Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆனந்தம் இல்லாத ஆனந்த சுதாகரன்கள்

Featured Replies

  • ஆனந்தம் இல்லாத ஆனந்த சுதாகரன்கள்
 
 

ஆனந்தம் இல்லாத ஆனந்த சுதாகரன்கள்

 

அர­சி­யல் கைதி ஆனந்தசுதா­க­ர­னின் விடு­த­லைக்­காக இன்று ஈழமே அழு­கி­றது. அனைத் துத் தமிழ் மக்­கள் பிர­தி­நி­தி­க­ளும், வடக்கு முத­ல­மைச்­ச­ரும்,சமூக அக்­கறை கொண்­டோ­ரும், மனித உரிமை செயற்­பாட்­டா­ளர்­க­ளும் என எல்­லோ­ரும் அவ­ருக்­கான விடு­த­லையை வலி­யு­றுத்தி பல்­வேறு வகை­யான போராட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கி­றார்­கள்.

ஆனந்­த­சு­தாகர­னின் மனை­வி­யின் மறைவின்போது, அவ­ருக்கு நீதித்­து­றை­யால் வழங்­கப்­பட்ட வெறும் அந்த 3 மணித்­தி­யா­லங்­கள் மட்டுமே அவ­ரது அன்பு மனை­வி­யின் இறுதிக் கிரி­யை­க­ளில் கலந்­து ­கொள்­ளவும், தான் சிறைப்­பி­டிக்­கப்­ப­ டும்­போது மனை­வி­யின் வயிற்­றி­லி­ருந்த இளைய குழந்­தை­யை­யும் மூத்த மக­னை­யும் தரி­சிக்­க­வும், அய­ல­வர்­க­ளு­டன் துக்­கம் பகி­ர­வும், அவ­ருக்கு அவகாசமாக வழங்­கப்­பட்­டி­ருந்­தது.

அந்த இறு­திக்­கி­ரி­யை­க­ளில் அவர் பங்­கெ­டுத்­து­விட்டு சிறைச்­சாலை வாக­னத்­தில் ஏறி­ய­போது அவ­ரு­டன் அவ­ரது மக­ளும் சிறைச்­சாலை வண்­டி­யில் ஏறிய காட்­சியே இன்று பல மனித மனங்­களின் உணர்வு களைத் தட்­டி­ விட்­டி­ருக்­கின்­றது.

ஒரு­வேளை அந்தப் பச்­சி­ளம் பாலகி அவ்­வாறு சிறைச்­சாலை வண்­டி­யில் ஏறாது விட்­டி­ருந்­தாலோ ,அல்­லது அவள் ஏறும்­போது அந்­தக்­காட்சி ஒளிப்படக் க­ரு­விக்­குள் அகப்­பட்­டி­ருக்­காது விட்­டாலோ அது இந்த அள­வுக்கு முக்­கி­யத்­து­வம் பெறாத ஒரு சாதாரண செய்­தி­யாக எம்­மைக் கடந்­தி­ருக்­குமோ என்ற சந்­தே­க­மும் எழத்­தான் செய்­கி­றது.

ஆனந்­த­சு­தா­க­ரன் என்ற பெய­ருக்கு எதிர்­ம­றை­யாக அவ­ரது வாழ்­வி­யல், துன்­பி­யல் வர­லா­றாக மாற்­றப்­பட்­டி­ருக்­கி­றது.இந்த ஆனந்­த­சு­தா­க­ரனது மனைவி இறந்­த­தும், அவர் பிணை­யில் சில­ம­ணி­நே­ரம் வெளி­யில் வந்­த­தும், பிள்­ளை­கள் கண்டு கதறி அழு­த­தும்,பிள்ளை சிறைச்­சாலை வண்­டிக்­குள் ஏறி­ய­தும் உண்­மை­யில் எதேச்சையாக வாழ்­வி­ய­லில் நடந்த சம்­ப­வங்­களே.

அந்தச் சம்­ப­வங்­கள் இன்று அவ­ரது விடி­வுக்­கான நீதி­தே­வ­தை ­யின் கண்­ணில் கட்­டி­யி­ருக்­கும் துண்டைச் சற்றுக் கீழி­றக்­கிப் பார்க்க வைத்­துள்­ளது.

