Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து: சட்டசபை தேர்தல் முடிவுகள் 2023 - நேரலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து: சட்டசபை தேர்தல் முடிவுகள் 2023 - நேரலை

2 மணி நேரங்களுக்கு முன்னர்
தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

நாகாலாந்து, திரிபுரா மற்றும் மேகாலயா ஆகிய வட கிழக்கு மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

கடந்த மாதம் இந்த மூன்று மாநிலங்களுக்கும் தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று அதன் முடிவுகள் வெளியாகிறது.

திரிபுரா மாநிலத்திற்கு பிப்ரவரி 16ஆம் தேதியும், நாகாலாந்து மற்றும் மேகாலயா ஆகிய மாநிலங்களுக்கு பிப்ரவரி 27ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்த மூன்று மாநிலங்களிலும் பாஜக ஆட்சியிலோ அல்லது ஆட்சிக் கூட்டணியிலோ உள்ளது.

திரிபுரா

திரிபுராவில் மொத்தம் 60 சட்டசபை தொகுதிகள்.

திரிபுராவில் பாஜக மற்றும் திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணி கட்சி தற்போது ஆட்சியில் உள்ளது. 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக பெரும்பான்மை இடங்களை பெற்று 25 ஆண்டுகால இடதுசாரி ஆட்சியை புறந்தள்ளி ஆட்சியில் அமர்ந்தது.

நாகாலாந்து

நாகாலந்தில் மொத்தம் 60 தொகுதிகள்.

அங்கு தேசிய ஜனநாயக முற்போக்குக் கட்சி ஆட்சி அமைத்துள்ளது. நெய்பியோ ரியோ தற்போதைய முதலமைச்சராகவுள்ளார்.

ஆளும் நாகா மக்கள் முன்னணியிலிருந்து பிரிந்து 2018 தேர்தலுக்கு முன்பாக இந்தக் கட்சி 2017ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

மேகாலயா

மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த கன்ராட் சங்மா தற்போது முதலமைச்சராக உள்ளார்.

இந்த தேர்தலில் மம்தா பேனர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் முதன்முறையாக களம் கண்டுள்ளது.

மேகாலயாவில் 60 தொகுதிகள். 2018ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் 21 இடங்களை பெற்றிருந்தது. தேசிய மக்கள் கட்சி 20 இடங்களை மட்டுமே பிடித்திருந்தது. பாஜக இரு இடங்களை மட்டுமே பெற்றிருந்தது.

தேர்தலுக்கு பிறகு தேசிய மக்கள் கட்சி பாஜகவுடன் கூட்டணி வைத்து கொண்டது.

தேர்தல் வாக்குறுதிகள்

திரிபுராவில் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் பேசிய இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் 2024ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி அன்று திறக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

அதன்பிறகு பாஜக இந்த தேர்தலை "கோவில் மற்றும் தேசியவாதம்" என்ற அம்சத்தில் அணுகும் என நிபுணர்கள் தெரிவித்திருந்தனர்.

அதேசமயம் திரிபுராவின் இடதுசாரி கட்சிகள் பாஜக மதத்தை வைத்து அரசியல் செய்வதாக குற்றஞ்சாட்டியிருந்தன.

மேகாலயாவில் மாநிலத்தில் வேலைவாய்ப்பின்மை மற்றும் ஊழலை ஒழிப்பதாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருந்தது.

மாநிலத்தில் 36 சட்டமன்ற தொகுதியில் ஆண்களின் எண்ணிக்கையை காட்டிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் பல்வேறு கட்சிகள் பெண்களை முன்னிலைப்படுத்தி பல வாக்குறுதிகளை வழங்கின.

நாகாலாந்தில், 'நாகாலாந்தை முன்னேற்றுவோம்' என்ற அம்சத்தை முன்னிலைப் படுத்தி பாஜக தேர்தலை எதிர்கொண்டது.

