Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சீன மொழியால் தமி­ழுக்கு ஆபத்தா?

Featured Replies

சீன மொழியால் தமி­ழுக்கு ஆபத்தா?

SAMAKALAM150918-PG04-R1Page1Image0002-4ceae067da2c982545228dafd8bafaf357ab5a3c.jpg

 

என்.கண்ணன்

 

இலங்­கையில் சீனாவின் பொரு­ளா­தார, முத­லீட்டு ஆதிக்கம் பற்றி வெளி­நா­டு­களில் அதி­க­மாகப் பேசப்­பட்டு வரும் நிலையில், அதனைத் தவிர்ந்த வேறு விட­யங்­க­ளிலும் சீனாவின் தலை­யீ­டுகள் குறித்த கரி­ச­னைகள் உள்­நாட்டில் ஏற்­படத் தொடங்­கி­யி­ருக்­கின்­றன.

ஒரு காலத்தில் சீனா தனது விலை­ம­திப்புக் குறைந்த உற்­பத்திப் பொருட்­களால், உலகின் பெரும்­பா­லான நாடு­களின் சந்­தை­களை நிரப்­பி­யது. இப்­போது, முத­லீ­டுகள் மற்றும் தனது தொழிற்­ப­டையின் மூலம், வெளி­நா­டு­களை நிரப்பத் தொடங்­கி­யி­ருக்­கி­றது.

அவ்­வா­றா­ன­தொரு நிலையைச் சந்­தித்­தி­ருக்கும் நாடு தான் இலங்­கையும். இலங்­கையில் அதி­க­ரித்து வரும் சீனர்­களின் செல்­வாக்கு, பல்­வேறு தாக்­கங்­களை ஏற்­ப­டுத்தத் தொடங்­கி­யி­ருக்­கி­றது. மொழி, கலா­சார, சமூக விட­யங்­க­ளிலும் இதன் தாக்கம் எதி­ரொ­லிக்கத் தொடங்­கி­யி­ருக்­கி­றது.

கடந்த 6ஆம் திகதி நாட்டின் பல்­வேறு பொலிஸ் நிலை­யங்­களில் இருந்து தெரிவு செய்­யப்­பட்ட பொலிஸ் அதி­கா­ரி­களின் குழு­வொன்று பீஜிங்­கிற்குப் புறப்­பட்டுச் சென்­றது.

சீன மொழி­யான மாண்­டரின் மொழியைக் கற்­ப­தற்­கா­கவே, பொலிஸ் அதி­கா­ரிகள் பீஜிங்­கிற்கு அனுப்­பப்­பட்­டுள்­ளனர். இதற்கு முன்னர் ஆங்­கிலம் கற்­பிப்­ப­தற்­கா­கவே, வெளி­நாட்­டுக்கு பொலிஸ் அதி­கா­ரிகள் அனுப்­பப்­பட்­டனர். இப்­போது முதல் முறை­யாக, மாண்­டரின் மொழியை கற்க சீனா­வுக்கு அனுப்­பப்­பட்­டி­ருக்­கி­றது பொலிஸ் அதி­கா­ரிகள் குழு.

ஏனென்றால், இலங்­கையில் சீனர்­களின் பிர­சன்னம் அதி­க­ரித்­தி­ருக்­கி­றது. இங்கு நடக்கும் குற்­றச்­செ­யல்­க­ளுடன் தொடர்­பு­டைய சீனர்­களைக் கையா­ளு­வ­தற்கும், அவர்கள் சார்ந்த பிரச்­சி­னை­களைத் தீர்ப்­ப­தற்கும் சீன மொழியைத் தெரிந்­தி­ருக்க வேண்­டிய கட்­டாயம் பொலி­ஸா­ருக்கு ஏற்­பட்­டுள்­ளது.

இங்கு தொழி­லா­ளர்­க­ளா­கவோ, சுற்­றுலாப் பய­ணி­க­ளா­கவோ வந்து குவியும் சீனர்­களில் ஒரு பகு­தி­யினர் சட்­ட­வி­ரோத தொழில்­களில் ஈடு­ப­டு­கின்­றனர். குற்றச் செயல்­களில் ஈடு­ப­டு­கின்­றனர். எனவே, இவர்­களைக் கையா­ளு­வ­தற்கு சீன மொழியை பொலிஸார் தெரிந்­தி­ருக்க வேண்­டி­யி­ருக்­கி­றது.

