Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'நிகோபார் தீவு துறைமுகம் சீனாவுக்கு மறைமுகமான எச்சரிக்கையே தவிர இலங்கைக்கு பாதகமானதல்ல': கேர்ணல் ஆர். ஹரிகரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'நிகோபார் தீவு துறைமுகம் சீனாவுக்கு மறைமுகமான எச்சரிக்கையே தவிர இலங்கைக்கு பாதகமானதல்ல': கேர்ணல் ஆர். ஹரிகரன்

(லியோ நிரோஷ தர்ஷன்)

 இந்த - பசிபிக் குவாட் பாதுகாப்பு அமைப்பு, இந்து மா சமுத்திரத்தில் சீனாவுக்கு புதிய பாதுகாப்பு நெருக்கடியை உண்டாக்கும். இதைப்புரிந்து கொண்டு செயல்பட, ராஜதந்திர உபாயங்களில் அனுபவம் மிக்க ராஜபக்ச சகோதரர்கள் முனைவார்கள் 

நிகோபார் தீவுகளில் பாதுகாப்பு அரண் அமைப்பதைப் பற்றி பல ஆண்டுகளாக  இந்தியா திட்டமிட்டிருந்தது. சரிந்து வரும் இந்திய சீன உறவுச் சூழ்நிலையில், இந்தியா தனது பாதுகாப்பு அமைப்புகளை பலப்படுத்தும் முயற்சிகளில் நிகோபாரில் மேற்கொண்டுள்ள கடல் மற்றும் விமான படைத் தளங்கள் மிக முக்கிய பங்கு உண்டு. எனவே இந்த அறிவிப்பை இந்தியா சீனாவுக்கு மறைமுகமான அளிக்கும் எச்சரிக்கை என்று கருதலாமே தவிர இலங்கைக்கு பாதகமான விடயமல்ல என இந்திய இராணுவ புலனாய்வு பிரிவின் நிபுணரும் தெற்காசிய விவகாரங்கள் தொடர்பான ஆய்வாளருமான கேர்ணல் (ஓய்வு)  ஆர். ஹரிகரன் தெரிவித்தார்.

விரைவாக உருவாகிவரும் அமெரிக்கா , இந்தியா, ஆஸ்திரேலியா, மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு இடையே இந்த - பசிபிக் குவாட் பாதுகாப்பு அமைப்பு, இந்து மா சமுத்திரத்தில் சீனாவுக்கு புதிய பாதுகாப்பு நெருக்கடியை உண்டாக்கும் என எதிர்பார்க்கலாம். இதைப்புரிந்து கொண்டு செயல்பட, ராஜதந்திர உபாயங்களில் அனுபவம் மிக்க ராஜபக்சே சகோதரர்கள் முனைவார்கள் எனவும் தெரிவித்தார்.  

வீரகேசரி செய்திப்பிரிவிற்கு வழங்கிய சிறப்பு செவ்வியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் வழங்கிய செவ்வி பின்வருமாறு ,

1597527862-India-s-proposed-transhipment

கேள்வி : நிகோபார் தீவில்  அமைக்க உள்ள துறைமுகம் இந்தியாவின்  பாதுகாப்பு மூலோபாயத்தின் முக்கிய நகர்வாக கருதலாமா ?

பதில்: நிகோபார் தீவில் அமைக்க உள்ள இந்திய கடற்படை தளம், இந்தியாவின் கடல் வழி பாதுகாப்புக்கு மட்டும் அல்லாமல், தெற்காசியாவின் இந்து மா சமுத்திரப் பாதையின் பாதுகாப்பிலும் தாக்கம் ஏற்படுத்தும் ஒரு முக்கிய திருப்பம் என கருதலாம். ஏனெனில், பூகோள ரீதியாக இந்தியாவின் அந்தமான்-நிகோபார் தீவுகளின் ஊடாவே, தென்கிழக்காசிய மற்றும் கிழக்காசிய நாடுகளுக்கான வணிக கப்பல்களின் கடல் வழிப் பாதை அமைந்துள்ளது. அந்த வழியைத்தான் உலகின் பாதிக்கு மேலான வணிக கப்பல்கள், கிழக்காசியாவின் நுழைவாயில் என்று கருதப்படும், மலாக்கா ஜலசந்தியை  சென்றடைய உபயோகிக்கின்றன.

Hariharan1.jpeg

கேள்வி : இந்த திட்டத்தினால் இலங்கைக்கு எவ்வாறான தாக்கம் ஏற்படும்? 

பதில்: இலங்கை இந்தியாவின் நெருங்கிய நேச நாடு. ஏற்கனவே, இந்திய இலங்கைக் கடற்படைகள் பல ஆண்டுகளாக ஒருங்கிணைந்து செயல்பட, மற்றும் இலங்கை கடற்படை வீரர் தரத்தை உயர்த்த இந்தியாவில் உள்ள பயிற்சிக் கூடங்களை உபயோகிக்க, ஒப்பந்தங்கள் செயல்பாட்டில் உள்ளன. இந்த நிலை மேலும் தொடரும் என்பது என் அனுமானம். ஆகவே இலங்கையின் கடல்வழிப் பாதுகாப்பை இது மேலும் அதிகரிக்கவே செய்யும். 

கேள்வி : கொழும்பு துறைமுகத்தின் மீது இந்தியா கொண்டிருந்த நம்பிக்கை இல்லாமல் போனதாலா நிகோபார் துறைமுகம் குறித்து கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளது ?

