Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெட் ஏர்வேஸ் பயணிகளின் காது, மூக்கில் ரத்தம்; காற்றழுத்தம் குறைந்ததால் விபரீதம்

Featured Replies

ஜெட் ஏர்வேஸ் பயணிகளின் காது, மூக்கில் ரத்தம்; காற்றழுத்தம் குறைந்ததால் விபரீதம்

ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்டோருக்கு மூக்கிலும், காதிலும் ரத்தம் வழிந்ததாகவும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜெட் ஏர்வேஸ் விமானம்படத்தின் காப்புரிமைREUTERS

விமான கேபின் காற்றழுத்தத்தை ஒழுங்குபடுத்தும் விசையை இயக்க ஜெட் ஏர்வேஸ் விமானிகள் மறந்துவிட்டதால் இப்பயணிகளுக்கு ரத்தம் வந்துள்ளது.

மும்பையில் இருந்து ஜெய்ப்பூர் சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானம் 9 டபிள்யூ 697 விமானம் மேலெழுந்து பறந்த சற்று நேரத்தில், திரும்பி வந்து மும்பையில் தரையிறங்கியது.

விமானத்திற்குள் ஆக்ஸிஜன் முகமூடிகள் வழங்கப்பட்டதை இந்த விமானத்தில் இருந்த பயணிகள் டுவிட்டரில் பதிவிட்ட காணொளிகள் காட்டுகின்றன.

166 பயணிகளுடன் சென்ற போயிங்-737 வகை விமானம், பாதுகாப்பாக தரையிறங்கியது.

விமான கேபின் குழுவினர் பணியில் இருந்து வெளியேற்றப்பட்டு விசாரிக்கப்படவுள்ளனர் என விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.

விமானத்தின் உள்ளே காற்றழுத்தம் குறைந்ததை அடுத்து பயணிகள் சுவாசிப்பதற்காக ஆக்ஸிஜன் முகமூடிகள் இறக்கப்பட்டதையும் காட்டும் காணொளியை தர்ஷாக் ஹதி என்ற பயணி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தன்னுடைய மூக்கில் இருந்து ரத்தம் வடிவதை காட்டும் புகைப்படத்தை டுவிட்டரில் பதிவிட்டுள்ள இன்னொரு பயணியான சதீஷ் நாயர், இந்த விமான நிறுவனம் பயணிகளின் பாதுகாப்பை முற்றிலும் புறக்கணித்துள்ளது என குற்றஞ்சாட்டினார்.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @satishnairk
View image on TwitterView image on TwitterView image on Twitter
 

@jetairways Flight 9W 697 made an emergency landing back in Mumbai. Airplane lost pressure immediately after taking off...scores of passengers including me bleeding from nose....no staff to help...no announcement on board to wear the oxygen mask.passengersafety completelyignored

 
 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @satishnairk

விமானத்தின் உள்ளே காற்றழுத்தத்தை பராமரிக்கின்ற விசையை அழுத்த விமான ஊழியர்கள் மறந்துவிட்டதாக இந்திய விமானப் போக்குவரத்து ஒழுங்காற்று அமைப்பான பயணியர் விமான போக்குவரத்து தலைமை இயக்குநரகத்தின் மூத்த அதிகாரி லலித் குப்தா தெரிவித்துள்ளார்.

விமான கேபினில் காற்றழுத்தம் குறைந்ததால் வியாழக்கிழமை காலை விமானம் மும்பைக்கே திரும்பியது என்றும், பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியத்திற்கு வருந்துவதாகவும் ஜெட் ஏர்வேஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

கடந்த ஜனவரியில், லண்டனில் இருந்து மும்பை வந்த விமானத்தின் விமானி அறையில் இரண்டு விமானிகள் சண்டை போட்டுக்கொண்டதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து இரண்டு விமானிகளுக்கும் ஜெட் ஏர்வேஸ் தடைவிதித்தது. 324 பேரை சுமந்து வந்த அந்த விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது.

https://www.bbc.com/tamil/india-45588433

  • தொடங்கியவர்

விமானத்தில் காற்றழுத்தம் குறைந்தால் என்ன செய்ய வேண்டும்?