காங்கிரஸ் கட்சி, நாகாலாந்தில் ஆட்சியமைத்தால் உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கிடு வழங்கப்படும் மற்றும் முதியவர்களுக்கு மாதம் 3000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.

https://www.bbc.com/tamil/india-64820212

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திரிபுரா, நாகாலாந்தில் பாஜக கூட்டணி ஆட்சி - மேகாலயாவில் ஆட்சியமைக்க ஆதரவு

2 மார்ச் 2023, 03:29 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
தேர்தல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா மற்றும் நாகாலாந்தில் பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் வெற்றி பெற்றுள்ளன. மேகாலயாவில் கான்ராட் சங்மா ஆட்சி அமைக்க ஏதுவாக தமது பழைய கூட்டணியை பாஜக புதுப்பிக்கவிருக்கிறது.

இந்த நிலையில், திரிபுராவில் பாஜகவுக்கு கிடைத்த வெற்றி, முன்னேற்றம் மற்றும் ஸ்திரத்தன்மைக்கான வாக்கு என்று பிரதமர் நரேந்திர மோதி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். நாகாலாந்தில் வெற்றி பெற்றதற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ள அவர், மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக இரட்டை எஞ்சின் அரசு தொடர்ந்து பாடுபடும் என்று கூறியுள்ளார்.

Twitter பதிவை கடந்து செல்ல, 1

Thank you Tripura! This is a vote for progress and stability. @BJP4Tripura will continue to boost the state's growth trajectory. I am proud of all Tripura BJP Karyakartas for their spectacular efforts at the grassroots.

— Narendra Modi (@narendramodi) March 2, 2023

Twitter பதிவின் முடிவு, 1

திரிபுரா சட்டப்பேரவை தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில் 33 இடங்களை கைப்பற்றி பாஜக-ஐபிஎஃப்டி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பாஜக 32 இடங்களுடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது, அதே நேரத்தில் ஐபிஎஃப்டி ஒரு இடத்தில் வெற்றி பெற்றுள்ளது.

நாகாலாந்து

நாகாலாந்து சட்டப்பேரவைத் தேர்தலில் பாரதிய ஜனதாவும், அதன் கூட்டணிக் கட்சியான தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியும் 37 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மையைப் பெற்றுள்ளன.

தேர்தல் ஆணையத்தின் கூற்றுப்படி, பாஜக 12 இடங்களிலும், என்டிபிபி 25 இடங்களிலும் வெற்றி பெற்று 3 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன. தேசியவாத காங்கிரஸ் ஐந்து இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதே சமயம் இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) இரண்டு இடங்களைப் பெற்றுள்ளது.

நாகாலாந்து அரசியல் முன்னோடியும் என்டிபிபி தலைவருமான நெய்ஃபியூ ரியோ தனது கட்சி மற்றும் கூட்டணி கட்சியான பாஜகவுக்கு உறுதியான வெற்றியைப் பதிவு செய்திருக்கிறார்.

இதன் மூலம் அம்மாநிலத்தில் ஐந்தாவது முறையாக அவர் முதலமைச்சராக பதவியேற்க உள்ளார். அவர் மொத்தம் 17,045 வாக்குகளைப் பெற்றார், இது அந்தத் தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் 92.87% ஆகும்.

60 சட்டப்பேரவை இடங்களை கொண்ட நாகாலாந்து 1963இல் 'மாநில அந்தஸ்தை' பெற்றது, ஆனால் மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஒரு பெண் வேட்பாளர் வெற்றி பெறுவது இதுவே முதல் முறை. இங்குள்ள பெண்கள் ஏற்கெனவே நாடாளுமன்றத்தில் அம்மாநிலத்தை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளனர்.

இந்த முறை நாகாலாந்து சட்டப்பேரவை தேர்தலில் மொத்தம் 183 வேட்பாளர்கள் போட்டியிட்டனர், அவர்களில் நான்கு பேர் மட்டுமே பெண்கள்.

இதில், ஆளும் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி) சார்பில் ஹெகானி ஜக்லு (திமாப்பூர்-III தொகுதி) மற்றும் சல்ஹவுடுவோனுவோ (மேற்கு அங்கமி தொகுதி) ஆகிய இரு பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.

