Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி! புதிய குதிரையா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி! புதிய குதிரையா?

மாற்றம் ஒன்று தான் மாறாதது என்ற கருத்தியலில் சாமானியர்களுக்கு ஆழமான புரிதல் இருந்ததோ இல்லையோ அதனை முன்னாள் முதல்வராகும் சீ.வி விக்னேஸ்வரன் தனது 79 வது பிறந்தநாளுக்கு மறுநாளான இன்று சரியாக புரிந்துகொண்டுள்ளார்.

அவரது இந்தப்புரிதலைத்தான் அவரது வாயால் இன்று தனக்குரிய புதியகட்சியாக பகிரங்கப்படுத்திய தமிழ் மக்கள் கூட்டணியின் முன்னோட்ட அறிவிப்பு வெளிப்படுத்தியது.

ஆனால் விக்னேஸ்வரனின் இந்த அறிவிப்பு முழுஆச்சரியகரமான விடயமே அல்ல. மாறாக இது ஓரளவு எதிர்பார்கப்பட்;ட விடயம்தான்.

ஏனெனில் வட மாகாண சபையின் ஆயுட்காலம் இன்றுடன் முடிவுக்குவருவதால் ஏற்கனவே தன்னுடன் கடுமையான உரசலுக்கு உள்ளாகிவிட்ட தமிழ்தேசியக் கூட்டமைப்புத்தளத்தில் தனக்கு எதிர்காலம் இல்லையென்பதை அவர் சரியாகப்புரிந்திருக்கக்கூடும்.

ஓடும் புளியம்பழமாக தமிழ்தேசியக்கூட்டமைப்பின் முட்டுச்சந்தில் நின்றபடி தனக்குரிய “அவிர்பாகத்துக்காக” இரஞ்சமுடியாதென்பதால் அடுத்தகட்ட அரசியல் ஆட்டத்தின் முக்கியசுழியை யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற தமிழ் மக்கள் பேரவையின் அரங்கில்வைத்து போட்டுவிட்டார்.

இனி தமிழ் மக்கள் கூட்டணி என்ற தனது புதிய குதிரையின் கடிவாளத்தை பிடித்தபடி விக்னேஸ்வரனின் சவாரி இடம்பெறும்.

ஆனால் எல்லோரும் ஏறிய குதிரையில் சக்கடத்தார் ஏறி சறுக்கிய கதைக்கு இந்த சவாரியில் இடமிருக்கின்றதா இல்லையா என்பதை இப்போதைக்கு சொல்லமுடியாது.

நல்லூரில் உள்ள நடராஜாபரமேஸ்வரி மண்டபத்தில் வைத்து விக்னேஸ்வரன் பகிரங்கப்படுத்திய இந்தஅறிவிப்புதமிழ்தேசியக்கூட்டமைப்பு உயர்மட்;ட முகங்களை நிச்சயமாக எரிச்சலூட்டியிருக்கும் என்பதில் ஐயமில்லை. இனித்தான் அவ்வாறான எரிச்சல்கள் வசவுகள் சார்ந்த அதிர்வுகள் வெளிப்படக்கூடும்.

ஏற்கனவே விக்னேஸ்வரனை முதலமைச்சராக்கியது 5 வருடத்துக்கு முன்னர் தாம் செய்த பாவமென கடந்த சில தினங்களுக்கு முன்னர் தமிழரசுகட்சித்தலைவர் மாவை சேனாதிராஜா மனம் குமுறினார்.

இந்தநிலையில், இது பாவமல்ல …வரம் என்பதாக தனது தமிழ்மக்கள் கூட்டணி என்ற புதிய கட்சியின் அறிவிப்பை பகிரங்கப்படுத்தி விக்னேஸ்வரன் சில விடயங்களை சொல்லிவிட்டார்.

தமிழ் மக்களின் தற்போதய பிரதிநிதித்துவ அரசியலானது மக்கள் பங்களிப்புடன் கூடிய ஒரு அரசியல் பயணமாக மாற்றமடைய வேண்டிய காலகட்டத்திலுள்ளது எனவும் இந்தமாற்றத்தை உருவாக்கும் நோக்கத்துடன்தான் தனது புதிய தமிழ் மக்கள் கூட்டணியை ஆரம்பித்ததாகவும் விக்னேஸ்வரனின் கோடிடல் அமைந்தது,

நேற்று இடம்பெற்ற வடமாகாண சபையின் இறுதி அமர்வின் உரையில் சொல்லியவிடயங்களின் நீட்சியாகவும் இன்றைய அவரது உரையை நோக்கமுடியும்.

வடக்கு, கிழக்கில் சமஷ்டி முறையிலான தீர்வொன்றைப் பெறமுடியாது என சொல்லும் அரசியல்வாதிகளின் குரல்களுக்கு தமிழ்மக்கள் முக்கியத்துவம் கொடுக்கக் கூடாது என நேற்று அவர் வடமாகாண அரங்கில் சொல்லியிருந்தார்.

