Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கிழக்கில் அபிவிருத்தித் திட்டம் என்ற போர்வையில் உலக நாடுகளிடம் நிதி பெற அரசு திட்டம்.

Featured Replies

கிழக்கில் அபிவிருத்தித் திட்டம் என்ற போர்வையில் உலக நாடுகளிடம் நிதிபெற அரசு திட்டம்.

கிழக்கில் பல அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்க இருப்பதாகக்கூறி, இணைத்தலைமை நாடுகள், மற்றும் பல உலக நாடுகளிடம் நிதியுதவி பெறுவதற்கு சிறீலங்கா அரசு திட்டமிட்டு வருகின்றது.

இதற்கென கிழக்கில் சில அபிவிருத்தித் திட்டங்களை வரைவதற்கென, அரசினால் நிபுணர்கள் குழுவொன்று நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

செப்ரெம்பர் மாதம் உதவி வழங்கும் நாடுகளின் மாநாடு நடைபெற இருப்பதால் அதனை இலக்கு வைத்து இவ்வாறான நகர்வுகளை அரசு மேற்கொண்டு வருகின்றது.

உலக நாடுகளிடம் இருந்து 1.8 பில்லியன் ரூபாவினை நிதியுதவியாகப் பெறுவதற்கு ஏற்கனவே திட்டமிட்டிருந்த அரசு, உலக நாடுகளின் கண்டனம் காரணமாக அதனைக் கிடப்பில் போட்டுவிட்டு, கிழக்கில் அபிவிருத்தி என்ற போர்வையில் நிதியுதவி பெறுவதற்கு எண்ணியுள்ளது.

ஆனால் கிழக்கு அபிவிருத்தி என்ற போர்வையில் சிறீலங்கா அரசு நிதியுதவி கோரினால், அது பற்றி மிக அவதானமாகப் பரிசீலிக்கப்படும் என, கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஆணைக்குழு அதிகாரி குயி பிளட்ரூன் தெரிவித்துள்ளார்.

வடக்கி கிழக்கில் தற்பொழுது மேற்கொள்ளப்படும் திட்டங்கள் தவிர்ந்த ஏனைய அபிவிருத்தித் திட்டங்களுக்கு நிதியுதவி வழங்கப்பட மாட்டாது என, ஆசிய அபிவிருத்தி வைப்பகத்தின் கொழும்பிற்கான உதவிப் பணிப்பாளர் லோறன்ஸ் பொசாட் கூறியிருக்கின்றார்.

சிறீலங்கா அரசின் மனித உரிமை மீறல்கள், மற்றும் மக்களை இடம்பெயர வைப்பதற்கான இராணுவ நடவடிக்கைகளைக் கண்டித்துவரும் உலக நாடுகள் பல, சிறீலங்கா அரசுக்கு நிதியுதவி செய்வதற்கு மறுப்புத் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

-Pathivu-

  • கருத்துக்கள உறவுகள்

ஞாயிறு 22-07-2007 17:21 மணி தமிழீழம் [மகான்]

அபிவிருத்திக்கு முதல் தன்னார்வ நிறுவனங்களை அனுமதியுங்கள் - கிழக்கு ஆயர்

குடும்பிமலை வெற்றியின் பின்னர் கிழக்கில் அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பிக்கப் போவதாகக் கூறும் அரசு, கிழக்கு மாகாணத்தில் அபிவிருயை ஆரம்பதாயின் முதலில் தர்னார்வ நிறுவனங்களை கிழக்கில் செயற்பட அனுமதிக்கப்பட வேண்டும் என மட்டு - திருமலை ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கிழக்கில் யுத்த முன்னெடுப்புகளால் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் இடம்பெயர்துள்ளனர். இவர்களின் பலகோடி பெறுமதியான சொந்துக்கள் சூறையாடப்பகின்றன. அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வையில் தமிழ் மக்கள் அவர்களின் சொந்த இடங்களில் வெளியேற்றபட்டுள்ளனர். இந்த நிலையில் கிழக்கில் ஏன் அபிவிருத்தித் திட்டம் என்ற கேள்வி எழுகின்றது.

தமிழ் மக்கள் இயல்பு வாழ்வை விரும்புகின்றனர். அபிவிருத்திக்கு முன்னர் சில யாதார்த்தை விளங்கிக் கொள்ள வேண்டும். வீடு வாசல்களை இழந்த மக்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கும் பணி இருக்கின்றது. தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்தும் பணி இருக்கின்றது. இவ்வாறு பல விடயங்கள் இருக்கின்றது.

அரசாங்கம் அபிவிருத்தியை மேற்கொள்ள 10 வருடங்களுக்கு மேல் செல்லும். கிழக்கு அபிவிருத்தியை அரசாங்கத்தினால் மாத்திரம் மேற்கொள்ள முடியாது. மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவுசெய்யும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு கிழக்கில் சுதந்திரமாக செயற்பட அனுமதியளிக்கப்பட வேண்டும்.

கிழக்கு அபிவிருத்தித் திட்டங்களில் உள்நாட்டு மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களும் பங்காளராக வேண்டும். இதற்கு முதலில் அனுமதியை வழங்குவது அரசாங்கத்தின் கடமையாகும்.

அபிவிருத்திக்கான நிதி யுத்தத்திற்கு பயன்படுத்தப்படாதிருப்பதையு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.