Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பிரிகேடியர் தமிழ்ச்செல்வன் அவர்களைப் பற்றிய தமிழரினதும் பேரினத்தினதும் வெளிப்பாடு.

Featured Replies

சமாதானத்தின் மீதிருந்த சிறு நம்பிக்கiயையும் தவிடு பொடியாக்கியது தமிழ்ச்செல்வனின் கொலை.

விடுதலைப் புலிகளின் அரசியல் துறை பொறுப்பாளர் அமரர் தமிழ்ச்செல்வன் அகோரப் படுகொலை இந் நாட்டின் எதிர்காலத்திற்கு ஒரு கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது. சமாதான நடவடிக்கை மீது இருந்த கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் தவிடு பொடியாகி விட்டது. சிங்கள அரசின் வங்குரோத்து நிலையும் கரடுமுரடான வரட்டுக் கொள்கைகளும் தமிழர்களுக்கென தனி நாட்டை உருவாக்குவதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளது.

இவ்வாறு நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிறிகாந்தா நேற்று நாடாளுமன்றில் கூறினார்.

ஆயுளின் கடைசிக்கட்டத்தில் ஊசலாடிக் கொண்டிருக்கும் அரசு, அதிலிருந்து தப்புவதற்காக தமிழ் நாடளுமன்ற உறுப்பினர்கள் 12 பேரை நாடாளு மன்றுக்கு வர முடியாதவாறு திட்டமிட்டுத் தடுத்துள்ளது. என்றும் குற்றம் சாட்டினார்.

அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். தொடர்ந்து உரையாற்றிய சிறிகாந்தா மேலும் கூறியவை வருமாறு :-

தமிழ்த் தேசியத்தின் காந்தி என எல்லோராலும் மதித்து கௌரவிக்கப்பட்ட தந்தை செல்வாவைப் போன்று தமிழ்ச்செல்வனையும் தமிழ் மக்கள் கௌரவிக்கின்றனர். அனைத்து தமிழ் மக்களின் நம்பிக்கையும் பெற்றவர் தமிழச்செல்வன். தமிழ்ச்செல்வன் ஒரு போராளி மட்டுமல்ல, சிறந்த ஒரு அரசியல் மேதையாகவும் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் ஆர்வம் உள்ளவராக இருந்தார்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில் இனப்பிரச்சினை தொடர்பான சமாதானப் பேச்சகளில் தொடர்ச்சியாக் கலந்து கொண்டார். அமரர்; அன்டன் பாலசிங்கத்தின் மறைவின் பின் தமிழீழவிடுதலைப் புலிகளின் குழுவுக்குத் தலைமை தாங்கி சிறப்பான பணியை ஆற்றினார். கடந்த 18 மாதங்களாக இலங்கை அரசின் விமானங்கள் தமிழ் மக்கள் வாழ் பகுதிகளில் தொடர்ந்து நடத்திவரும் குண்டு வீச்சுக்களால் அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்படுவதுடன் பல ஆயிரம் பேரை ஊனமுற்றவர்களாக்கியுள்ளது.

இவ்வாறான மனிதபிமானமற்ற ஒரு தாக்குதலினால் தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டார். தமிழ்ச்செல்வனின் மறைவுக்காக சர்வதேச சமூகமே அனுதாபம் தெரிவிக்கும் வேளையில் இங்குள்ளவர்கள் சந்தோஷம் கொண்டாடுகின்றார்கள்.

ஜே.வி.பி. தலைவர் ரோஹண விஜேயவீர, உபதிஸ்ஸ கமநாயக்க ஆகியோர் அரச படையினால் கொல்லப்பட்ட போது தமிழ் மக்கள் அதற்காகக் கவலை தெரிவித்தனர். அது மனிதாபினமானம் மட்டுமின்றி அரசியல் நாகரிகமும் ஆகும். ஆனால் சிங்கள அரசியல்வாதிகள் சிறிதும் அரசியல் நாகரிகமின்றி மகிழ்ச்சியடைகினறனர். தமிழ்ச்செல்வனைப் பயங்கரவாதி என்று வர்ணிப்பதில் பெருமையடைகின்றனர். தமது மக்களின் அடிப்படை உரிமைகளுக்காகவும் சுதந்திரத்திற்காகவும் போராடி உயிர் நீத்த யாசீர் அரபாத், சொலமன் கென்யாட் ஆகியோர் பயங்கரவாதிகள் என்று ஏற்றுக் கொள்ளப்பட்டால், தமிழ் மக்களின் சுதந்திரத்திற்காக உயிர்நீத்த தமிழ்ச்செல்வனையும் பயங்கரவாதி என்றே ஏற்றுக் கொள்கின்றோம்.

ஆரம்ப காலத்தில் சீன கம்யூனிஸ்ட் வாதியான சண்முகதாசனின் செயற்பாட்டால் கவரப்பட்ட தமிழ்ச்செல்வன் 1983ஆம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்த்தன காலத்தில் தமிழ் மக்கள் கொல்லப்பட்ட போது 16 வயதில் புத்தகங்களைத் தூக்கி எறிந்துவிட்டு விடுதலைப் போரட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டவர்.

தன் இனத்திற்காக தன் உயிர் நீத்த ஒரு தியாகி, அவர் இறந்தபின் அவமானப்படுத்துவது சிறிதும் மனிதாபிமானமற்ற செயலாகும். இவர்கள் திருந்தவும்மாட்டார்கள் திருத்தவும் முடியாது.

