Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரகசியமாக தயாராகும் தமிழரசுக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் இவர்தான்: மாவைக்கு இம்முறையும் அல்வாவா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரகசியமாக தயாராகும் தமிழரசுக்கட்சியின் முதலமைச்சர் வேட்பாளர் இவர்தான்: மாவைக்கு இம்முறையும் அல்வாவா?

June 1, 2018
MAIN_0.jpg

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடுத்த வடமாகாண முதலமைச்சர் யார் என்ற சர்ச்சைகள் சூடு பிடித்துள்ள நிலையில், தமிழரசுக்கட்சியின் உயர்பீடத்தால் தற்போது சடுதியான புதிய நகர்வொன்று முன்னெடுக்கப்பட்டு வருகிறது. மாவை சேனாதிராசாவை தவிர்த்து, புதிய- நிர்வாக பரிச்சயமுள்ள ஒருவரை அரங்கிற்கு கொண்டுவரும் முயற்சிகள் நடந்து வருகின்றன.

யார் அந்த புதிய முகம்? அவரை அரங்கிற்கு கொண்டு வர முயற்சிப்பவர் யார்?

 

ஆளை சொல்வதற்கு முன்னர், இந்த விவகாரம் குறித்த சிறிய பிளாஷ்பேக் ஒன்றை சொல்கிறோம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அடுத்த முதலமைச்சர் வேட்பாளர் தான்தானென மாவை சேனாதிராசா உறுதியாக நம்பி வருகிறார். ஆரம்பத்தில் தமிழரசுக்கட்சியின் உயர்மட்ட சந்திப்புக்களில் இலேசாக இந்த கதையை லீக் செய்து, நாடி பிடித்து பார்த்தார். உள்ளூராட்சி தேர்தலின் ஆசன பங்கீட்டு பேச்சுக்கள் நடந்த சமயத்தில் “நாடி பிடித்து பார்க்கும்“ படலத்தை மாவை ஆரம்பித்திருந்தார்.

தமிழரசுக்கட்சியின் உயர்பீட உறுப்பினர்களில் தற்போது சுமந்திரன் தவிர்ந்த யாருமே ஆளுமைமிக்க தலைவர்கள் கிடையாது. அவர்கள் அனைவரும் மாவை சேனாதிராசாவில் “தங்கியிருந்து“ அரசியல் செய்கிறார்கள். மாவை தன்னை அடுத்த முதல்வராக நினைக்க ஆரம்பித்ததே இவர்களால்தான். தினமும் மாவையை உநுப்பேற்றியபடி இருக்கிறார்கள்.

இந்த உசுப்பேற்றலின் லேற்றஸ்ற் வடிவம்தான்- தமிழரசுக்கட்சி இளைஞர் அணி!

தமிழரசுக்கட்சிக்குள் எதிர்ப்பு இல்லையென்றதும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளின் தலைவர்கள் பங்குபற்றிய- கூட்டமைப்பின் உள்ளூராட்சிசபை ஆசன பங்கீட்டு கூட்டங்களில்- தனது உள்ளக்கிடக்கையை மாவை ஓரளவு வெளிப்படையாக தெரிவித்துள்ளார். இதன்போது, பங்காளி கட்சிகளின் தலைவர்கள் யாரும் அதிருப்தி தெரிவிக்கவில்லை!

 

உள்ளூராட்சி தேர்தலிற்கு முன்னதாக யாழில் நடந்த கூட்டமைப்பின் தலைவர்களிற்கிடையிலான சந்திப்பின்போதும்-  “நான் வடமாகாணசபை தேர்தலில் போட்டியிட வேணுமென கட்சிக்குள் பலர் விரும்புகிறார்கள்“ என மாவை சேனாதிராசா கூறியிருந்தார். அப்பொழுது சுமந்திரன் இலேசாக தலையசைத்து அதை வழிமொழியும் பாணியில் நடந்து கொண்டிருந்தார். அப்பொழுது தமிழ்பக்கம் அதை செய்தியாகவும் வெளியிட்டிருந்தது.

இதனடிப்படையில்- அடுத்த வடமாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராக மாவையை தவிர வேறொருவர் களமிறங்க வாய்ப்பில்லையென எழுதியிருந்தோம்.

ஆனால் இப்பொழுது சடுதியாக காட்சிகள் மாறிவருகின்றன. மாவைதான் அடுத்த வேட்பாளர் என்பதை உறுதியாக கூற முடியாத நிலைமை உருவாகி வருகிறது. தமிழரசுக்கட்சி மாவையை தவிர்த்து, வேறொருவரை களமிறக்க முயற்சிப்பதே அதற்கு காரணம்!

தமிழரசுக்கட்சியின் தலைவராக மாவை இருக்கிறார், அவருக்கு தெரியாமல், அவரை தவிர்த்து இன்னொருவரை எப்படி களமிறக்கலாம்?

 

இது நியாயமான சந்தேகம்தான். ஆனால், தமிழரசுக்கட்சியின் சட்டரீதியான தலைவர் மாவையே தவிர, செயற்பாட்டு ரீதியான தலைவர் எம்.ஏ.சுமந்திரன்தான். தமிழரசுக்கட்சி என்பதற்கு அப்பால், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைமையும் அதுதான். அனைத்து விடயங்களையும் சுமந்திரனே தீர்மானிக்கிறார்!

இப்பொழுது வடமாகாணசபை புதிய வேட்பாளர் ஒருவரை தயார்படுத்தும் புதிய முயற்சியொன்றில் சுமந்திரன் ஈடுபட்டுள்ளார்!

