Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு சமூகத்தை புறக்கணிக்க வேண்டாம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புறக்கணிக்க வேண்டாம்

 

ஒரு சமூ­கத்தை அநீ­திக்­குட்­ப­டுத்தும் வகையில் செயற்­பட்­டதன் கார­ண­மாக கடந்த முப்­பது வரு­ட­கா­ல­மாக எமது நாடு மிகப்­பெ­ரிய யுத்­தத்தை எதிர்­கொண்­ட­துடன் அதன் முடிவில் பாரிய விலையை செலுத்­தி­யது.

god_father.jpg

முப்­பது வரு­ட­கால யுத்தம் கார­ண­மாக நாம் எதிர்­கொண்ட பின்­ன­டைவு எத்­த­கை­யது என்­பது அனை­வ­ருக்கும் தெரியும். இந்த யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட மக்கள் வேதனை, துயரம் மற்றும் வடுக்­களை சுமந்து வந்­தனர். பாதிக்­கப்­பட்ட மக்கள் இன்னும் வடுக்­க­ளுடன் வாழ்­கின்­றார்கள். 

இவ்­வா­றான சூழலில் மீண்டும் ஒரு யுத்­தத்­தையோ அல்­லது அது­போன்­ற­தொரு நிலை­மை­யையோ எதிர்­கொள்­ள­வேண்­டிய நிலையில் இந்த நாடு இல்லை என்­பதை அனைத்துத் தரப்­பி­னரும் உணர்ந்­துள்­ளனர். எனவே இது­போன்­ற­தொரு நிலைமை நாட்டில் ஏற்­ப­டாமல் இருப்­ப­தற்கு அர­சியல் தலை­வர்கள், மதத் தலை­வர்கள் மற்றும் சிவில் சமூக பிர­தி­நி­திகள் ஆகியோர் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது. 

மிக விசே­ட­மாக தற்­போது நாட்டில் தோன்­றி­யுள்ள புதிய சூழலில் எந்­த­வொரு சமூ­கமும் அநீ­திக்கு உட்­ப­டா­த­வ­கையில் நடந்­து­கொள்­ள­ வேண்­டி­யது அனை­வ­ரதும் பொறுப்­பாகும். இதில் மக்­களை உரிய முறையில் அர­சியல் மற்றும் மதத் தலை­மைகள் வழி­ந­டத்­த­வேண்டும். குறிப்­பாக தற்­போ­தைய சூழலில் முஸ்லிம் மக்கள் மீதான பார்வை அந்த மக்­களைப் பாரிய அசௌ­க­ரி­யங்­க­ளுக்கு உள்­ளாக்­கி­யி­ருக்­கி­றது. அவர்கள் அனை­வ­ரையும் சந்­தேகக் கண்­கொண்டு பார்க்கும் நிலைமை ஏற்­பட்­டி­ருப்­ப­தாக அந்த மக்கள் கவ­லையில் இருக்­கின்­றனர். 

இந்த நிலை வேண்டாம். நாட்டில் உயிர் அழிவை ஏற்­ப­டுத்­திய இந்த பயங்­க­ர­வாதத் தாக்­கு­தல்­க­ளுக்கும் அப்­பாவி முஸ்லிம் மக்­க­ளுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்­பதை அனைத்துத் தரப்­பி­னரும் ஏற்­றுக்­கொள்­கின்­றனர். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பிர­தமர் ரணில் மற்றும் அமைச்­சர்கள் ஆகி­யோரும் கர்­தினால் மல்கம் ரஞ்சித் ஆண்­ட­கையும் இந்த விட­யத்தை தொடர்ச்­சி­யாக கூறி­வ­ரு­கின்­றனர். 

