Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்றைய அரசாங்கத்தின் கடப்பாடு

Featured Replies

இன்றைய அரசாங்கத்தின் கடப்பாடு

04PRO13082018Page1Image0002-93e7a2566da57afc83a156164cf7d4f2cd36ec3f.jpg

 

வ. திருநாவுக்கரசு [முன்னாள் கொழும்பு மாநகரசபை  உறுப்பினர்]

“விஜ­ய­க­லாவின் தற்­கொ­லைக்­குண்டுத் தாக்­குதல்” என்ற தொடரில் கலா­நிதி தயான் ஜய­தி­லக்க 2018.07.05  ஆம் திகதி எழு­திய கட்­டுரை  மீதான பார்வை

“விஜ­ய­க­லாவின் தற்­கொ­லைக்­குண்டுத் தாக்­குதல், வட­ப­குதி நாஸிச வாதம், தமிழ் ஹிட்லர் மற்றும் வடக்­கு –­தெற்கு அர­சியல் என்ற தலைப்பில் கலா­நிதி தயான் ஜய­தி­லக்க மேற்­கு­றித்த கட்­டு­ரையை பலர் படித்­தி­ருப்­பார்கள்.

சில சர்­வ­தேச ஆய்­வா­ளர்கள் தமி­ழீழ விடு­தலைப் புலிகள் இயக்­கத்தை (LTTE) வெவ்­வேறு வகை­யாக இனங்­கண்­டுள்­ளனர் என்று அவர் கூறி­யுள்ளார்.

அதா­வது, முத­லா­வ­தாக லண்டன் (“Economist) கூறி­யுள்­ள­தா­வது; "விடு­த­லைப்­பு­லிகள் இயக்­க­மா­னது பெரும்­பாலும், நிச்­ச­ய­மான பாசிசவாதிகள் என்றும், இரண்­டா­வ­தாக, ஓய்வு நிலை பேரா­சி­ரியர் வால்ற்றர் லாக்கர் அது ஒரு காட்டு மிராண்­டித்­த­ன­மா­னதும், 1920 கள், 1930 கள் காலப்­ப­கு­தியில் ஐரோப்­பாவில் செயற்­பட்­டு­வந்த பாசிச இயக்­கங்­களை ஒத்­த­தா­கவும் (அதா­வது முசோ­லினி, ஹிட்லர் யுகங்கள்) மற்றும் “புலிட்சர்” பரிசு பெற்ற ஊட­க­வி­ய­லாளர் ஜோன் எவ்.பேண்ஸ், அது “தென்­னா­சி­யாவின் பொல்பொற்” எனவும் விப­ரித்­துள்­ளனர் என்­பதே தயான் ஜய­தி­லக்க கூறி வைத்­துள்­ள­வை­யாகும்.

அடுத்­த­தாக அவர் எடுத்­துக்­கொண்ட சர்­சைக்­கு­ரிய விட­ய­மா­னது, முன்னாள் இரா­ஜாங்க அமைச்­ச­ரான விஜ­ய­கலா மகேஸ்­வரன், தமி­ழீழ விடு­தலைப் புலிகள் இயக்கம் மீள எழ வேண்டும் என்று அண்­மையில் யாழ்ப்­பா­ணத்தில் ஆற்­றிய உரையில் குறிப்­பிட்­டி­ருந்த விட­ய­மாகும். அதா­வது, இன்று வடக்கில் இடம்­பெற்று வரும் கொலைச் சம்­ப­வங்கள், குறிப்­பாக சிறார்கள் வன்­பு­ணர்­வுக்கு ஆளாக்­கப்­பட்டு கொலை செய்­யப்­படும் சம்­ப­வங்கள் இடை­ய­றாது இடம்­பெற்ற வண்ணம் உள்­ளன என்ற சூழ்­நி­லையில் மிக அண்­மையில் 6 வய­தான ரெஜினா மிரு­கத்­த­ன­மாகக் கொலை செய்­யப்­பட்ட சம்­ப­வ­மா­னது, மட்­டற்ற வேத­னை­ய­ளிப்­ப­தா­யி­ருந்­தது. புலிகள் மீள எழ வேண்டும் என்று “வாய் தடு­மாறிக் கூறப்­பட்டு விட்­டது என்று பின்பு விஜ­ய­கலா பகி­ரங்­க­மாக விளக்­க­ம­ளித்­தி­ருந்­தா­ரா­யினும், அவர் ஒரு இரா­ஜாங்க அமைச்சர் என்ற வகையில் அர­சியல் ரீதி­யான ஆழ நீளங்கள், எதிர்­வி­ளை­வுகள் முத­லி­ய­வற்றை ஆராய்ந்தே கூறப்­பட வேண்­டிய தந்­தி­ரோ­பாயம் மறந்து விடக்­கூ­டி­ய­தல்ல.

