Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு கிழக்கு இணைப்பு அவசியம்தானா?

Featured Replies

புதிய அரசியலமைப்பில் தமிழ் மக்காளால் வைக்கப்பட்ட இரண்டு முக்கிய கோரிக்கைகளில் இணைந்த வடக்கு கிழக்கு மாகாணம் என்பது ஒன்று. தமிழ் மக்களுக்கு இவ்விணைப்பு அவசியம்தானா என ஆராய்வதே இப் பந்தியின் நோக்கமாகும். நான் அறிந்தவரையில் தூர நோக்குடன் சிந்தித்த தலைவர்களில் தந்தை செல்வா போல் ஒரு சிறந்த தலைவரை  இதுவரையில் தமிழ் தலைவர்களில் நான் காணவில்லை. 1970ம் ஆண்டு தேர்தல் வெற்றியின் பின் கச்சேரியின் முன் பேசும்பொழுது கடவுள்தான் தமிழ் மக்களை காப்பேற்றவேண்டும் என்றார் இதில் எவளவு அர்த்தம் உண்டென்பதை கடந்த 47 வருடங்களாக கண்டுகொண்டிருக்கிறோம். அத்துடன் 1949ம் ஆண்டு இந்திய வம்சாவழியினரின் வாக்குகள் பறிக்கப்பட்டபொழுது இன்று அவர்களுக்கு நடந்தது நாளை நமக்கு என்று கூறியதுடன்  தமிழ்மக்களை காப்பேற்ற வேண்டுமானால் வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி ஆட்சியே ஒரே வழி என்ற கொள்கையுடன் தமிழரசுக்கட்சியையும் தொடங்கினார்.

1949ம் ஆண்டில் வடக்கு கிழக்கு இணைப்பு சாத்தியப்பாடாக இருந்தது உண்மைதான் காரணம் அந்த நேரத்தில் தமிழ் பேசும் மக்கள் எல்லோரும் தமிழர்களாக கருதப்பட்டார்கள்.ஆனாலும் தந்தை செல்வாவின் திட்டப்படி இணைந்த வடகிழக்கில் தமிழர்களுக்கு ஒரு மாநிலமும் முஸ்லீம்களுக்கு ஒரு மாநிலமுமாக இரண்டு மாநிலமும் மற்றும் மத்திய மாகாணம், தென்மாகாணம், வடமத்தியமாகாணமுமாக ஐந்து மாகாணங்கள் உருவாகவேண்டுமென்பதுதான். இதைத்தான் தந்தை செல்வாவின் தலையிலே ஐந்து முள் வைத்த கீரிடம் வைத்து டெலிமிரர் பத்திரிகை கேலிச்சித்திரம் வரைந்திருந்தது. வடகிழக்கு மாகாணங்களில் தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்குமாக இரண்டு மாநிலம் உருவாவதை திரு அஷ்ர்ப் அவர்களும் ஏற்றுக்கொண்டிருந்தார்.

1956ம் ஆண்டு தேர்தலில் தமிழ் பேசும் முஸ்லீம்களாகிய திரு காரியப்பர் மற்றும் திரு முஸ்தப்பா ஆகியோர் தமிழரசுக்கட்சியில் போட்டியிட்டு வெற்றிபெற்று பின் கட்சி மாறினார்கள் என்பது சரித்திரம். இப்படியான நிகழ்ச்சிகள் தமிழ் பேசும் முஸ்லீம் மக்களுக்கும் முஸ்லீம் அல்லாத தமிழர்களுக்குமிடையில் நம்பிக்கையீனத்தையுண்டாக்கியது. அதன் பின் தமிழ் பேசும் முஸ்லீம் தலைவர் திரு அஸ்ரப் அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட முஸ்லீம் ஐக்கிய விடுதலை முன்னனி தந்தை செல்வாவால் ஆரம்பிக்கப்பட்ட தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியுடன் கூட்டு சேர்ந்து 1977 தேர்தலை சந்தித்தது ஆனாலும் திரு அஷ்ரப்பால் வெற்றிபெறமுடியவில்லை அத்துடன் அவரது கட்சிசார்பில் போட்டியிட்ட யாரும் வெற்றிபெறவில்லை. இது தமிழ் பேசும் முஸ்லீம் மக்களுக்கும் முஸ்லீம் அல்லாத தமிழர்களுக்குமிடையில் உள்ள விரிசலை எடுத்துக்காட்டியது. தமிழர்களிடதில் ஒரு மரவு உண்டு அதாவது சகோதர சகோதரிகளுக்கு பிறக்கும் சிறு பிள்ளைகளை இன்னாரை இன்னாருக்கு திருமணம் செய்துவைப்பதென முடிவு செய்துவிடுவார்கள். அந்த பிள்ளைகள் வளர்ந்துவரும் பொழுது பிள்ளைகளின் விருப்பு வெறுப்போ  குணாதிசயங்களோ அறியாது பெரியோர்கள் முடிவு செய்தார்கள் என்ற ஒரே காரணத்துக்காக திருமணம் செய்துவைத்து பின் பிரிவில் முடிந்ததை எங்கள் வாழ்நாட்களில் கண்டிருக்கிறோம். இதேபோல்தான் 1949ம் ஆண்டு வடக்கு கிழக்கு இணைப்பு வேண்டுமென கேட்டதற்காக இண்றய காலகட்டத்தில் வடக்கு கிழக்கு இணைப்பின் மூலம் தமிழர்களும் தமிழ்பேசும் முஸ்லீம் மக்களும் சேர்ந்து வாழமுடியும் என நினைப்பது தவறு, சேர்ந்துவாழமுடியாது என்பதே எனது வாதம்.