இதே­போன்று ஆயி­ரம் ஆனந்­த­சு­தா­க­ரன்­கள் தத்­த­மது மனைவி,மக்­களை,உற­வி­னரை,இன்­பத்தை, சுதந்­தி­ரத்தை இழந்து அர­சி­யல் கைதி­யெ­னும் ஒற்றை நாமத்­துக்­குள் உள்­ள­டக்­கப்­பட்டு தாங்­கொ­ணாத் துன்­பங்­களை உட­லா­லும் உள்­ளத்­தா­லும் அனு­ப­வித்து வரு­கி­றார்­கள்.

இந்த ஆனந்­த­சு­தா­க­ர­னைப்­போல எத்­த­னையோ தமிழ்த்­தாய்மார் ஈன்­றெ­டுத்த தமிழ்ப் பிள்­ளை­கள் சிறை­க­ளிலே வாடு­கி­றார்­கள்.

அவர்­க­ளின் மனை­வி­மார்,பெற்­றோர்,பிள்­ளை­கள் வெளியே வாடு­கி­றார்­கள்.இன்று எமது கண்­முன்னே தெரி­வது ஒரே ஒரு ஆனந்தசுதா­க­ரன் மட்­டும்­தான்.

அனைத்து ஆனந்­த­சு­தா­க­ரன்­க­ளது வாழ்­வி­லும் இனி­யா­வது ஒளி­யேற்ற தமி­ழர்­க­ளா­கிய நாம் என்ன செய்­யப்­போ­கி­றோம்?

தமிழ் மக்­க­ளது பிர­தி­நி­தி­க­ளா­கிய எமது தலைவர்கள் என்ன செய்­யப்­போ­கி­றார்கள்?
தனியே சிறு ஆர்ப்­பாட்­டங்­கள் அல்­லது ஊர்­வ­லங்­கள் அல்­லது மனுக்­க­ளு­டன் உறங்­கப்­போ­கி­றோமா?

அல்­லது ஆனந்­த­சு­தா­க­ரன் போன்ற அர­சி­யல் கைதி­க­ளின் வாழ்­வில் உறக்­க­மே­யில்­லாத நிலையை உணர்த்தி அவர்­கள் வாழ்வை விடி­யச்­செய்­யப்­போ­கி­றோமா?

முடி­யும்; முயற்­சித்­தால் எம்­மால் நிச்­ச­யம் முடி­யும்

எமது மக்­கள் பிர­தி­நி­தி­க­ளால் இது முடி­யும். மக்­க­ளால் முடி­யும். ஒரு­போ­துமே நகர்த்­தவே முடி­யாது என்ற மகிந்த ஆட்­சியை, நெம்­பு­கோ­லாய் நின்று நகர்த்தி, நல்­லாட்சி என்று வேட­மிட்ட இந்த மைத்­தி­ரியை முடி­சூட்டி ஆட்­சிப்­பீ­ட­மேற்றி அழ­கு­பார்த்­த­வர்­கள் தமி­ழர்­க­ளா­கிய நாம்.

எமது பலம் அதுதான். என்­ன­தான் சிங்­க­ள­தே­சம் பெளத்­தம்,சிங்­க­ளம் முன்­னு­ரிமை என்­றா­லும் தனித்து அவர்­க­ளால் ஆட்சி அமைத்­து­வி­ட­வும் முடி­யாது; அமைந்­து­விடப் போவ­து­மில்லை.

தனிக்­காட்டு ராஜாவை தலை­கீ­ழாய் மாற்­றி­வைத்த மக்­கள் பலம் இப்­போது எங்கே? அதை ஊக்­கு­வித்த மக்­கள் பிர­தி­நி­தி­கள் எங்கே?

அனை­வ­ரும் சேர்ந்து நெம்­பி­னால் அர­சி­யல்­கை­தி­க­ளின் விடி­வுக்­கான அந்­தத் தடைக்­கல் மெல்ல நக­ரும். அனைத்து அர­சி­யல்­கை­தி­க­ளின் வாழ்க்­கை­யி­லும் விடிவு ஏற்­ப­டும்.

சகல தமிழ் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளும்,மாகா­ண­சபை,பிர­தேச­சபை உறுப்­பி­னர்­கள்,அர­சி­யல் கட்­சி­கள் ,மக்­கள் அமைப்­புக்­கள்,சமூக அமைப்­புக்­கள்,தொழிற் சங்­கங்­கள்,சட்­டத்­த­ர­ணி­கள் சங்­கங்­கள் என அனைத்துத் துறை­யி­ன­ ரும் மனம் வைத்து ஒரு புள்­ளி­யில் குவிந்து செயற்பட்­டால், அவர்­க­ளின் விடி­வென்­பது நிச்­ச­யம் மலர்ந்தே ஆகும்.

