Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
power-1.jpg

ஜூலை முதலாம் திகதி முதல் மின்சார கட்டணத்தை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இன்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதன்படி, வீட்டு பாவனை நுகர்வோருக்கு மேலும் நிவாரணம் வழங்கப்படும் என்றும், இந்த முன்மொழிவுக்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் அங்கீகாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் கூறினார்.

இதன்படி, 0-30 இற்கு உட்பட்ட அலகு ஒன்றின் கட்டணம் 8 ரூபாயிலிருந்து 6 ரூபாயாகவும், 30-60 அலகுகளுக்கு இடைப்பட்ட அலகு ஒன்றின் கட்டணம் 20 ரூபாயிலிருந்து 9 ரூபாவாகவும், 60-90 இற்கு இடைப்பட்ட அலகு ஒன்றின் கட்டணம் 30 ரூபாயிலிருந்து 18 ரூபாவாகவும், 90-180 அலகுக்கு உட்பட்ட அலகு ஒன்றின் கட்டணம் 50 ரூபாவிலிருந்து 30 ரூபாவாகவும் குறைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/303237

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மின் கட்டணம் குறைக்கப்பட்ட பின் 40 இலட்ச மின்பாவனையாளர்கள் பயனடைவார்கள் - மின்சாரத்துறை மற்றும் வலு சக்தி அமைச்சர்

Published By: DIGITAL DESK 3

07 JUN, 2024 | 09:34 AM
image
 

(இராஜதுரை ஹஷான்)

மின் கட்டண திருத்தம் தொடர்பான யோசனையை இன்று அல்லது நாளை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முன்வைப்போம். எதிர்வரும்  மாதம் முதலாம் திகதியில் இருந்து அமுலுக்கு வரும் வகையில் மின்கட்டணம் குறைக்கப்படும். 68 இலட்ச மின்பாவனையாளர்களில் 40 இலட்சம் மின்பாவனையாளர்கள் பயனடைவார்கள் என மின்சாரத்துறை மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (06) இடம்பெற்ற மின்சார சபை மறுசீரமைப்பு சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

மின்னுற்பத்திக்கான செலவுகளை ஈடு செய்யும் வகையில் மின்கட்டணம் திருத்தம் செய்யாமல் இருந்திருந்தால் மின்விநியோக கட்டமைப்பில் எழுந்த பிரச்சினைகளுக்கு இன்றும் தீர்வு கண்டிருக்க முடியாது.மின்கட்டணம் திருத்தம் தொடர்பான யோசனையை இன்று அல்லது நாளை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் முன்வைப்போம்.

நான்கு மாதங்களுக்கு ஒருமுறை மின்கட்டணம் திருத்தம் தொடர்பான கொள்கை காணப்படுகிறது.இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.இதனை புதிதாக குறிப்பிட வேண்டிய தேவை கிடையாது.இதற்கமைய மின்கட்டணம் திருத்தம் தொடர்பான யோசனையை கடந்த வாரம் நிறைவு செய்தோம்.

இதற்கமைய எதிர்வரும்  ஜூலை மாதம் 1 ஆம் திகதி முதல் மின்கட்டணம் குறைக்கப்படும்.குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கும்,வீட்டு மின்பாவனையாளர்களுக்கும் நிவாரணம் வழங்கப்படும். 0-30 வரையான அலகுகளை கொண்ட மின்பாவனைகளில் ஒரு அலகுக்கு  தற்போது அறவிடப்படும் 8 ரூபாவை 6 ரூபாவாக குறைப்பதற்கும்,

30 -60 மின்பாவனையில் ஒரு அலகுக்காக அறவிடப்படும்  20 ரூபாவை 09 ரூபாவாகவும்,  60-90 வரையான அலகுகளில் ஒரு அலகுக்கு அறவிடப்படும் 30 ரூபாவை 18 ரூபாவாக குறைப்பதற்கும்,120 மின்பாவனையில் ஒரு அலகுக்கு  அறவிடப்படும் 50 ரூபாவை 30 ரூபாவாக குறைப்பதற்கும்  திருத்தங்கள் முன்வைக்கப்படும்.