1881ம் ஆண்டு குடிசனமதிப்பீட்டின் படி கிழக்கு மாகாணத்தில் 75,318(58.96%) தமிழ்மக்களும் 43,001(33.66%) முஸ்லீம் மக்களும் 5947(4.66%) சிங்கள மக்களும் வசித்துவந்தார்கள். சற்று ஆயுதபோராட்டத்துக்கு முன் 1981ம் ஆண்டு குடிசனமதிப்பீட்டின் படி கிழக்கு மாகாணத்தில் 410,156(42.06%) தமிழ்மக்களும், 315,436(37.64%) முஸ்லீம் மக்களும் 243,701(21.64%) சிங்கள மக்களும் வசித்துவந்தார்கள். சற்று ஆயுதபோராட்டத்துக்கு பின் 2012ம் ஆண்டு குடிசனமதிப்பீட்டின் படி கிழக்கு மாகாணத்தில் 617,295(39.79%) தமிழ்மக்களும், 575,936(36.72%) முஸ்லீம் மக்களும் 359,136(23.15%) சிங்கள மக்களும் வசித்துவந்தார்கள் என்பது தரவுகள். போர்க்காலத்தில் நடந்தவற்றை வைத்துக்கொண்டு கிழக்கு மாகாணம் வடக்கு மாகாணத்துடன் இணைவதை முஸ்லீம் மக்கள் எதிக்கின்றார்கள் அப்படியானால் மேற்கூறிய தரவுகளிலிருந்து முஸ்லீம் அல்லாத தமிழ் மக்கள் கிழக்கில் சிறுபாண்மையினர் என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும்.எனவே இதற்கு சிறந்த தீர்வு தந்தை செல்வா கூறியது போல் இணைந்த வடகிழக்கில் முஸ்லீம் மக்கள் பெருபாண்மையாக வாழும் பகுதிகளைக் கொண்ட ஒரு அலகு உருவாக்கப்படவேண்டும். இதற்கு ஆதரவாக  மேலும் பல பின்வரும்  காரணங்களை உங்கள் முன் வைக்கின்றேன்.

1.   முஸ்லீம் மக்கள் மார்க்கத்தை முன்னிறுத்தி வாழ்பவர்கள் மற்றும் அரசியல் செய்பவர்கள் நாங்கள் (இங்கே நாங்கள் என்பது முஸ்லீம் அல்லாத தமிழர்கள்) மொழியையும் உரிமையையும் முன்னிறுத்தி வாழ்பவர்கள். ஆனபடியால் இவ்விரு சமூகமும் சேர்ந்து அரசியல் செய்வது  முடியாத காரியம்,

 

2.    வடக்கு கிழக்கு இணைந்தால் சில கூற முடியாத காரணங்காளால் 50-75 வருடங்களில் முஸ்லீம் அல்லாத தமிழ் மக்கள் சிறுபாண்மை நிலையை அடையும் இதற்கு சான்றாக 1881 இலிருந்து 1981 வரையான குடிசனமதிப்பீட்டின்படி முஸ்லீம் மக்கள் 33.66% இலிருந்து 37.64% மாக கூடியும் நாங்கள் 58.96% இலிருந்து 42.06% மாக குறைந்திருக்கின்றோம். 1981 இலிருந்து 2012 வரையான காலப்பகுதியில் இடப்பெயர்வுகள் நடைபெற்றதால் குடிசனமதிப்பீட்டு தரவை கவணத்தில் கொள்ளவில்லை.

