Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மட்டக்களப்பின் வளங்களை அபகரிக்க அரசியல் சக்திகள் சதி – துரைரெத்தினம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வளங்களை சில அரசியல் வாதிகள் சூறையாடுவதற்கு சதி செய்து வருகின்றனர். இதை தடுத்து நிறுத்த மக்களை அணி திரளுமாறு முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெத்தினம், வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா .துரைரெத்தினம் இன்று (16) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும்,

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சுகாதாரம், கல்வி இரண்டையும் ஒரு சிலர் பணத்திற்காக விற்பதையும், கனியவளங்கள், உல்லாச துறைக்கான இடங்கள், ஆழ்கடல்மீன்பிடி, மணல் அகழ்வு, கால்நடைகள் கொள்வனவு, புதிய மதுபான சாலைகள் திறத்தல்.

 
 

அத்தோடு, அரசவளமான காணிகளை கையகப்படுத்துதல், மகாவலிக் காணி, வனவிலங்கு திணைக்களத்திற்குரிய காணி,வனவளத்திணைக்களத்திற்குரிய காணிகள், கருங்கல்மலைகள், கிறவல்மேடுகள், வளமுள்ள மணல்மேடுகள் மீன், இறால், நண்டு வளர்ப்புக்குரிய இடங்கள், நீர்வளமுள்ள இடங்கள் போன்ற வளமான பொருளாதார வளங்களை இம் மாவட்டத்திலுள்ள ஓருசில சுயநல அரசியல் வாதிகளுக்கும், இன்னும் ஒரு சில தரகர்களுக்கும் இலஞ்சமாக பணத்தை வழங்கி விட்டு அனைத்து வளங்களுக்குரிய பொருளாதார இலாபம் அனைத்தையும் தென்னிலங்கை ஒருசில அரசியல் வாதிகள் பெறுவதற்கான சகல முயற்சிகளும் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

இத்தோடு, மதரீதியாகவும், இராணுவ ரீதியாகவும், அரச நிருவாக ரீதியாகவும் இங்குள்ள வளங்களை மத்திய அரசாங்கத்தின் ஆளுகைக்குள் கொண்டு வருவதற்கான திட்டங்களும். அமுலாக்கப்பட்டுக் கொண்டு வருகின்றன. இத் தவறான செயற்பாடுகளுக்கு சட்டம்,ஓழுங்கை நிலை நாட்டுகின்ற குறிப்பிட்ட பொலிசாரும் உடந்தையாக இருப்பதால் சட்டஓழுங்கை இம் மாவட்டத்தில் அமுலாக்க முடியாது.

நாளொன்றுக்கு அம்பாறை, மகாஓயா. வெலிக்கந்தை, திருகோணமலை பாதைகள் ஊடாக எண்ணூறுக்கு மேற்பட்ட மணல் லோட் செல்கின்றன. இது ஞாயிற்றுக் கிழமைகளில் இடம் பெறுவதில்லை.

எமது கிராமங்களில் பள்ளக் காணிகளை நிரப்பி வீடு கட்டுவதற்கும், வீதிகளை புனரமைப்பதற்கு கிறவல்களை ஏற்றுவதற்கும். கொங்கிறீட் வீதி(தார்வீதி) அமைப்பதற்கு கருங்கல் ஏற்றுவதற்கும். வீடு கட்டுவதற்கான மணலை எடுப்பதற்கு எங்கு செல்லப் போகின்றோம். மாவட்டத்தில் ஒரு மாதம் சராசரி ஐம்பது புதிய குடும்பங்கள் உருவாகின்றன. இக் குடும்பங்கள் இருப்பதற்கு பள்ளக்காணிகளை மூடியே வீடு கட்ட வேண்டியே உள்ளது. இத்தோடு பல குடியிருப்புப் பகுதிகள் தாழ்நிலப்பகுதிகளாக மாற்ற மடைந்துள்ளன.

கடந்த வருடம் குறைந்தது நாலாயிரம் ஏக்கர்களுக்கு மேற்பட்ட வேளாண்மை செய்த பழைய இடங்களில் புதிதாக வெள்ளம் வந்ததை யாராலும் மறுதழிக்க முடியாது. இதே போல ஒரு பிரேதத்தை அடக்கம் செய்வதற்கு இம் மாவட்டத்தில் மேட்டுப்பகுதி இல்லை.வெள்ளம் வந்தால் கரையொதுங்குவதற்கும் மேட்டுக்காணி இல்லை.

இம் மாவட்டத்திலிருந்த அறுபதிற்கு மேற்பட்ட மேட்டுப்பகுதிகளில் ஒரு இடம் கூட தற்சமயம் இல்லை. மலை நாடுகளிலிருந்து வெள்ளங்கள் வடிந்தோடுவது எமது மாவட்டத்திலுள்ள ஏழுற்கு மேற்பட்ட வாவி.குளங்கள் ஊடாக முகத்துவாரம் சென்று கடலுக்கு நீர் செல்கின்றன.

 
 

1957ம் ஆண்டு இம் மாவட்டத்தில் முப்பதிற்கு மேற்பட்ட முகத்துவாரங்கள் இருந்த நிலையில் தற்சமயம் ஏழு முகத்துவாரங்கள் கூட இம் மாவட்டத்தில் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.மட்டக்களப்பின் வளங்களை அபகரிக்க அரசியல் சக்திகள் சதி – துரைரெத்தினம் – உதயன் | UTHAYAN (newuthayan.com)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.