Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை வரை ‘சமஷ்டி’ கோரிக்கை தொடரும்; சித்தார்த்தன் நேர்காணல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களுக்கு தீர்வு கிடைக்கும் வரை வரை ‘சமஷ்டி’ கோரிக்கை தொடரும்; சித்தார்த்தன் நேர்காணல்

July 28, 2020
  • ரொஷான் நாகலிங்கம்

டக்கு, கிழக்கில் செயற்படும் அனைத்து கட்சிகளும் சமஷ்டி அடிப்படையிலான தீர்வையே கோரி நிற்கின்றன. தமிழ் மக்களுடைய அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு தீர்வு எட்டும்வரை இக்கோரிக்கை தொடர்ந்து கொண்டிருக்கும். தென்னிலங்கை கட்சிகள் இந்த நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சியை மனதில் கொள்வார்களானால் தமிழ் மக்களுடைய தேசிய இனப்பிரச்சினைக்கு ஓர் நியாயமான தீர்வை காண முன்வருவர் என தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

sitharthan-1024x768.jpegகேள்வி – சமஷ்டி குறித்த கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தொடர்பில் தெற்கில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளமை குறித்து உங்கள் கருத்து? 

பதில் – தெற்கில் ஒவ்வொரு முறையும் இவ்வாறான விமர்சனங்கள் வருவது வழக்கம். அவர்களை பொறுத்த மட்டில் தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை பிரிவினை வாதமாக சிங்கள மக்களுக்கு காட்டி வாக்கு சேகரிப்பதே அவர்களது ஒரே நோக்கம்.

சமஷ்டி கோரிக்கை என்பது 1952 ஆம் ஆண்டு தொடக்கம் தமிழ்மக்கள் முன் வைக்கப்பட்டு அங்கீகாரம் பெறப்பட்டு வந்திருக்கின்றது.

வடக்கு, கிழக்கில் செயற்படும் அனைத்து கட்சிகளும் சமஷ்டி அடிப்படையிலான தீர்வையே கோரி நிற்கின்றன. தமிழ் மக்களுடைய அபிலாஷைகளை பூர்த்தி செய்யக்கூடிய ஒரு தீர்வு எட்டும்வரை இக்கோரிக்கை தொடர்ந்து கொண்டிருக்கும். தென்னிலங்கை கட்சிகள் இந்த நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சியை மனதில் கொள்வார்களானால் தமிழ் மக்களுடைய தேசிய இனப்பிரச்சினைக்கு ஓர் நியாயமான தீர்வை காண முன்வருவர்.

கேள்வி – எதிர்வரும் தேர்தலில் யாழ் தேர்தல் மாவட்டத்தின் வாக்கு சீட்டு நீண்டு இருப்பதன் பின்னணி என்ன? 

பதில் – தமிழ் மக்களுடைய வாக்குகளை சிதறடித்து எந்தவொரு தமிழ் தேசிய கட்சியும் ஒரு பலமான அணியாக தமிழ் மக்களுடைய ஒற்றுமையை பிரதிபலிக்கக்கூடிய வகையில் பாராளுமன்ற ஆசனங்களை வெற்றி கொள்ளமுடியாமல் செய்வதற்கான ஒரு திட்டத்தின் பின்னணியே வாக்கு சீட்டின் நீளமாகும்.

அரச கட்சியை பார்ப்பீர்கள் ஆனால் யாழ். தேர்தல் மாவட்டத்துக்கு வெளியே மொட்டு சின்னத்திலேயே ஒன்றுபட்டு போட்டியிடுகின்றனர். இங்கு மாத்திரம் பல்வேறு கட்சிகளாகவும் சுயேச்சை குழுக்களாகவும் பிரிந்து தேர்தலில் போட்டியிடுகின்றார்கள்.

இதன் அடிப்படை நோக்கம் ஒரே கட்சியாக கேட்டால் பத்து வேட்பாளர்கள் மாத்திரம் போட்டியிட முடியும். பிரித்து பிரித்து கேட்கின்ற போது மிக கூடுதலானவர்கள் போட்டியிட முடியும். இதன் மூலம் வேட்பாளர்களின் உறவுகள் நட்பு வட்டாரம் என்று கூறி பல வாக்குகளை சிதைக்க முடியும்.

சுதந்திர கட்சியின் தலைவர் மைத்திரிபாலசிறிசேன பொலநறுவையில் மொட்டு சின்னத்தில் போட்டியிடுகின்றார். ஆனால் இங்கு கைச்சின்னத்தில் அங்கஜன் தலைமையில் சுதந்திர கட்சி போட்டியிடுகின்றது.