மேகாலயா

மேகாலயாவில் ஆளும் தேசிய மக்கள் கட்சி (என்பிபி) 26 இடங்களை வென்றது என்று தேர்தல் ஆணையம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

ஐக்கிய ஜனநாயக கட்சி (யுடிபி) 11 தொகுதிகளிலும், காங்கிரஸ் 5 இடங்களிலும் வெற்றி பெற்றன. வாய்ஸ் ஆஃப் தி பீப்பிள் பார்ட்டி (VPP) நான்கு இடங்களையும் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் 5 இடங்களையும் வென்றன.

அசாம் முதல்வர் ஹிமந்தா சர்மா, மேகாலயா முதல்வர் கான்ராட் சங்மா, இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அழைத்து மாநிலத்தில் ஆட்சி அமைக்க ஆதரவு கோருவதாகக் கூறினார்.

மேகாலாவில் அடுத்த அரசாங்கத்தை அமைப்பதற்கு தேசிய மக்கள் கட்சிக்கு ஆதரவளிக்குமாறு பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, கட்சியின் மாநில பிரிவுக்கு அறிவுறுத்தியுள்ளதாக சர்மா மேலும் கூறினார்.

தேர்தல் வாக்குறுதிகள்

திரிபுராவில் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் பேசிய இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவில் 2024ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி அன்று திறக்கப்படும் என தெரிவித்திருந்தார்.

அதன்பிறகு பாஜக இந்த தேர்தலை "கோவில் மற்றும் தேசியவாதம்" என்ற அம்சத்தில் அணுகும் என நிபுணர்கள் தெரிவித்திருந்தனர்.

அதேசமயம் திரிபுராவின் இடதுசாரி கட்சிகள் பாஜக மதத்தை வைத்து அரசியல் செய்வதாக குற்றஞ்சாட்டியிருந்தன.

மேகாலயாவில் மாநிலத்தில் வேலைவாய்ப்பின்மை மற்றும் ஊழலை ஒழிப்பதாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருந்தது.

மாநிலத்தில் 36 சட்டமன்ற தொகுதியில் ஆண்களின் எண்ணிக்கையை காட்டிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் பல்வேறு கட்சிகள் பெண்களை முன்னிலைப்படுத்தி பல வாக்குறுதிகளை வழங்கின.

நாகாலாந்தில், 'நாகாலாந்தை முன்னேற்றுவோம்' என்ற அம்சத்தை முன்னிலைப் படுத்தி பாஜக தேர்தலை எதிர்கொண்டது.

காங்கிரஸ் கட்சி, நாகாலாந்தில் ஆட்சியமைத்தால் உள்ளாட்சிகளில் பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கிடு வழங்கப்படும் மற்றும் முதியவர்களுக்கு மாதம் 3000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

திரிபுராவில் மீண்டும் மலர்ந்த தாமரை - பாஜகவின் வெற்றிக்கு காரணம் என்ன?

கட்டுரை தகவல்
  • எழுதியவர்,ராகவேந்திர ராவ்
  • பதவி,பிபிசி செய்தியாளர்
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்
திரிபுரா தேர்தல்

திரிபுராவில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது.

60 உறுப்பினர்களைக் கொண்ட திரிபுரா சட்டப்பேரவையில் ஆட்சி அமைக்க ஒரு கட்சிக்கு குறைந்தபட்சம் 31 இடங்கள் தேவை.

வியாழக்கிழமை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு பாரதிய ஜனதா கட்சி 32 இடங்களில் வெற்றி பெற்று அதிக இடங்களைப் பெற்ற கட்சியாக உருவெடுத்தது. ஆயினும் 2018 ஆம் ஆண்டு தேர்தலில் அக்கட்சி 36 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது.

