Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் தேசியத்தை கொல்லும் குழு வாதமும் கொள்ளையடி வாதமும் -மு.திருநாவுக்கரசு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியத்தை கொல்லும் குழு வாதமும் கொள்ளையடி வாதமும் -மு.திருநாவுக்கரசு

August 28, 2020

1-2-25.jpg
 

மிழர் தாயகமான வடக்கு – கிழக்கில் நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலின் முடிவுகள் தமிழ் தேசியத்தின் ஒரு நூற்றாண்டுகால தோல்வியின் உச்சத்தை பறைசாற்றி நிற்கின்றது. இதனை “முள்ளிவாய்க்கால் – 2” என அழைக்கலாம்.

தமிழ் மக்கள் முன் எப்போதும் கண்டிராத பாரிய இராணுவ தோல்வியாக 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை அமைந்தது. அது நிகழ்ந்து 11 ஆண்டுகளின் பின்பு , அந்த இராணுவ தோல்வியைத் தொடர்ந்து ஒரு பாரிய அரசியல் தோல்வியாக 2020ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் காட்சி அளிக்கிறது. அளவாற் சிறிய தமிழினம் மேலும் மேலும் சிறிதுசிறிதாயாத் துண்டாடப்படுகிறது. ஆனால் அளவாற் பெரிய சிங்கள பௌத்த இனம் அதிகம் அதிகம் ஐக்கியப்பட்டு பலம் பொருந்தி எழுகிறது.

 

இது தமிழ்த் தேசியத்தை பெரிதும் குற்றுயிராக்கியுள்ள தேர்தல். இவ்வாறு தமிழ் தேசியத்தை குற்றுயிராக்கும் கைங்கரியத்தை தமிழ் தலைவர்களே நிறைவேற்றி இருக்கிறார்கள். தமிழ் தலைவர்களின் மத்தியில் காணப்பட்ட அபிலாசைகளையும் தேவைகளையும் சிங்கள ஆட்சியாளர்கள் சரிவர கையாண்டு அந்தத் தமிழ் தலைவர்களின் கைகளாலேயே தமிழ் தேசியத்தை கூரியவாள் கொண்டு குத்தி இருக்கிறார்கள்.

 

இங்கு சிங்கள ராஜதந்திரம் தமிழ் தலைவர்களை கையிலெடுத்து பொம்மை கூத்தாடி இருக்கிறது. இந்த கசப்பான உண்மையை தமிழ் தலைவர்கள் ஒருபோதும் ஒப்புக் கொள்ளப் போவதில்லை. ஆனால் இதுதான் உண்மை என்பது அவர்களுக்குத் தெரியும். தெரிந்தோ தெரியாமலோ, அல்லது நேரடியாகவோ மறைமுகமாகவோ சிங்கள ஆட்சியாளர்களின் கைப்பாவைகளாக தமிழ் தலைவர்கள் நிறுத்தப்பட்டு பொம்மைக் கூத்தாட்டப்படுகிறார்கள். இதனால் தமிழ் தேசியம் நாளும் பொழுதும் கண்முன்னால் உருக்குலைந்து போவது தெரிகிறது.

 

“கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை” என்றொரு கூற்று தமிழில் உண்டு. மனந்திறந்து பச்சைக் கண்கொண்டு பார்த்தால் இதன் பரிதாபநிலை தெளிவாக தெரியும்.

தமிழ் தலைவர்கள் மற்றும் அரசியல் ஆர்வலர்கள் அனைவருமே தேசியம் என்பதற்கு எதிர் வளமாய் உள்ளும் புறமும் , அகத்திலும் புலத்திலும் சிக்குண்டு கிடக்கின்றார்கள். நடைமுறையில் இவர்கள் தேசியம் பேசியே தேசியத்தை அழிக்கும் சக்திகளாய்க் காணப்படுகிறார்கள்.

 

இதனை இரண்டு கூறுகளாக வகைப்படுத்தலாம். ஒன்று குழு வாதம். மற்றையது கொள்ளையடிப்பு வாதம். குழு வாதம் நடைமுறையில் தேசியத்துக்கு நேரெதிர் மாறானதாய்க் காணப்படுகிறது. ஆனால் இங்குள்ள துயரம் என்னவெனில் தேசியத்தின் பெயராற்தான் அவர்கள் குழுக்களாக நிற்கிறார்கள். தாம் தமிழ்த் தேசியத்துக்கு பெரும் தீங்கு செய்கிறோம் என்பதை அவர்கள் உணர்வதில்லை.

குழு வாதம் அடிப்படையில் தேசியத்தின் எதிரி. இதனை சமூகவியல் , அரசியல், வரலாற்றுக் கண்கொண்டு ஆராயவேண்டும். இந்தக் குழு வாதம் வாழ்வோடும் வாழ்வின் அனைத்து துறைகளோடும் இணைந்து வியாபித்திருக்கிறது.