அவர்கள் அரச கட்சியின் அதிகாரங்களை உபயோகித்து தேர்தல் விதிமுறைகளை மீறி பல அரச திட்டங்களை திறந்து வைப்பதும் ஆரம்பிப்பது போன்ற பல விடயங்களை அரச உயர் அதிகாரிகளின் துணையுடன் செய்து வருகின்றார்கள்.
அத்துடன் வேலைவாய்ப்பு தருவதாக பெயர் பட்டியல் எடுப்பதும் வீட்டு திட்டங்கள் தருவதாக பெயர்ப்பட்டியல் எடுப்பதும் போன்ற செயற்பாட்டில் இராணுவத்தின் துணையுடன் செயற்படுகின்றார்கள்.

இந்த ஏமாற்று வேலைகளை ஒவ்வொரு தேர்தலிலும் சந்தித்த மக்கள் இந்த பொய்களுக்கு ஏமாறமாட்டார்கள்.

கேள்வி – தேர்தல் குறித்தான சவால்கள் என்ன?

பதில் – தேர்தலிலேயே நான் முன்பு கூறியது போல சுதந்திர கட்சி வேட்பாளர்கள் மிக கடுமையாக தேர்தல் விதிமுறைகளை மீறி செயற்படுகின்றார்கள். தேர்தல் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவிக்கப்படுகின்ற போதும் பெரும்பாலான வேளைகளில் பாராமுகமாக இருக்கின்றார்கள்.

குறிப்பிட்ட தேர்தல் அத்துமீறல் நடைபெற்று முடிந்து சிலமணி நேரங்களின் பின் சம்பவ இடத்துக்கு வந்து முறைப்பாடு தொடர்பில் எந்த விடயங்களும் இடம்பெறவில்லையென கூறுகின்றார்கள்.

முக்கியமாக நான் அறிந்த வகையில் உடுவில் பிரதேச செயலகப் பகுதியில் உடுவில் பிரதேச செயலர் இப்படியான தேர்தல் விதிமுறை மீறல்களை கண்டு கொள்ளாமல் இருக்கும் படி தன்னுடைய கீழ் அதிகாரிகளுக்கு கூறுகின்றார்.
ஆகவே இப்படியான சூழ்நிலையில் தான் நாங்கள் எங்களுடைய தேர்தல் பணிகளை முன்னெடுகின்றோம்.

கேள்வி – கொரோனா சூழ்நிலையில் மக்கள் வாக்களிப்பில் பாதிப்பை ஏற்படுத்துமா? 

பதில் – இப்போது இருக்கும் நிலையில் சாதாரண வாக்களிப்பு நடைபெறும் என்று நம்புகின்றேன். ஆனால் தெற்கில் கொரோனா பரவல் சம்பந்தமாக ஒரு பதற்றமான நிலைமை இருப்பதை காண கூடியதாக உள்ளது.

அந்த நிலைமை இங்கு இல்லை. இருந்தாலும் கெரோனா தொடர்பில் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். வைத்திய அதிகாரிகளுடய ஆலோசணைகளை பின்பற்றி தாங்களே தங்களுடைய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

அதன் பின்பு தான் தேர்தல் சம்பந்தமாக சிந்திக்க வேண்டும்.

கேள்வி – தற்போதைய நிலைமையில் தமிழ் மக்களுக்கு என்ன கூறவிரும்புகின்றீர்கள்.

புதில் – தமிழ் மக்கள் ஒற்றுமையாக ஒரே அணியில் நின்று பலமான தமிழ் தரப்பை தெரிவு செய்ய வேண்டும்.

அரச கட்சியின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி அதற்கு வாக்களிப்பதையோ அல்லது யாழ். தேர்தல் மாவட்டத்துக்கு வெளியே ஒரு சில 100 வாக்குகளை மாத்திரம் பெறக்கூடிய தமிழ் மக்கள் தேசிய கூட்டணியையோ, அல்லது இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியையோ யாழ். தேர்தல் தொகுதியில் ஆதரித்து அவர்களுக்கு வாக்களிப்பதன் மூலம் யாழ். தேர்தல் மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பலத்தை குறைத்து தமிழ் மக்களின் ஒற்றுமையை குலைப்பதற்கு துணை போக கூடாது.

இந்த இரு கட்சிகளுடைய இலக்கு யாழ். தேர்தல் மாவட்டத்தில் ஒரு ஆசனத்தையாவது பெறுவது தான். அதன் மூலம் அவர்கள் எதையும் சாதிக்க முடியாது.

தமிழ் மக்கள் தங்களுடைய ஆதரவை பூரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வழங்கி தமிழர்களின் ஒற்றுமையையும் பலத்தையும் உறுதி செய்ய வேண்டும். என்பது எனது கோரிக்கையாகும்.

 

http://thinakkural.lk/article/58333

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.