Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏமாற்றத்தின் உச்சக்கட்டம்

Featured Replies

ஏமாற்றத்தின் உச்சக்கட்டம்

 

ரொபட் அன்­டனி

தேசிய அர­சி­யலில் நெருக்­கடி நிலை நீடிக்­கின்ற நிலையில் நல்­லாட்சி அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் இரண்டு பிர­தான கட்­சி­களும் தமது கட்­சி­களை பலப்­ப­டுத்­து­வ­தற்கு முயற்­சி­களை மேற்­கொண்­டு­வ­ரு­வதை காண முடி­கின்­றது. ஒரு­புறம் சிறி­லங்கா சுதந்­தி­ரக் ­கட்சி பல பிரி­வு­க­ளாக பிள­வு­பட்டு சித­றிக்­ கி­டக்­கி­றது. அதே­போன்று ஐக்­கிய தேசி­யக் ­கட்­சியும் உள்­ளக ரீதியில் பல்­வேறு நெருக்­க­டி­களை சந்­தித்­தித்து வரு­கி­றது.

இவ்­வாறு தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் இரண்டு பிர­தான கட்­சி­களும் பாரிய நெருக்­க­டி­க­ளையும் சிக்­கல்­க­ளையும் அர­சியல் ரீதியில் எதிர்­நோக்­கி­யுள்ள நிலையில் எங்கே தமது ஆட்சி அதி­காரம் கைவிட்­டு போய்­வி­டுமோ என்ற அச்­சத்தில் காய்­ந­கர்த்­தல்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றன.

அவ்­வாறு இரண்டு பிர­தான கட்­சி­களும் நெருக்­க­டி­களை சந்­தித்­துள்ள நிலையில் அந்­தக் ­கட்­சிகள் மறந்­து­போன முக்­கிய ஒரு விடயம் குறித்து மக்கள் சிந்­தித்­து கொண்­டி­ருக்­கின்­றனர். ஆனால் அந்த சிந்­தனை தொடர்பில் இரண்டு பிர­தான கட்­சி­களும் தற்­போது அவ­தானம் செலுத்­து­வ­தாக தெரி­ய­வில்லை. மாறாக இரண்டு கட்­சி­களும் தமது அர­சியல் இருப்பை தக்­க­ வைத்­துக்­கொள்­ளவும் தமது கட்­சி­களை நெருக்­க­டியில் இருந்து மீட்­டு கொள்­வ­தற்­குமே கடும் முயற்­சி­களை மேற்­கொண்டு வரு­கின்­றன.

தற்­போ­தைய சூழலில் சிறி­லங்கா சுதந்­தி­ரக் ­கட்­சி­யா­னது மூன்று பிரி­வு­க­ளாக பிள­வு­பட்­டுள்­ளது. மஹிந்த தலை­மையில் ஒரு பிரி­வி­னரும், ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால தலை­மையில் ஒரு பிரி­வி­னரும் செயற்­பட்டு வரு­கின்ற நிலையில் தற்­போது ரணில் எதிர்ப்­புக்­குழு என ஒரு குழுவும் உரு­வா­கி­யுள்­ளது.

இந்த வகையில் சுதந்­தி­ரக் ­கட்­சியை எவ்­வாறு மீண்டும் ஒரு­மைப்­ப­டுத்தி பல­மான கட்­சி­யாக கட்­டி­யெ­ழுப்­பு­வது என்­பது குறித்த பாரிய அவ­தா­னத்தில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன இருக்­கின்றார். காரணம் அவ­ரது தலை­மை ­கா­லத்தில் சுதந்­தி­ரக்­கட்சி பிள­வு­பட்­ட­தாக வர­லாற்றில் எழு­தப்­பட்­டு­ வி­டக்­ கூ­டாது என்­பதில் அவர் உறு­தி­யாக இருக்­கின்றார்.

 அதற்­காக விரைவில் ரணில் எதிர்ப்­புக்­கு­ழுவும் மைத்­திரி தரப்பும், மஹிந்த தரப்பும் இணைந்து சுதந்­தி­ரக்­கட்சி பய­ணித்­தாலும் மக்கள் அதில் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்கு ஒன்றும் இருக்­காது. அதற்­கான பாரிய இரா­ஜ­தந்­திர முயற்­சி­களும் தற்­போது கட்சி மட்­டத்தில் இடம்­பெற்று வரு­வ­தா­கவே தெரி­ய­ வ­ரு­கி­றது.