 

3.   முஸ்லீம் அரசியல் கட்சிகள் எப்பொழுதும் பதவி ஆசை பிடித்தவர்கள் ஆனால் முஸ்லீம் அல்லாத தமிழ் மக்களாகிய நாங்கள் பதவிக்காக ஆசைப்பாடதவர்கள் நாங்கள் உரிமைக்காக போராடுபவர்கள் 1956ம் ஆண்டிலிருந்து இன்றுவரை தமிழரசுக்கட்சி எத்தனையோ அமைச்சுபதவிகளை பெற்றிருக்கலாம் ஆனால் ஒரே ஒரு முறை மட்டும்தான் 1965ல் திரு டட்லி சேனநாயக்கா அமைச்சரவையில் செனட்டர் திரு திருச்செல்வம் அவர்களை தந்தை செல்வா  அமைச்சராக்கினார் காரணம் அமைச்சரவையில் என்ன நடக்கிறது என்பதை அறிவதற்காக மட்டுமே.

 

 

4.   வடக்கு கிழக்கு இணைந்தால் தமிழில் செய்யவேண்டிய அரசாங்க உத்தியோகங்கள் எல்லாம் முஸ்லீம் மக்களுக்கே சென்றடையும் காரணம் தேசிய கட்சிகளிலுள்ள முஸ்லீம் அமைச்சர்களின் உதவி அவர்களுக்குண்டு. இதனால் பாதிக்கப்படப்போவது நாங்கள்தான் உதாரணமாக வடக்கு கிழக்கு பகுதிகளில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்ட நிதிகளில் பெரும்பாலனவை வட கிழக்கு மக்கள் என்ற போர்வையில் முஸ்லீம் மற்றும் சிங்கள மக்களுக்கே சென்றடைந்தன.

 

5.   வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே எத்தனையோ பள்ளிவாசல்கள் உடைத்தபின்பும் அப்பகுதிகளிலுள முஸ்லீம் மக்கள் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழமுடுடியுமென்றால் எங்களுடன் சேர்ந்து வாழ்வதில் அவர்களுக்கு என்ன பிரச்சினையிருக்கிறது என்பது எனக்கு புரியவில்லை.வீம்புக்காகவும் கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளவேண்டும் என்பதற்காகவுமே வடக்கு கிழக்கை பிரிக்க முற்படுகின்றார்கள். அவர்களது பகுதிகளை அவர்களுக்கு கொடுத்துவிடவேண்டும் அப்பொழுதான் தமிழர்களின் அருமை முஸ்லீம் மக்களுக்கு தெரியவரும்.

எங்களிடம் ஒரு பழமொழியுண்டு அதாவது இரண்டாவது மருமகன் வந்தால்தான் மூத்த மருமனின் அருமை தெரியுமென்பார்கள். இப்பொழுதும் பாருங்கள் முஸ்லீம் மக்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சினை வந்தவுடன் உடனே தமிழ் தேசிய கூட்டமைப்பை உதவிக்கு அழைப்பார்கள்.

 

6.    சமஸ்டி ஆட்சியில் நிலத்தொடர்பு அல்லாத பகுதிகளை இணைத்து ஆட்சி செய்வது பல நாடுகளிள் காணக்கூடியதாகவுள்ளது.

 

7.   எல்லா முஸ்லீம் கட்சிகளும் இணைப்புக்கு எதிராக இருக்கும் பொழுது தமிழ் கட்சிகள் எல்லாமே கட்டாயம் வடக்கு கிழக்கு இணைக்கப்பட வேண்டுமெண்கிறார்களே இதனால் எங்களுக்கு என்ன இலாபமிருக்கிறது என்பதை யாராவது கூறவேண்டும் ஆனால் நஷ்டம் மேற்கூறிய ஐந்து காரணங்களில் அடங்கியுள்ளது.

 

நான் ஒரு கட்டுரையாளன் இல்லை ஆனாலும் எமது இனத்தின் பிரச்சினைகளைப்பற்றி சிந்திக்கும் பொழுது எனது மனதில் தோன்றுவதைத்தான் இங்கே பதிவு செய்கிறேன். அது சரியாகவோ அல்லது பிழையாகவோ இருக்கலாம் எனவே வாசகர்கள் இப்பந்தியில் உள்ள கருத்துக்கள் குறித்து திறந்த மனதுடன் விவாதிக்கவேண்டும் என்பது எனது விருப்பம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.