Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருகோணமலையில் அமெரிக்காவின் படைத்தளமா? - யதீந்திரா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யதீந்திரா 
திருகோணமலையில், அமெரிக்கா படைத்தளத்தளமொன்றை உருவாக்குவதற்கு முயற்சித்து வருவதான செய்திகளை ஆங்காங்கே காணக் கூடியதாக இருக்கிறது. கடந்த ஆண்டு அமெரிக்க துணை ஜனாதிபதி மைக் பென்ஸ், சீனாவின் ஹம்பாந்தோட்டை துறைமுகம் விரைவில், சீனாவின் முன்னணி படைத்தளமாக மாறுவதற்கான வாய்ப்;புக்கள் இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். சீனாவின் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையிலேயே ஹம்பாந்தோட்டை சீனாவின் கைகளுக்கு சென்றிருக்கிறது. இது சீனாவின் கடன்பொறி ராஜதந்திரத்தின் (debt diplomacy ) வெற்றி என்றும் பென்ஸ் குறிப்பிட்டிருந்தார். இதே வேளை கடந்த ஆண்டு செம்டம்பரில், அமெரிக்க செனட்டர்கள் 14பேர் இணைந்து, அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஜேம்ஸ் மார்ட்டிக்கு (James Mattis) ஒரு கடிதத்தை அனுப்பியிருந்தனர். பார்க்கிஸ்தானின் ஹவுடார் மற்றும் இலங்கையின் ஹம்பாந்தோட்டையில் சீனா கால் பதித்திருப்பதானது, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில், சீன மக்கள் இராணுவத்தின் (PLA) நிரந்தரமான இருப்புக்கு வழிவகுக்கலாம் – என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டிருந்தனர் இதனை கருத்தில்கொண்ட, ஜேம்ஸ், ஹம்பாந்தோட்டை சீனாவின் கடற்படைத்தளமாக பயன்படுத்தப்படுமாயின், ஹம்பாந்தோட்டை ஒரு அச்சுறுத்தலாகமே அமையும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறானதொரு பின்புலத்தில்தான், தற்போது திருகோணமலையில் அமெரிக்கா படைத்தளமொன்றை நிறுவ முற்படுவதான செய்திகள் வெளியாகியிருக்கின்றன. லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும் மகிந்த முகாமைச் சேர்ந்தவருமான, பேராசிரியர் திஸ்ஸவிதாரண, கடந்த ஜனவரியில் இவ்வாறானதொரு குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். அதே வேளை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜெயசேகரவும், அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் இலங்கைக்குள் இடம்பெறுவதாக குறிப்பிட்டிருந்தார். இதே வேளை, கடந்த பெப்பிரவரி மாதம் இடம்பெற்ற பாராளுமன்ற விவாதமொன்றின் போது, ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர் விமல் ரத்நாயக்க, இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையில், இரகசிய உடன்பாடு ஒன்று, இருப்பதாக குற்றம்சாட்டியிருந்தார். படைகளை வெளிநாடுகளில் நிறுத்தி வைப்பதை ஏற்றுக்கொள்ளும் உடன்பாடான Status of Forces Agreement (SOFA) எனப்படும், புதிய ஒப்பந்தமொன்ளறில், இலங்கை கையெழுத்திடவுள்ளதாகவும் ரத்நாயகக்க குற்றம்சாட்டியிருந்தார்.