ஏற்கனவே தென்னிந்திய திருச்சபையை சேர்ந்த டானியல் தியாகராஜாவை களமிறக்கும் முயற்சியொன்றை சுமந்திரன் மேற்கொண்டிருந்தார். எனினும், மதம் சார்ந்த விமர்சனங்களை அது தோற்றுவிக்கலாமென இரா.சம்பந்தன் உள்ளிட்ட சிலர் அதை நிறுத்துமாறு அறிவுறுத்தியதாக தெரியவருகிறது.

இந்த நிலையிலேயே புதிய வடமாகாணசபை வேட்பாளர் ஒருவரை தயார்படுத்தும் முயற்சியில் எம்.ஏ.சுமந்திரன் ஈடுபட்டுள்ளார். அந்த வேட்பாளர்- வடமாகாணசபையின் பிரதம செயலாளர் அ.பத்திநாதன்!

Image result for வà®à®®à®¾à®à®¾à®£ பிரதம à®à¯à®¯à®²à®¾à®³à®°à¯ பதà¯à®¤à®¿à®¨à®¾à®¤à®°à¯நிர்வாக அனுபவமுள்ள அவரை முதலமைச்சராக்கினால், நிர்வாகத்தை சிறப்பாக செய்வார் என சுமந்திரன் கூட்டமைப்பின் “மிக உயர்பீடத்திடம்“ விளக்கமளித்ததாக கூறப்படுகிறது!

 

பத்திநாதனை அரசியலுக்கு அழைத்து வரும் திட்டம் சுமார் ஒரு மாதத்தின் மேலாக சுமந்திரனிடம் இருந்துள்ளது. அடுத்த பாராளுமன்ற தேர்தலில் அவரை களமிறக்கும் திட்டம் இருந்ததை தமிழ்பக்கம் அறிந்துள்ளது.

மன்னாரை சேர்ந்த தமிழரசுக்கட்சி எம்.பி சாள்ஸ் நிர்மலநாதனை வெட்டிவிடுவதற்காகவே இந்த திட்டம் தயாராகியிருந்தது. எனினும், வடமாகாணசபை தேர்தல், உடனடி நெருக்கடியாக எழுந்துள்ள நிலையில், பத்திநாதனை களமிறக்கலாமென ஆலோசனைரீதியான முன்மொழிவை கூட்டமைப்பின் “மிக உயர்பீடத்திடம்“ சுமந்திரன் முன்வைத்துள்ளதாக தெரிகிறது.

சாள்ஸ்ஸில் என்ன கோபம் சுமந்திரனுக்கு?

சாள்ஸ் நிர்மலநாதனின் அரசியல் நகர்வுகளை சுமந்திரன் ரசிக்கவில்லை. முஸ்லிம்களை எதிர்த்து அரசியல்செய்வதுடன், மன்னாரில் தமிழரசுக்கட்சியின் கட்டுப்பாடுகளை ஏற்க மறுத்துவருகிறார். கிளிநொச்சியில் எப்படி சிறிதரன் ஜமீன்தாராக இருக்கிறாரோ, அப்படி மன்னாரில் தான் ஜமீன்தாராக உருவெடுக்க முயற்சிக்கிறார். ஒரு ஜமீன்தாருடனேயே சமாளிக்க முடியாமலிருக்கும்போது, இன்னொரு ஜமீன்தாரும் உருவானால் கட்சிக்கு சிக்கல் என உணர்வதாக தெரிகிறது.

கடந்த உள்ளூராட்சி தேர்தல் ஆசன பங்கீட்டில் கூட்டமைப்பின் தலைவர்கள் எடுத்த முடிவை ஏற்க மறுத்து, மன்னாரின் அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் முகவராக நியமிக்கப்பட்டதிலிருந்தும் விலகுவதாக கூறியிருந்தார்.

மன்னார் நகரசபையை ரெலோவிற்கு விட்டுக்கொடுத்ததற்கு எதிராக பெரும் குழப்பத்தில் ஈடுபட்டிருந்தார். அந்த சமயத்தில் பாராளுமன்றத்திற்குள் ஒரு சம்பவம் நடந்தது. ரவூப் ஹக்கீமின் அறைக்கு சென்று சுமந்திரன் பேசிக்கொண்டிருந்தபோது, சுமந்திரனை தேடி ஹக்கீமின் அறைக்குள் நுழைந்த சாள்ஸ் பெரும் மோதலில் ஈடுபட்டார். அந்த மோதலின் பாதியில், அறைக்குள் இருந்து கோபத்துடன், முகம் சிவந்தபடி சுமந்திரன் வெளியேறியிருந்தார்.

இந்த சமயத்தில்தான் பத்திநாதனை மன்னாரில் அடுத்த எம்.பியாக களமிறங்கும் திட்டம் தயாரானது!

இப்பொழுது அந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டு, மாகாணசபைக்குள் களமிறக்கலாமா என சுமந்திரன் யோசிப்பதாக தெரிகிறது.

பத்திநாதன் விடுதலைப்புலிகளின் தீவிர அனுதாபியாக இருந்தவர், அதனால் அரச நிர்வாகத்தில் பாதிப்புக்களையும் எதிர்கொண்டவர். இந்த அடையாளம் தேர்தலில் வெற்றிபெற உதவுமென கணக்கிடுவதாக தெரிகிறது.

 

ஆனாலும், இது இன்னும் ஆலோசனை மட்டத்திலேயே உள்ளது. இரா.சம்பந்தனின் முன்பாக பரிசீலனையில் உள்ள ஒரு விவகாரம். இப்போதைக்கு அவ்வளவுதான்.

 

http://www.pagetamil.com/6761/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.