அடுத்­த­தாக, அஸ்­கி­ரிய பீடத்தின் அனு­நா­யக்­க­ரா­கிய வண. வெந்­து­றுவே உப்­பாலி தேரர், முன்னாள் செய­லாளர் கோத்­த­பாய ராஜபக் ஷவிடம் அவ­ரது 69 ஆவது பிறந்த நாள் வைப­வத்தின் போது விடுத்த வேண்­டு­கோளைப் பார்ப்போம். அதா­வது, அவரைப் பலர் ஹிட்லர் என்று அழைத்து வரு­வதால், அவர் ஒரு ஹிட்­ல­ரா­கவே எழுந்து இரா­ணு­வத்தின் துணை­யோடு நாட்டை வழி­ந­டத்த முன்­வர வேண்­டு­மென்று உப­தேசம் கூறி­யுள்ளார். அது நிச்­ச­ய­மான இரா­ணுவ ஆட்­சியை நடத்­து­வ­தற்­கான வேண்­டுகோள் போன்­ற­தல்­லவா? ஏன், முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷவின் ஆட்சி கூட எதேச்­சா­தி­கா­ர­மா­ன­தா­யி­ருந்­ததன் கார­ண­மா­கவே, அப்­போது உதா­ர­ண­மாக கண்டி மாந­கரில் நடத்­தப்­பட்ட பண்­பாட்டு விரோ­த­மான மோட்டார் ஓட்டப் பந்­தய விவ­கா­ரத்தைத் தட்டிக் கேட்­ப­தற்கு மகா­நா­யக்க தேரர்­களே துணிவு காட்­ட­வில்லை.

இங்கே கவ­னிக்­கப்­பட வேண்­டி­யது யாதெனில், எந்­த­வொரு உள்­நாட்டு அல்­லது வெளி­நாட்டு ஆய்­வா­ள­ரென்­றாலும் சரி, தமிழ் ஈழ­வி­டு­த­லைப்­பு­லிகள் இயக்­க­மா­னது தோற்றம் பெற்­ற­தற்­கான வர­லாற்றுப் பின்­னணி யாது என்­பதை ஆராய்ந்­த­றி­வ­தற்குத் தலைப்­ப­ட­வில்லை என்­ப­தாகும். எந்­த­வொரு ஆய்­வா­ள­ரா­வது யதார்த்­த­மா­கவும் நிதா­ன­மா­கவும் ஆராய்ந்து பார்ப்­பா­ராயின் 1948 முதல் பதவி வகித்த எல்லா அர­சாங்­கங்­களும் தமிழ் மக்­க­ளுக்­கெ­தி­ராக அர­சியல் மற்றும் பொரு­ளா­தார ரீதி­யாக பார­பட்­சங்கள் மட்­டு­மல்­லாமல், காலத்­துக்குக் காலம் கட்­ட­விழ்த்து விட்ட இனக்­க­ல­வ­ரங்கள் மற்றும் இன்­னோ­ரன்ன இன்­னல்­கள்­கூட ஏறத்­தாழ 3 தசாப்­தங்­களின் பின்பு தான் விடு­த­லைப்­பு­லிகள் இயக்கம் தோற்றம் பெற்­ற­தற்கு வழி சமைத்­தன என்­பது கிஞ்­சிற்றும் மறைக்க முடி­யாத உண்­மை­யாகும்.

