Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

`எனக்கெதிராக நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் ஊழல் பெருச்சாளிகளின் வெற்றி'

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

`எனக்கெதிராக நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் ஊழல் பெருச்சாளிகளின் வெற்றி'

[21 - July - 2007]

`எத்தனை தீர்மானங்களை கொண்டு வந்தாலும் என்னை பதவியிலிருந்து துரத்த முடியாது' கொழும்பு மாநகரசபையில் தனக்கு எதிராக அண்மையில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக பிரதிமேயர் ஏ.கே.எம்.எஸ்.இராஜேந்திரன் அறிக்கையொன்றை பத்திரிகைகளுக்கு விடுத்திருக்கிறார்.

அந்த அறிக்கையின் விபரம் வருமாறு;

13.07.2007 ஆம் திகதி கொழும்பு மாநகர சபை பிரதி முதல்வருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 21 மேலதிக வாக்குகளால் நிறைவேறியது என்ற தலைப்பின் கீழ் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றிலும் செய்திகள் வெளியாகியது சகலரும் அறிந்ததே.

இச் செய்திகளில் மாநகர மன்ற உறுப்பினர் பி.எம்.பி.றோய் நிஸாந்த கொழும்பு மாநகர சபையில் நடைபெற்ற ஊழல் மோசடியில் பிரதி மாநகர முதல்வர் சபையின் சட்ட விதிகளை மீறி வெளியேறினார். அதனைத் தொடர்ந்து ஏனைய உறுப்பினர்களும் அவரின் பின்னால் சென்றதையும் காணக்கூடியதாகவிருந்தது என்று கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்து எனக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை சபைக்குக் கொண்டுவரப்பட்ட போது என்னால் முகம் கொடுக்க முடியாது போய்விட்டது என்றும் கூறப்பட்டுள்ளது. இக் கூற்று உண்மைக்குப் புறம்பானதும் சட்ட விதிகளுக்கு முரணானதுமாகும். இது தொடர்பான உண்மை நிலையை மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டியது எனது கடமையாகும்.

28.06.2007 ஆம் திகதி கொழும்பு மாநகர சபைப் பொதுக் கூட்டம் ஆரம்பமானபோது உறுப்பினர்களின் ஆசன ஒதுக்கீடு சம்பந்தமாக காரசாரமான விவாதம் நடைபெற்றதைத் தொடர்ந்து கொழும்பு மாநகர சபை முதல்வர் அவர்கள் சபையை 15 நிமிடங்களுக்கு ஒத்திவைத்தார். அதனைத் தொடர்ந்து கண்ணாடிச் சின்னத்தைச் சேர்ந்த ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சபையை விட்டு வெளியேறினர். பின் 15 நிமிடங்களின் பின் கொழும்பு மாநகர சபை முதல்வர் சபையைக் கூட்ட முற்பட்டபோது கண்ணாடி உறுப்பினர்களின் வெளியேற்றம் காரணமாகப் போதிய உறுப்பினர்கள் சபையில் பிரசன்னமாயிருக்காததால் சட்ட விதிகளுக்கமைய சபை 03.07.2007 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

03.07.2007 ஆம் திகதி மு.ப. 10.30 மணிக்குச் சபை ஆரம்பமாகி விவாதம் நடந்து கொண்டிருக்கும்போது மதிய உணவுக்குப் பின்னர் கடந்த மாத அறிக்கைகளின் படி சபையில் விவாதம் மீண்டும் நடந்து கொண்டிருக்கும் பொழுது நான் அவ்வேளையில் முதல்வர் ஆசனத்தில் வீற்றிருந்தேன். அவ்வேளையில் மா நகர மன்ற உறுப்பினர்கள் மில்ரன் லியனகே, ஆரியரத்ன வெதகே, காமினி ரம்ய குமார ஆகிய மூவரும் கொழும்பு 15, மட்டக்குளி, பாம் வீதி என்ற பிரதேசத்திற்குச் சிரமதானம் செய்வதற்காகக் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க அவர்களுக்கு உதவி மற்றும் ஒத்துழைப்பு வழங்கியதாக ஓர் பிரேரணையை முன் வைத்தனர். அவ்வேளையில் சபை முதல்வர் ஆசனத்தில் நான் வீற்றிருந்தேன். சபைக்கு ஏற்கனவே சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணைகள் முடிவடைந்ததன் பின்னரே புதிய பிரேரணைகள் சபை உறுப்பினர்கள் சகலரதும் சம்மதத்துடனுமே கொண்டு வரப்பட வேண்டுமென கொழும்பு மாநகர சபைக் கட்டளைச் சட்டத்தின் 10 ஏ பிரிவில் தெளிவாகக் கூறப்பட்டிருந்தும் அவர்கள் இப்பிரேரணையை உடனடியாக எடுக்கும்படி கூறினார்கள். எந்தப் பிரச்சினையையும் சமாளிக்க தயாராகவிருந்த நான் அச்சமயத்தில் சபையில் பிரசன்னமாகியிருந்த மா நகர சபை செயலாளர் காமினி குணசேகர அவர்களிடம் கேட்டுக் கொண்டதையடுத்து அப் பிரேரணையை விவாதத்திற்கெடுத்துக் கொள்ளலாம் என என்னைப் பிழையாக வழிநடத்தினார். இவ்விவாதம் நள்ளிரவு வரை நடைபெற்றது. அன்றைய தினம் பிரேரணையை கொண்டு வந்தவர்களின் சார்பில் 9, 10 உறுப்பினர்கள் மட்டுமே சபையில் இருந்தார்கள். இவ்வேளையில் மா நகர செயலாளர் சபையை வேறொரு தினத்திற்கு ஒத்திவைக்கும் படி எனக்கு ஆலோசனை கூறினார். இதை நான் ஏற்றுக் கொண்டு சபையை ஒத்தி வைத்தேன். ஆனால் பின்னர் தான் தெரிய வந்தது இது ஒரு சதிச் செயல் என்று.