அதாவது நேரடியாக இல்லாமல் மறைமுகமாக அவர் தமிழ்தேசியக்கூட்டமைப்பை தாக்கியிருந்தார்

தமிழர்களின் அரசியல்அபிலாசைகளை அடையாளங்கண்டுகொள்ளாமல் இனப்பிரச்சினைக்கான தீர்வாக சிறிலங்காவின் புதியஅரசியலமைப்பு என்ற மாயமானை ஏற்றுக்கொள்வதால்; தமிழ்மக்களின் ஆயுதவழி அரசியல்போராட்டத்தால் கட்டியெழுப்பட்டபேரம் பேசும் நிலைமை ஒழிக்கபட்டதாக விமர்சனத்தையும் அவர் தொடுத்தார்.

அத்துடன் தமிழ்மக்களின் அங்கீகாரம் இன்றி வடக்கு, கிழக்கு இணைப்பு, சமஷ்டி போன்றவிடயத்தை கைவிட்டு ஒற்றையாட்சிமுறையை சமகாலதமிழ் தலைவர்கள் ஏற்றுக்கொண்டதாக இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஜோடிகளை குறிவைத்து தாக்கியவர் இதுதானா சாணக்கிய அரசியல், என வினா எழுப்பி தமிழ் மக்களின் எண்ணங்கள் தமிழ்தலைமைகளால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

இதேபோல தான் கடந்த ஐந்துவருடகாலப்பகுதியில் முதல்வராக இருந்தபோது வடமாகாணசபையின் வினைத்திறன் தொடர்பாக எழுப்பபட்ட விமர்சனங்களையும் மாகாணசபைக்கு வழங்கப்பட்ட பெருந்தொகை நிதிசெலவு செய்யப்படாமல் மீண்டும் கொழும்புக்குச்சென்றதான குற்றச்சாட்டுக்களையும் நாசூக்காக அவர் கொழும்பைநோக்கி திருப்பியடித்திருந்தார்.

வட மாகாணசபையின் அபிவிருத்திக்கான போதியநிதியைத் தராமலும் அதிகார வரம்புகளை ஏற்படுத்தியும் அரசாங்கம் வடக்கின் பொருளாதார அபிவிருத்தியைத் தடுத்ததாக குற்றஞ்சாட்டிய அவர் தற்போது வட மாகாண சபையின் ஆயுட்காலம் முடிவடையும் நிலையில் வடக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி குழு அமைக்கபட்டதான சூட்சுமத்தையும் சொன்னார்.

ஆகமொத்தம் 24 மணிநேரங்களுக்கு இடையே வழங்கிய இரண்டு உரைகள் ஊடாக விக்னேஸ்வரன் தனது புதிய கட்சியின் உருவாக்கத்தை நியாயப்படுத்த முயற்சிகள் எடுத்திருக்கிறார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன்னர், தமிழ் மக்கள் பேரவை ஆரம்பிக்கப்பட்டவேளை, அந்ததளத்தில் தனக்கு தேர்தல்அரசியலை மைய்யப்படுத்திய எதிர்பார்ப்புகள் இல்லை எனக்;குறிப்பிட்டு கூட்டமைப்புடனான நேரடி உரசலை விக்னேஸ்வரன் ஒரளவு தவிர்த்தார்.

ஆனால் இப்போது அதே விக்னேஸ்வரன்தான் தமிழ்மக்கள் கூட்டணி என்ற அடையாளத்துடன் எதிர்கால அரசியலுக்குத்தயாராகிவிட்டார். ஆனால் தமிழ்மக்களின் வாக்குச்சீட்டுக்களை மையப்படுத்திய அவரது இந்த அரசியல் அதிகாரத்தை கையகப்படுத்தும் முனைப்பு வரமா? சாபமா? அது இனிமேல்தான் தெரியவரும்.

விக்னேஸ்வரனின் தமிழ்மக்கள் கூட்டணி இரா.சம்பந்தனின் தமிழ்தேசியக்கூட்டமைப்பை விஞ்சிமக்கள் இயக்கம் என்ற நிலையை அடையுமா? அதுவும் இனிமேல்தான் தெரியவரும்.

எனினும் விக்னேஸ்வரனை மையப்படுத்திய, தேர்தல் அரசியல் அரங்கு தயாராகியே விட்டது

இது, இதுவரை தமிழர்தாயகத்தில் ஏறக்குறைய ஏகபோகநிலையில் இருக்கும் தமிழ்தேசியக்கூட்டமைப்புக்கும் நல்லசெய்தியே அல்ல இவைதான் இப்போதைய யதார்த்தங்கள்

 

https://www.ibctamil.com/articles/80/107980

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.