மறு­புறம் ஐக்­கிய தேசி­யக் ­கட்­சியும் சிங்­கள, பௌத்த மக்கள் மத்­தியில் தன்னை நிலை ­நி­றுத்­தி ­கொள்­வ­தற்­கான முயற்­சி­களில் ஈடு­பட்­டு கொண்­டி­ருக்­கின்­றது. இவ்­வாறு இரண்டு கட்­சி­களும் அதி­கார போட்­டியில் முட்டி மோதி ­கொண்­டி­ருப்­பதை காண முடி­கின்­றது. 2020 ஆம் ஆண்டில் தனித்து ஆட்சி அமைக்­க ­வேண்டும் என்ற இலக்கில் ஐக்­கிய தேசி­யக் ­கட்­சியும் சிறி­லங்கா சுதந்­தி­ரக் ­கட்­சியும் கடு­மை­யான முனைப்பில் காய்­களை நகர்த்தி வரு­கின்­றன. அதன்­படி இரண்டு கட்­சி­க­ளுக்­கு­மி­டையில் தற்­போது பனிப்போர் நில­வு­கின்­றது என்று கூறு­வதை விட பகி­ரங்­க­மான முரண்­பா­டு­களே வெளிக்­காட்­டப்­பட்­டு ­விட்­டன.

இவ்­வாறு இரண்டு பிர­தான கட்­சி­களும் தமது அர­சியல் அதி­கா­ரத்­திற்­கான போட்­டியில் ஈடு­பட்­டுள்ள நிலையில் அந்த இரண்டு கட்­சி­க­ளாலும் மறக்­கப்­பட்ட ஒரு தரப்­பினர் இந்த நாட்டில் உள்­ளனர். யுத்­தத்­தின் ­போது இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் சர்­வ­தேச மனி­தா­பி­மான சட்­ட­ மீ­றல்கள், என்­ப­வற்­றினால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதி வழங்கும் செயற்­பாடு தொடர்ந்து தாம­திக்­கப்­பட்­டு­ வ­ரு­கி­றது.

தாம­திக்­கப்­பட்டு வரு­கி­றது என்று கூறு­வ­தை­ விட அந்த செயற்­பாடு மறக்­க­டிக்­கப்­பட்டு வரு­கின்­றது என்றே கூறலாம். அந்­த­ள­விற்கு நிலைமை மோச­மாக மாறி­யி­ருக்­கி­றது. பாதிக்­கப்­பட்ட மக்கள் ஏமாற்­றத்தின் உச்­ச ­கட்­டத்தில் இருக்­கின்­றனர்.

குறிப்­பாக 2009ஆம் ஆண்டு யுத்தம் முடி­வ­டைந்­ததும் இந்த பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை நிலை ­நாட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­பட்ட போதும் அதற்­கான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை. 2015 ஆம் ஆண்டு புதிய அர­சாங்கம் பத­விக்கு வந்த பின்னர் ஓர­ளவு நம்­பிக்கை தரும் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டாலும் மக்­க­ளுக்­கான நீதி வழங்கும் செயற்­பா­டா­னது இன்னும் கிடப்­பி­லேயே போடப்­பட்­டி­ருக்­கின்­றது.

பாதிக்­கப்­பட்ட மக்­களை பொறுத்­த­வ­ரையில் பல்­வேறு இன்­னல்­களை எதிர்­கொண்டே வரு­கின்­றனர். குறிப்­பாக காணி­களை இழந்தோர் காணா­மல் ­போனோர், கண­வனை இழந்த குடும்பத் தலை­விகள், அர­சியல் கைதிகள் என பாதிக்­கப்­பட்ட மக்­களின் பட்­டியல் நீண்­டு ­கொண்டே செல்­கின்­றது. அத்­துடன் தமிழ் பேசும் மக்­களின் அர­சியல் அபி­லா­ஷை­களை பூர்த்தி செய்­வ­தற்­கான தீர்­வுத் ­திட்­ட­மொன்றை முன்­வைக்­க­ வேண்டும் என்ற கோரிக்­கையும் தற்­போது அலட்­சி­யப்­ப­டுத்­தப்­படும் சூழல் உரு­வா­கி­யி­ருப்­பதை காண­ மு­டி­கின்­றது.