“சிங்­களம் மட்டும்” சட்­டமே

நாட்­டைப்பின் நோக்கி நகர்த்­தி­யது

1956 ஆம் ஆண்டு பொதுத் தேர்­த­லுக்கு முன்­ன­தாக, ஐக்­கிய தேசியக் கட்­சியும் (ஐ.தே.க.) ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் (ஸ்ரீல.சு.க.) “சிங்­களம் மட்டும்” அரச கரும மொழிச் சட்­டத்தைக் கொண்டு வரப்­போ­வ­தாகப் பறை­சாற்­றி­ய­தோடு கழுத்­த­றுப்புப் போட்டிப் பிர­சா­ரத்­திலும் இறங்­கி­யி­ருந்­தன. பின்பு “24 மணித்­தி­யா­லத்தில் சிங்­கள மொழிதான் ஒரே அரச கரும மொழி ஆக்­கப்­படும்” என்று அதி­ரடிப் பிர­சாரம் செய்­துதான் ஸ்ரீல.சு.க. தலைவர் எஸ்.டபிள்யூ. ஆர்.டி.பண்­டா­ர­நா­யக்க முன்­னேறிச் சென்றார்.

அவ்­வா­றாக அவர் தேர்­தலில் வெற்­றி­யீட்­டிய கையோடு “சிங்­களம் மட்டும்" சட்­டத்தை நிறை­வேற்­றினார். இது தொடர்­பாக பாரா­ளு­மன்­றத்தில் இடம்­பெற்ற விவா­தத்­தின்­போது, குறிப்­பாக லங்கா சம­ச­மாஜக் கட்சி சார்பில் கொல்வின் ஆர்.டி.சில்வா உரை­யாற்­று­கையில், கடு­மை­யான எதிர்ப்பை முன்­வைத்­த­போது, “சிங்­களம் மட்டும்” சட்­ட­மா­னது. நாட்டை இரண்­டாக அல்­லது இரத்தம் சிந்தும் இரண்டு துண்­டு­க­ளாக ஆக்­கி­விடும்” என்று எடுத்­து­ரைத்­த­தோடு அச்­சட்­ட­மா­னது, எதிர்­கா­லத்தில் தமிழர் தரப்பில் ஒரு தனி­நாட்­டுக்­கான போராட்­டத்­திற்கு இட்டுச் செல்லும் என்றும் அடித்­துக்­கூறி வைத்தார். பண்­டா­ர­நா­யக்­கா­வுக்கு அது செவிடன் காதில் ஊதிய சங்கு போலா­யிற்று.

பண்­டா­ர­நா­யக்க ஏன் ஸ்ரீலங்கா

சுதந்­திரக் கட்­சியை நிறு­வினார்?

1951 ஆம் ஆண்டு பண்­டா­ர­நா­யக்க ஸ்ரீல.சு.க.வை ஸ்தாபித்­த­போது வெளி­யிட்ட விஞ்­ஞா­ப­னத்தில் சிங்­களம், தமிழ் இரண்டும் அர­ச­க­ரும மொழி­க­ளாக்­கப்­படும் என்று உறு­தி­ய­ளிக்­கப்­பட்­டி­ருந்­த­தா­யினும், பதவி மோகத்தின் கார­ண­மா­கவே அவர் காலை வாரினார் என்­பதைச் சொல்­லத்­தே­வை­யில்லை.