எனவே இந்த மக்கள் மீது வெறுப்­பு­ணர்வைக் காட்டும் வகையில் எந்­த­வொரு சமூ­கமும் செயற்­பட்­டு­வி­டக்­கூ­டாது. இந்த இக்­கட்­டான நிலை­மை­யி­லேயே அப்­பாவி முஸ்லிம் மக்­களை ஏனைய மக்கள் பாது­காக்­க­வேண்டும் என்­ப­துடன் அவர்­களை அர­வ­ணைத்துச் செல்­ல­வேண்டும். இந்த அசம்­பா­விதம் மற்றும் இழப்­புக்­க­ளுக்கு காரண கர்த்­தா­வாக முஸ்லிம் மக்­களை ஒரு­வரும் நோக்­கி­வி­டக்­கூ­டாது. முஸ்லிம் மக்கள் இந்த சம்­ப­வங்­க­ளையும் பயங்­க­ர­வாத செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்­த­வர்­க­ளையும் கடு­மை­யாக எதிர்த்து வரு­வ­துடன் அவர்­களை நிரா­க­ரிக்­கின்­றனர். எல்­லோ­ருக்கும் முன்­ன­தாக அவர்­களே இந்தப் பயங்­க­ர­வாத தாக்­கு­தலை முன்­னெ­டுத்­த­வர்­களை நிரா­க­ரித்­து­விட்­டனர். எனவே அந்த மக்கள் அசௌ­க­ரி­யப்­படும் வகையில் நாட்டில் ஏனைய சமூ­கத்­தினர் நடந்­து­கொள்­ளக்­கூ­டாது. அது­மட்­டு­மன்றி தற்­போ­தைய சூழலில் நாட்டின் பாது­காப்பை உறு­திப்­ப­டுத்­தவும் மக்­களின் அச்­சத்தைப் போக்­கவும் முப்­ப­டை­யி­னரும் பொலி­ஸாரும் நாட்டில் பாரிய பாது­காப்பு ஏற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். அந்த நட­வ­டிக்­கை­க­ளுக்கு முஸ்லிம் மக்கள் பாரிய ஒத்­து­ழைப்­புக்­களை வழங்கி வரு­கின்­றனர். எனவே இந்த விட­யத்தில் அனைத்துத் தரப்­பி­னரும் மிகவும் நிதா­ன­மா­கவும் சகிப்­புத்­தன்­மை­யு­டனும் சமா­தா­னத்தை ஊக்­கு­விக்கும் வகை­யிலும் செயற்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது. எக்­கா­ரணம் கொண்டும் முஸ்லிம் மக்­களை வெறுப்­பு­ணர்­வுடன் பார்க்­க­வேண்டாம். இந்தத் தாக்­குதல் கார­ண­மாக நாட்டு மக்கள் எவ்­வ­ளவு தூரம் அச்­ச­ம­டைந்­துள்­ள­னரோ அதே அளவு அந்த மக்­களும் பாரிய அச்­சத்­து­ட­னேயே உள்­ளனர். அந்த அச்ச நிலையை போக்­க­வேண்டும். இந்த நாட்டில் தமிழ் மக்­களைப் பொறுத்­த­வ­ரையில் இதே பிரச்­சி­னையை கடந்த 2009 ஆம் ஆண்டு வரை எதிர்­கொண்டு வந்­தனர். அக்­கா­லத்தில் அந்த மக்கள் எதிர்­கொண்ட பிரச்­சி­னைகள் ஏராளம். அதனால் இக்­கட்­டான நிலையில் ஒரு சமூ­கத்தின் மீது வித்­தி­யா­ச­மான பார்வை படும்­போது அல்­லது சந்­தே­கப்­பார்வை இருக்­கும்­போது அந்த சமூகம் எந்­த­ள­வு­தூரம் வலி­களைச் சுமந்து நிற்கும் என்­பதை தமிழ் பேசும் மக்­களால் புரிந்­து­கொள்ள முடியும். 

எனவே ஒரு­சில பயங்­க­ர­வா­திகள் மேற்­கொண்ட செயற்­பா­டு­க­ளுக்­காக  ஒட்­டுமொத்த சமூ­கத்­தையும் இவ்­வாறு நோக்க முற்­ப­டு­வது நியா­ய­மற்­ற­தாகும். எனவே முஸ்லிம் சகோ­தர மக்­களை முதலில் சந்­தேகக் கண்­கொண்டு பார்ப்­பதை அனைத்துத் தரப்­பி­னரும் நிறுத்­திக்­கொள்­ள­வேண்டும். அவர்கள் இந்த நாட்டில் பாது­காப்­புடன் வாழ்­கின்­றனர் என்­பதை அவர்­க­ளுக்கு உண­ர­வைக்­க­வேண்­டி­யது எமது கட­மை­யாகும். இந்த இக்­கட்­டான நிலை­மையில் இந்த மக்­களை அர­வ­ணைத்துச் செல்­வதொன்றே அவ­சி­ய­மாகக் காணப்­ப­டு­கின்­றது. 