இந்தப் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணு­மாறு சர்­வ­தேச சமூ­கமும் ஐக்­கிய நாடுகள் சபையும் தொடர்ச்­சி­யாக வலி­யு­றுத்தி வரு­கின்ற சூழ­லிலும் அதற்­காக பிரே­ர­ணை­களை நிறை­வேற்­றிய போதிலும் எவ்­வி­த­மான நட­வ­டிக்­கை­களும் இது­வரை முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. காரணம் தேசிய அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் இரண்டு பிர­தான கட்­சி­களும் தமது கட்­சி­க­ளுக்குள் இருக்கும் பிரச்­சி­னை­களை தீர்ப்­ப­தற்கு அதிக முக்­கி­யத்­துவம் வழங்­கு­கின்­ற­னவே தவிர இந்­தப்­ பி­ரச்­சி­னைகள் குறித்து சிந்­திப்­ப­தாக தெரி­ய­வில்லை.

அதா­வது பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்­கான நீதி வழங்கும் விடயம் மற்றும் தேசிய பிரச்­சி­னைக்­கான தீர்வு விட­யங்கள் குறித்து நட­வ­டிக்கை எடுக்கும் பட்­சத்தில் அது தென்­னி­லங்­கையில் தமது கட்­சி­க­ளுக்கு பாதிப்பை ஏற்­ப­டுத்தி விடும் என பிர­தான கட்­சிகள் அச்சம் கொள்­வ­தா­கவே தெரி­கி­றது. ஆனால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் நிலைமை மற்றும் அவர்கள் எதிர்­கொள்­கின்ற இன்­னல்கள் குறித்து இரண்டு பிர­தான கட்­சி­களும் சற்று சிந்­தித்­து பார்க்­க­ வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். குறிப்­பாக கடந்த ஜனா­தி­பதி தேர்­தலில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வெற்­றி ­பெ­று­வ­தற்கு பாதிக்­கப்­பட்ட மக்கள் ஆத­ரவு வழங்­கி­ய ­போது அவர்கள் எதனை எதிர்­பார்த்­தனர் என்­பது குறித்து அர­சாங்கம் சிந்­திக்­க­ வேண்டும்.

வடக்கு, கிழக்கில் யுத்­த ­கா­லத்தில் காணி­களை இழந்த மக்கள் அவற்றை மீளப்­பெற்­றுக் ­கொள்­வ­தற்­காக பாரிய போராட்­டங்­களை மேற்­கொள்­கின்­றனர். நல்­லாட்சி அர­சாங்கம் பத­விக்கு வந்­ததன் பின்னர் காணிகள் குறிப்­பி­டத்­தக்க வகையில் விடு­விக்­கப்­பட்டு வரு­கின்­றன என்­பதை ஏற்­றுக்­கொள்ள வேண்டும். ஆனால் இன்னும் பல ஆயி­ரக்­க­ணக்­கான ஏக்­கர்கள் விடு­விக்­கப்­ப­ட­வுள்­ள­தாக பாதிக்­கப்­பட்ட மக்கள் சுட்­டிக்­காட்டி வரு­கின்­றனர்.

அண்­மையில் கூட வலி வடக்கு பகு­தியில் 683 ஏக்கர் காணிகள் விடு­விக்­கப்­பட்­டன. மீள் குடி­யேற்ற அமைச்சர் டி.எம். சுவா­மி­நாதன் பாதிக்­கப்­பட்ட மக்­களின் காணி­களை விடு­விக்கும் செயற்­பாட்டில் அக்­க­றை ­காட்டி வரு­கின்றார். ஆனால் காணி­களை இழந்­தோரின் நிலை­மையை உணர்ந்து காணி விடு­விக்கும் செயற்­பாட்டை விரை­வு­ப­டுத்த வேண்டும் என்­பதே இங்கு முதன்­மை­யாக காணப்­படும் கார­ணி­யாக இருக்­கி­றது. இது குறித்து அர­சாங்கம் கவ­னத்தில் கொள்­ள ­வேண்டும். பாதிக்­கப்­பட்ட மக்கள் அர­சாங்­கத்­திடம் புதி­தாக காணி­களை கோர­வில்லை. மாறாக தம்­மி­ட­மி­ருந்து அப­க­ரிக்­கப்­பட்ட காணி­க­ளையே மீள வழங்­கு­மாறு கோரு­கின்­றனர்.