எவ்­வா­றா­யினும், பண்­டா­ர­நா­யக்­கவின் திசை மாற்­றத்­திற்­கான பின்­ன­ணியைப் பார்ப்­போ­மாயின், சுதந்­திர இலங்­கையின் முத­லா­வது பிர­தம மந்­திரி, டி.எஸ்.சேன­நா­யக்­கவே அதன் சூத்­தி­ர­தாரி என்­பதைக் காணலாம். அதா­வது, சேன­நா­யக்க தலை­மை­யி­லி­ருந்த ஐ.தே.க. அர­சாங்­கத்­தி­லேயே பண்­டா­ர­நா­யக்க ஒரு சிரேஷ்ட அமைச்­ச­ரா­கவும் சபை முதல்­வ­ரா­கவும் பதவி வகித்து வந்­தவர். அடுத்த பிர­த­ம­ராக நிய­மிக்­கப்­பட வேண்­டி­யி­ருந்­தவர். ஆனால், தனக்­குப்பின் தனது மகன் டட்லி சேன­நா­யக்­காவை பிர­தம மந்­திரிப் பத­வியில் அமர்த்த வேண்­டு­மென அன்­றைய தேசா­தி­ப­தி­யான சோல்­பரி பிர­புவின் ஒத்­தா­சை­யோடு பண்­டா­ர­நா­யக்­காவை அர­சாங்­கத்­தி­லி­ருந்து வெளி­யேற்றும் நிலைமை உரு­வாக்­கப்­பட்­டது. அப்­போது அதனை தனக்கே உரிய “அடங்காத் தமிழர்” பாணியில் விமர்­சனம் செய்­த­வ­ரா­கிய அன்­றைய வவு­னியா பாரா­ளு­மன்ற உறுப்­பினர் செல்­லப்பா சுந்­த­ர­லிங்கம் எழு­திய சரி­தையில் “சேன­நா­யக்க தனது மகன் டட்­லியைக் காட்­டிலும் நாட்டை நேசித்­தி­ருந்­தா­ராயின் நாட்டின் எதிர்­காலம் நிச்­ச­ய­மாக வேறு­வி­த­மாக அமைந்­தி­ருக்கும்” என்று சாடி­யி­ருந்தார்.

ஆவேசம் கொண்ட பிக்­கு­மா­ருக்கு

பண்­டா­ர­நா­யக்கா அடி­ப­ணிந்தார்

1957 இல் தமி­ழ­ரசுக் கட்­சி­யினர் மேற்­கொள்­ள­வி­ருந்த அரச எதிர்ப்புப் போராட்ட அறி­விப்­பினை அடுத்து தமிழர் பெரும்­பான்மை வடக்கு, கிழக்கு மாகா­ணங்­க­ளுக்கு ஓர­ளவு சுயாட்சி அதி­காரம் வழங்­கு­வ­தற்­கான சில மாற்­றங்­களைக் கொண்டு வரு­வ­தற்­காக தமி­ழ­ரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி. செல்­வ­நாய­கத்­தோடு பிர­தமர் பண்­டா­ர­நா­யக்க நடத்­திய பேச்­சு­வார்த்­தை­க­ளை­ய­டுத்து செய்­யப்­பட்­ட­துதான் பண்டா – செல்வா ஒப்­பந்தம் என்­ற­ழைக்­கப்­பட்ட உடன்­ப­டிக்­கை­யாகும்.

அதற்­கெ­தி­ராக கொதித்­தெ­ழுந்த பிக்­குமார் குழு­வினர் பண்­டா­ர­நா­யக்­காவின் கொழும்பு வாசஸ்­த­லத்தை முற்­று­கை­யிட்டு, நெற்­றிக்கு நேராக விடுத்த மிரட்டல் கார­ண­மாக பண்­டா­ர­நா­யக்க உட­ன­டி­யா­கவே பண்டா – செல்வா ஒப்­பந்­தத்தைக் கிழித்­தெ­றிந்தார். அன்று, அவ் ஒப்­பந்­தத்தை எதிர்த்து ஜே.ஆர்.ஜய­வர்த்­தன மேற்­கொண்ட “கண்டி யாத்­திரை பிக்­கு­மாரின் போராட்­டத்­திற்கு வலு­வூட்­டி­யது.

