Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோத்தாவின் ஆட்சியில் மலையகத்துக்கு சுபீட்சம் - ஆறுமுகன் தொண்டமான் செவ்வி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கோத்தாவின் ஆட்சியில் மலையகத்துக்கு சுபீட்சம் - ஆறுமுகன் தொண்டமான் செவ்வி

நாங்கள்  32 அம்ச கோரிக்கைகளை  கோத்தபாயவிடம்  முன்வைத்தோம். அவை மலையக மக்களுக்கு மட்டுமன்றி சிறுபான்மை மக்களுக்கான   தேவையான விடயங்களை கொண்டுள்ளன. அவற்றை கோத்தாபய ராஜபக்ஷ முழுமையாக ஏற்றுக்கொண்டார். அவரும் சில  யோசனைகளை எம்மிடம் வழங்கினார்  என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்  தலைவர் ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்தார்.  

தாமரை மொட்டு  அரசாங்கத்தில் 18 ஆம் திகதிக்கு பின்னர் சுபீட்சமான வாழ்க்கையில்  நல்ல வீடுகள் கிடைக்கும். புதிய கிராமங்கள் கிடைக்கும். எல்லாமே கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். 

கேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இதனை குறிப்பிட்டார். செவ்வியின் முழு விபரம் வருமாறு 

கேள்வி: பிரசார பணிகள் எவ்வாறு இடம்பெறுகின்றன? 

பதில்: பிரசார பணிகள் மிகவும் சிறப்பாக  இடம்பெறுகின்றன. நினைத்தைவிட மிக  சிறப்பாக  இடம்பெறுகின்றன. மக்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றனர். 

கேள்வி: மலையகத்தில் நீண்ட வரலாற்றைக் கொண்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இந்த ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷவுக்கு வாக்களிக்க ஏன் முடிவு செய்தது? 

பதில்:  நாங்கள் கோத்தாபயவுக்கு ஆதரவளித்ததற்கான பிரதான காரணம் என்னவென்றால் நாங்கள்  32 அம்ச கோரிக்கைகளை  அவரிடம்  முன்வைத்தோம். அவை மலையக மக்களுக்கு மட்டுமன்றி சிறுபான்மை மக்களுக்கே  தேவையான விடயங்களை கொண்டுள்ளன. அவற்றை கோத்தாபய ராஜபக்ஷ முழுமையாக ஏற்றுக்கொண்டார். அவரும் சில  யோசனைகளை எம்மிடம் வழங்கினார். அத்துடன்  கோத்தாபய ராஜபக்ஷ ஒரு அரசியல்வாதி  கிடையாது.  அவர் ஒரு நிர்வாகியாவார். அதனாலேயே எங்கள் கட்சியின் தேசிய சபை ஏகமனதாக கோத்தாவுக்கு ஆதரவு வழங்க ஏகமனதாக  தீர்மானித்தது. 

கேள்வி: குறித்த 32 விடயங்களில் உள்ள முக்கிய விடயம் என்ன? 

பதில்: அந்த 32 விடயங்களுமே முக்கியமானவைதான். நான் உங்களுக்கு ஒரு பிரதியை தருகின்றேன். நீ்ங்கள் அதனை பார்த்துக்கொள்ளலாம். 

கேள்வி: இந்த  32 அம்ச கோரிக்கையில் தோட்டத்  தொழிலாளரின் சம்பள விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளதா? 

பதில்: சம்பள விடயத்தை ஏன் இந்த விடயத்துடன் முடிச்சுப் போடவேண்டும்.  அது தொடர்பில் ஆராய கூட்டு ஒப்பந்தம் உள்ளது. அந்த கூட்டு ஒப்பந்தத்தில் பேச்சு நடத்தி நாங்கள் சம்பள உயர்வை பெறுவோம். தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை பெற்றுக்கொடுக்க எங்களுக்கு வலிமை உள்ளது. ஏனையவர்களை போன்று முதுகெழும்பு இல்லாதவர்கள் அல்ல நாங்கள். 

கேள்வி: ஜனாதிபதி தேர்தல் குறித்த பேச்சுவார்த்தைகளை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்  புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர்  சஜித் பிரேமதாசவுடனும்  முன்னெடுத்ததே? 