 

தேசியம் என்பது ஊர் வாதம், சாதிவாதம், பிரதேச வாதம் போன்ற அனைத்து சிறுவட்ட , உள்வட்ட வாதங்களுக்கும் எதிரானது. இத்தகைய சிறுவட்ட வாத கலாச்சாரத்திலிருந்துதான் குழு வாதம் பிறப்பெடுக்கின்றது.

ஏற்றத் – தாழ்வு , உயர்வு – தாழ்வான சாதிக்கட்டமைப்புக் கலாச்சாரத்திலிருந்து சமூகத்தில் பல்வேறு ஏற்றத்தாழ்வுகள் கலாச்சார ரீதியில் வியாபித்து செல்கின்றன. உதாரணமாக கல்வியில் கலை , விஞ்ஞானம் , மருத்துவம், பொறியியல் , வர்த்தகம் என்பன மேற்படி சாதி கலாச்சார உயர்வு- தாழ்வு என்ற அடித்தளத்திலிருந்து இத்தகைய கல்வித்துறைகளையும் உயர்வு – தாழ்வு என்ற மதிப்பீட்டிற்கு உரியவகைகளாக ஆகியுள்ளன.

உண்மையில் இத்தகைய உயர்வு- தாழ்வு என்ற பேதங்களின் அடித்தளத்திலிருந்து தான் குழு வாதங்களும் உருப்பெறுகின்றன.

இன்று தமிழரின் அரசியல் களம் உள்ளும் புறமும் குழு வாதமாய் சிதறுண்டு கிடக்கிறது. எந்தொரு குழு வாதியும் நிச்சயம் தேசியவாதியாக இருக்க முடியாது. ஒரு தேசியவாதி எப்போதும் அரவணைக்கும் தன்மை உள்ளவனாக இருப்பான். குழுவாதி எப்பொழுதும் எதனையும் துண்டாடிக் கொண்டிருப்பான். நடைமுறையில் அவன் எதிரியின் சேவகன் ஆவான்.

அத்தகைய குழுவாதி தன் குழுவுக்கு வெழியே உள்ள ஏனைய குழுக்களோடு மோதுபகவானாக மட்டுமன்றி தனது குழுவிற்கு உள்ளேயே பல குழுக்களை உருவாக்குவான். அடிப்படையில் அவன் ஜனநாயகத்தின் விரோதியாக இருப்பான். தேசியவாதத்தில் ஜனநாயகமே அனைத்துவகை உள்முரண்பாடுகளையும் கடப்பதற்கான வாகனமாகும். அந்த ஜனநாயகமே அனைவரையும் ஒட்டி இணைக்கும் பசையுமாகும். இதனாற்தான் ஒரு சிறந்த தேசியவாதி ஒரு சிறந்த ஜனநாயகவாதியாக இருக்க வேண்டியிருக்கிறது.

அத்தகைய ஒரு தேசியவாதி வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமையை உருவாக்குவதற்குத்தான் முதன்மை கொடுப்பானே தவிர சமூகத்தைத் மேலும் மேலும் துண்டாக்கிக் கொண்டு போவதற்கு ஒருபோதும் இடம் கொடுக்க மாட்டான்.

அணிகளை கடந்து ஒரு பெரிய தேசியவாதத்தை உருவாக்கவும் குழுக்களைக் கடந்து தேசியவாதத்தை உருவாக்கவும் வல்லவனே உண்மையான தேசியவாதி ஆவான்.

அதற்குப் பதிலாக அணிக்குள் அணி என்றும் குழுவுக்குள் குழு என்றும் உடைப்பு வாதத்தை (Vandalism) செய்கின்ற நாசகாரிகளா இருப்போர் ஒருபோதும் தேசியவாதிகளல்ல. இது ஓர் அரசியல், கலாச்சார, நாகரிகம் பற்றிய பிரச்சினை. வட்டார வேறுபாடுகளைக் கடந்து, குறுநில மன்னர் கலாச்சார அபிலாசைகளை கடந்து, சாதி ஏற்றத்தாழ்வு உட்பட அனைத்துவகை குழு வாதங்களையும் கடந்து சிந்திக்கவல்ல ஒரு பரந்த மனப்பாங்கு உள்ளது தலைமையை தமிழ் மக்கள் அவசர அவசரமாக உருவாக்க வேண்டும்.

இவ்வாறு குழு வாதங்கள் தமிழ் தேசியத்தை கண்ட துண்டமாய் வெட்டித் துண்டாடும் அதேவேளை கொள்ளையடி வாதாத் தலைவர்கள் இன்னொருபுறம் பெரும் அளவில் தமிழ்த் தலைமையை ஆக்கிரமித்து வைத்திருக்கிறார்கள். கொள்ளையடித் தலைவர்ளுள்ளும் குழுவாதம் உண்டு. குழுவாதத் தலைவர்களுள்ளும் கொள்ளையடி வாதம் உண்டு.