அதே­போன்று தமது அன்­புக்­கு­ரி­ய­வர்கள் காணா­மல்­போன நிலையில் பாதிக்­கப்­பட்ட மக்கள் எதிர்­கொண்டு வரும் பிரச்­சி­னைகள், மிக அதி­க­மாகும். தமது அன்­புக்­கு­ரி­ய­வர்கள் உயி­ருடன் இருக்­கின்­றார்­களா இல்லை என்­பது கூட தெரி­யாமல் வாழ்க்­கையை கொண்டு நடத்த முடி­யாமல் பாதிக்­கப்­பட்ட மக்கள் திண்­டாடி வரு­கின்­றனர்.

அர­சாங்கம் கடந்த 9 வரு­டங்­க­ளா­கவே இந்த விட­யத்தில் ஆக்­க­பூர்­வ­மான நட­வ­டிக்­கை­களை எடுத்­ததா என்­பது சந்­தே­கத்­திற்­கு­ரிய விட­ய­மாகும். முன்­னைய ஆட்­சிக் ­கா­லத்தில் ஜனா­தி­பதி ஆணைக்­குழு ஒன்று நிய­மிக்­கப்­பட்டு காணா­மல்­போனோர் குறித்து ஆரா­யப்­பட்­டது. ஆனால் அத­னூ­டாக மக்­க­ளுக்கு தீர்வு கிடைக்­க­வில்லை. தற்­போது புதிய அர­சாங்கம் வந்­ததன் பின்னர் காணாமல் போனோர் அலு­வ­லகம் அமைக்­கப்­பட்­டுள்­ளது. அதிலும் பாதிக்­கப்­பட்ட மக்கள் திருப்­தி­யுடன் இருப்­ப­தாக தெரி­ய­வில்லை.

காணா­மல் ­போனோர் அலு­வ­ல­கத்­திற்கு ஆணை­யா­ளர்கள் நிய­மிக்­கப்­பட்­டுள்ள நிலையில் அத­னூ­டாக காணாமல் போன­வர்­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை கண்டுபிடிக்க முடியும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. ஆனால் இங்கு பாதிக்­கப்­பட்ட மக்கள் திருப்தி அடையும் வகை­யி­லான பொறி­முறை ஊடாக பிரச்­சி­னைக்கு தீர்­வு­கா­ணப்­ப­ட ­வேண்டும் என்­பதே முக்­கி­ய­மா­ன­தாகும்.

அதே­போன்று யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட பெண்கள், பல ஆயி­ரக்­க­ணக்­கானோர் குடும்­பத்­ த­லை­வி­க­ளாக வடக்கு, கிழக்கில் இருக்­கின்­றனர். அதிலும் குறிப்­பாக கண­வனை இழந்த பெண்கள் தமது குடும்­பங்­களை நடத்தி செல்­வ­தற்கு எதிர்­கொள்ளும் இன்­னல்கள் ஏரா­ள­மா­ன­தாகும். எனவே இந்த பாதிக்­கப்­பட்ட பெண்­க­ளுக்கு தமது வாழ்­வா­தா­ரத்தை கொண்டு செல்லும் நோக்­கிலும் பொரு­ளா­தா­ரத்தை வலு­வூட்டும் வகை­யிலும் அர­சாங்கம் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­ வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். இதற்­கா­கவே நட்­ட­ஈடு வழங்கும் அலு­வ­லகம் ஒன்றை அமைக்­கு­மாறு ஐக்­கி­ய ­நா­டுகள் சபை வலி­யு­றுத்தி வரு­கி­றது.

இதற்­கான அமைச்­ச­ரவை பத்­தி­ரத்­திற்கு அங்­கீ­காரம் கிடைத்­துள்ள நிலையில் அதனை விரைவில் நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டு­மென வலி­யு­றுத்­தப்­ப­டு­கி­றது. இவ்­வாறு நட்­ட­ஈடு வழங்கும் அலு­வ­ல­கத்தை அமைத்து பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நட்­ட­ஈட்டை வழங்­க­ வேண்டும். இந்த விட­யத்தில் தாமதம் இருக்­கக் ­கூ­டாது. பெண்­களை தலை­மைத்­து­வ­மாக கொண்ட குடும்­பங்கள் எந்­த­ளவு துன்ப துய­ரங்­களை எதிர்­கொண்டு தமது வாழ்க்­கையை கொண்­டு­ ந­டத்­து­கின்­றன என்­பது குறித்து அர­சாங்கம் கவனம் செலுத்த வேண்டும். இவை மிகவும் உணர்­வு­பூர்­வ­மான விட­யங்­க­ளாகும். இவற்றை மேற்­கொண்டால் தென்­னி­லங்­கையில் அர­சாங்­கத்­திற்கு நெருக்­கடி ஏற்­பட்டு விடும் என்று கூறிக்­கொண்டு அர­சாங்கம் காலத்தை கடத்த முடி­யாது.