12.07.2007 ஆம் திகதி பி.ப. 2.30 மணிக்குச் சபை மா நகர முதல்வர் வணக்கத்துக்குரிய உவைஸ் மொஹமட் இம்தியாஸ் தலைமையில் ஆரம்பமாகியது. அன்றும் உறுப்பினர்களின் ஆசனம் தொடர்பாக பிரச்சினை எழுந்தபோது சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறுவோம் என்று முதல்வர் அவர்களுக்கு நான் தெரிவித்ததையிட்டு இப்பிரச்சினை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வந்த சில சிரேஷ்ட உறுப்பினர்கள் இப்பிரேரணையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். அதற்கு நான் கொழும்பு மா நகர சபைத் துணைச் சட்டம் 10(ஐ) இல் குறிப்பிட்டுள்ள சட்டத்திற்கு முரணானது என்றும் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் வாதம் புரிந்தேன். என்னைப் போன்று ஷ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களான றோனி றம்ஸி, மன்சில், ஹெல உறுமய உறுப்பினரும் சட்டத்தரணியுமான எஸ்.எம்.டி.ரியுடர் பேரேரா ஆகியோர் இது தொடர்பான பிரேரணையை எதிர்த்து உரையாற்றினார்கள். அதனைத் தொடர்ந்து கொழும்பு மா நகர சபை முதல்வர் ஆசனத்தை விட்டு வெளியேறியமையினால் நான் சபை முதல்வர் ஆசனத்தில் அமர வேண்டி ஏற்பட்டது. அச்சமயம் இந்தப் பிரேரணையை முன்னெடுக்கும்படி சில உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டார்கள். அதற்கு நான் கொழும்பு மாநகர சபைத் துணைக் கட்டளைச் சட்டத்திற்கு எதிராக இருப்பதால் சட்டமா அதிபருடன் ஆலோசனை செய்வதாகக் கூறியிருந்தேன். இதனையடுத்துச் சபையில் பெரும் அமளிதுமளி ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து மா நகர கட்டளைச் சட்டம் 23 ஆம் பிரிவின் படி நான் சபையை ஒத்திவைத்தேன். இச் சந்தர்ப்பத்தில் மா நகர செயலாளர், மா நகர உதவி செயலாளர், ஆகியோர் சபையை விட்டுவெளியேறினர். பின்னர் சட்டத்திற்கு முரணாக மா நகர ஆணையாளரின் வழிகாட்டலின் பேரில் இவ்வுத்தியோகத்தர்கள் சபைக்குச் சமுகமளித்ததுடன் சபையை ஆரியரத்ன வெதகே அவர்களின் தலைமையின் கீழ் நடத்தினார்கள். இச் சமயம் நான் மாநகர செயலாளருக்கு சபையை ஒத்தி வைத்ததை உறுதிப்படுத்திக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்தேன். அதனைப் பெற்றுக் கொண்டதாக மா நகர செயலாளர் எழுத்து மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் ஒரு தலைப் பட்சமாக கொழும்பு மா நகர சபை ஆணையாளர் வைத்தியர் ஜயந்த லியனகே அவர்களும், மா நகர உதவி செயலர் காமினி குணசேகர அவர்களும் நடந்து கொண்டார்கள். இப்பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தவர்கள் கரகோஷம் இட்டு ஆரவாரம் செய்தபோது மா நகர உதவி செயலாளர் காமினி குணசேகரவும் கரகோஷமிட்டு ஆர்ப்பரித்த சம்பவத்தை சிரச, சக்தி தொலைக்காட்சிகள் மூலம் நாட்டிலுள்ள மக்கள் அனைவரும் கண்டுகளித்திருப்பார்கள். நடு நிலையாக இருக்க வேண்டிய அரச உத்தியோகத்தர் ஒருவர் இவ்வாறு நடந்து கொள்வது கேலிக்குரியது. இது தொடர்பாக நான் அதி உத்தம ஜனாதிபதி, மேல் மாகாண முதலமைச்சர், மாகாண சபை அமைச்சர், லஞ்சம் மற்றும் ஊழல் ஆணையாளர் ஆகியோருக்கு முறைப்பாடு செய்துள்ளேன்.

மேலும் எமது கட்சி ஆட்சியைக் கைப்பற்றி முதலில் கூட்டம் நடத்திய பொழுது அன்று மா நகர முதல்வர் சபையை ஒத்திவைத்ததன் பின்னர் என்னைப் பலவந்தமாக மற்றைய உறுப்பினர்கள் முதல்வர் ஆசனத்தில் அமரச் செய்து சபையை நடத்தியதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறியவர்கள் இவ் அதிகாரிகளே.

இவ்விதமாகக் கூட்டத் தொடரை ஒத்தி வைத்ததன் பயனாக கொழும்பு மா நகர சபை உத்தியோகத்தர்களுக்கு மேலதிக நேரக் கொடுப்பனவு, மற்றும் சபையை நடத்துவதற்குரிய செலவுகள் அதிகரித்துள்ளமையைக் காணக் கூடியதாகவிருந்தது.

மேலும் சபை நிகழ்வுகளைப் பதிவு செய்யும் ஒலி நாடா அழிக்கப்பட்டிருக்கலாம் அல்லது மாற்றியமைக்கப்பட்டிருக்கலா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.