Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
03 SEP, 2024 | 09:39 AM
image

தொழுநோய் என்பது ஒரு தொற்று நோய் இது எளிதில் சுவாசம் மூலம் பரவக்கூடியது. ஆனால் அதன் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து இந்த சிகிச்சை மேற்கொண்டால் முழுமையாக குணமடைய கூடியது. இலங்கையில் தொழு நோயிலிருந்து மக்களை பாதுகாக்க விழிப்புணர்வு அதிகரிப்பது அவசியமாகும் என  வவுனியா இந்து குருக்கள் ஒன்றியத்தின் தலைவர் - சுப்ரமணிய சர்மா குருக்கள்  தெரிவித்துள்ளார். 

வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற தொழுநோய் முகாமைத்துவம், மற்றும் தொழுநோயினால் பாதிக்கப்பட்ட மக்களின் மேம்பாடு எனும் தொனிப்பொருளில் வவுனியா பிரதேச செயகலம், காவேரி கலா மன்றம் மற்றும் மாற்று மக்கள் சபை ஆகியன இணைந்து நடாத்திய மாநாட்டில் இணைந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.  

இந்த விடயம்  தொடர்பில் அவர்  மேலும் தெரிவிக்கையில்,   

தொழு நோயின் முக்கிய அறிகுறிகளாக தோலின் மேற்பரப்பில் கட்டிகள் மற்றும் வெளிறிய நிறத்தில் தேமல் காணப்படும். அவை உணர்ச்சியற்றவையாக ரோமங்கள் அற்றவையாக காணப்படும்.

சில சந்தர்ப்பங்களில் நரம்புகள் மரத்துப் போகின்ற கை கால் உணர்ச்சியற்ற நிலை ஏற்படுகின்ற நிலையும் ஏற்படலாம் இவை அறிகுறிகளாக காணப்படும். 

இவ்வாறான அறிகுறிகள்  காணப்படுமாயின்  உடனடியாக மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியம் இலங்கையில் இலவச சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன எனவே பயப்படாமல் மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்யவும். 

நோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்கள் சமூகத்தில் ஒதுக்கப்படும் நிலையை தவிர்க்க அனைவரும் தொழுநோய் தொடர்பாக அறிந்து மக்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பது இன்றியமையாதது. தொழு நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெற்று நம் சமூகத்தை காப்போம் என்றார்.  

https://www.virakesari.lk/article/192695

Leprosy (தொழு நோய்)

தொழுநோய் என்பது புறநரம்புகள் பகுதிகளிலும் மற்றும் சுவாசக்குழாயில் காணப்படும் கோழைகளில் ஏற்படும் குருண/குருமணி நோய்களாகும். தோலில் காணப்படும் சீழே அதன் முதல் அறிகுறியாகும். ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிக்காமல் விடின் தொழுநோயின் தீவிரம் அதிகரித்து தோல், நரம்பு, விரல்கள் மற்றும் கண்களுக்கு நிரந்தர பாதிப்பை ஏற்படுத்தும்.

 

 

தொழுநோய் என்றால் என்ன?

மைக்ரோ பேக்டீரியம் லெப்ரே (Mycobacterium Leprae) என்ற பாக்டீரியாவால் உண்டாகும் ஒரு தொற்றுநோயே தொழுநோய். இந்த பாக்டீரியா மிக மெதுவாக பெருகுவதால் நோய்த் தொற்று ஏற்பட்டு குறைந்தது 5 அல்லது 6 ஆண்டுகளுக்கு பிறகே நோயின் அறிகுறிகள் தோன்றும். இந்த நோய், தோல், நரம்பு, மேல் மூச்சு மண்டலத்தை பாதிக்கும்.

இந்நோயை உண்டாக்கும் நோயுயிரியை முதலில் 1873ம் ஆண்டு மருத்துவர் கெரார்டு ஆன்சன் என்பவர் கண்டறிந்தார். ஆதலால், இது ஆன்சன் நோய் எனவும் அழைக்கப்படுகிறது

தொழுநோய் எப்படி உண்டாகிறது? 

மைக்கோபாக்டீரியம் லெப்ரே என்பது வெப்பமண்டலப் பகுதிகளில் காணப்படும் பாக்டீரியம்தான். இதுவே தொழுநோயை உண்டாக்குகிறது. அளவிலும் வடிவிலும் இது காசநோயை (TB) உண்டாக்கும் நுண்ணுயிரி (மைக்கோபாக்டீரியம் தியூபர்குளோசிசு) போன்றதே.

ஒளி நுண்ணோக்கி வழியே கண்டால் இந்த பாக்டீரியா உருண்டை உருண்டையாகவோ பக்கம் பக்கமாகக் குச்சிகளாகவோ, ஏறத்தாழ 1 முதல் 8 மைக்ரோமீட்டர் நீளமும், 0.2 – 0.5 மைக்ரோமீட்டர் குறுக்களவும் கொண்ட குச்சிகளாகக் காணப்படுகின்றன.