இராணுவ தேவைகளுக்கான பொருட்கள், போக்குவரத்து தொடர்புகள் மற்றும் அயூத தளபாடங்களின் பரிவர்த்தனை ஆகியவற்றுக்காக குறித்த நாடுகளை பயன்படுத்திக்கொள்வதற்கான Acquisition and Cross-Servicing Agreement (ACSA) எனப்படும், உடன்பாடு ஏற்கனவே அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையில் இருக்கிறது. இந்த உடன்பாடு முதல்முதலாக 2007ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. அப்போது இந்த உடன்பாட்டில் இலங்கை சார்பில் கோத்தபாய ராஜபக்சவே கையெழுத்திட்டிருந்தார். இந்த உடன்பாடு மீண்டும் 2017ஆம் ஆண்டு, மைத்திரி – ரணில் அரசாங்கத்தினால் புதுப்பிக்கப்பட்டது. அமெரிக்கா மேற்படி உடன்பாட்டை 76 நாடுகளுடன் செய்திருக்கிறது. ரத்நாயக்க குறிப்பிடுவது போன்று, படைகள் தரித்து நிற்பதற்கான ‘சோபா’ உடன்பாட்டில் இலங்கை கையெழுத்திடுமாயின், அதன் பின்னர் அமெரிக்க படைத்தளம் என்பது ஒரு விடயமல்ல. ஆனால் திருகோணமலையில் அமெரிக்கப் படைத்தளம் என்னும் கருத்தை அமெரிக்க தூதரகம் நிராகரித்திருக்கிறது. அதே போன்று அரசாங்கமும் நிராகரித்திருகின்றது.

z_p-29-Trinco-02-500x454

ஜே.ஆர்.ஜெயவர்த்தன காலத்தில், திருகோணமலையை அமெரிக்காவின் கடற்படை தேவைகளுக்காக பயன்படுத்துவதற்கான உடன்பாடு காணப்பட்டது. அந்தக் காலத்தில அமெரிக்கா, திருகோணமலையில் ஒரு கடற்படைத் தளத்தை நிறுவப்போவதான கதைகளும் அடிபட்டன. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் இந்தியா அதில் தலையீடு செய்தது. இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில், திருகோணமலை துறைமுகம் மற்றும் இலங்கையின் ஏனைய எந்தவொரு துறைமுகங்களையும் இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் ஏனைய நாடுகளின் இராணுவ தேவைகளுக்காக பயன்படுத்த முடியாது என்னும் ஏற்பாடும் உள்நுழைக்கப்பட்டது. இந்த உடன்பாடு இப்போதும் உண்டு. ஆனால் அப்போதிருந்த இந்தியாவும் அமெரிக்காவும் இப்போதில்லை. சீனாவை ஒரு வரையறைக்குள் முடக்குதல் என்னும் அமெரிக்க மூலோபாயத்தின் பிரதான பங்காளியாக இந்தியாவே இருக்கிறது. இவ்வாறானதொரு பின்புலத்தில், இலங்கையை மையப்படுத்தி அமெரிக்காவும் இந்தியாவும் ஒரு நேர்கோட்டில் சந்திப்பதற்கான வாய்புக்களே ஏராளம்.

மூலோபாய ரீதியில், இலங்கை, குறிப்பாக திருகோணமலை கடற்படை தளத்தை உருவாக்குவதற்கு ஏற்றவாறான, அமைவிடத்தை கொண்டிருக்கிறது என்றே பல்வேறு இராணுவ நிபுனர்களும் கருதுகின்றனர். இது தொடர்பில் ளுஅயடட றயச துழரசயெட தளத்தில் எழுதியிருக்கும், ஓய்வுபெற்ற அமெரிக்க கடற்படை அதிகாரியும் முலோபாய கற்கைகள் தொடர்பான பேராசிரியருமான டேவிட் அன்டர்சன் (Dr. David A. Anderson) மூலோபாய நோக்கிலும், பாதுகாப்பு நலன்களின் அடிப்படையிலும் பார்த்தால், இலங்கை மிகவும் பொருத்தமானதொரு அமைவிடத்தில் இருக்கிறது. இது அமெரிக்காவின் நலனுக்கு மட்டுமல்ல, இந்தியா மற்றும் இலங்கையினது, பல்வேறு நலன்களுக்குமான ஒன்று. அதாவது, கடல் பாதுகாப்பு, அனுவாயுத பரவல், கடற்கொள்ளை, தீவிரவாதத்தை கட்டுப்படுத்துதல் அது மட்டுமன்றி சீனச் செல்வாக்கின் விஸ்தரிப்பை குறைத்தல் என பல்வேறு விடயங்களை கையாளுவதற்கு ஏற்றவாறான ஒரு கடற்படை தளத்திற்கு இலங்கை மிகவும் பொருத்தமானது என்கிறார் அன்டர்சன்.