எனவே இந்த காணா­மல் ­போ­னோரின் உற­வு­களும் தமது உற­வு­க­ளுக்கு என்ன நடந்­தது என்­பதை வெளிப்­ப­டுத்­து­மாறு கோரி தொடர்ந்து போராட்­டங்­களை மேற்­கொண்டு வரு­கின்­றனர். ஆனால் அவர்­களின் ஆதங்­கங்­களும் கவ­னத்தில் கொள்­ளப்­ப­ட­வில்லை. தொடர்ந்தும் காணா­மல் ­போ­னோரின் உற­வு­களை இவ்­வாறு அசௌ­க­ரி­யப்­ப­டுத்­தாமல் காணா­மல் ­போ­னோ­ருக்கு என்ன நடந்­தது என்­பதை ஒரு பொறி­முறை ஊடாக கண்­டு­பி­டிப்­ப­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்­க ­வேண்டும். தற்­போது காணா­மல்­போனோர் அலு­வ­லகம் நிறு­வப்­பட்­டுள்­ளது. அத­னூ­டாக பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு நீதியை நிலை ­நாட்ட நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும்.

இதில் தாமதம் இருக்­கக் ­கூ­டாது. அதே­போன்று அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் பணி­களும் ஸ்தம்­பி­த­ம­டைந்­துள்­ளன. புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடா­கவே தமிழ் பேசும் மக்­களின் அர­சியல் அபி­லா­ஷை­களை பூர்த்தி செய்யும் அர­சியல் தீர்­வு ­திட்டம் முன்­வைக்­கப்­படும் என எதிர்­பார்க்­கப்­பட்­டது. ஆனால் தற்­போது அர­சி­ய­ல­மைப்பை தயா­ரிக்கும் பணிகள் ஸ்தம்­பி­த­ம­டைந்­துள்­ளதால் அர­சியல் தீர்வு குறித்த நம்­பிக்­கையும் இழக்­கப்­பட்டு வரு­கின்­றது.

புதிய அமைச்­ச­ரவை உரு­வாக்­கப்­பட்­டதும் அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்கும் பணிகள் மீள ஆரம்பிக்கப்படும் என பிரதான வழிநடத்தல் குழுவில் அங்கம் வகிக்கும் பிரதான உறுப்பினர் ஒருவர் தெரிவித்திருக்கின்றார். அதன்படி இந்த செயற்பாடுகளை விரைவில் ஆரம்பிக்க வேண்டும்.

தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ள நிலையில் அதனூடாக இனப்பிரச் சினைக்கு தீர்வு காணப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த நம்பிக்கையும் தற்போது இழக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களை பொறுத்தவரையில் ஏமாற்றமே எஞ்சியிருக்கிறது. அரசாங்கம் செய்யும் செய்யுமென எதிர்பார்த்திருந்த போதிலும் ஏமாற்றமே எஞ்சியிருக்கிறது.

எனவே இது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும். தென்னிலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியானது பாதிக்கப்பட்ட மக்களில் செலுத்தும் தாக்கத்தின் அளவை குறைக்க இரண்டு கட்சிகளும் முன்வர வேண்டும். பாதிக்கப்பட்ட மக்கள் விடயத்தில் அரசாங்கம் என்ன செய்கின்றது என்பதை சர்வதேசம் பார்த்து கொண்டிருக்கின்றது.

அரசாங்கம் ஏற்படுத்தும் முன்னேற்றம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையும் அவதானம் செலுத்தியுள்ளது. எனவே சர்வதேச நெருக்கடிகளிலிருந்து மீள வேண்டுமாயின் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும். சர்வதேச அழுத்தம் எப்படியிருப்பினும் பாதிக்கப்பட்ட தமது பிரஜைகளுக்கு நீதியை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும். ஏமாற்றத்தின் உச்சக்கட்டத்தில் உள்ள மக்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்புங்கள்.

 

http://epaper.virakesari.lk/newspaper/Daily/arasiyal-theepori/2018-04-21#page-2

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.