68 இலட்ச மின்பாவனையாளர்களில் ஏறத்தாழமாக  40  இலட்சம் மின்பாவனையாளர்களுக்கு மின்கட்டணம் திருத்தம் ஊடாக நிவாரணம் வழங்கப்படும். அதேபோல் மத தலங்கள், பாடசாலைகள், அரச நிறுவனங்கள் ஆகியவற்றின் மின்கட்டணம் குறைக்கப்படும். எமது யோசனைகளை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு முன்வைப்போம்.கட்டணம் மேலும் குறைக்க வேண்டும் என்று ஆணைக்குழு குறிப்பிட்டால் அதனையும் ஏற்போம் என்றார்.

https://www.virakesari.lk/article/185496

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மின்கட்டணம் 30 சதவீதத்தால் குறையும் – காஞ்சன

kanchana-wijesekara-300x200.jpg

எதிர்வரும் 18ஆம் திகதி அமுலாகும் வகையில் மின்கட்டணம் 30 சதவீதத்தால் குறைவடையக் கூடும் என விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

மாத்தறை தெனியாய பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பொதுமக்களுக்கு நிவாரணம் அளிக்கும் வகையிலேயே இந்த மின் கட்டண குறைப்பு அமுலாகவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/305571

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மின்கட்டண குறைப்பு - முழுமையான விபரங்கள் இதோ!

Published By: VISHNU   15 JUL, 2024 | 08:32 PM

image

(இராஜதுரை ஹஷான்)

மின்கட்டணத்தை 22.5 சதவீதத்தால் குறைப்பதற்கு இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. புதிய கட்டணத் திருத்தத்தை இன்று செவ்வாய்க்கிழமை முதல் அமுல்படுத்துமாறு ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அறிவுறுத்தியுள்ளது.

மின்கட்டணம் குறைவடைந்துள்ளது என்பதற்காக மின்சாரத்தை வீண்விரயம் செய்வதை தவிர்த்துக் கொண்டு மின்சாரத்தை சிக்கனமாக பாவிக்குமாறு ஆணைக்குழு மின்பாவனையாளர்களிடம் வலியுறுத்தியுள்ளது.

இந்த ஆண்டில் இரண்டாவது தடவையாக மின்கட்டணத்தை திருத்தம் செய்வதற்காக இலங்கை மின்சார சபை முன்வைத்த முன்மொழிவுகள் மற்றும் மின்கட்டணம் திருத்தம் குறித்து பொது மக்களின் அபிப்பிராயங்களை பெற்றுக் கொண்டதன் பின்னர் 22. 5 சதவீதத்தால் கட்டணத்தை திருத்தம் செய்ய ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

வீட்டு பாவனைக்கான மின்கட்டணத்தை 27 சதவீதத்தாலும், மத தலங்களுக்கான கட்டணத்தை 30 சதவீதத்தாலும், ஹோட்டல் மற்றும் கைத்தொழில் துறைகளுக்கான கட்டணத்தை 25 சதவீதத்தாலும் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மொத்த மின்கட்டணம் 22.5 சதவீதத்தால் குறைக்கப்பட்டுள்ளது.

வீட்டில் சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட வியாபாரமாக தமது தொழிற்றுறையை உரிய அரச நிறுவனத்தில் பதிவு செய்ய வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கான நிவாரணம் மின்கட்டண குறைப்பு ஊடாக கிடைக்கப் பெறும் என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஆணைக்குழுவின் தலைவர் மஞ்சுள பெர்னாண்டோ மின்கட்டண குறைப்பு தொடர்பான தீர்மானத்தை அறிவித்தார்.