சமூகம் பொறுப்பாக முடியாது,

ஒரு­சில அடிப்­ப­டை­வா­திகள் மேற்­கொண்ட செயற்­பா­டு­க­ளுக்கு அமைய ஒட்­டு­மொத்த சமூ­கத்­தையும் வெறுக்க முற்­ப­டக்­கூ­டாது. விசே­ட­மாக சக முஸ்லிம் மக்­க­ளுடன் கலந்­து­ரை­யா­டல்­க­ளின்­போது வார்த்தைப் பிர­யோ­கங்கள் மிக கவ­ன­மாக இருக்­க­வேண்டும். அவர்­க­ளது மனதைப் புண்­ப­டுத்­தும் வ­கை­யி­லான சொற்­பி­ர­யோ­கங்­களைத் தற்­போ­தைய சூழலில் பிர­யோ­கிக்கக் கூடாது. அவர்­களின் உணர்­வு­களை மதிக்க முற்­ப­ட­வேண்டும். இந்த இக்­கட்­டான கட்­டத்­தில்தான் ஏனைய சமூ­கத்­தினர் முஸ்லிம் மக்­க­ளுடன் ஒற்­று­மை­யா­கவும் புரிந்­து­ணர்­வு­டனும் அவர்­களின் உணர்­வு­களைப் புரிந்­து­கொள்­கின்­ற­வர்­க­ளா­கவும் செயற்­ப­ட­வேண்டும். 

இது தொடர்பில் பாரா­ளு­மன்­றத்தில் உரை­யாற்­றி­யி­ருந்த ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மிக முக்­கிய சில விட­யங்­களைக் குறிப்­பிட்­டி­ருந்தார். இந்த பயங்­க­ர­வாத தாக்­கு­தல்கள் கார­ண­மாக ஒட்­டு­மொத்த முஸ்­லிம்­க­ளையும் பயங்­க­ர­வா­தத்துக்குள் தள்­ளு­வதா என்­பதை யோசிக்க வேண்டும். விடு­த­லைப்­பு­லிகள் காலத்தில் சகல தமி­ழரும் புலிகள் என்ற கருத்து உருப்­பெற்­றது. இதனால் எமக்குள் பிரிவு ஏற்­பட்­டது. 83 கல­வ­ரத்தில் தமி­ழர்­களின் சொத்­துக்கள் நாச­மாக்­கப்­பட்­டதை அடுத்து தமிழ் இளை­ஞர்கள் புலி­க­ளுடன்  இணைந்­தனர். நாம் தமிழர் மீதான அவ நம்­பிக்கை கொண்­ட­மையே 30 ஆண்­டு­கால யுத்­தத்தை உரு­வாக்க கார­ண­மாக அமைந்­தது. ஆகவே  இப்­போது நாம் பொறுப்­புடன் செயற்­பட வேண்டும். விடு­த­லைப்­பு­லிகள் என தமி­ழர்­களைப் பார்த்­த­தைப்போல் முஸ்­லிம்­களைப் பயங்­க­ர­வா­திகள் என பார்க்க வேண்டாம்.  விடு­த­லைப்­பு­லிகள் என்ற பெயரில் தமி­ழர்­களைப் போராட்­டத்துக்கு தள்­ளி­ய­தைப்­போன்று  இந்த நாட்­டுடன் தொடர்­பில்­லாத ஒரு இஸ்­லா­மிய பயங்­க­ர­வா­தத்தை சுட்­டிக்­காட்டி ஒட்­டு­மொத்த முஸ்­லிம்­க­ளையும் பயங்­க­ர­வா­தத்­துக்குள் தள்­ளக்­கூ­டாது 

அந்­த­வ­கையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நாட்டின் தலைவர் என்ற ரீதியில் இந்த முக்­கி­ய­மான விட­யத்தைக் கூறி­யி­ருக்­கின்றார்.  மிக முக்­கி­ய­மாக 1983 ஆம்   ஆண்டு கல­வரம்  இந்த நாட்டில் எவ்­வா­றான விளைவை ஏற்­ப­டுத்­தி­யது என்­ப­தனை உணர்ந்து நாம் செயற்­ப­ட­வேண்டும் என்­ப­தனை ஜனா­தி­பதி  நினை­வூட்­டி­யி­ருக்­கின்றார்.  அதன் விளை­வாக நாம்  30 வரு­டங்கள்   நெருக்­க­டி­களை எதிர்­கொண்டோம். எனவே யாரும் தற்­போ­தைய  சூழலில்  தூர­நோக்­கற்ற செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து  பழைய  நிலை­மைக்கு நாட்டைக் கொண்டு சென்­று­வி­டக்­கூ­டாது.  