1958 இல் தமி­ழ­ருக்­கெ­தி­ரான

இனக்­க­ல­வரம்

அடுத்து கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டது தான் 1958 மே மாதத்தில் இடம் பெற்­ற­தா­கிய தமி­ழ­ருக்­கெ­தி­ரான பெரிய இனக்­க­ல­வ­ர­மாகும். அக்­க­ல­வரம் கொழும்­பிலும், தென்­னி­லங்­கையில் வேறு பல இடங்­க­ளிலும் தாண்­ட­வ­மா­டி­யது. அதனை அன்­றைய தலை­சி­றந்த ஆங்­கில ஊட­க­வி­ய­லாளர் ரார்சி வித்­தாச்சி “அவ­ச­ர­காலம்" 58 இலங்கை இனக்­க­ல­வ­ரத்தின் கதை” என்று மகு­ட­மிட்டு மிக கண்­ணி­ய­மாக விலா­வா­ரி­யான நூலை வெளி­யிட்­டி­ருந்தார்.

அக்­க­ல­வ­ரத்தின் கோரத்­தன்­மையை வித்­தாச்சி எழு­திய தனது முடி­வு­ரையில், “அது மனி­த­னுக்கு எதி­ராக மனி­தனால் இழைத்த ஈன­மாகும்” என்று கூறி­யது மட்­டு­மல்­லாமல், “சிங்­க­ள­வர்­களும் தமி­ழர்­களும் பிரிந்து செல்லும் கட்­டத்­திற்கு வந்து விட்­டார்­களா என்று எண்ணத் தோன்­று­கின்­றது” என்றும் குறிப்­பிட்­டி­ருந்தார். அன்று பண்­டா­ர­நா­யக்க சமா­தானம் வேண்டி நாட்டு மக்­க­ளுக்கு உரை­யாற்றச் சென்று வெளிப்­ப­டுத்­திய கருத்­துக்கள் “வீறிட்டு எரியும் நெருப்பில் எண்ணெய் உற்­றி­யது போலி­ருந்­தது” என்று வித்­தாச்சி குறிப்­பிட்­டி­ருந்தார்.

இரண்­டா­வது இனக்­க­ல­வரம்

ஆம், நாட்டில் இரண்­டா­வது இனக்­க­ல­வரம் 1977 இல் ஜே.ஆர்.ஜய­வர்த்­தன ஆட்சிப் பொறுப்­பேற்ற பின்பு நிகழ்த்­தப்­பட்­ட­தாகும். அன்று 5/6 பெரும்­பான்­மை­யோடு அவர் தலை­மையில் ஐ.தே.க. தெரிவு செய்­யப்­பட்­ட­போது தமிழ் மக்­களின் அமோக ஆத­ரவும் நல்­கப்­பட்­டி­ருந்­தது. எவ்­வா­றா­யினும் தேர்தல் வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தற்கு ஜய­வர்த்­தன கொண்­டி­ருந்த நாட்டம் அற்­ப­மா­யி­ருந்­தது. அதா­வது, தமிழ் மக்கள் தொடர்­பாக நியா­ய­மா­னதும் நீண்ட நெடுங்­காலம் தாழ்த்­தப்­பட்டு விட்­ட­து­மான தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணப்­படும் என்று தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்­த­தா­யினும், அவை கிடப்பில் போடப்­பட்டு விட்­டன. ஏனென்றால் ஜய­வர்த்­தன அர­சாங்­கத்­துக்­கெ­தி­ராக தமிழர் தலைமைப் பீடத்­தினால் மேற்­கொண்டு வந்த சில பிர­சார நட­வ­டிக்­கைகள் மீது வெறுப்­ப­டைந்த நிலையில் “சமா­தானம் வேண்­டு­மென்றால் சமா­தானம், யுத்தம் வேண்­டு­மென்றால் யுத்தம்” என்­றொரு பிர­க­ட­னத்தை ஜய­வர்த்­தன வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார்.