இரண்டு வரு­டங்­க­ளுக்கு முன்­னர் 2015ஆம் ஆண்டு நவம்­பர் மாதம் 26ஆம் தேதி­யன்று செந்­தூ­ரன் என்ற யாழ்.கொக்­கு­வில் இந்­து­வின் உயர்­தர மாண­வன் கோண்­டா­வில் புகை­யி­ர­தக் கட­வை­யில் புகை­யி­ர­தத்­துக்கு குறுக்கே பாய்ந்து தற்­கொலை புரிந்­ததேன்?

அர­சி­யல் கைதி­க­ளின் விடிவை மைத்­தி­ரிக்கு வலி­யு­றுத்தி கடி­தம் எழுதி­ வைத்து விட்­டுத் தனது உயிரை மாய்த்­துக்­கொண்­டான் அவன். இன்­னும் அவர்­க­ளுக்­கான விடிவு எட்­டப்­ப­ட­வில்­லையே!!

கடந்த மூன்று தசாப்­த­கா­ல­மாக நாட்­டில் இடம்­பெற்ற போர்ச்­சூ­ழ­லால் எம்­ம­வர்­க­ளில் பல இளை­ஞர்­கள் அர­சி­யல் கைதி­க­ளாக வேண்­டிய நிர்ப்­பந்­தம் ஏற்­பட்டு ­விட்­டது.

எனி­னும் போர் முடி­வ­டைந்து ஒன்­பது ஆண்­டு­கள் கடந்­து­விட்ட இப்­போ­தும், பல போரா­ளி­கள் புனர்­வாழ்­வுக்குப் பின்­னர் விடு­விக்­கப்­பட்ட பின்­ன­ரும், பல முக்­கிய தள­ப­தி­கள் சுதந்­தி­ர­மாக இருக்­கும் போதும், காலச் சூழ்­நி­லை­க­ளால் அர­சி­யல்­கை­தி­களாக்­கப்­பட்­ட­வர்­க­ளின் ­­­­வி­ட­யத்தில் மட்­டும் ஏன் நீதி­ தேவ­தை­யின் கண்­கள் இறு­கக் கட்­டப்­பட்­டுள்­ளன.

அர­சி­யல் கைதி­க­ளான தமது பிள்­ளை­க­ளின் விடு­விப்பை எதிர்­பார்த்­துக் காத்­தி­ருக்­கும்  பெற்­றோர், உற­வு­கள்

நல்­லாட்சி என்ற நாமத்­து­டன் ஆட்­சி­பீ­ட­மேற முயன்­ற­வர்­க­ளுக்கு, அர­சி­யல் கைதி­க­ளான தமது பிள்­ளை­கள் விடு­விக்­கப்­ப­ட­ லாம் என்ற ஒரே எதிர்­பார்ப்­பின் அடிப்­ப­டை­யில்­இந்த அர­சி­யல் கைதி­க­ளின் பெற்­றோர்­கள்,அண்­ணன்­மார், தம்­பி­மார்,மனை­வி­மார்,உற்­றார் ,உற­வி­னர்­கள் என அத்­த­னை­பே­ரும் வாக்­க­ளித்­ததை மைத்­திரி மறந்­து­விட்­டாரா?

எனக்­காக வாக்­க­ளித்த தமிழ் மக்­களை மறக்க, நான் நன்­றி­கெட்­ட­வன் அல்ல, என்று யாழ்ப்­பா­ணத்­தில் வைத்­துப் பெ­ரும் எடுப்­பில் தாம் கூறிய கூற்­றுக்கு அமைய அவர் செயற்­ப­ட­வில்­லையே?

மக்­கள் உங்­க­ளுக்கு ஏன் வாக்­க­ளித்­தார்­கள்?

*தங்­கள் காணி­கள் விடு­விக்­கப்­பட வேண்­டும்?

*தங்­கள் பிள்­ளை­கள் விடு­விக்­கப்­பட வேண்­டும்.

*காணா­மல் ஆக்­கப்­பட்ட தமது சொந்­தங்­க­ளுக்கு நேர்ந்­த­கதி என்ன என்­ப­து­கு­றித்­துத் தெளி­வாக்­கப்­பட வேண்­டும்.

