Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சர்வதேசம் இலங்கையை மறந்துவிடும் அபாயம்'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேசம் இலங்கையை மறந்துவிடும் அபாயம்'

[21 - July - 2007]

ஏ.ரஜீவன்,

இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கான பொது இணக்கப்பாட்டை எட்டாவிட்டால் வெகுவிரைவில் சர்வதேச சமூகத்தால் நாடு மறக்கப்பட்டு விடும் அபாயம் உள்ளதாக தபால் தொலைத் தொடர்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் எச்சரித்துள்ளார்.

கொழும்பில் சுதந்திரசதுக்கத்தில் நடைபெற்ற கிழக்கின் உதயம் நிகழ்வில் ஜனாதிபதி ஆற்றிய உரையில் மோதல் போக்கு தென்பட்டதாகவும் நாட்டின் தலைவர் ஒருவரிடமிருந்து நான் இதனை எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை வர்த்தக சம்மேளனங்கள், தொழிற்துறையின் சங்கம், கொழும்பு ஜெய் ஹில்டன் ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சமாதான முயற்சிகளின் போது அமைப்புகளின் பங்களிப்பை வலியுறுத்திட அவர் மேலும் குறிப்பிட்டதாவது;

கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தித் திட்டங்களை அந்த பகுதி மக்களின் ஆலோசனைகளுடனேயே முன்னெடுக்க வேண்டும்.

கிழக்கின் உதயம் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களுக்கு அந்தப் பகுதி மக்களின் ஆதரவு மிகவும் முக்கியமானது. அவர்களது நம்பிக்கையில்லாமல் இவற்றை நடைமுறைப்படுத்த முடியாது.

மக்களின் ஆதரவு அவர்களது நம்பிக்கை என்ற விடயத்தை அரசாங்கம் கணக்கிலெடுக்க வேண்டும்.

கிழக்குப் பகுதி மக்களின் கடந்த காலங்கள் துயரம் வாய்ந்தவை. நெருக்கடியானவை. அவர்கள் இன்னமும் அச்சத்துடனேயே உள்ளனர்.

இதன் காரணமாக கிழக்கு மக்கள், அபிவிருத்தித் திட்டங்கள் என்ற அறிவிப்பை அச்சத்துடன் பார்க்கின்றனர். அவர்களது அனுபவங்கள் அப்படியானதாகவுள்ளது.

கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்ட பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படாததும் அவர்களது குழப்பத்திற்கு காரணம்.

கிழக்கு மாகாணத்தில் செயற்படுகின்ற சகல ஆயுதக்குழுக்களினதும் ஆயுதங்களும் களையப்படவேண்டும். முழுமையான சுமூகமான நிலையை ஏற்படுத்துவதற்கு இது அவசியமானது.

அரசாங்கம் இதனைச் செய்யாமல் கிழக்கு மாகாணத்தில் இயல்பு நிலையை ஏற்படுத்த முடியாது. அப்பகுதி மக்களிற்கு நிம்மதியான, சுதந்திரமான வாழ்வை அளிக்கமுடியாது.

குறிப்பாக கிழக்கில் சில ஆயுதக் குழுக்களால் நடத்தப்படுகின்ற பொலிஸ் நிலையங்களை மூடவேண்டும். இவற்றின்காரணமாக சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படுகின்றது என்பதே உண்மை.

நீதிமன்றங்கள் இவர்களது செல்வாக்கிற்கு உட்படும் அபாயமுள்ளது. சில சந்தர்ப்பங்கில் நீதிபதிகள் அச்சம் காரணமாக சில வழக்குகளை விசாரிக்க மறுக்கின்றனர்.

இதனால் அப்பாவி மக்களுக்கு நீதி கிடைப்பதற்காக வாய்ப்பு மறுக்கப்படுகின்றது. கிழக்கு மாகாணம் குறித்து சிந்திக்கும்போது கணக்கிலெடுக்கப்படவேண்டிய முக்கிய விடயங்களில் இவையும் உள்ளன.

கிழக்கின் உதயம் நிகழ்வில் ஜனாதிபதி ஆற்றிய உரை மோதல் போக்கிலானதாக அமைந்திருந்தது அந்த உரையின் தொனி அவ்வாறானதாகவே காணப்பட்டது. ஜனாதிபதி ஒருவரிடமிருந்து இவ்வாறான தொனியுடனான உரையை நான் எதிர்பார்க்கவில்லை.

சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்ற பாரிய கிழக்கின் உதயம் நிகழ்வு குறித்து எமது தமிழ் சகோதரர்கள் கவலையடைந்துள்ளனர்.

இதேவேளை, இந்த வெற்றிக்காக பாதுகாப்புப் படையினர் காட்டிய வீரத்திற்கும் செயற்பட்ட விதத்திறகும் எனது பாராட்டுகளைத் தெரிவிக்க விரும்புகின்றேன்.

இலங்கையில் இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்து விரைவில் பொது இணக்கப்பாட்டிற்கு வரவேண்டும்.

நாம் இவ்வாறு செயற்படாவிட்டால் சர்வதேச சமூகத்தின் கவனம் எம்மிலிருந்து திசை திரும்பக்கூடிய அபாயம் உள்ளது.

அடுத்த சில வாரங்களுக்குள் பொது உடன்பாட்டை எட்டாவிட்டால் இலங்கை மறக்கப்படலாம்.

கிழக்கில் தேர்தல் நடத்தப்படுவது குறித்து கருத்துத் தெரிவிக்கப்படுகின்றது. முன்னரை விட தற்போது கிழக்கு பாதுகாப்பானதாகிவிட்டதா என்ற கேள்வி எழுகின்றது.

சமாதானத்தை கட்டியெழுப்புவதுடன் பொருளாதார வளர்ச்சி மிகவும் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டுள்ளது.

சமாதானத்தை நோக்கிய ஒவ்வொரு செயற்பாடும் பொருளாதாரத்தை பலப்படுத்துவதாக அமையும்.

தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.