன்றி, இலங்கைக்கு இவ்வாறான பொருட்களை இறக்குமதி செய்கிறது. அதாவது, எந்த குப்பையையும் இறக்குமதி செய்கிறது.   

இவ்வாறான பொருட்களில் உடல் நலத்துக்கு தீங்கான பொருட்கள் கலப்படம் செய்து இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.   

இதேவேளை, வலி நிவாரணிகளால் மாரடைப்பு ஏற்படும் அபாயம் ஏற்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.   
குறித்த வலி நிவாரணி மாத்திரைகளை உட்கொள்ளத் தொடங்கும் 30 நாட்களுக்குள் இந்நோய்க்கான அறிகுறி தென்படும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.   

எனினும், இந்த ஆய்வுகள் 100 சதவீதம் உண்மையில்லை என்றும்,இதற்கு ஏனைய காரணிகளும் அடங்குவதாக வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.  

http://www.tamilmirror.lk/196475/வ-ள-ய-ட-ட-ப-ர-ட-கள-ல-ப-ற-ற-ந-ய-வர-ம-

இந்தியப் பொருளாதார அபிவிருத்தியின் இலாபத்தை, இலங்கையும் பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலாள பொருளாதார ஒத்துழைப்பு, 2.6 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளதென்றும் கூறினார்.

சர்வதேச வெசாக் உற்சவத்தின் ஆரம்ப நிகழ்வு, கொழும்பில் தற்போது இடம்பெற்று வருகின்ற நிலையில், அதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்துரைத்த பிரதமர் மோடி, 'அசோக்க சாம்ராஜ்ஜியத்தின் மிஹிந்து தேரரைப் போன்றே, சங்கமித்தா தேர்த்தியும் இலங்கைக்கு பௌத்தத்தைக் கொண்டுவந்தனர். இதற்கமைய, பௌத்தத்தின் கேந்திர நிலையமாக, இலங்கை தற்போது விளங்குகின்றது' என்றார்.

'பின்னர், இலங்கையின் அநகாரிக்க தர்மபால அவர்கள், தர்மத்தின் தகவலை எடுத்துக்கொண்டு இந்தியாவுக்குச் சென்றார்' என்றும் அவர் குறிப்பிட்டார்.

'இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு, நூற்றுக்கணக்காண ஆண்டுகளைக் கடந்ததாகும். இந்நிலையில், இந்தியாவின் விமானச்சேவை நிறுவனம், கொழும்புக்கும் இந்தியாவின் வாரணாசிக்கும் இடையிலான விமானப் போக்குவரத்தை, விரைவில் ஆரம்பிக்கவுள்ளது.

'அதன் மூலம், பௌத்த மற்றும் ஹிந்து மதங்களைச் சேர்ந்த சகோதர, சகோதரிகள், பெரும் பயனை அடைய முடியும்' என, இந்தியப் பிரதமர் மேலும் கூறினார்.

http://www.tamilmirror.lk/196488

Edited by Athavan CH

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.