வியாழக்கிழயைன்று 9 டபிள்யூ 697 ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்டோருக்கு மூக்கிலும், காதிலும் ரத்தம் வழிந்து அவர்களுக்கு சிகிகிச்சையும் அளிக்கப்பட்டது.

விமானம்படத்தின் காப்புரிமைREUTERS

மும்பையில் இருந்து ஜெய்ப்பூர் சென்ற இந்த விமானம் மேலெழுந்து பறந்த சற்று நேரத்தில், திரும்பி வந்து மீண்டும் மும்பையில் தரையிறங்கியது.

விமான கேபின் காற்றழுத்தத்தை ஒழுங்குபடுத்தும் விசையை இயக்க ஜெட் ஏர்வேஸ் விமானிகள் மறந்துவிட்டதால் இந்த விபரீதம் ஏற்பட்டது.

விமானத்தின் கேபினிலுள்ள காற்றழுத்தம் குறையும் வேளையில், பணிகள் என்ன செய்ய வேண்டும்?

விமானங்கள் மேலேழும்போதும், கீழிறங்கும்போதும், அதன் கேபினில் இருக்கும் காற்று அழுத்தம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். இதன் காரணமாகதான் நமது காதுகளில் ஏதோ அடைப்பதுபோல உணர்கிறோம். ., .

விமானம் மேலெழுந்து பறப்பதற்கு முன்னால் சுருக்கமாக சொல்லப்படும் அறிவுறுத்தல்களை பலரும் கேட்டிருக்கலாம்.

அடிக்கடி விமானத்தில் செல்வோர் இதனை அப்படியே சொல்ல முடியும்.

"ஆக்ஸிஜன் முகமூடி கீழே விழும். அதனை எடுத்து உங்களை நோக்கி இழுத்து குழந்தைக்கு உதவுவதற்கு முன்னால் உங்கள் முகத்தில் பொருத்தி கொள்ளுங்கள்....."

ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் நிகழ்ந்துள்ளதை பார்த்தால், இந்த சுருக்கமான விமானப் பயணக் குறிப்புகள் எவ்வளவு முக்கியம் என்பது தெரிய வரும்.

கடந்து செல்க ஃபேஸ்புக் பதிவு இவரது BBC News தமிழ்

 

முடிவு ஃபேஸ்புக் பதிவின் இவரது BBC News தமிழ்

விமானம் பறக்கும் உயரம்

பயணியர் விமானம் வழக்கமாக 40 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும். இந்த உயரத்தில் காற்றிலுள்ள ஆக்ஸிஜன் அளவு மிகவும் குறைவாக இருக்கும்.

நீங்கள் சாதாரணமாக மூச்சுவிட முடியவில்லை என்றால், தன்னிலையிழத்தல், சுயநினைவிழைத்தல், இறுதியில் மரணம் என பாதிப்புக்கள் தொடங்கும்.

இந்த பாதிப்புகள் தொடங்குவதற்கு முன்னர் உங்களுக்கு இருக்கின்ற அவகாசம் சுமார் 12 வினாடிகள் மட்டுமே.

விமானி அறைபடத்தின் காப்புரிமைINDRANIL MUKHERJEE/AFP/GETTY IMAGES

விமானங்கள் மேலேழும்போதும், கீழிறங்கும்போதும், அதன் கேபினில் இருக்கும் காற்றழுத்தம் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். இதன் காரணமாகதான் பயணிகளின் காது அடைக்கும்.

பயணியர் புகார்கள்

விமான கேபினில் காற்று அழுத்தம் குறையும்போது, நன்கு ஒத்திகை செய்யப்பட்ட செயல்முறை விரைவாக நடைமுறைப்படுத்தப்படுகிறது.

அப்போது சாதாரணமாக சுவாசிக்கக்கூடிய காற்று கிடைக்கின்ற சுமார் 8,000 அடி உயரத்திற்கு விமானத்தை விரைவாக இறக்கிவிட வேண்டும்.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @satishnairk
 
 

@jetairways Flight 9W 697 made an emergency landing back in Mumbai. Airplane lost pressure immediately after taking off...scores of passengers including me bleeding from nose....no staff to help...no announcement on board to wear the oxygen mask.passengersafety completelyignored

 
 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @satishnairk

கீழுள்ள வான்பரப்பு போக்குவரத்து பாதையில் சிக்கல் இல்லாததை உறுதிசெய்து கொள்வதற்கு அவசரமாக நடைமுறைகளை ஆலோசித்தல், வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு நிலையத்தோடு தொடர்பு கொள்ளுதல் வேண்டும்.