பதில்: அனைத்து கட்சிகளுடனும் பேச்சு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு எமது தேசிய சபையிலிருந்து  செந்தில் மற்றும்  ரமேஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.  பின்னர் இரண்டு தேசிய சபைக் கூட்டங்களை நானே கூட்டினேன். ஆனால்  தேசிய சபை கூட்டத்தின்போது நான் வெளியே சென்றுவிட்டேன். முதல் தேசிய சபை கூட்டத்துக்கு உப தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார்.  இரண்டாவது தேசிய சபைக் கூட்டத்துக்கு  பொதுச் செயலர் அனுஷா  தலைமை தாங்கினார்.  கிடைக்கப்பெற்ற அறிக்கையை வைத்து தேசியசபை இந்த முடிவை எடுத்தது.  அதன்படி தேசிய சபையின் முடிவு எதுவோ அதுவே என்னுடைய முடிவாகும். 

கேள்வி: அப்படியாயின் சஜித் தரப்புடனான பேச்சுவார்த்தை தோல்விக்கான காரணம்? 

பதில்:  இரண்டு தரப்புக்களுடனும்  குழுவே பேச்சு நடத்தியது. அந்த விடயம் குறித்து நீங்கள் அவர்களிடமே கேட்கவேண்டும்.  

கேள்வி: எனினும் காரணத்தை உங்களிடம் தெரிவித்திருப்பார்கள் அல்லவா?  

பதில்: எனக்கு தேசிய சபையின் அறிக்கையே முக்கியம். அறிக்கையைவிட தேசிய சபை என்ன முடிவெடுக்கின்றதோ அதுவே என்னுடைய முடிவாகும். 

கேள்வி:கோத்தாபய ராஜபக்ஷ ஜனாதிபதியானால் வடக்கு கிழக்கு மக்களின்  அரசியல் தீர்வு பிரச்சினைக்கு  சரியான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதா? 

பதில்:  நிச்சயமாக வடக்கு கிழக்கு மக்களின் தீர்வு கிடைக்கும். ஆனால் அதுதொடர்பில் நான் பேசுவது பொருத்தமற்றது.  காரணம் அது வடக்கு கிழக்கு மக்களுடைய பிரச்சினையாகும். அது தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகள் பேசிக்கொண்டிருக்கின்றன. அவர்களுக்கே அந்தப் பிரச்சினை குறித்து முழுமையாக தெரியும். எங்களை பொறுத்தவரை அந்த மக்களுக்கு நாங்கள் எமது முழுமையாக ஆதரவை வழங்குவோம். 

கேள்வி: தமிழ் அரசியல் கட்சிகளின் 13 அம்ச கோரிக்கைகள் தொடர்பில்? 

பதில்:   அவர்களின் தேவைகளை அந்தக் கட்சிகள் முன்வைத்துள்ளன. இது ஜனாதிபதி வேட்பாளரிடம் கேட்கவேண்டிய கேள்வி. நீங்கள் என்னிடம் கேட்கின்றீர்கள். நான் எப்போது ஜனாதிபதி வேட்பாளராகின்றேனோ அன்று நான் வாருங்கள். நான் பதில் கூறுகின்றேன். தற்போதும் நான் தெ ளிவாக கூறுகின்றேன். அந்த மக்களுக்கு என்ன தேவையோ அதற்கு சிறுபான்மை என்ற முறையில் எங்கள் ஆதரவு உண்டு.  

கேள்வி: இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இதற்கு முன்னர் பல அரசியல் தலைவர்களுடன் இணைந்து செயற்பட்டுள்ளது. கோத்தபாய ஒரு நிர்வாகி. இவரிடம் இ.தொ.கா. காணும் விசேட அடையாளம் என்ன?

பதில்: நாம் காணும் விசேட திறமையானது அவர் ஒரு நிர்வாகி என்பதால் அவரின் நிர்வாகம் சிறப்பாக இருக்கும்.  அதுவே எங்கள் மனதுக்குபட்ட விடயம்.  ஏற்கெனவே நான் அவர் பாதுகாப்பு செயலாளராக இருக்கும்போது அவருடன்  பணியாற்றியுள்ளேன். பல்வேறு விடயங்களில் அவரை நான் சென்று பார்த்தபோது அவரின் அனுகுமுறை  மற்றும் எமது விடயத்துக்கு அவர் கொடுத்த தீர்வுகள் என்பன எனக்கு திருப்திகரமாக இருந்தது. 