1979 இல் கொண்டு வரப்­பட்ட

கோரத்­த­ன­மான பயங்­க­ர­வாத

தடைச்­சட்டம் (PTA)

மேலெ­ழுந்து வந்த தமிழர் தீவி­ர­வாத இயக்­கத்தை முளையில் கிள்­ள­வேண்டும் என்று எண்­ணங்­கொண்டு இயற்­றப்­பட்­ட­துதான் பயங்­க­ர­வாத தடைச்­சட்டம் ஆகும். உட­ன­டி­யா­கவே “பயங்­க­ர­வா­தத்தை 6 மாத காலத்தில் பூண்­டோடு ஒழித்து விடு­மாறு உத்­த­ர­விட்டு, அன்­றைய பிரி­கே­டியர் வீரத்­துங்க தலை­மை­யி­லான குழு யாழ்ப்­பா­ணத்­துக்கு அனுப்­பப்­பட்­டது. அங்கே சில இளை­ஞர்கள் சுட்­டுக்­கொல்­லப்­பட்­ட­தோடு அவர்­க­ளது உடல்கள் வீதி­யோ­ரங்­களில் வீசப்­பட்­டி­ருந்­தன. அந்த நிலை தமிழர் தரப்­பி­லான ஆயுதப் போராட்­டத்­திற்கு எண்ணெய் ஊற்­றி­ய­துபோல் அமைந்­தி­ருந்­தது.

அத­னை­ய­டுத்து “யாழ்ப்­பாண மாவட்ட அபி­வி­ருத்தி சபை” தேர்தல் நடை­பெ­ற­வி­ருந்த சம­யத்தில் அரும் பொக்­கி­ச­மான யாழ்ப்­பாண நூல் நிலையம் அர­சாங்­கத்தின் கைக்­கூ­லி­களால் தீயிட்டு சாம்­ப­லாக்­கப்­பட்­டது. அதன்பின் தமி­ழீழ விடு­த­லைப்­பு­லிகள் தரப்­பி­னரால் 13 சிங்­கள படை­வீ­ரர்கள் பொறி­வைத்துக் கொலை செய்­யப்­பட்­ட­தற்கு பழி­வாங்கும் நோக்­கி­லேயே 1983 (கறுப்பு ஜூலை) இனக்­க­ல­வரம் கட்­ட­விழ்த்து விடப்­பட்­டது. அதுவே பின்பு வெடித்து 30 வரு­ட­கால யுத்­தத்­திற்கு உர­மூட்­டி­யது. பல்­லா­யி­ரக்­க­ணக்­கான பொது­மக்­களும் படை வீரர்­களும் கொன்­ற­ழிக்­கப்­பட்­டனர். யுத்த செல­வின­மாக 200 பில்­லியன் அமெ­ரிக்க டொலர் தொகை இறைக்­கப்­பட்­ட­தாக இலங்­கைக்­கான முன்னாள் இந்­திய தூதுவர் சிவ்­சங்கர் மேனன் மேற்­கொண்ட ஆய்வின் பிர­காரம் வெளி­யி­டப்­பட்ட அறிக்­கையில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது.

மஹிந்த ராஜபக் ஷவினால் அன்று

முன்­வைக்­கப்­பட்ட சில சாத­க­மான

முன்­மொ­ழி­வுகள்

2006 ஆம் ஆண்டு ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக் ஷ அதி­கா­ரப்­ப­கிர்வு தொடர்­பாக நம்ப முடி­யா­த­ள­வுக்கு சாத­க­மான சில யோச­னை­களை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்தார். அதா­வது, மிக அதிக அள­வுக்கு அதி­காரப் பகிர்வு செய்­யப்­ப­டு­வது அவ­சி­ய­மாகும் என்று கருத்து வெளிப்­ப­டுத்­தி­ய­தோடு முன்னாள் சட்­டமா அதிபர் சீ.ஆர்.டி.சில்வா தலை­மையில் “கற்­றுக்­கொண்ட பாடங்கள்" மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­டது.