அதே­போன்று கத்­தோ­லிக்க திருச்­ச­பையின் பேராயர் கர்­தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்­ட­கையும் இந்த விடயம் தொடர்பில் சில முக்­கி­ய­மான ஆழ­மான கருத்­துக்­களை வெளி­யிட்­டி­ருந்தார். அதா­வது  கொச்­சிக்­கடை,  மட்­டக்­க­ளப்பு மற்றும் கட்­டு­வப்­பிட்­டிய போன்ற தேவா­ல­யங்­களில் இடம்­பெற்ற அசம்­பா­வி­தங்கள்  முஸ்லிம் மக்­க­ளினால் மேற்­கொள்­ளப்­பட்­ட­வை­யல்ல. அதனை நான் தெளி­வாகக் குறிப்­பிகி­டுன்றேன். இது தவ­றாக வழி­ந­டத்­தப்­பட்ட இளைஞர் குழு­வினால் முன்­னெ­டுக்­கப்­பட்ட செய­லாகும். அதற்கு முஸ்லிம் மக்­களை பலி­யாக்­கி­விடக் கூடாது. 

எனவே நாம் ஒரு­நாளும் உங்­க­ளுக்கு எதி­ராக செயற்­பட மாட்டோம். தயவு செய்து முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராகக் கையைத் தூக்க வேண்டாம் என கத்­தோ­லிக்க மக்­க­ளிடம்   கோரிக்கை விடுக்­கின்றேன். அவ்­வாறு எந்த செயற்­பாட்­டையும் முன்­னெ­டுப்­ப­தற்கு எந்த உரி­மையும் கிடை­யாது. அவ்­வாறு செய்தால் அது கத்­தோ­லிக்க மதத்­துக்கு எதி­ரா­ன­தாகும். நாம் இரண்டு தரப்­பி­னரும் சகோ­த­ரர்கள். நாம் அனை­வரும் ஆதாமின் பிள்­ளைகள். எனவே நாம் ஒன்­றி­ணைந்து செயற்­பட வேண்டும். நடை­பெற்ற அசம்­பா­வி­தத்­துக்கு முஸ்­லிம்கள் பொறுப்­பாக முடி­யாது. அதனால் அப்­பாவி முஸ்லிம் மக்­க­ளுக்கு இடை­யூ­றாக இருக்கக் கூடாது. அமை­தி­யா­கவும் சமா­தா­ன­மா­கவும்  அனை­வரும் வாழ வேண்டும். முஸ்லிம் மக்­களும் கிறிஸ்­தவ மக்­களும் சகோ­த­ரத்­து­ட­வத்­துடன் வாழ வேண்டும். குறை­பா­டுகள் இருக்­கலாம். மனி­தர்கள் மத்­தியில் குறை­பா­டுகள் ஏற்­ப­டலாம். அவ்­வா­றான சந்­தர்ப்­பங்­களில் பொறுமை காத்து சகோ­த­ரத்­து­வத்­துடன் வாழ வேண்டும்.

கவனம் செலுத்த வேண்டிய அம்சங்கள்,

அதன்­படி பார்க்­கும்­போது நாட்டின் ஜனா­தி­ப­தியும் கத்­தோ­லிக்க திருச்­ச­பையின் பேரா­யரும் தெரி­வித்­துள்ள விட­யங்கள் தொடர்பில் அனைத்துத் தரப்­பி­னரும் கருத்தில் கொள்­ள­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும். தற்­போது இந்த பயங்­க­ர­வாத தாக்­கு­தலின் பின்னர் சில முக்­கிய சட்­ட­திட்­டங்கள் அமு­லுக்கு வந்­துள்­ளன. எப்­ப­டி­யி­ருப்­பினும் முஸ்லிம் சகோ­தர மக்­களின் கலா­சார விழு­மி­யங்­களைப் பாதிக்­கா­த­வாறு இந்த விட­யங்கள் இருக்­க­வேண்டும். தற்­போது புர்கா அணி­வ­தற்கு தடை­வி­திக்­கப்­பட்­டுள்­ளது. தற்­போ­தைய சூழலில் பாது­காப்பு நிலை­மையைக் கருத்­திற்­கொண்டு இந்தத் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. முஸ்லிம் சமூ­கத்­தினர் இந்தத் தீர்­மா­னத்தை ஏக­ம­ன­துடன் ஏற்­றுக்­கொண்­டி­ருக்­கின்­றனர். 