கேள்வி: சஜித் தரப்புடன் இ.தொ.கா. இணையவிருந்ததாகவும் தமிழ் முற்போக்கு கூட்டணியே இதனை தடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றதே? “

பதில்: தமிழ் முற்போக்கு கூட்டணி என்னை தடுக்க முடியாது. நான் நினைத்திருந்தால் அன்றே அந்த தரப்புடன் இணைந்திருக்கலாம். ஆனால் காங்கிரஸை பொறுத்தவரை கொள்கை உள்ளது.  என்னை தடுப்பதற்கு யாருக்கும் பலம் கிடையாது. என் பலம் தனி பலம்.  

கேள்வி: தனி அரசியல் பலம் அப்படியா? 

பதில்:   தனி பலம்.  அப்படி கூறும்போது எல்லாம் பலமும் சேர்கின்றது. அரசியல் அதில் ஒரு அங்கமாகும். 

கேள்வி: கோத்தாபய ஆட்சிக்கு வந்தால் தொழிலாளர்களுக்கு 1000 ரூபா பெற்றுக்கொடுக்கப்படுமா? 

பதில்:  நான் அவ்வாறு கூறவில்லை. ஆனால் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ வாக்குறுதி வழங்கியுள்ளார். 

கேள்வி: ஆனால் ஆளும் கட்சி வேட்பாளர் சஜித்  1500 ரூபா பெற்றுக்கொடுப்பதாக கூறியுள்ளாரே? 

பதில்: அதனை வரவேற்கின்றேன். என்னுடைய மக்களுக்கு எவ்வளவு அதிகம் கிடைக்கின்றதோ அது எனக்கு மகிழ்ச்சியாகும்.  நான் சந்தோஷம் என்று கூறியதும் ஆறுமுகன் தொண்டமான் காட்டிக்கொடுத்துவிட்டதாக கூறுகின்றார்களே? 

கேள்வி:  கடந்த ஐந்து வருடகாலமாக மலையகத்தில் முன்னெடுக்கப்பட்ட வீடமைப்பு திட்டங்கள் குறித்த உங்கள் மதிப்பீடு என்ன? 

பதில்: கடந்த நான்கரை வருடங்களாக வீடமைப்பு திட்டம் என்று ஒன்று இருந்தது. எங்க காலத்தில் பொதுவாக மக்களுக்கு என்று அதனை முன்னெடுத்தோம்.  ஆனால் கடந்த நான்கரை வருடங்களாக காங்கிரஸில் இருந்து யாராவது விலகி வந்தால் அவர்களுக்கு குருவிக்கூடு கிடைக்கும். அதுதான் நடந்தது.  அதுதான் நல்லாட்சியின் வீடமைப்பு திட்டமாக இருந்தது. 

கேள்வி: கடந்த நான்கரை வருடஙகளாக இந்த வீடமைப்பு விடயத்தில் மலையகத்தில் ஒரு மாற்றம் வரவில்லையா? 

பதில்: மாற்றமே இல்லை. வீடமைப்பே நடக்கவில்லை. காங்கிரஸில் இருந்து விலகி வந்தால் ஒரு குருவிகூடு கிடைக்கும்.  நல்ல வீடுகள் உங்களுக்கு 18 ஆம் திகதிக்கு பின்னர் கிடைக்கும். தாமரை மொட்டு  அரசாங்கத்தில் 18 ஆம் திகதிக்கு பின்னர் சுபீட்சமான வாழ்க்கையில்  நல்ல வீடுகள் கிடைக்கும். புதிய கிராமங்கள் கிடைக்கும். எல்லாமே கிடைக்கும். 

கேள்வி: கோத்தாபய ராஜபக்ஷ ஆட்சிக்கு வந்தால் மலையகத்தில் எவ்வாறான திட்டங்களை இ.தொ.கா. முன்னெடுக்கும்? 

பதில்: முழுமையாக புதிய கிராமங்களுடன்    வீடமைப்பு  திட்டங்கள்  இடம்பெறும். 

கேள்வி: மலையக மக்களுக்கு இன்னும் ஒரு இலட்சத்துக்கு 60 ஆயிரத்துக்கு மேல் வீடுகள் தேவைப்படுகின்றன. குறுகிய காலத்தில் இதனை முன்னெடுக்க முடியுமா? 

பதில்:  நிச்சயமாக செய்யலாம். 

