Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

புலிகளோடு மோதுகின்ற மஹிந்தவிற்கு ரணில்,மங்கள, ஸ்ரீபதி ஒரு பொருட்டல்ல

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளோடு மோதுகின்ற மஹிந்தவிற்கு ரணில்,மங்கள, ஸ்ரீபதி ஒரு பொருட்டல்ல

வீரகேசரி நாளேடு

உலகத்திலுள்ள பயங்கரவாத இயக்கங்களில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ள புலிகளுடன் மோதிக்கொண்டிருக்கின்ற மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரம சிங்க, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மக்கள் பிரிவை சேர்ந்தவர்களான மங்கள சமரவீர, ஸ்ரீபதி சூரியாராச்சி ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எதிர்ப்பு நடவடிக்கைகள் ஒரு பொருட்டல்ல என்று அரசாங்கத்தின் பிரதம கொறடாவும் அமைச்சருமான ஜெயராஜ் பெர்ணன்டோபுள்ளே தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு எதிராக இன்று கொழும்பில் நடத்தப்படவுள்ள எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு ஒரு இலட்சம் பேரை அணிதிரட்டுவதாக ஐ.தே.க சூளுரைத்துள்ளது .ஒரு இலட்சம் பேர் அல்ல 50 இலட்சம் பேரை திரட்டி ஆர்ப்பாட்டங்களை நடத்தினாலும் ஜனாதிபதி ஒருபோதும் அஞ்சமாட்டார். ஆட்சியை விட்டுக்கொடுக்கவும் மாட்டார் என்றும் அவர் சொன்னார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது;

பொது போக்குவரத்து சேவைகள் யாவும் இன்று கட்டாயமாக நடைபெறும். எனினும் கொழும்பிற்கு ஐந்து இலட்சம் மக்களை கொண்டு வருவதாக ஐ.தே.க. சூளுரைத்துள்ளது. ஐந்து இலட்சம் மக்களை திரட்டுகின்ற ஐ.தே.க. ஏன் ஐயாயிரம் பேர் நிற்கக்கூடிய ஹைட்பார்க் மைதானத்தை தெரிவுசெய்தது.

ஐந்து இலட்சம் மக்களல்ல ஐம்பது இலட்சம் மக்களை கொண்டுவந்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டாலும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பயப்படபோவதில்லை. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு சிதறுதேங்காய் உடைத்தல், ஆர்ப்பாட்டங்கள், பாதையாத்திரைகள் ஒன்றும் புதிதல்ல.

புலியோடு மோதுகின்ற மஹிந்த ராஜபக்ஷவிற்கு ரணில் விக்கிரமசிங்க, மங்கள சமரவீர, ஸ்ரீபதி சூரியாராச்சி ஒரு பொருட்டல்ல. அதற்காக ஜனாதிபதி அஞ்சமாட்டார். அத்தோடு கொழும்பிற்கு பத்து இலட்சம் பேரை கொண்டு வந்து ஆர்ப்பாட்டம் செய்தாலும் ஆட்சியை விட்டுக்கொடுக்கமாட்டோம் என்பதுடன், தேர்தல்கள் நடைபெறுகின்ற திகதிகளில் கட்டாயம் தேர்தல் நடைபெறும்.

உலகத்திலுள்ள பயங்கரவாத குழுக்களின் அல்கொய்தா இயக்கத்திற்கு அடுத்தபடியான பயங்கரவாத குழுவான புலிகளுடன் மஹிந்த ராஜபக்ஷ மோதிக்கொண்டிருக்கின்ற நிலையில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு ஜனாதிபதி ஒருபோதும் அஞ்சப்போவதில்லை.

பத்தரமுல்லையில் 220 மில்லியன் ரூபாவிற்கு ஜனாதிபதியோ அல்லது ராஜபக்ஷ நிறுவனமோ வீடொன்றை கொள்வனவு செய்யவில்லை. அந்த வீட்டை மாலைத்தீவு பிரஜை ஒருவர் மாதாந்தம் 2 இலட்சம் ரூபாவிற்கு வாடகைக்கு பெற்றுள்ளார்.

ஹெல்பி அம்பாந்தோட்டை முதல் புலிகளுக்கு பணம் வழங்கியது இறுதியாக மாளிகை கொள்வனவு செய்தது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களை ஜனாதிபதியின் மஹிந்த ராஜபக்ஷவின் மீது திணிப்பதற்கு முயற்சி செய்கின்றனர். எனினும் நேற்று கூறிய விடயம் நாளை பொய்யாகின்றது.

முன்னாள் அமைச்சர் ஸ்ரீபதி சூரியாராச்சி இங்கிலாந்தில் வீடு கொள்வனவு செய்தமை தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்படுவதனால் அவர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார்.

மேற்படி விடயம் தொடர்பாக ஜனாதிபதிக்கு அவர் விடுத்துள்ள சவாலுக்கு ஜனாதிபதி பதவி விலகவும் மாட்டார், பதிலளிக்கவும் மாட்டார்.

இவ்வாறான பொய் செய்திகள் வெளியாவதை தடுப்பதற்காகவே குற்றவியல் அவதூறு சட்டத்தை அமுல்படுத்துமாறு கோரிக்கை விடுக்கின்றோம். இல்லாவிட்டால் மக்களுக்கு ஜனாதிபதி தொடர்பான பொய்யான விடயங்கள் சென்றடைந்துவிடும். ஊடகங்களில் பொய்யான செய்திகளை எழுதுபவர்களே இந்த குற்றவியல் சட்டத்திற்கு அஞ்சுகின்றனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.