இதற்கமைய வீட்டு பாவனை, மததலங்கள், ஹோட்டல், கைத்தொழிற்சாலைகள், பொது பணிகள் மற்றும் அரச நிறுவனங்கள் உள்ளிட்ட சகல நுகர்வு தொகுதிகளுக்குமான கட்டணங்கள் இன்று முதல் (செவ்வாய்க்கிழமை) குறைக்கப்படும். இலங்கை மின்சார சபை முன்வைத்த முன்மொழிவில் முழுமையான மின்கட்டணத்தை 10 சதவீதத்தால் குறைக்க பரிந்துரைத்துள்ள போதும் தரவுகளை ஆராய்ந்து மின்கட்டணத்தை 22.5 சதவீதத்தால் குறைப்பதற்கு ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இதற்மைய வீட்டு மின்பாவனைக்கான மின்கட்டணம் பின்வருமாறு திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

01.png

மத தலங்களில் குறைவான மின்பாவனையுடனான தொகுதிகளுக்கு இதுவரை அறவிடப்பட்ட 8 மற்றும் 9 ரூபாய் என்ற அடிப்படையிலான ஒரு அலகுக்கான கட்டணத்தை 6 ரூபாவாக குறைப்பதற்கும், 18 ரூபாவாக காணப்பட்ட ஒரு அலகுக்கான கட்டணத்தை 10 ரூபாவாகவும், 32 ருபாவாக காணப்பட்ட ஒரு அலகுக்கான கட்டணத்தை 20 ரூபாவாகவும், 43 ரூபாவாக காணப்பட்ட ஒரு அலகுக்கான கட்டணத்தை 30 ரூபாவாகவும் அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அத்துடன் மத தலங்களுக்காக அறவிடப்பட்ட மாத நிலையான கட்டணத்துக்கான அனைத்து தொகுதிகளுக்கான கட்டணங்களும் குறைக்கப்பட்டுள்ளன.

அரச நிறுவனங்கள் மற்றும் பொது பணிகளுக்கு ஒரு அலகுக்காக இதுவரை அறவிடப்பட்ட 55 ரூபா, 45 ரூபா, 37 ரூபா முறையே 46.75 ரூபா, 38.25 ரூபா, 31.45 ரூபா என்ற அடிப்படையில் குறைக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டண திருத்த்தத்துடன் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு ஏழு நிபந்தனைகளை விதித்துள்ளது. மின்பாவனையாளர்கள் கோரினால் அவர்களுக்கு மின் கட்டண பற்றுச்சீட்டினை விநியோகிக்க வேண்டும் என்று ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அதேபோல் மின்னுற்பத்திக்காக  எரிபொருளை கொள்வனவு செய்வதற்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துடன் ஒப்பந்தம் செய்யுமாறும், 2023 ஆம் ஆண்டு இறுதி காலாண்டின் செலவுகள் குறித்து விரிவான சுயாதீன கணக்காய்வினை மேற்கொண்டு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 30 ஆம் திகதிக்குள் ஆணைக்குழுவுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் மின்சார சபைக்கு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

மின்கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது என்பதற்காக மின்சாரத்தை வீண்விரயம் செய்வதை மின்பாவனையாளர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். மத தலங்களில் மின்சாரம் எவ்வித சிக்கனமும் இல்லாமல் பயன்படுத்துவதை அவதானிக்க முடிகிறது. ஆகவே மின்னுற்பத்தியை வரையறைக்குள் வைத்துக் கொள்ள வேண்டுமாயின் பாவனையாளர்கள் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது.

https://www.virakesari.lk/article/188547

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

“மின்கட்டண குறைப்புடன் பொருட்கள், சேவைகள் கட்டணங்களை 20% குறைக்க முடியும்!”

அதிகரித்துள்ள பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டணங்களை, மின்சாரக் கட்டணத் திருத்தத்தினூடாக 20 சதவீதத்தினால் குறைக்க முடியும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மின் கட்டணம் அதிகரிக்கும் தினத்தன்று அதிகரிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டணத்தை, அது குறைக்கப்படும் தினத்திலிருந்து குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் வர்த்தகர்களிடம் கோரியுள்ளார்.

மின்சாரம் மற்றும் எரிபொருட்களின் விலைகளை பாரியளவில் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும் பொருட்கள் மற்றும் சேவைக் கட்டணக் குறைப்பின் பலன் இன்னும் நுகர்வோரைச் சென்றடையவில்லை என அவர் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, ஒக்டோபர் மாதங்களில் மின் கட்டணத்தைத் திருத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய, கடந்த மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் பின்னர், ஏப்ரல் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாமல் ஜூலை மாதம் மின் கட்டணம் திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/306198

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.