2018 சட்டப்பேரவைத் தேர்தலைப் போலவே, இம்முறையும் பாஜக, திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணி (ஐபிஎஃப்டி) உடன் கூட்டணி வைத்து தேர்தலில் போட்டியிட்டது. 2018 இல் IPFT 8 இடங்களில் வெற்றி பெற்றிருந்த நிலையில், இம்முறை அக்கட்சி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற முடிந்தது. இந்த ஒரு இடத்தையும் சேர்த்து பாஜக கூட்டணிக்கு மொத்தம் 33 இடங்கள் கிடைத்துள்ளது. இது ஆட்சி அமைக்க போதுமானது.

இடங்கள் குறைந்துள்ளதால், பாஜகவின் வாக்கு சதவிகிதமும் குறைந்துள்ளது. கடந்த தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த வாக்குகள் 44 சதவிகிதமாக இருந்தது. இம்முறை அது 39 சதவிகிதமாக குறைந்துள்ளது.

 

திரிபுரா தேர்தல்

பாஜகவின் வெற்றிக்கான காரணங்கள் என்ன?

கடந்த ஐந்தாண்டுகளில் நடந்துள்ள துரித வளர்ச்சிப் பணிகள்தான் பாஜகவின் வெற்றிக்கு முக்கியக் காரணம் என்று திரிபுராவின் அரசியலை உற்று நோக்குபவர்கள் கூறுகின்றனர்.

"புதிய ரயில் இணைப்புகள், புதிய சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள் கட்டப்பட்டன. பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டத்தின் கீழ் பலர் வீடுகளைப் பெற்றனர். சமூக ஓய்வூதியங்கள் அதிகரிக்கப்பட்டன. கழிப்பறைகள் கட்டப்பட்டன. பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இவை அனைத்தும் பாஜகவின் வெற்றிக்கு பெரும் பங்களிப்பை அளித்துள்ளன,” என்று அகர்தலாவில் பிடிஐ மூத்த செய்தியாளர் ஜெயந்தா பட்டாச்சார்யா கூறினார்.

அகர்தலாவில் உள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளேட்டின் செய்தியாளரான தேப்ராஜ் தேப், இந்திய அரசின் வளர்ச்சி தொடர்பான முக்கிய திட்டங்கள் பாஜகவின் வெற்றியில் பெரும் பங்கு வகித்ததாக கருதுகிறார். இதனுடன், பல பெரிய உள்கட்டமைப்பு மற்றும் இணைப்புத் திட்டங்கள் வந்ததன் காரணமாகவும் பாஜக பயனடைந்ததாக அவர் கூறுகிறார்.

முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களில், ஃபெனி ஆற்றின் மீது இந்திய-வங்காள நட்புறவு பாலம் மற்றும் தெற்கு திரிபுராவின் பங்களாதேஷ் பக்கத்தில் உள்ள சப்ரூமில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி ஆகியவற்றை தேப்ராஜ் தேப் குறிப்பிடுகிறார். இதனுடன், பங்களாதேஷில் உள்ள அகர்தலா மற்றும் அகௌரா இடையே தொடங்கவிருக்கும் ரயில் இணைப்புத் திட்டத்தையும் அவர் குறிப்பிடுகிறார்.

இந்த எல்லா உள்கட்டமைப்பு திட்டங்களால் திரிபுராவை வணிக மையமாக மாற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தேப்ராஜ் தேப் கூறுகிறார். "வரும் காலங்களில் குவஹாட்டிக்கு பிறகு திரிபுரா, தென்கிழக்கு ஆசியாவின் நுழைவாயிலாக ஆகலாம் என்றும் கூறப்படுகிறது."

2014-ல் மத்தியில் பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து, திரிபுராவின் கனெக்டிவிட்டி துறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. அகல ரயில் பாதை இணைப்பு மற்றும் திரிபுராவின் புதிய விமான நிலைய முனையம் ஆகியவையும் இதில் அடங்கும்.

"பாஜக ஆட்சியில் வீடு, குடிநீர், இணைப்பு, வணிகம், வேலைவாய்ப்பு போன்ற விஷயங்களில் நிறைய வேலைகள் செய்யப்பட்டுள்ளன. இந்த பிரச்னைகளில் உழைத்ததன் பலன் கிடைத்ததாக பாஜகவும் நம்புகிறது," என்று தேப் கூறுகிறார்.