*தமி­ழ­ருக்­கான நீதி வேண்­டும்

என்ற தமிழ்­மக்­க­ளது அடிப்­ப­டைத் தத்­து­வங்­க­ளுக்­கா­க­வும், அடிப்­படை உரி­மை­க­ளுக்­கா­க­வுமே வாக்­க­ளித்­தார்­கள்.

அன்று நீங்­கள் நீதிதேவ­னாக, சுதந்­திரப் புறா­வாக உங்­களை அடை­யா­ளம் காட்டி , எங்­கள் மக்­க­ளின் வாக்­கெ­னும் அரி­சிப் பருக்­கை­களை புசித்­து­விட்டு இன்று விடி­வே­யில்­லாத அவர்­க­ளுக்­கான நீதியை எதற்­கா­கத் தாம­திக்­கி­றீர்­கள்.?

இன்று ஆனந்­த­சு­தா­க­ர­னின் மகள் அரச தலை­வ­ருக்­கும், அவ­ரது மக­ளுக்­கும் தனது தந்­தை­யின் விடி­வுக்­காய் கடி­தம் எழு­து­கி­றாள். சிங்­க­ளச் சிறு­மி­க­ளுக்­கும் தமிழ்ச் சிறு­மி­க­ளுக்­கும் மன­தும் இத­ய­மும் ஒன்­று­தான் என மைத்­திரி புரிந்­து­கொள்­வாரா? இல்­லையா? என்­பது குறித்து பொறுத்­தி­ருந்து தான் பார்க்க வேண்­டும்.

அர­சி­யல் கைதி­க­ளுக்கு பொது மன்­னிப்பு வழங்கி வர­லாற்­றில் இடம் பிடி­யுங்­கள்

நிறை­வேற்று அரச தலை­வர் ­முறை­மையை ஒழித்த உங்­க­ளால், இந்­நாட்­டில் சுபீட்­சத்தை ஏன் ஏற்­ப­டுத்த முடி­ய­வில்லை?

உங்­க­ளைக் கொலை செய்ய முயன்­ற­வ­ ரைப் பொது­மன்­னிப்­ப­ளித்து விடு­விக்­கும் போது ஏன் அர­சி­யல் கைதி­க­ளுக்கு பொது­மன்­னிப்பு வழங்க முடி­யா­துள்­ளது?

சிகி­ரியா பளிங்­குச்­சு­வரை சேதப்­ப­டுத்தி ஆயுள் தண்­டனை பெற இருந்த பெண்­ணுக்கு பொது­மன்­னிப்பு வழங்கிய நீங்கள், இந்த தமிழ் அர­சி­யல் கைதி­க­ளது மனங்­களை ஏன் மேன்மேலும் சேதப்­ப­டுத்­து­கி­றீர்­கள்?

நீங்­கள் செல்­லும் வழி­யில் கைய­சைத்த சிறு­மிக்­காய் வாக­னத்தை நிறுத்தி, அவள் வீடு சென்ற உங்­க­ளுக்கு, இந்த ஆனந்­த­சு­தா­க­ர­னின் மக­ளின் கத­றல் காதில் விழ­வில்­லையா?

அவ­ளது வீடு செல்­லும் பாதை தெரி­ய­வில்­லையா? இல்லை அவள் தமி­ழச்சி என்று நினைக்­கி­றீர்­களா?

இங்கு நீங்­கள் வாழை­யி­லை­யில் சாப்­பி­டு­வதை பெரு­மை­யா­கப் பேச நாங்­கள் விளை­ய­வில்லை ஐயா!

நீங்­கள் ஆனந்­த­சு­தா­க­ர­னைப் போன்­றோ­ரின் வாழ்­வில் ஒளி­யேற்றி பெரு­மை­கொள்­ளவே விரும்­பு­கி­றோம்.

நீங்­கள் அரச தலை­வ­ரா­வ­தற்கு முன்­ன­ரும், அரச தலை­வ­ரா­ன­தன் பின்­ன­ரும் நான் நிறை­வேற்று அதி­கா­ரத்தை ஒழிப்­பேன், ஒரு­மு­றை­தான் அரச தலைவராக இருப்­பேன் என்­றெல்­லாம் பேசி­னீர்­களே?

