Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஐ.நா.அதிகாரிகளின் கருத்துகளும் அவற்றைப் புறமொதுக்கும் அரசும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Posted on : 2007-11-03

ஐ.நா.அதிகாரிகளின் கருத்துகளும் அவற்றைப் புறமொதுக்கும் அரசும்

"இலங்கையில் நிலைமை மிகவும் மோசமடைந்து வருகின்றது. அதனால் விரைந்து செயற்படுங்கள். உடனடியாக நடவடிக்கை ஏதும் எடுங்கள்.''

இப்படி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழுவையும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலையும் வலியுறுத்திக் கேட்டிருக்கின்றார் சட்டவிரோத மற்றும் கண்மூடித்தனமான படுகொலைகள் தொடர்பான ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் பிலிப் அல் ஸ்டன்.

உலகில் மனித உரிமைகள் பேணப்படும் நிலைமை குறித்து ஆராயும் ஐ.நா. பொதுச்சபைக் கமிட்டியின் முன் உரை நிகழ்த்துகையிலேயே அவர் இவ்வாறு கோரியிருக்கின்றார்.

இலங்கையில் மனித உரிமை நிலைமைகளை அவதானிப்பதற்கான ஐ.நா.கண்காணிப்பு அமைப்பு ஒன்று அங்கு நேரடியாகப் பிரசன்னமாகியிருக்குமானால், அந்நாட்டின் மனித உரிமை மீறல்கள் கணிசமாகக் குறைவடைந்திருக்கும் என்று தாம் கருதுகின்றார் எனவும் அவரும் தெரிவித்திருக்கின்றார்.

இலங்கையில் நிலைமை சீர்கெட்டு, நெருக்கடி முற்றும் சூழ்நிலை தென்படுவதால் இவ்விவகாரம் குறித்து கவனமும், சிரத்தையும் எடுக்க வேண்டியது அவசியம் எனக் கடந்த வருடமே தாம் மேற்படி ஐ.நா.பொதுச்சபைக் குழுவுக்கு முற்கூட்டிய அபாய அறிவிப்பு விடுத்திருந்தமையும், தாம் கூறியபடியே இப்போது நிலைமை இலங்கையில் மிக மோசமடைந்திருப்பதால் ஐ.நா. பொதுச்சபையும், ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலும் விரைந்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கும் வேளை வந்துவிட்டது என்றும் அவர் அங்கு கூறியிருக்கின்றார்.

அண்மைக்காலத்தில் இலங்கைக்கு வந்து சென்ற இலங்கை விவகாரத்தைக் கையாளுகின்ற ஐ.நாவின் அனைத்து அதிகாரிகளுமே இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து விசனமும் கவலையுமே வெளியிட்டு வருகின்றனர். ஆனால் இலங்கை அரச நிர்வாகம் திருந்துவதாகவோ, தன்னை நேர்சீர் படுத்துவதாகவோ தெரியவில்லை.

ஆயுதப் பிணக்கில் சிக்கியுள்ள சிறுவர்கள் தொடர்பான விடயங்களில் ஐ.நா. செயலரின் விசேட பிரதிநிதியின் தூதுவராகட்டும்

அவசர மனிதாபிமானப் பணிகளுக்கான ஐ.நாவின் கீழ் நிலைச் செயலாளராகட்டும்

மனித உரிமைகளுக்கான ஐ.நா. தூதுவராகட்டும்

சித்திரவதைகளைக் கண்காணிப்பதற்கான ஐ.நாவின் விசேட இணைப்பாளராகட்டும்

இப்போது, சட்டவிரோத மற்றும் கண்மூடித்தனமான படுகொலைகளை ஆராயும் ஐ.நா.அறிக்கையாளராகட்டும்

அனைவருமே இலங்கைத் தரப்பின் உண்மை நிலையைப் புட்டுப்புட்டு வைக்கத் தவறவில்லை.

""தனது துணைப் படைகளோடு சேர்ந்து அரசுப் படைகள் சிறுவர்களைப் படைக்குப் பலவந்தமாகத் திரட்டுகின்றன. மனிதாபிமானத் தொண்டுப் பணியாளர்கள் கடமையாற்றுவதற்கு உலகிலேயே மிக மோசமான ஆபத்தான பிரதேசம் இலங்கைதான். இலங்கையில் ஆட்கடத்தல்கள், காணாமற்போகச் செய்தல், கப்பம் அறவிடல், படுகொலைகள் என்பன மலிந்து சட்டத்தின் ஆட்சி வலுவிழந்துவிட்டது."பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை' என்ற பெயரில் அரசுப் படைகளும் பொலிஸாரும் அப்பாவித் தமிழ் மக்களுக்கு எதிராக நாடு முழுவதும் இழைக்கும் கொடுமைகள், சித்திரவதைகள் எல்லை மீறிவிட்டன. மொத்தத்தில் ஐ.நா. விரைந்து தலையிட வேண்டிய மிக மோசமான கட்டத்தை இலங்கை அடைந்துள்ளது.'' இதுவே ஐ.நாவின் உயரதிகாரிகள் பலரும் பகிரங்கமாக வெளியிட்டுவரும் கருத்துகளின் தொகுப்பாகும்.