திரிபுரா தேர்தல்

'இடதுசாரிகளுக்கும் காங்கிரசுக்கும் இடையிலான கூட்டணி பலனளிக்கவில்லை'

இந்தத்தேர்தலில், இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக பாஜகவின் நேரடிப்போட்டி இருந்தது.

கடந்த தேர்தலில் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இம்முறை கட்சி மூன்று இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

ஆனால், கடந்த தேர்தலில் 16 இடங்களை பெற்ற சிபிஎம், இந்த முறை 11 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

திரிபுராவின் அரசியல் வரலாற்றை ஆராய்ந்தால், இடதுசாரிகளுக்கும், காங்கிரசுக்கும் இடையே நீண்ட காலமாக பதற்றமும், வன்முறையும் நிலவி வருவது தெளிவாகிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இரு தரப்பினரும் கடந்த காலங்களில் வன்முறை, அரசியல் குற்றங்கள் மற்றும் கொலைகளுக்கு பரஸ்பரம் குற்றம்சாட்டி வந்தனர்.

"அந்த வன்முறை சம்பவங்களின் நினைவு இன்னும் மக்கள் மனதில் உள்ளது. இந்த இரண்டு போட்டியாளர்களும் தேர்தலுக்கு முன்பு ஒன்றாக இணைந்தனர். தான் போட்டியிடாத இடத்தில் தனது கூட்டணி கட்சிக்கு அந்த வாக்குகள் கிடைக்கும் என்று இரு கட்சிகளும் நம்பின. ஒருவேளை அவ்வாறு நடக்கவில்லை" என்று தேப்ராஜ் தேப் கூறுகிறார்.

இடதுசாரிகளுடன் கூட்டணி அமைத்ததன் மூலம் காங்கிரசுக்கு சில நன்மைகள் கிடைத்திருக்கலாம். ஆனால் இந்த கூட்டணியால் இடதுசாரிகளுக்கு சிறப்புப் பலன் எதுவும் கிடைக்கவில்லை என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இடதுசாரிகளுக்கும் காங்கிரசுக்கும் இடையே கெமிஸ்ட்ரி இல்லாததால் பாஜக வெற்றி பெறுவது எளிதாகிவிட்டது என்கிறார் தேப்ராஜ் தேப்.

டிப்ரா மோதா கட்சியின் எழுச்சி

திரிபுராவின் முன்னாள் அரச குடும்பத்தின் வாரிசான பிரத்யோத் டெபர்மா தலைமையில் முதன்முறையாக சட்டப்பேரவைத்தேர்தலில் போட்டியிட்ட டிப்ரா மோதா கட்சி, இம்முறை தேர்தலில் 13 இடங்களில் வெற்றி பெற்று சிறப்பான தொடக்கத்தை செய்திருக்கிறது.

பழங்குடியின மக்களின் நலன்கள் மற்றும் உரிமைகளைப் பாதுகாக்கும் விஷயத்தை முன்வைத்த டிப்ரா மோதா, கடந்த காலங்களில் 'க்ரேட்டர் டிப்ராலாண்ட்' பற்றியும் பேசி வருகிறது.

"தனி மாநிலம் கிடைத்தால், தங்களின் பல பிரச்னைகள் தீர்க்கப்பட்டு, தங்கள் ஆசைகள் நிறைவேறும் என மக்கள் நினைத்தனர். அதனால்தான், இந்த கட்சி அதிக இடங்களை கைப்பற்றியுள்ளது," என்று டிப்ரா மோதாவின் செயல்பாடு குறித்து ஜெயந்தா பட்டாச்சார்யா கூறினார்.