ஐயா,
ஒரு­முறை நாட்­டின் அரச தலை­வ­ராக இருக்­கும்­போதே நீங்­கள் நீதியை நிலை­ நாட்­டுங்­கள். அனைத்து மக்­க­ளை­யும் நேசி­யுங்­கள்; எழு­பது வரு­டங்­க­ளுக்கு மேலாக இழு­ப­டும் இனப்­பி­ரச்­சி­னையை உமது ஒரு­முறை ஆட்­சி­யில் தீர்த்து வையும்; தீர்வை வழங்­கும்; நீதியை வழங்­கும்; அப்­போ­து­தான் உமது ஒரு­முறை ஆட்சி ஓரா­யி­ரம் ஆண்­டு­கள் வர­லாற்­றில் நிலைத்து நின்று பேசும்.

தமி­ழர் பிரச்­சி­னை­க­ளைத் தீர்த்து வைத்தால்  அரச தலை­வர்  உல­கப் புகழ் பெறு­வார்

இன்று விடு­த­லைப்­பு­லி­களை ஒழித்­த­மைக்­காக மகிந்­தவை இலங்கை சிங்­கள, முஸ்­லிம் மக்­கள் கொண்­டா­டு­வதை நீங்­கள் அறி­வீர்­கள். அது­போல தமி­ழர்­க­ளுக்கு விடிவை, தீர்வை , உங்­கள் ஆட்­சி­யில் முறைப்­படி வழங்­கி­னால், உல­கமே உம்­மைப் பாராட்­டும். இலங்கை வர­லாற்­றில் உமது பெயர் பல்­லா­யி­ரம் ஆண்­டு­கள் நிலைத்து நின்று பேசும்.

தமிழ் மக்­கள் உமக்­க­ளித்த வாக்­கு­களை இறை­வ­னுக்­க­ளித்த தட்­ச­ணை­யாக அல்­லவா எண்­ணு­வர்? நீர் அரச தலை­வ­ராக நாட்டின் தலை­வ­ராக நின்று முடி­வெ­டும். நீர் பின்­பற்­று­வது பெளத்­த­மாக இருக்­கட்­டும்; ஆனால் அதன் உண்­மைப் போத­னை­களை நீர் பின்­பற்றி நடை­மு­றைப்­ப­டுத்­தும்; நீர் புத்­த­னின் வாரிசு என நிரூ­பித்­துக் காட்டும்.

நீர் எடுக்­கும் சிறந்த முடி­வு­க­ளுக்கு பெளத்த மகா­சங்­கங்­கள் தடை­யாக அமைந்­தால், தய­வு­செய்து மகா­நா­யக்­கர்­க­ளை­அ­ரச தலை­வ­ராக்­கி­விட்டு நீர் வில­கிக்­கொள்­ளும்.

ஏனெ­னில் ஒரு நாட்­டின் தலை­வ­ரா­ன­வர் தமது நாட்­டின் குடி­மக்­க­ளுக்கு என்ன வேண்­டுமோ, தமது நாட்­டின் சுபீட்­சத்­துக்கு என்ன செய்ய வேண்­டுமோ , அவை குறித்து ஆழ அறிந்து முடிவை, உறு­தி­யான தீர்­மா­னமாக மேற்­கொள்ள வேண்­டும்.

ஒரு நேரத்­தில் ஒன்­று­தான் முக்­கி­யம் பெற வேண்­டும். ஒன்று; நாடா இல்­லை­யேல் சுடு­காடா?

மற்­றை­யது; அரச தலை­வர் ஆட்சி முறையா? மகா­ந­யக்­கர்­க­ளின் ஆட்­சியா? ஆக, இலங்கை வர­லாறு உமது பெயரை நின்று நிலைக்க வைக்க உமக்­கொரு வர­லாற்றுச் சந்­தர்ப்­பம் வழங்­கி­யுள்­ளது ஐயா! அதைச் சிறப்பான தாகப் பயன்­ப­டுத்­துங்­கள்.

அதற்கு முன்­னு­தா­ர­ண­மாக அர­சி­யல் கைதி­கள் அத்­தனை பேரை­யும் உமது பொது­மன்­னிப்­பின் அடிப்­ப­டை­யில் விடு­வித்து, நீங்­கள் இந்த நாட்டு மக்களது அதி­ப­தியே தவிர மகா­நா­யக்­கர்­க­ளின் அதி­ப­தி­யல்ல என எடுத்து இடித்­து­ரையுங்­கள். சூளு­ரை­கள் வரட்­டும்; நீங்­கள் தனித்து நில்­லுங்­கள்.

http://newuthayan.com/story/81004.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.