இந்த நுண்ணுயிரியை நார்வே மருத்துவர் கெரார்டு ஆர்மவுர் ஃகான்சன் (Gerhard Armauer Hansen) 1873ம் ஆண்டு கண்டுபிடித்தார். அவர் அப்பொழுது தொழுநோய் உற்றவர்களின் தோல் கொப்புளங்களில் குறிப்பாகத் மனிதர்களில் தேடிக்கொண்டிருந்தார். தொழுநோயை உண்டாக்கும் நுண்ணுயிரியாகக் கண்டுபிடிக்கப்பட்ட முதல் நுண்ணுயிரி இதுதான். இந்த நுண்ணுயிரியை சோதனைச்சாலையில் வளர்க்க இயலாமல் இருப்பதற்குக் காரணம் இந்த நுண்ணுயிரிகளின் உயிர்வாழ்வுக்குத் தேவையான அடிப்படைப் பொருள்கள் (மரபணுக்கள் சில) பிற உயிர்களில் இருந்துதான் கிடைக்கின்றன. மைக்கோபாக்டீரிய வகையைச் சேர்ந்த இந்த நுண்ணுயிரியின் உயிரணுவைச் சூழ்ந்திருக்கும் படலத்தின் தனித்தன்மையாலும் மிக மிக மெதுவாகவே எண்ணிக்கைப் பெருக்கம் செய்வதாலும், இவற்றை அழிப்பது கடினமாக உள்ளது.

நோய் எவ்வாறு பரவும்? 

சிகிச்சை பெறாத நோயாளியே நோய் பரவலுக்கு காரணம்.

தொழு நோயாளியின் உடலில் இருந்து நோய் கிருமி பரவும் முக்கிய வழி சுவாச மண்டலம்.

சிகிச்சை பெறாத தொழுநோயாளிகளிடம் தொடர்ந்து தொடர்பு இருக்கும்போது நோய் உண்டாகும்.

இந்த பாக்டீரியா மூக்கு/வாய் வழியாக சுவாச மண்டலத்துக்குள் நுழைகிறது. பின்பு அவை நரம்புகள் மற்றும் தோலை அடைகின்றன.

நோய் அறிகுறிகள் என்னென்ன? 

* வெளியேறிய தோல் திட்டுக்கள்

* தோல் திட்டுகளில் உணர்வு குறைவு/இழப்பு

* கை அல்லது காலில் உணர்வின்மை

* கால், கைகளில் காயம் அல்லது தீப்புண்(உணர்வின்மை காரணமாக சூடு அறியாமை)

* முகம் அல்லது காது மடலில் வீக்கம்

அறிகுறிகள் தென்பட்டால்..? 

தொழுநோய் அறிகுறிகள் தென்பட்டால் அருகில் உள்ள தோல் மருத்துவரை அணுக வேண்டும். தொழுநோய்க்கு மருந்து உண்டு.

பன்மருந்து சிகிச்சையின் (MDT) முக்கியத்துவம் என்ன? 

தொழுநோயை ஒரு தனி மருந்தால் குணப்படுத்த முடியாது. பல மருந்துகளின் கூட்டு சிகிச்சை அதாவது எம்.டி.டி (MDT) தொழுநோய் பன்மருந்து சிகிச்சையால் (Antibiotics) குணப்படுத்த முடியும். தொடர்ந்து பன்மருந்து சிகிச்சை மேற்கொள்ளும் போது நோய் முற்றிலுமாக குணப்படுத்தப்பட்டு ஊனங்கள் தவிர்க்கப்பட்டு, நோய் பரவலும் தடுக்கப்படுகிறது.

நோய் பரவும் முறை 

இந்நோய் காற்றின் மூலமே அதிகம் பரவும். நோயுற்றவருடன் ஏற்படும் நேரடித்தொடர்பின் மூலமும் நோயுயிரி சுவாசக் குழாய் வழியாக உட்செல்வதின் மூலமும் இது பரவுகிறது. நோய்த்தொற்று உள்ள நபர் தும்மும்போதும் இருமும்போதும் கோடிக்கணக்கான தொழுநோய் நுண்ணுயிர்கள் காற்றில் பரவுகின்றன. இது நாசி வழியாக உள்சென்று நோயெதிர்ப்பு சக்தி குறைந்தவரைத் தாக்குகிறது. மேலும் இது நோயுற்றவரின் உடலில் வழியும் சீழ்களில் தொடர்பு ஏற்படுவதாலும் பரவுகிறது.

பாதிப்புகள் 

முகம்: மூக்கு சப்பையாகுதல், கண் இமைகள் மூட முடியாத நிலை.

கை: விரல்கள் மடங்கிப்போதல், விரல்கள் குறைந்த அளவில் காணப்படுதல், மணிக்கட்டு துவண்டுவிடுதல்.

கால்: விரல்கள் மடங்கி போதல், விரல்கள் மழுங்கி விடுதல், பாதம் துவண்டு விடுதல், பாதத்தில் உணர்ச்சி போய் குழிப்புண்கள் ஏற்படுதல். தாக்கம் அதிகமாயின் உயிரும் இழக்க நேரிடும்.

உலக தொழு நோய் தினம் ஏன்? எப்போது? 

உலக தொழுநோய் தினம் ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி இறுதி ஞாயிறு கடைப்பிடிக்கப்படுகிறது. ஊனமாக்கும் தொழுநோயை விரைவில் ஒழிக்க தீவிர முயற்சிகளையும் புதிய உறுதியையும் மேற்கொள்ள இந்த தினம் உதவுகிறது.

இந்தத் தினம் எதற்காக அனுசரிக்கப்படுகிறது?  

தொழுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த… அதன் நோய் அறிகுறிகளை பற்றி மக்கள் அறிய தொழுநோய் குணப்படுத்த முடியும் தகுந்த சிகிச்சை எடுத்து கொண்டால் என்பதை அறியப்படுத்த…

தொழுநோய் பற்றிய மோசமான, தவறான எண்ணங்களை (STIGMA) விலக்க…

Dr. ஏ .எஸ். நிறைமதி MBBS,MD,DNB
சரும மருத்துவர்
காவேரி மருத்துவமனை, திருச்சி, தென்னூர்

https://kauveryhospital.com/blog/tamil-articles/a-disease-that-continues-for-ages/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.