அவ் ஆணைக்­கு­ழு­வினால் சில காத்­தி­ர­மான சிபா­ரி­சுகள் முன்­வைக்­கப்­பட்­டன. உதா­ர­ண­மாக 1948 முதல் ஆட்சி செய்த எல்லா அர­சாங்­கங்­களும் அதி­கா­ரப்­ப­கிர்வு தொடர்­பாக தமிழ் மக்­களின் கோரிக்­கை­களும் கரி­ச­னை­களும் கவ­னத்தில் எடுக்­கப்­பட்டு அவ­சி­ய­மான அர­சியல் தீர்வு காண்­ப­தற்கு தவ­றி­விட்­டன என்று வெளிப்­ப­டை­யாக எடுத்­து­ரைத்­துள்­ளது. அதன் கார­ண­மா­கவே 30 வருட கால யுத்தம் இடம்­பெற்­றி­ருந்­தது என்­ப­தையும் துல்­லி­ய­மாக எடுத்­துக்­காட்­டி­யுள்­ளது. துரதிஷ்டவசமாக அவ் அறிக்கை இன்று வரை முழுமையாக நடைமுறைப்படுத்தாமல் கிடப்பிலேயே உள்ளது.

இன்றைய அரசாங்கத்தின் கடப்பாடு

இன்றைய சிறிசேன – விக்ரமசிங்க நல்லாட்சி அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு முன்வைத்த தேர்தல் வாக்குறுதிகளை இற்றைவரை நிறைவேற்றத் தவறியுள்ளது. குறிப்பாக, புரையோடிப்போயுள்ள தமிழ் தேசிய இனப்பிரச்சினைக்கு காத்திரமானதொரு அரசியல் தீர்வு உள்ளிட்ட புதிய அரசியலமைப்பு விவகாரம் விரைந்து கையாளப்படாமலிருப்பது துர்ப்பாக்கியமானதாகும். அதுவே 30 வருட கால யுத்தத்திற்கு அடிப்படைக்காரணம் என்பது இன்னும் தான் உணரப்படவில்லை. எனவே, இன்றைய அரசாங்கம் தொடர்ந்தும் இன, மத, வெறிபிடித்த பிற்போக்குவாத சக்திகளுக்கு அடிபணியாது, நாட்டை வேகமாக முன்னேற்றப்பாதையில் நகர்த்திச் செல்வது அதி பிரதானமாகும்.

இறு­தி­யாக 1952 ஆம் ஆண்டு சிங்­கப்பூர் பிர­தமர் லீ குவான் யூ “இலங்­கையை எட்­டிப்­பி­டிக்­க­வேண்டும்” என்று நாட்­டங்­கொண்டு, அதே சுலோ­கத்தை அப்­போ­தைய தமது தேர்தல் விஞ்­ஞா­ப­னத்தில் உள்­ள­டக்­கப்­பட்­டி­ருந்தது. ஆனால், சில வரு­டங்கள் கழித்து சிங்­கப்பூர் அப­ரி­மி­த­மான அபி­வி­ருத்தி அடைந்­து­விட்ட நிலையில், "3 ஆவது உல­கத்­தி­லி­ருந்து முதலாவது உல­கத்­துக்கு” என்று அவர் மகு­ட­மிட்­டெ­ழு­திய நூலில், “சிங்­களம் மட்டும்” எனும் கொள்­கையைக் கடைப்­பி­டித்­ததன் கார­ண­மாக இலங்கை அலை­க­டலில் சிக்கித் தத்­த­ளித்து விட்­டது (Lagged behind in “Turbulent waters” என்று எள்­ளி­ந­கை­யா­டி­யி­ருந்தார் என்பதை எல்லோரும் ஞாபகத்தில் வைத்திருப்பது அவசியமாகும்.

http://epaper.virakesari.lk/newspaper/Daily/main/2018-08-14#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.