கொள்ளையடி வாதிகள் குழுக்களைக் கடந்து கொள்கையின் பொருட்டு பரஸ்பர நலனுடன் செயற்படும் ஒரு நடைமுறை உண்மையும் உண்டு. ஒருவகையில் அவர்களுக்கிடையே ஒரு வகை ஐக்கியம் நடைமுறையில் உண்டு.

எதிரி விட்டெறிந்த கயிற்றை இரு அந்தலைகளிலும் எதிரும் புதிருமாக நின்று இருவரும் பிடித்துக்கொண்டு நின்றாலும் ஒரு அந்நிலையால் தமிழ் தாயின் கழுத்தில் ஒருவர் சுருக்காகப்போட மற்ற அந்நிலையை அடுத்தவர் மரக்கொப்பில் மாட்டி சுருக்குகை இழுத்து கொலை செய்யும் ஒரே கொலைத் தொழிலைத்தான் இந்த இருவரும் இறுதியில் நிறைவேற்றுகின்றனர். எதிரும் புதிருமாக நிற்பது போல் காட்சியளிக்கும் தமிழ் தலைவர்களின் நிலை இன்று இப்படித்தான்.

1911ஆம் ஆண்டின் இறுதியில் சீனாவில் மன்னராட்சிக்கு எதிரான குடியரசு புரட்சி வெற்றி பெற்றது. அப்போது அங்கு இரண்டு முக்கிய தலைவர்கள் காணப்பட்டார்கள். ஒருவர் தேசியத்தையும் ஜனநாயகத்தையும் நேசிக்கும் டாக்டர் சுன்- யாட் -சன். மற்றவர் இராணுவ பலங்கொண்ட யுவான் – ஷி – கை.

சுன்- யாட் – சன் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பதவியையும் பொறுப்பேற்றார். ஆனால் இராணுவத்தில் பலம்மிக்கவரான யுவான் – ஷி -கை தன்னை ஜனாதிபதியாக மறுபுறம் பிரகடனப்படுத்தினார். இதனால் சீனா வடக்கு – தெற்கு என இரண்டாகப் பிரிய நேர்ந்தது. இந்நிலையில் சீனாவின் ஒருமைப்பாடு, தேசிய ஐக்கியம் என்பனவற்றின் நிமித்தம் சுன்- யாட்- சன் தனது பதவியைத் தானே முன்வந்து துறந்து யுவான் – ஷி- கையிடம் ஆட்சியை ஒப்படைத்தார்.

தன் பதவியைத் துறந்து சீனாவின் தேசிய ஐக்கியத்தை அவர் பாதுகாத்தார் . சீனா இரண்டு துண்டுகளாக உடையக் கூடாது என்பதற்காக தனது ஆதரவாளர்களின் விருப்பங்களையும் மீறி அவர் பதவி துறந்து சீன தேசியத்தை காப்பாற்றினார். இவரே சீனாவின் தேசியத் தலைவராகவும், சீன தேசத்தின் தந்தையாகவும் இன்றுவரை வரலாற்றில் போற்றப்படுகிறார். இதுதான் ஒரு தேசியத் தலைவனின் அழகு.

குழு வாதிகளும், குட்டிக் குறுநில மன்னர்களும் , கொள்ளை அடிக்கவும் கொள்ளைப் பணத்தை பாதுகாக்கவும் அரசின் நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படும் கொள்ளை வாதிகளும் தமிழ் தேசியத்தின் தெளிவான எதிரிகள். இவற்றைக் கடந்து தமிழ் தேசியத்தை முன்னெடுப்பதற்கான புதிய வழிமுறையை பற்றி ஆழமாக சிந்திக்க வேண்டிய பொறுப்பு தமிழ் தேசியத்தையும் ஜனநாயகத்தையும் நேசிக்கும் அனைவருக்கும் உண்டு.

வேற்றுமையில் ஒற்றுமை, குறைந்தபட்ச உடன்பாடு கூடியபட்ச ஐக்கியம், எதிரிக்கு எதிரான உயர்ந்தபட்ச எதிர்ப்பு என்ற கோஷத்தின் கீழ் தமிழ் மக்கள் அனைத்து வகைகளிலும் ஐக்கியப்பட வேண்டும். அனைவரையும் அரவணைக்கவல்ல பரந்த மனப்பாங்கும், தெளிந்த பார்வையும், நடைமுறைக்கு பொருத்தமான குறித்த செயல்பாட்டையும் கொண்ட தலைவர்கள் இப்போது எழ வேண்டும்.

உலகளாவிய அரசியலுக்கு பொருத்தமான சிந்தனையுடனும் , கொள்கை உடனும் , களநிலைக்கு பொருத்தமான, கால ஓட்டத்திற் கேற்ற செயற்பாடுகளுடனும் , குழு வாதங்களையும், கொள்ளை வாதங்களையும் கடந்து செயற்படவல்ல தேசிய எண்ணங் கொண்ட தலைவர்களை தமிழினம் இப்போது வேண்டி நிற்கின்றது.
 

http://thinakkural.lk/article/64878

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.