இலங்­கையில் சீனாவின் முத­லீட்டில் மேற்­கொள்­ளப்­படும் அபி­வி­ருத்தி மற்றும் உட்­கட்­ட­மைப்புத் திட்­டங்­களில், பணி­யாற்­று­வ­தற்கு ஆயி­ரக்­க­ணக்­கான சீனர்கள் இலங்­கைக்கு வந்­தி­ருக்­கி­றார்கள்.

சுமார் 6000 சீனர்கள் அரசின் அனு­மதி பெற்று இங்கு பணி­யாற்­று­வ­தாக ஒரு புள்­ளி­வி­பரம் அண்­மையில் வெளி­யா­னது. ஆனால், சட்­ட­வி­ரோ­த­மாக தங்­கி­யி­ருக்கும் சீனர்­களின் எண்­ணிக்கை தெரி­யாது என்­பதால், இதனை முழு­மை­யான தரவு எனக் கொள்ள முடி­யாது.

கொழும்பு நகரில் தங்­கா­லிக இடங்­களில் தங்­கி­யி­ருக்கும் சீன தொழி­லா­ளர்­களை, வேலைத் தளங்­க­ளுக்கு ஏற்றி இறக்­கு­வ­தற்கு குறிப்­பிட்ட நேரத்­துக்கு அந்­தந்த நிறு­வ­னங்­களால் தனிப்­பட்ட பஸ் சேவை­களும் கூட நடத்­தப்­ப­டு­கின்­றன.

சீன தொழி­லா­ளர்­களின் எண்­ணிக்கை நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­கி­றது. இதனால், உள்­நாட்டு தொழி­லா­ளர்­க­ளுக்­கான தொழில் வாய்ப்­புகள் பறிபோய்க் கொண்­டி­ருக்­கின்­றன.

இந்­தி­யா­வுடன் எட்கா உடன்­பாடு கையெ­ழுத்­தி­டப்­பட்டால், இந்­தி­யாவில் இருந்து, தொழி­லா­ளர்கள் இங்கு படை­யெ­டுப்­பார்கள் என்று எதிர்ப்புத் தெரி­விக்கும், அர­சி­யல்­வா­தி­களோ, தொழிற்­சங்­கங்­களோ, சீனத் தொழி­லா­ளரின் படை­யெ­டுப்பின் தாக்கம் பற்றி கவ­லைப்­பட்­ட­தில்லை.

சீனாவின் முத­லீட்­டி­லான திட்­டங்கள் அதி­க­ரிக்க அதி­க­ரிக்க, இங்கு சீனத் தொழி­லா­ளர்­களின் எண்­ணிக்­கையும் அதி­க­ரித்து வரு­கி­றது. குறிப்­பாக, கொழும்புத் துறை­முக நகரம், அம்­பாந்­தோட்டை துறை­முக கைத்­தொழில் வலயம் என்­பன முறைப்­படி செயற்­படத் தொடங்­கினால், இங்கு சீனர்­களின் நட­மாட்டம் இன்னும் பன்­ம­டங்கு அதி­க­ரிக்கும்.

அது­போ­லவே, இலங்­கைக்கு வரும் சீன சுற்­றுலாப் பய­ணி­களின் எண்­ணிக்­கையும் சடு­தி­யாக அதி­க­ரித்­தி­ருக்­கி­றது, இந்த ஆண்டின் முதல் 8 மாதங்­களில், சுமார் 1.5 மில்­லியன் வெளி­நாட்டு சுற்­றுலாப் பய­ணிகள் இலங்கை வந்­தி­ருக்­கின்­றனர். அவர்­களில் சுமார் இரண்டு இலட்சம் பேர் சீனர்­க­ளாவர்.

சுற்­றுலா வீசாவில் வரும் சீனர்­களில் குறிப்­பிட்­ட­ள­வானோர், குறித்த காலத்­துக்குள் நாடு திரும்­பு­வ­தில்லை. அவ்­வா­றா­ன­வர்­களை சட்­டத்தின் முன் நிறுத்­தவும், பொலி­ஸா­ருக்கு மாண்­டரின் மொழி அறிவு தேவைப்­ப­டு­கி­றது.