பதில் : இது தவறான கருத்து. கொழும்பு துறைமுகம் உலகில் முதல் 30 திறமையாக இயக்கப்படும் துறைமுகங்களில் ஒன்றாகும். ஆகவேதான்  இந்தியாவின் ஏறத்தாழ 70 சதவிகிதம் 'கண்டெய்னர்' வணிக கப்பல்கள் கொழும்புவை உபயோகிக்கின்றன. ஆகவே அதை எளிதில் மாற்ற முடியாது. ஏனெனில், பூகோள அமைப்பில் இந்து மா சமுத்திரத்தில் இலங்கை இந்தியாவுக்கு மிக அண்மையில் உள்ளது. இதற்கு மாறாக நிகோபார் ஏறத்தாழ 3000 கி. மீ. தூரத்தில் உள்ளது. 

கேள்வி : இந்து மா சமுத்திரத்தில் சீனாவின் தந்திரோபாயமான நகர்வுகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர இந்த துறைமுகத்தை பயன்படுத்தலாமா ?

பதில்: இந்திய பாதுகாப்பு துறை நெடுங்காலமாக அந்தமான் - நிகோபார் தீவுகளில் பாதுகாப்பு அரண் அமைப்பதைப் பற்றி பல ஆண்டுகளாக பேசிக்கொண்டிருந்தது. சரிந்து வரும் இந்திய சீன உறவுச் சூழ்நிலையில், இந்தியா தனது பாதுகாப்பு அமைப்புகளை பலப்படுத்தும் முயற்சிகளில் நிகோபாரில் மேற்கொண்டுள்ள கடல் மற்றும் விமான படைத் தளங்கள் மிக முக்கிய பங்கு உண்டு. ஆகவே, இந்த அறிவிப்பை இந்தியா சீனாவுக்கு மறைமுகமா அளிக்கும் எச்சரிக்கை என்று கருதலாம். 

கேள்வி : கொழும்பு முனையத்தின் அபிவிருத்தியை இந்தியாவிற்கு வழங்க ஏற்கனவே ஒப்புதல் கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஆனால் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள ராஜபக்ஷ சகோதரர்கள் அதனை தொடர்வதாக இல்லை. இந்த விடயத்தில் டெல்லியின் பிரதியணுகு முறை எவ்வாறிருக்கும் ?

பதில் : இந்த விடயத்தில், இந்தியா ராஜதந்திர ரீதியில் இலங்கைக்கு அழுத்தம் ஏற்கனேவே தருகிறது என்பது என் கருத்து. இலங்கைக்கு அதன் பன்னாட்டு கடன்களுக்கு வட்டி  கொடுக்கவே பெரும் பாடாக உள்ளது. அதற்கு ஈட்டுக் கடன் அளிக்குமாறு இலங்கை தொடர்ந்து இந்தியாவை கேட்டு வருகிறது. இந்தியா அதற்கு பேச்சுவார்த்தை தொடருவதாக கூறிவருகிறது. ஆகவேதான் ராஜபக்சே சகோதரர்கள் கொழும்பு முனையத்தில் இந்தியாவுக்கு அளித்த ஒப்புதல் தவிர்க்கப் பட்டதாக திட்ட வட்டமாக அறிவிக்கவில்லை என்பது என் அனுமானம். 

இதைத் தவிர, சீன உதவியுடன் கொழும்புவில் உருவாகும் பொருளாதார கேந்திரம் முடியும் தருவாயில் உள்ளது. அதில் இந்திய வணிகப் புள்ளிகள் பெருமளவில் பங்கு பெற்றால்தான் அதை லாபகரமாக நடத்தமுடியும். மேலும், இலங்கையில் தற்போது முடங்கிப் போன சுற்றுலாப் பயணிகள் வருகையை உயிர்ப்பிக்கவும் இந்தியா தேவை. ஆகவே இந்தியா இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க பல்வேறு வழிகள் உள்ளன. அது இலங்கை அரசுக்கும் தெரியும். 

கேள்வி : மீண்டும் சீன சார்பு கொள்கையில் இலங்கையின் புதிய ஆட்சி செல்லுமானால் அது பிராந்திய விடயங்களில் எவ்வாறான தாக்கங்களை செலுத்தும் ?

பதில் : தற்போது  அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நிகழும் பனிப்போர், இந்திய சீன உறவில் ஏற்பட்டுள்ள அழர்ச்சி ஆகியவற்றின் விளைவாக, விரைவாக உருவாகிவரும் அமெரிக்கா இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் நாடுகளுக்கு இடையே இந்த-பசிபிக் குவாட் பாதுகாப்பு அமைப்பு, இந்து மா சமுத்திரத்தில் சீனாவுக்கு புதிய பாதுகாப்பு நெருக்கடியை உண்டாக்கும் என எதிர்பார்க்கலாம். ஆகவே, இதைப்புரிந்து கொண்டு செயல்பட, ராஜதந்திர உபாயங்களில் அனுபவம் மிக்க ராஜபக்சே சகோதரர்கள் முனைவார்கள். ஆகவே அவர்கள் பாதுகாப்பு விடயங்களில் சீனாவின் ஈடுபாட்டை அளவாகவே ஈடுபடுத்துவார்கள் என்பது என் கணிப்பு. 

 

https://www.virakesari.lk/article/88577

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.