கேள்வி: ஐந்து வருடங்களில் செய்ய முடியுமா? 

பதில்: அவ்வளவு காலம்  தேவையில்லை. அதற்கு முன்னரே செய்யலாம். அதற்கு மனது வேண்டும். அந்த தொலைநோக்கு பார்வை இருப்பது அவசியம்.  

கேள்வி:  இந்த தேர்தல் தொடர்பில் நீங்கள் மலையக மக்களுடன் பேசுகின்றீர்களா? அவர்களின் எண்ணம் எவ்வாறு உள்ளது? 

பதில்: அனைத்து வீடுகளிலும் மொட்டு மலரும். 

கேள்வி: ஜனாதிபதி  தேர்தலில்  இ.தொ.கா.  எடுத்த முடிவில் இந்தியாவின் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றதே? 

பதில்: எமது கட்சிக்கு முதுகெழும்பு இல்லை என்று நினைத்துவிட்டீர்களா?  எமது மக்களுக்கு என்ன தேவையோ அதனை காங்கிரஸ் செய்யும். 

கேள்வி: நீங்கள் ஆதரவு வழங்கும் கோத்தாபய ராஜபக்ஷவின் வெற்றிவாய்ப்பு எவ்வாறு உள்ளது? 

பதில்: நூறுவீதம் சிறப்பாக உள்ளது. நாம் நினைத்ததைவிட அதிகமாக  இருக்கின்றது. சமநிலை எல்லாம் ஒன்றும் இல்லை. 

கேள்வி:மலையக மக்களுக்கு நீங்கள் கூறும் செய்தி? 

பதில்: எமது  மலையக மக்கள் சுதந்திரமாக தெளிவாக முடிவெடுங்கள். நாங்கள் என்று ஒப்பந்தம் செய்து கொண்டோமோ அன்று முதல் மக்களுடன் மக்களாக  இருந்து பிரசார பணிகளை முன்னெடுக்கின்றோம். எனினும சிலர் இதுவரை மலையகத்துக்கே வரவில்லை. தீபாவளி முடிந்து வர இருந்தார்கள். ஏதோ கொண்டுவரப்போறாங்களாம். எமது பிரசார பணிகள் சிறப்பாக இடம்பெறுகின்றன.

மக்கள் மத்தியில் பாரிய வரவேற்பு காணப்படுகின்றது.  மக்களும் மிகவும் தெளிவாக உள்ளனர். நான் மாத்தளையில் நேற்று(சில தினங்களுக்கு முன்னர்)  இருந்தேன். மக்கள் நூறுவீதம் தெளிவாக உள்ளனர். தாமரை மொட்டு என்றே  மக்கள் கூறுகின்றனர். 

கேள்வி: 5000  ரூபா மேலதிக கொடுப்பனவு கொடுக்க முடியாமல் உள்ளதே? 

பதில்:  கொடுப்பதாக கூறியவர்களிடம் சென்று கேட்கவேண்டும். யாரோ பேசுகின்றனர் என்பதற்காக நான் பதில் கூற முடியமா?  

கேள்வி: அதேபோன்று  50 ரூபா கொடுப்பனவும் இழுபறியில் உள்ளதே?  

பதில்: வீதியில் செல்லுகின்ற ஒருவர் கூறுவதற்கு நான் பதில் கூற முடியாது. நான் தெளிவாக கூறுகின்றேன்.  அதற்கான அவசியமும் எனக்கு கிடையாது. 

கேள்வி:  இந்த தேர்தலில் ஜே.வி.பி. தனித்து போட்டியிடுவதைப் பற்றி எவ்வாறு பார்க்கின்றீர்கள்? இது கோத்தாவுக்கு சாதகமாக பாதகமா? 

பதில்: ஜே.வி.பி. தனித்து போட்டியிடுவது கோத்தாபயவுக்கு எந்த பாதகமும் இல்லை. காரணம் கோத்தாபய ராஜபக்ஷவுடன்  பிரதான சிறுபான்மை கட்சியான இலங்கை தொழிலாளர் கைகோர்த் துள்ளது. எனவே  கோத்தாவின் வெற்றி நிச்சயமானது. திரும்பி பார்ப்பதற்கு ஒன்றும் இல்லை.  

நேர் காணல் - ரொபட் அன்டனி

 

https://www.virakesari.lk/article/68022

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.