சீனர்கள் மற்றும் ஜப்­பா­னி­யர்கள், பொது­வா­கவே ஆங்­கி­லத்தை அறிந்­தி­ருப்­ப­தில்லை. ஆங்­கி­லத்தில் பெரும்­பாலும் சுத்த சூனி­ய­மா­கவே இருப்­பார்கள். அதனால் தான், அவர்­களின் தாய்­மொ­ழியைக் கற்­ப­தற்­காக அந்த நாட்­டுக்கே செல்ல வேண்­டிய நிலை இலங்கைப் பொலி­ஸா­ருக்கு ஏற்­பட்­டி­ருக்­கி­றது.

இதில் சோக­மான விடயம் என்­ன­வென்றால், இலங்­கையில் உள்ள பெரும்­பா­லான பொலிஸ் நிலை­யங்­களில், குறைந்­த­பட்சம், தமிழ்­மொழி தெரிந்த ஒரு பொலிஸார் கூட இல்­லாத நிலைமை இன்­னமும் தொடர்­கி­றது. இப்­போது தான், தமிழ்­மொழி தெரிந்த குறைந்­தது ஒரு பொலி­ஸா­ரை­யா­வது நிய­மிக்கும் செயற்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­டு­கி­றது.

இலங்­கையில் பிர­தா­ன­மாக பேசப்­படும் இரண்­டா­வது மொழி தமிழ். ஆனாலும், தமிழ் மொழியை உரி­ய­வாறு பயன்­ப­டுத்­து­வ­தற்­கான ஒழுங்­குகள் இன்­னமும் இல்லை. பொலிஸ் உள்­ளிட்ட துறை­களில் தமிழ் மொழிக்கு உரிய இடம் அளிக்­கப்­ப­டு­வ­தில்லை.

ஆனால், சீன மொழியைக் கற்றுக் கொள்­வ­தற்கு பீஜிங்­கிற்குச் சென்­றி­ருக்­கி­றது பொலிஸ் அதி­கா­ரிகள் குழு.

இலங்­கையில், தமிழை விட சீன மொழிக்கு முக்­கி­யத்­துவம் அதி­க­ரிக்கத் தொடங்­கி­யி­ருக்­கி­றதா என்ற கேள்வி இதனால் ஏற்­பட்­டி­ருக்­கி­றது. இந்த விட­யத்தில் மாத்­தி­ர­மன்றி இன்னும் பல விட­யங்­க­ளி­னாலும் கூட, இந்த சந்­தேகம் ஏற்­ப­டு­கி­றது.

அண்­மையில் வெளி­நாடு ஒன்றில் இருந்து பால் பொருட்­களை இறக்­கு­மதி செய்து விற்கும் நிறு­வனம் தனது வெண்ணெய்ப் பொதி ஒன்றில், ஆங்­கிலம், சிங்­களம், சீன மொழி ஆகி­ய­வற்றை மாத்­திரம் அச்­சிட்டு விற்­ப­னைக்கு விட்­டி­ருந்­தது.

இது­வ­ரையில் தமிழ், ஆங்­கிலம், சிங்­கள மொழி­களில் தான் பொது­வாக, எல்லா நிறு­வ­னங்­களும் தமது உற்­பத்­தி­களை சந்­தைப்­ப­டுத்­தின. குறித்த நிறு­வ­னமும் அவ்­வாறு தான் தனது உற்­பத்­தி­களை சந்­தைப்­ப­டுத்­தி­யது.

திடீ­ரென தமிழ்­மொ­ழியை நீக்கி விட்டு, சீன மொழியை உள்­ள­டக்­கி­யி­ருக்­கி­றார்கள். அந்த விவ­காரம் குறித்து பலரும் சமூக ஊட­கங்­களில் உணர்ச்சி வசப்­பட்டு விவா­தித்­தனர். தமிழ் மொழியை அச்­சிடும் வரை குறித்த உற்­பத்­தியை புறக்­க­ணிக்க வேண்டும் என்றும் சிலர் ஆலோ­ச­னை­களை முன்­வைத்­தனர்.

அதற்கு அந்த நிறு­வனம், ஏதோ சப்பை நியா­யத்தை கூறி நழு­வி­யி­ருக்­கி­றது. தமது உற்­பத்தி கிழக்கு, தெற்கு ஆசி­யா­வுக்கு என்றே தயா­ரிக்­கப்­பட்டு பொதி­யி­டப்­ப­டு­வ­தா­கவும், எனவே குறித்த பிராந்­தி­யத்தில் பேசப்­படும் மொழி­க­ளுக்கு முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­ப­டு­வ­தா­கவும் நியா­யப்­ப­டுத்­தி­யது அந்த நிறு­வனம்.