ஆனால் இலங்கைத் தரப்போ கொழும்பு அரசோ இவ்விடயங்கள் குறித்து பெரிதாக அலட்டிக்கொள்வதாகத் தெரியவில்லை.

"ஐ.நா. சொல்வதைச் சொல்லிவிட்டுப் போகட்டும். நாம் செய்வதையே தொடர்ந்தும் செய்வோம். ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் அங்கத்துவ நாடுகளின் ஆதரவு எமக்கு இருக்கும் வரை ஐ.நா. அதிகாரிகள் எப்படித் தலைகீழாகக் குதித்தாலும் எங்களை ஒன்றும் செய்து விட முடியாது. இலங்கைக்கு எதிராக ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் தீர்மானம் எதுவும் நிறைவேற்ற முடியாது. அப்படித் தீர்மானம் நிறைவேற்றாதவரை இவ்விடயத்தை ஐ.நா. பொதுச்சபைக்குக் கொண்டு போக முடியாது. ஆகவே ஐ.நா. உயரதிகாரிகள் எப்படிக் குதித்தாலும் இவ்விடயத்தில் இலங்கையை ஒன்றுமே செய்துவிடவே முடியாது' என்ற மிதப்பில், தினவெடுத்து, மென்மேலும் மனித உரிமை மீறல்களுக்கு வழிசெய்து நிற்கின்றது இலங்கை.

உண்மைதான். 48 அங்கத்தவர்களைக் கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் 26 இடங்கள் ஆசிய, ஆபிரிக்க நாடுகளுக்கு. இவை எல்லாமே பெரும்பாலும் அநேகமான நாடுகள் தத்தமது பிரதேசங்களில் மோசமான மனித உரிமை மீறல்களுக்காகக் குற்றச்சாட்டுக்கு இலக்கானவை. இதன் காரணமாக இந்த நாடுகளில் ஒன்றுக்கு எதிரான மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுகள் கவுன்ஸிலில் எழுப்பப்படும்போது இந்த நாடுகள் அனைத்தும் அவற்றை எதிர்ப்பதில் ஒன்றுபட்டு நிற்பது வழமை. அந்த ஒற்றுமை காரணமாகவே, இப்போது இலங்கையில் மனித உரிமை அத்துமீறல்களுக்காக இலங்கை மீது ஐ.நா. அதிகாரிகள் பாயும்போது இலங்கையைக் காப்பாற்ற முயல்கின்றன அதன் சகோதர அங்கத்துவ நாடுகள்.

இப்படி முறையற்ற விதத்தில் நீதி, நியாயமின்றி ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலின் அங்கத்துவ நாடுகள் நடந்து கொண்டால், ஐ.நா. பொதுச்சபையின் மூன்றாவது கவுன்ஸில் கூட்டத்துக்கு ஏதேனும் ஒரு தனி நாடு இவ்விடயத்தை தனிப் பிரேரணையாகக் கொண்டு வந்து ஆராயமுடியும். அதன் மூலம் இலங்கை நிலைமையை பகிரங்க விவாதத்துக்கும் வெளிச்சத்துக்கும் கொண்டு வரமுடியும். அத்தோடு மூன்றாவது கவுன்ஸிலின் செயற்றிறன் அடங்கிவிடும். அதற்குமேல், அந்த மூன்றாவது கவுன்ஸில் கூட்டத்தின் ஊடாக அங்கத்துவ நாடு ஒன்றுக்கு எதிராகக் காத்திரமான நடவடிக்கை ஏதும் எடுப்பதற்கு ஐ.நா. ஒழுங்கு முறையில் இடமில்லை.

ஆகவே, மோசமடைந்துவரும் இலங்கை நிலைமையை சீரடைய வைப்பதற்கு, இப்போது அதிகாரிகள் மட்டத்தில் வெளியிடப்படும் கண்டனங்கள், அறிவிப்புகள், விமர்சனங்கள் ஆகியவற்றுக்கு அப்பால் ஏதேனும் ஐ.நா. செய்தாக வேண்டும். அது அவசர, அவசிய விவகாரமாகும். அதற்கு வழி எது என்பதுதான் இன்றைய கேள்வியாகும்.

http://www.uthayan.com/

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.