வேறு ஏதாவது அமைப்புகள் பழுதடைந்துள்ளதா என்பதையும் சோதிக்க வேண்டும்.

விமானத்திலுள்ள ஆக்ஸிஜன் அமைப்புகள் 12 நிமிடங்களுக்கு மட்டுமே ஆக்ஸிஜனை சேமித்து வைத்திருக்கும் என்பதால், அவசர நேரத்தில் ஒவ்வொரு வினாடியும் மிகவும் முக்கியமானவை.

விமான கேபினில் காற்றழுத்தம் குறையும் நேரத்தில் பயணிகள் இரண்டு புகார்களை தெரிவிப்பதாக அனுபவம் வாய்ந்த விமான கேபின் ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

1.ஆக்ஸிஜன் முகமூடிகள் வேலை செய்யவில்லை.

2.விமான ஊழியர்கள் எதுவும் சொல்லவில்லை.

பொதுவாக, விமானத்தில் விழுந்து தொங்குகின்ற முகமூடிகள் வழியாக ஆக்ஸிஜன் மெதுவாக வரும். இதனால், அதில் ஏதோ கோளாறு உள்ளது என்று பயணிகள் குழப்பமடைய வாய்ப்புள்ளது.

சிலவேளைகளில் பயணியர் அதிக கவலையடைந்து, ஆக்ஸிஜன் முகமூடியை மேலிருந்து வலிந்திழுக்க தொடங்கிவிடுவர்.

இத்தகைய அவசர நிலையில், விரைவாக விமானத்தை கீழிறக்குவது ஏன், என்ன நடக்கப்போகிறது என்று விளக்காவிட்டால் பயணிகள் பெரும் அச்சம் அடைவர்.

விமான ஊழியர்களுக்கு உள்ள பிரச்சனை என்னவென்றால், அந்த நிலைமையை கையாளுவதில் அவர்கள் முழுமூச்சோடு பணியாற்றி கொண்டிருப்பதால், பொதுவாக இதனை விளக்குவதற்கு அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை.

தீப்பொறிகள் மற்றும் புகையில் இருந்து பாதுகாத்துக்கொள்ள, பயணிகளை விட இறுக்கமாக விமான ஊழியர்களும் ஆக்ஸிஜன் முகமூடியை அணிந்திருப்பார்கள்.

பயணிகளுக்கு ஆக்ஸிஜன் முகமூடி விரைவாக கிடைப்பதுபோல விமான ஊழியர்களுக்கும் அவை கிடைக்கின்றன. அவர்களுக்கு அருகில் எந்த முகமூடி இருக்கிறதோ, அதனை மாட்டிக் கொண்டு அமர்ந்துவிட வேண்டும் என்று அவசரகால வழிகாட்டு முறை கூறுகிறது.

இலங்கைஇலங்கை

சில வேளைகளில் இதுவொரு பயணியின் ஆக்ஸிஜன் முகமூடியாகவும் இருக்கலாம். இருக்கை எண்ணிக்கையைவிட ஒரு ஆக்ஸிஜன் முகமூடி ஒவ்வொரு இருக்கை வரிசையிலும் அதிகமாக இருக்கும். குழந்தைகளோடு பயணிப்போருக்கு இந்த ஆக்ஸிஜன் முகமூடி கிடைக்கும்.

இந்த சிக்கல்களின் மத்தியில் பயணிகளுக்கு தகவல் தெரிவிப்பது எல்லாவற்றையும் மிகவும் கடினமாக்குகிறது.

காற்றழுத்தம் குறைவதால் ஏற்படும் அவசர நிலை, விமான நிறுவனத்தின் வாடிக்கையாளர் உறவில் ஒரு கசப்பான அனுபவத்தை ஏற்படுத்தும்.

ஆனால், ஜெட் ஏர்வேஸ் விமான சம்பவத்தில் கேபின் காற்று அழுத்தம் குறைந்தபோது மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகள் சரியாக வேலை செய்து, விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளது.

https://www.bbc.com/tamil/india-45602949

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.