இந்த இடத்தில் முஸ்லிம் அர­சி­யல் த­லை­மை­க­ளுக்கு மிக முக்­கிய பொறுப்பு காணப்­ப­டு­கின்­றது. அவர்கள் தமது சமூ­கத்­தி­ன­ருக்கு சரி­யான தலை­மைத்­து­வத்தை வழங்­க­வேண்டும். இந்தத் தீர்க்­க­மான கட்­டத்தில் உணர்ச்­சி­வ­சப்­பட்டு கருத்­துக்­களை வெளி­யி­டு­வது பொருத்­த­மாக அமை­யாது என்­பதை தலை­மைத்­து­வங்கள் புரிந்­து­கொள்­ள­வேண்டும். கடந்த புதன்­கி­ழமை கூட பாரா­ளு­மன்­றத்தில் இந்த விவ­காரம் தொடர்பில் பாரிய வாதப் பிர­தி­வா­தங்கள் சர்ச்­சைகள் ஏற்­பட்­டி­ருந்­தன. ஆனால் தற்­போ­தைய நிலை­மையில் மக்கள் மத்­தியில் அமை­தியை ஏற்­ப­டுத்­தவும் சகோ­த­ரத்­து­வத்தை வலுப்­ப­டுத்­தவும் அச்ச உணர்வைப் போக்­கவும் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வேண்டும். 

தலைமைத்துவங்களின் பொறுப்பு,

இதற்­காக முஸ்லிம் அர­சியல் தலை­மைத்­து­வங்கள் அந்த மக்­களை சரி­யான முறையில் வழி­ந­டத்­து­வ­தற்­கான செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­க­வேண்டும். எந்­த­வொரு சமூ­கமும் வழி­த­வறிச் சென்­று­வி­டக்­கூ­டாது. அந்த இடத்தில் சர்­வ­மதத் தலை­வர்­க­ளுக்கும் பாரிய பொறுப்பு காணப்­ப­டு­கின்­றது. அதே­போன்று பாது­காப்பு ஏற்­பா­டுகள் பலப்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றன. எனவே அந்த செயற்­பா­டு­க­ளுக்கு அனைத்துத் தரப்­பி­னரும் ஒத்­து­ழைப்புத் தர­வேண்டும். 

இந்­நி­லையில் எந்­த­வொரு சமூ­கத்­தி­ன­ருக்கும் நாட்டில் அநீ­திகள் ஏற்­ப­டு­வ­தற்கு இட­ம­ளிக்கக் கூடாது எந்­த­வொரு சிறு­பான்மை சமூ­கமும் தாம் அநீ­திக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­கின்றோம் என்று உண­ரா­த­வ­கையில் நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்டும். இதில் நாட்டின் அரசின் தலை­மைத்­து­வங்­க­ளுக்கும் மதத்­த­லை­வர்­க­ளுக்கும் சிவில் சமூகத் தலை­வர்­க­ளுக்கும் பாரி­ய­தொரு பொறுப்பு இருக்­கின்­றது என்­பதை உணர்ந்து செயற்­ப­டு­வ­தற்கு முன்­வ­ர­வேண்டும். 

சிறு­பான்மை மக்கள் பாது­காப்­பாக தம்மை உணரும் வகையில் அர­சாங்­கத்தின் செயற்­பா­டுகள் இருக்­க­வேண்டும். கடந்த முப்­பது வரு­ட­கா­ல­மாக இந்த நாட்டில் தமிழ் மக்கள் பாரிய சொல்­லொ­ணாத்­துன்­பங்­களை அனு­ப­வித்து வந்­தனர். யுத்தம் என்­பது அனைத்துத் தரப்­பி­ன­ருக்கும் அழி­வு­களை ஏற்­ப­டுத்­து­வ­தாகும். எனினும் கடந்த 2009ஆம் ஆண்டு வரை இந்த யுத்தம் கார­ண­மாக தமிழ் மக்கள் எதிர்­கொண்ட பிரச்­சி­னைகள் சொற்­களால் விப­ரிக்­கப்­பட முடி­யா­த­வை­யாகும். 