இந்த பின்புலத்தில் பார்த்தால், திருகோணமலையை இலக்கு வைப்பதற்கான அனைத்து அவசியப்பாடுகளும் உண்டு. ஆனால் தெற்கின் சில அரசியல்வாதிகள் கூறுவது போன்று அது உண்மைதானா என்பதுதான் இங்கு கேள்வி. தமிழ் நிலையில் நோக்கினால் அது உண்மையாக இருப்பின் அது ஒரு பிரச்சினைக்குரிய விடயமுமல்ல. ஆனால் இவற்றை எவ்வாறு விளங்கிக் கொண்டு செயலாற்றுவது என்பதுதான ;பிரச்சினையானது? அமெரிக்காவின் இராணுவ செல்வாக்கு இலங்கைக்குள் அதிகரித்துவருதாக, சிங்கள கட்சியான ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி) தொடர்ச்சியாக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறது. ஆனால் தற்போது அவ்வாறானதொரு கட்சியுடன், கொள்கைசார்ந்து உடன்பாடு கண்டுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறுகிறது. அமெரிக்காவின் தலையீடுகளை எதிர்பார்த்து காத்திருக்கும் தமிழ் கூட்டமைப்பும், அமெரிக்காவின் தலையீடுகளை, ஜெனிவா பிரேரரணை உள்ளடங்களால, கடுமையாக எதிர்த்துவரும் ஜே.வி.பியும் எவ்வாறு கொள்கைசார்ந்து உடன்பட முடியும்?

z_p-29-Trinco-u

2011இல் ஒபாமா நிர்வாகம் ‘ஆசிய மையக் கொள்கை’ (pivot to Asia) யை பிரகடணம் செய்தது. அமெரிக்காவின் மூன்றில் இரண்டு கடற்படையையும் விமானப் படையையும் ( two-thirds of US naval and air forces) ஆசிய – பசுபிக் பிராந்தியத்தை நோக்கி நகர்;த்துவதுதான் மேற்படி கொள்கையின் பிரதான இலக்கு. இது முற்றிலும் சீன விரிவாக்கத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட ஒன்றாகும். இதன் விளைவாக தற்போது சீனாவை சுற்றி 400 அமெரிக்க படைத்தளங்கள் நிலைகொண்டுள்ளன. ஜப்பானிய தீவான ஒக்கினாவா மற்றும் தென்கொரியாவில் நிலைகொண்டுள்ள அமெரிக்க ஏவுகணைகள் சீனாவை நேரடியாகவே குறிவைத்துள்ளது. உண்மையில் ஓபாமாவின் ஆசிய மையக் கொள்கையின் பின்னர்தான் சீனாவும் தனது கடற்படையை விரிவாக்குவதற்கான முயற்சியில் தீவிரம் காட்டியது. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான், விடுதலைப் புலிகளுக்கு எதிரான 30 வருட கால யுத்தம் முடிவுக்கு வந்திருந்த சூழலை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட சீனா, இலங்கைக்குள் தனது கால்களை வலுவாக ஊன்றத் தொடங்கியது. இங்கு கவனிக்க வேண்டிய விடயம் ஒன்றுண்டு. அதாவது, ஒபாமா நிர்வாகம் ஆசிய மையக் கொள்கையை பிரகடணம் செய்த பின்புலத்தில்தான், இலங்கையின் இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற, மனித உரிமைகள் மீறல்களுக்கு பொறுப்பு கூறல் என்னும் அடிப்படையில், மகிந்த ராஜபக்ச அரசின் மிது, அழுத்தங்களை பிரயோகிக்கத் தொடங்கியது. இதன் விளைவாகவே, 2012இல் இலங்கையின் மீதான முதலாவது அமெரிக்கப் பிரேரணை ஜ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தொடர்ச்சியாக ஒவ்வொரு வருடமும் இலங்கையின் மீதான அமெரிக்க அழுத்தங்கள் தொடர்ந்தன. இவ்வாறானதொரு சூழலில்தான், 2015 ஜனவரி 8இல் மகிந்த ராஜபக்ச ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டார்.

 

http://www.samakalam.com/செய்திகள்/திருகோணமலையில்-அமெரிக்-2/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.