Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

19 JUL, 2025 | 04:37 PM

image

மலையகத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டமும் சடுதியாக அதிகரித்துள்ளது.  

அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உட்பட நாளாந்தம் தொழிலில் ஈடுபடும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.  

கனமழை காரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கம் சனிக்கிழமை (19) காலை முதல் நிரம்பி வழிகின்றது.

அத்துடன், காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாகெல்லே நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. எனவே, தாழ்நிலப் பகுதிகளில் வாழ்பவர்கள் விழிப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/220402

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு

Published By: DIGITAL DESK 3

20 JUL, 2025 | 03:07 PM

image

பெய்து வரும் பலத்த மழைக்கு மத்தியில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் ஒரு வான் கதவைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மேல் கொத்மலையின் நீரேந்து பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு இன்று ஞாயிற்றுக்கிழமை (20) அதிகாலை முதல் திறக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

நீர்த்தேக்கத்தின் ஏனைய வான் கதவுகள் சுயமாகவே திறக்கப்படும் என்று நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது இதனால்  நீர்த்தேக்க அணையின் கீழ்ப்பகுதியில் உள்ள கொத்மலை ஓயாவின் இருபுறமும் வசிக்கும்  பொதுமக்கள் இது தொடர்பாக விழிப்புடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்து பிரிவின் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

மேல் கொத்மலை நீர்தேக்க பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், சென் கிளயார் மற்றும் டெவோன் நீர்வீழ்ச்சிகளில் இருந்து வெளியேறும் நீரும் அதிகரித்துள்ளமை குறிப்பிடதக்கது.

IMG-20250720-WA0031.jpg

IMG-20250720-WA0030.jpg

IMG-20250720-WA0026.jpg

https://www.virakesari.lk/article/220465

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நுவரெலியாவில் பலத்த மழை ; கிரகரி வாவியில் மட்டுப்படுத்தப்பட்ட படகுச் சவாரி

21 JUL, 2025 | 04:20 PM

image

நுவரெலியாவில் பெய்துவரும் பலத்த மழை மற்றும் காற்று காரணமாக கிரகரி வாவியில் இடைநிறுத்தப்பட்டிருந்த படகுச் சவாரி இன்று (21) மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சேவையினை வழங்க ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் நுவரெலியா கிரகரி வாவியில் படகுச் சவாரியானது சனி (19), ஞாயிறு (20) ஆகிய இரு தினங்களும் முற்றாக நிறுத்தப்பட்டிருந்தது. 

அதனைத் தொடர்ந்து, மீண்டும் இன்று காலை காற்றின் வேகம் சற்று குறைந்து காணப்பட்ட நிலையில், ஒரு சில படகுகளுக்கு மாத்திரம் சேவையில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பலத்த காற்றுடன் மழை பெய்து வருவதால் சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பு கருதி கிரகரி வாவியில் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

நுவரெலியாவில் மழையுடன் காற்றின் வேகம் அதிகரித்ததால் சுற்றுலாப்பயணிகளின் வருகை சற்று குறைந்துள்ளது.

மேலும், சுற்றுலாப்பயணிகளின் பாதுகாப்பு கருதி, மிதி படகுகள் இயக்க முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த வாவி பகுதியில் காற்றில் ஈரப்பதம் அதிகரித்து கடும் குளிர் நிலவி வருகிறது.  அத்துடன் மழையால் உள்ளூர் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. 

WhatsApp_Image_2025-07-21_at_3.55.58_PM.

WhatsApp_Image_2025-07-21_at_3.55.57_PM.

WhatsApp_Image_2025-07-21_at_3.56.01_PM.

WhatsApp_Image_2025-07-21_at_3.55.54_PM.

WhatsApp_Image_2025-07-21_at_3.55.54_PM_

WhatsApp_Image_2025-07-21_at_3.55.53_PM.

https://www.virakesari.lk/article/220549

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.