டிப்ரா மோதா கட்சி தேர்தல் களத்தில் இறங்கியதால் இடதுசாரிகள் அதிகம் பாதிக்கப்பட்டனர் என்று அவர் நம்புகிறார். "டிப்ரா மோதா ஒதுக்கப்பட்ட பழங்குடியினப் பகுதிகளுக்கு வெளியேயும் வேட்பாளர்களை நிறுத்தியது. மேலும் சில பகுதிகளில் சிபிஎம் ஆதரவாளர்களாக இருந்த பல பழங்குடியினர் டிப்ரா மோதாவை நோக்கிச் சென்றனர். அத்தகைய சூழ்நிலையில் சிபிஎம் கட்சிக்கு நஷ்டம் ஏற்பட்டது,” என்று அவர் குறிப்பிட்டார்.

தேப்ராஜ் தேப்பும் இதை ஒப்புக்கொள்கிறார். ”இடதுசாரி மற்றும் காங்கிரஸ் கூட்டணிக்கு செல்ல வேண்டிய பழங்குடியின ஓட்டுகள் டிப்ரா மோதாவை நோக்கி வந்துள்ளதாக தெரிகிறது. இதுவும் பாஜகவின் வெற்றியை எளிதாக்கியது,” என்று அவர் குறிப்பிட்டார்.

டிப்ரா மோதாவின் எழுச்சி காரணமான இழப்பை பாஜக கூட்டணியில் அங்கம் வகித்த IPFT கட்சி தாங்க வேண்டியிருந்தது என்று ஜெயந்தா பட்டாச்சார்யா கூறினார்.

"ஐபிஎஃப்டி மற்றும் டிப்ரா மோதாவின் கோரிக்கைகள் ஏறக்குறைய ஒன்றுதான். எனவே, ஐபிஎஃப்டியின் பெரும்பாலான தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் டிப்ரா மோதாவை நோக்கிச் சென்றனர். இதுவே ஐபிஎஃப்டியின் மோசமான செயல்பாட்டிற்குக் காரணம்" என்று அவர் சுட்டிக்காட்டினார்.

டிப்ரா மோதாவை நோக்கி பாஜக நட்பு கரம் நீட்டுமா?

பா.ஜ.க கூட்டணிக்கு 33 இடங்கள் உள்ளதால், டிப்ரா மோதாவுடன் கூட்டணி அமைப்பது பற்றி பாஜக, சிந்திக்குமா என்ற பெரிய விவாதமும் நடந்து வருகிறது.

டிப்ரா மோதாவுடன் கைக்கோர்ப்பதன் மூலம் பாஜக கூட்டணிக்கு 46 இடங்கள் கிடைக்கும் என்றும், அது அக்கட்சிக்கு வசதியாக நிலையை ஏற்படுத்தும் என்றும் சில நிபுணர்கள் கருதுகின்றனர்.

தேர்தலுக்கு முன்பே பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும், டிப்ரா மோதாவுடன் கூட்டணி அமைக்க முயற்சிப்பதாக பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால், டிப்ரா மோதாவின் தனி மாநிலக் கோரிக்கை இரு தேசியக் கட்சிகளுக்கும் ஏற்புடையதாக இருக்கவில்லை என்பதால் கூட்டணி அமைக்க முடியவில்லை.

இந்தத் தேர்தலில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐபிஎஃப்டியின் மோசமான செயல்பாட்டிற்குப் பிறகு, பாஜக மீண்டும் டிப்ரா மோதாவை நோக்கி நட்புக் கரம் நீட்டக்கூடும் என்ற ஊகங்கள் மீண்டும் எழுந்துள்ளன.

இதற்கிடையில், தனி மாநில கோரிக்கையை தவிர, டிப்ரா மோதாவின் மற்ற அனைத்து கோரிக்கைகளையும் ஏற்க தயார் என பாஜக தரப்பில் இருந்து சிமிஞ்சைகள் அளிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.

ஆயினும், பாஜகவுக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளதால், அக்கட்சியும் டிப்ரா மோதாவும் கூட்டணி அமைக்கும் வாய்ப்பு காணப்படவில்லை என்று ஜெயந்தா பட்டாச்சார்யா கூறுகிறார்.

https://www.bbc.com/tamil/articles/c98y28wr8vvo

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.