அவ்­வா­றா­ன­தொரு நிலைமை மீண்டும் ஏற்­பட்­டு­வி­டக்­கூ­டாது. அதன்­படி பார்க்கும் போது தற்­போது முஸ்லிம் மக்கள் தொடர்­பான அணு­கு­முறை சரி­யா­ன­தாக இருக்­க­வேண்டும். அவர்­களை புறந்­தள்ளும்­வ­கையில் எந்த செயற்­பா­டு­களும் இருக்­கக்­கூ­டாது. பாதிக்­கப்­பட்­ட­வர்­களின் தலை­மைத்­து­வங்கள் வேத­னையின் கார­ண­மாக சில கருத்­துக்­களை வெளி­யிட்டு வரு­வதைக் காண முடி­கின்­றது. ஆனால் இந்த இடத்தில் அனைத்துத் தரப்­பி­னரும் பொறு­மை­யு­டனும் சகிப்­புத்­தன்­மை­யு­டனும் செயற்­ப­டு­வதே முக்­கி­யத்­து­வ­மிக்­க­தாகக் காணப்­ப­டு­கின்­றது. 

ஒரு இக்­கட்­டான நிலை­மைகள் ஏற்­படும் பட்­சத்தில் குறிப்­பாக மக்கள் பொறு­மை­யுடன் செயற்­ப­ட­வேண்டும். யாரும் யாருக்கு எதி­ரா­கவும் வன்­மு­றை­களைக் கையில் எடுத்­து­வி­டக்­கூ­டாது. எந்­த­வொரு சூழ்­நி­லை­யிலும் முஸ்லிம் மக்களுக்கு எதிராக செயற்பட்டுவிட வேண்டாமென கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வலிந்து கோரிக்கை விடுத்துள்ளார். அவரின் அந்த கோரிக்கையின் தாற்பரியத்தை மக்கள் புரிந்துகொண்டு செயற்படவேண்டும். வன்முறையின் ஊடாக எதனையும் சாதிக்க முடியாது என்பதை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். 

அதனால் முஸ்லிம் சமூகத்தினர் மீதான கெடுபிடிகளுக்கோ சந்தேகத்துடனான பார்வைக்கோ ஒருபோதும் இடம் வைக்கக்கூடாது.இதனை நாட்டின் தலைமைத்துவம் உறுதியாகக் கவனிக்கவேண் டும். ஏற்கனவே ஜனாதிபதியின் இது தொடர்பான அறிவிப்புக்கள் திருப்திகரமாக அமைந்திருக்கின்றன. அவற்றை அனைத்து தரப்பினரும் ஏற்று நடக்கவேண்டும் என்பதே இங்கு அவசியமாகின்றது. ஒரு சமூகத்தை காயத்துக்குட்படுத்தி வடுக்களை ஏற்படுத்துவதன் மூலம் எமது இழப்பை ஈடுசெய்ய முடியாது. 

இதன் பின்னர் இவ்வாறானதொரு அசம் பாவிதம் இடம்பெறாதவகையில் அனைத்து மக்களும் ஒற்றுமையுடனும் புரிந்துணர்வுடனும் செயற்படுவதே தேசிய அவசியமாக காணப்படுகின்றது.

எனவே இக்கட்டான இந்த சூழலில் முஸ்லிம் மக்களை அரவணைத்து அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயற்படுவதற்கு அனைவரும் முன்வரவேண்டும். ஒருசில அடிப்படை வாதிகளின் செயற்பாடுகளுக்காக முழு சமூகத்தையும் சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது நியாயமற்றது. இந்தப் பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு அந்த மக்கள் வழங்கும் ஒத்துழைப்பை கவனத்தில் கொண்டு அவற்றை சரியாகப் பயன்படுத்தி அமைதியான நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் ஒற்றுமையுடன் திடசங்கற்பம் பூணவேண்டும் என்பதே யதார்த்தமான தேவையாகக் காணப்படுகின்றது. 

ரொபட் அண்டனி

 

http://www.virakesari.lk/article/55734

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.