இது­வரை தமிழ் மொழிக்கு முக்­கி­யத்­துவம் இருந்­தது. இப்­போது சீன மொழி அந்த இடத்தைப் பிடித்­தி­ருக்­கி­றது அது தான் உண்மை.

இலங்­கையில் சீனர்­களின் பிர­சன்னம் அதி­க­ரித்­தி­ருப்­பதால் தான் பொதி­களில் சீன மொழி அச்­சி­டப்­பட்­டது என்­பதே உண்மை நிலை. தமி­ழர்­களை விட சீனர்கள் இங்கு அதி­க­மில்லை. ஆனாலும் தமிழ் மொழியை இல­கு­வாக தூக்கி வீசி விட்டு சீன மொழி திணிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.

இதே நிலை வேறு பல உற்­பத்திப் பொருட்­க­ளிலும் வரத் தொடங்கி விட்­டது. இப்­போது சீன மொழியில் அச்­சி­டப்­பட்ட பொதிகள் பல விற்­ப­னைக்கு வரு­கின்­றன.

     

 

இனிமேல் பஸ்­களில் சீன மொழியில் இடங்­களின் பெயர்கள் காட்­சிப்­ப­டுத்­தப்­படும் நிலையும் வரலாம்.

இது ஒரு வகையில் சீனாவின் கலா­சார மற்றும் மொழி ரீதி­யான படை­யெ­டுப்பு. முத­லீ­டு­க­ளினால் நாடு­களின் பொரு­ளா­தா­ரத்தை வசப்­ப­டுத்தும் சீனா தனது தொழிற்­ப­டையைக் கொண்டு, கலா­சார, மொழி ஆக்­கி­ர­மிப்பு ஒன்­றையும் முன்­னெ­டுக்­கி­றது.

இலங்­கையில் சீன மொழியின் ஆதிக்கம் அதி­க­ரிக்கும் போது, பாதிக்­கப்­ப­டு­வது தமிழ் மொழி தான். அதற்கு உதா­ர­ண­மான இரண்டு சம்­ப­வங்கள் ஏற்­க­னவே சுட்­டிக்­காட்­டப்­பட்­டி­ருக்­கின்­றன.

பிற மொழி­களின் அறிவு இன்­றைய உலகில் முக்­கி­ய­மா­னது. சீன மொழி என்­றில்லை எல்லா மொழி­க­ளையும் அறிந்­தி­ருப்­பதில் தவ­றில்லை. ஆனால், அதுவே இன்­னொரு மொழியை, இனத்தை, நாட்டை, கலா­சா­ரத்தை, பண்­பாட்டை உடைத்து நொருக்­கு­வ­தற்கு காரணியாகி விடக் கூடாது.

இலங்கையில் சீனர்களின் தலையீடு பற்றி இப்போது தான் மெல்ல மெல்ல ஊடகங்களில் செய்திகள் வரத் தொடங்கியிருக்கின்றன. மக்கள் மத்தியில் குறிப்பாக, சீனத் தொழிலாளர்கள் அதிகம் தங்கியுள்ள, அவர்கள் பணியாற்றும் இடங்களை அண்டிய பகுதியில் உள்ள மக்கள் தான் இதுபற்றி அதிகம் பேசுகிறார்கள்.

ஏனென்றால், அவர்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் தான் சீனர்களால் பறிக்கப்படுகிறது. அவர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலையும், ஊதியமும் அவர்களால் பங்கிடப்படுகிறது.

ஏனைய பகுதிகளில் உள்ள மக்களுக்கு இது அதிகம் தெரிவதில்லை. ஆனால் இந்த நிலை நீடிக்கப் போவதில்லை.

சீனா நாடெங்கும் உட்கட்டமைப்புத் திட்டங்களின் மீது ஆர்வம் காட்டும் நிலையில் எல்லாப் பகுதிகளிலுமே சீனர்களையும் அவர்களால் ஏற்படக் கூடிய மொழி, கலாசார, சமூக பாதுகாப்பு அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளும் நிலை வரத் தான் போகிறது.

http://epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2018-09-16#page-4

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.