Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ். நிலைமையை விரைந்து சீர் செய்க - பிரதம நீதியரசர்

Featured Replies

யாழ்.குடாநாட்டில் மோசமான மனித உரிமை மீறல சம்பவங்களினால் ஏற்பட்டுள்ள பேரச்ச

சூழ்நிலையையும் கட்டு மட்டில்லாமல் பொருள்களின் விலைகள் உயர்ந்துள்ளதால் உருவாகியுள்ள வாழ்க்கை செலவுச் சிக்கல்களையும் களைவதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அரச உயர்மட்டத்தை நேரில் வலியுறுத்திக் கோரியிருக்கிறார் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா.

யாழ் குடாநாட்டுக்குத் தாம் அண்மையில் நேரில் மேற்கொண்ட விஜயத்தின் போது தாம் கண்டு, கேட்டறிந்து அவதானித்த விடயங்களை அரசுத் தலைமைக்கு பிரதம நீதியரசர் நேரடியாக விளக்கினார் என்றும் அறிய வந்தது.

யாழ் நீதிமறத்திற்கான புதிய கட்டடத் தொகுதியைத் திறந்து வைப்பதற்காக அண்மையில் யாழ். சென்றிருந்த பிரதம நீதியரசர் சரத் என். சில்வா, அங்கு யாழ். வர்த்தக சம்மேளனப் பிரமுகர்களையும் சிவில் சமூகப் பெரியோர்களையும் தனியே சந்தித்து உரையாடியிருந்தார்.

யாழில் கப்பல் போக்குவரத்துக் கட்டண அதிகரிப்பு உட்பட பல்வேறு சிக்கல்களால் அத்தியாவசியப் பொருட்கள் உட்பட அனைத்துப் பொருட்களினதும் விலைகளும் அத்துமீறி உயர்ந்துள்ளன. இந்தச் சிக்கலை எதிர்கொள்ள முடியாமல் யாழ். குடும்பங்கள் அந்தரிக்கின்றன. அதே வேளை ஆட்கடத்தல்கள், காணமற் போகச் செய்தல், படுகொலைகள் போன்ற மோசமான மனித உரிமை மீறல்கள் காரணமாக யாழ். குடா நாடே பீதியில் உறைந்த கிடக்கினறது. இந்த விடயங்களை யாழ்ப்பாண பிரமுகர்கள் உணர்வுபூர்வமான நெஞ்சைத் தொடும் விதத்தில் பிரதம நீதியரசருக்கு எடுத்துரைத்தனர் எனத் தெரிகிறது.

அதனையடுத்து, கொழும்பு திரும்பிய பிரதம நீதியரசர் இந்த விடயங்கள குறித்து விசேட சிரத்தை எடுத்துத் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டார் எனவும் அறியவந்தது.அவர் ஜனாதிபதியின் பிரதான ஆலோசகரும், எம்.பியுமான பஸில் ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபய எனச் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு குடாநாட்டின் உண்மை நிலைவரத்தை நேரில் எடுத்து விளக்கி, நிலைமையைச் சீர்செய்ய விரைந்து செயற்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்திக் கூறினார் எனத்தெரிகிறது

நிலைமை மோசடைந்து செல்கின்றது. குடாநாட்டில் பொருட்களின்விலை எல்லை மீறி அதிகரித்திருப்பதைக் கட்டுப்படுத்த ஏதேனும் செய்தாக வேண்டும். யாழ்.மக்களின் அச்ச நிலையைப் போக்கி, அவர்களுக்குத் தெம்பூட்ட ஆக்கபூர்வமாச் செயற்பட வேண்டும். இவற்றைச் செய்யத் தவறினால் நிலைமை விபரீதம் அடைவதைத் தடுக்க முடியாது என்றும் நீதியரசர் எச்சரித்தார் என்றும் தெரிகிறது.

இந்த விடயங்களைக் கவனத்தில் எடுத்து விரைந்து ஆக்கபூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அரசுத் தரப்பால் நீதியரசருக்கு உறுதியுரை வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.இவ்விடயங்கள் குறித்து தம்மால் இயன்ற பொருத்தமான நடவடிக்கைகள் எடுககப்பட்டு, பிரச்சினைகளை சுமுகமாகத் தீர்த்து வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பதை பிரதம நீதியரசர் தம்மைச் சந்தித்த யாழ். சிவில் சமூகப் பிரதிநிகளுக்கும் தெரியப்படுத்தியிருக்கிறார் என்றும் அறியவந்தது.

நன்றி : சுடர் ஒளி

இத்தனை அவலத்திற்கும் காரணம் மஹிந்த கொம்பனி. அங்கு நிலைமைகள் அவர்களுக்குத் தெரியாமல் இருக்காது. இவர்களின் தூண்டுகோலால் தான் இவ்வளவு அவலங்களும் தமிழர் தாயகத்தில். விலையேற்றம், கொள்ளை, கடத்தல், கொலை அத்தனைக்கும் இந்த சகோதரர்களின் அறிவுறுத்தல் இருப்பது கண்கூடு. இவர்களிடம் போய் நியாயம் கேட்பது.....??

கொசுறு :

பட்டறிவுப் பகிர்வு

யாழ் மக்களைப் பட்டினி போட்டு அவதிக்குள்ளாக்கும் நடவடிக்கையில் அரசு முழு மூச்சாக ஈடுபட்டிருக்கிறது. இந்நிலையில் யாழ். மக்களின் துயர் துடைக்கத் தமிழகத்திலிருந்து 'தமிழர் தேசிய இயக்கத்' தலைவர் பழ. நெடுமாறன் அவர்கள் படகுகளில் அரிசி ஏற்றி யாழ். கொண்டுவரும் போராட்டத்தில் குதித்தார். அதனைத் தமிழக முதல்வர் கருணாநிதி தலையிட்டுப் போராட்டத்தை நிறுத்தி வைத்தார். (எஜமான விசுவாசத்துடன்)

தற்போது யாழ்ப்பாணத்திற்கு 6,000 தொன் அரிசியை வரவழைத்து விற்பனை செய்யத் தனியார் வியாபாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.அதற்குத் தேவையான அரிசி மூடைகள் சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களுக்குக் கொண்டு வரப்பட்டு கப்பல்களில் ஏற்றுவதற்கு தயார் நிலையில் இருக்கின்றன. இந்நிலையில் இந்தியாவிலிருந்து அரிசி ஏற்றுமதி செய்வதற்கு இந்திய அரசு தடைவிதித்திருக்கிறது.

கொழும்புப் புறக்கோட்டை மொத்த விற்பனையாளர் சங்கத்தைச் சேர்ந்த 20 வர்த்தகர்கள் தாம் தமிழ் நாட்டில் கொள்வனவு செய்த 6,000 தொன் பொண்ணி சம்பா அரிசியை யாழிற்கு வரவழைத்து யாழ். மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாதவர்களாக இருக்கின்றார்கள். "தெய்வம் வரம் கொடுத்தாலும் பூசாரி வழி விடாத" கதை போல் யாழ். மக்கள் அவதியுறுகிறார்கள்.

நன்றி சுடர் ஒளி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.