Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நீண்டகால நோக்கில் போர் நுட்பங்களை மாற்றி அமைப்பதில் தேசியத் தலைவர் வல்லவர்: "விடுதலைப் புலிகள்" ஏட்டின் முதன்மை ஆசிரியர்

Featured Replies

பெரு வெற்றியை பெற்றுத்தரும் வகையில் நீண்டகால நோக்கில் போர் நுட்பங்களை மாற்றி, மாற்றி அமைப்பதில் தேசியத் தலைவர் அவர்கள் வல்லவர். தலைவர் அவர்களின் போர் நுட்ப முறைகளை இன்று உலக நாடுகளின் இராணுவ மேதைகள் ஏற்றுக்கொள்கின்றார்கள், புகழ்கின்றார்கள் என்று "விடுதலைப் புலிகள்" ஏட்டின் முதன்மை ஆசிரியர் ரவி தெரிவித்துள்ளார்.

புலிகளின் குரலின் கிளிநொச்சி வானொலி மன்றத்தின் முத்தமிழ்கலை அரங்க நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

கரும்புலிகள் நாளை முன்னிட்டு புலிகளின் குரல் ஏற்பாட்டில் விளையாட்டுத்துறையால் பாடசாலைகளுக்கு இடையில் நடத்தப்பட்ட விளையாட்டுப் போட்டிகளின் இறுதி நிகழ்வினையடுத்து இந்த சிறப்பு முத்தமிழ் கலையரங்கம் நடத்தப்பட்டது.

கிளிநொச்சி பொது விளையாட்டுத்திடலில் நேற்று சனிக்கிழமை இரவு 7மணியளவில் புலிகளின் குரல் நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன்பன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

நிகழ்வின் பொதுச்சுடரினை மாவீரர் வீரவேங்கை பொன்னம்பலத்தின் தந்தை மகாதேவகுலசிங்கம் ஏற்ற, மாவீரர்களின் பொதுத் திருவுருவப்படத்திற்கு புலிகளின் குரல் ஆவணப்பகுதி மேலாளர் மகாலிங்கம் சுடரேற்றி மலர்மாலை சூட்டினார்.

அரங்க நிகழ்வாக இசைஞன் அவர்களின் வயலின் இசைக் கச்சேரியும் என்.எஸ்.மணியம் அவர்களின் நெறியாள்கையில் உருவான பண்டார வன்னியன் நாட்டுக்கூத்தும் இடம்பெற்றன.

சிறப்புரையினை தமிழீழ விடுதலைப் புலிகளின் "விடுதலைப் புலிகள்" ஏட்டின் முதன்மை ஆசிரியர் ரவி நிகழ்த்தினார்.

அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது:

உண்மையில் மிகப்பெரிய போர் ஒன்றுக்கு நாங்கள் முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். அதேவேளை விடுவிக்கப்பட்ட பகுதியில் வாழ்கின்ற மக்கள் இயல்பாக வாழ்கின்ற நிலை ஒன்றை காணக்கூடியதாக உள்ளது.

எதிரியின் ஆக்கிரமிப்பிற்குள் சிக்குண்டு கிடக்கும் மக்கள் இவ்வாறு மகிழ்ச்சியான நிலையில் இல்லை. இவ்வாறு இம்மக்களின் மகிழ்ச்சியான வாழ்வுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் பலம்தான் காரணமாக உள்ளது. அந்த பலம் தந்த மகிழ்ச்சியை மக்கள் அனுபவிக்கின்றனர்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் சில நெருக்கடிகளை எதிர்கொண்டாலும் வீறு நடை போட்டபடிதான் உள்ளது. தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு கொடுக்கும்படி உலக சமூகம் இன்று சிங்கள அரசை வலியுறுத்துகின்றது.

அண்மையில் நடந்த இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தில் கூட ஒரு தீர்மானம் எடுக்கப்பட்டு அதாவது தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வுப் பொதியொன்றை வரைந்து உடனடியாக வெளியிடும்படி வலியுறுத்தல் செய்திருந்தார்கள். ஆனால் மகிந்த ராஜபக்ச அனைத்துலகுக்கு காட்டிய பதில் என்னவெனில் குடும்பிமலை வெற்றியை ஒரு பெரிய விழாவாகக் காட்டி உலகின் முகத்தில் கரி பூசியுள்ளார் என்பதுதான் உண்மை.

சிங்கள அரசு தொடர்ந்தும் தொடர்ச்சியாக உலக சமூகத்தை சீண்டிப் பார்க்கின்றது. தமிழீழ விடுதலைப் புலிகள் ஆட்தொகையிலும் படைக்கட்டுமானத்திலும் சரி வளர்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிக்கின்றனர்.

இந்த நிலையில் மக்களும் விடுதலைப் போராட்டத்தின் துன்பத்திலும் இன்பத்திலும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவ பலத்தை தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் வளர்த்துகொண்டு இருக்கின்றார்.

கடந்த காலத்தில் போரின் தலைவிதியை தீர்மானிக்கக்கூடிய சமர்களை நாம் சந்தித்து வெற்றி பெற்றிருக்கின்றோம். அதனால்தான் இந்த 35 ஆண்டுகால நீட்சியில் விடுதலைப் புலிகளின் இராணுவ பலம் என்பதை தேசியத் தலைவர் அவர்கள் குறைய விடாமல் ஆண்டுதோறும் வளர்த்தெடுத்து வருகின்றார்.

நாம் சந்தித்த போரியல் உத்திக்கேற்பவும் போர் நிலைமைகளின் புறச்சூழலுக்கு ஏற்பவும் விடுதலைப் புலிகளை தமிழீழ தேசியத் தலைவர் அவர்கள் திறமையாக வழிநடத்தி வருகின்றார்.

பெருவெற்றியை பெற்றுத்தரும் வகையில் நீண்டகால நோக்கில் போர் நுட்பங்களை மாற்றி, மாற்றி அமைப்பதில் தேசியத் தலைவர் அவர்கள் வல்லவர். தலைவர் அவர்களின் போர்நுட்ப முறைகளை இன்று உலக நாடுகளின் இராணுவ மேதைகள் ஏற்றுக்கொள்கின்றார்கள், புகழ்கின்றார்கள்.

இதன் காரணமாகத்தான் இன்று வரைக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டம் இராணுவ பலத்தில் சிறந்த நிலையில் இருக்கின்றது என்றார் அவர்

http://www.eelampage.com/?cn=32719

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.