தமிழ் மக்கள் தமக்கென ஒரு தனி நாட்டை உருவாக்குவதற்கு சிங்கள இனவாதிகள் உந்து சக்தியாக அமைந்துள்ளனர்.

இந்த அரசு தனது ஆயுளின் கடைசிக் கட்டத்தில் தள்ளாடிக் கொண்டிருக்கிறது. இப்படியான நிலையில் வரவு-செலவு திட்டத்தில் அரசுக்கு எதிராக தமிழ் உறுப்பினர்கள் வாக்களிப்பதைத் திட்டமிட்டு தடுத்துள்ளது.

தமிழ்ச்செல்வனின் இறுதி அஞ்சலி நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்ற த.தே.கூட்டணி உறுப்பினர்கள் 12 பேரை கொழும்புக்குத் திரும்ப முடியாதவாறு தடுத்துள்ளது.

மரணச் சடங்குகள் முடிந்த பின் மாலை 3:45 மணிக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஓமந்தைச் சாவடியை அடைந்தபோது அவர்கள் தடுக்கப்பட்டனர்.

இலங்கை இராணுவம் செயற்கையான ஒரு பதற்ற நிலையை உருவாக்கி, துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்து செஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்களை அங்கிருந்து விலகிச் செல்ல வைத்துள்ளனர்.

இது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாக்காளிப்பைத் திட்டமிட்டு தடுக்கும் ஒரு சதிச் செயலாகும். தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம்முடன் புகைப்படக் கருவிகளைக் கூட எடுத்துச் செல்லத்தடை விதித்துள்ளனர். அரச படைகளின் இச் செயல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைக்கு விடப்பட்ட ஒருசவாலாகும். என்றார்.

என்னை நாட்டுப்பற்று அற்றவன் என்று சொன்னாலும் தமிழ்ச்செல்வன் மறைவுக்கு அனுதாபம் தெரிவிப்பேன். - மு.கா.தலைவர் ஹக்கிம் முழக்கம்

அவரது பேச்சின் சில பகுதிகள்:

நான் அனுதாபம் தெரிவித்துப் பேசினால் பெரும்பான்மை இனத்தவர்கள் என்னை தேசப்பற்றற்றவன், தேசிய உணர்வு இல்லாதவன், துரோகி என்றெல்லாம் பேசுவார்கள். அகற்காக நான் கவலைப்படவில்லை. தமிழ்ச்செல்வனை நான் நன்கு அறிவேன்.சமாதானப் பேச்சுக்கள் ஆரம்பித்த நாள் முதல் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்பு எனக்கு கிடைத்தது. அவர் ஒரு நல்ல மனிதா. அவருடைய இழப்பு என்னை பெரும் கவலைக்குள்ளாக்கியது. அவருடைய மரணத்திற்காக நான் என்னுடைய ஆழ்ந்த ஆனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இவ்விடயத்தில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் வர்க்க ரீதியாக ஒன்றினைந்துள்ளனர்.

அதேவேளை கிரிக்கட்டில் முரளி உலக சாதனையைப் படைக்க வேண்டும் என்று நாம் எல்லோரும் ஆசைப்படுகின்றோம். முரளியை ஆதரிக்கினறோம். அதே போல் எலலா விடயங்களிலும் இந்த தேசிய உணர்வும் எல்லோரும் இலங்கையர் என்ற நிலைப்பாடும் வர வேண்டும். என்றார்

பிரிகேடியர் தமிழ்ச்செல்வனை அழித்து சமாதானத்தை அரசு புறந்தள்ளி விட்டது.

த.தே.கூட்டணி யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி பத்மின் சிதந்பரநாதன் வெளியிட்டள்ள அறிக்கை:

கடந்த 02.11.07 காலை தமிழீழ அரசியல் துறைப் பொறுப்பாளரும், சமாதானதப் பேச்சுகளில் தலைமை வகித்தவருமான பிரகேடியர் ச.ப.தமிழ்ச்செல்வனும் சக போராளிகளும் அரசின் விமானப்படையின் குண்டுவீச்சுத்தாக்குதலில் படுகொலை செய்யப்ட்டுள்ளனர். இது தமிழ் மக்களுக்கு பேரதிர்சிசியையும் பெரும் துயரையும் ஏற்படுத்தியுள்ளது.

தமிழர் தரப்பிற்கும் சிங்களத் தரப்பிற்கும் இடையில் நடைபெற்ற பல சமாதானப் பேச்சுகளில் தமிழர் தரப்பு சார்பில் தலைமை வகித்தவர் தமிழ்ச்செல்வன். இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்காக சிங்களப் பிரதிநிதிகளுடன் கைகுலுக்கியவரை சிங்கள அரசு மிக ஈனத்தனமாகப் படுகொலை செய்துள்ளது.

தமிழர்களை யார் வழி நடத்துகின்றார்களோ அவர்களைத் திடட்டமிட்டு அழிபதுவே அரசின் நடவடிக்கையாகவும் இருந்து வருகின்றது.

அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தமது பண்பட்ட அணுகு முறையால் மக்களைப் பெரிதும் கவர்ந்தார். புன்முறுவலுடன் கூடிய இனிமையான பேச்சு மக்களின் மனங்களை வென்றது. ஜனநாயகம் என்று பேசும் சர்வதேச சமூகம் அதற்குரிய ஒருவரையே சிங்களப் பேரினவாதம் விமானம் மூலம் குண்டு வீசி அழித்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இதன்மூலம் உண்மையில் சிங்கள அரசுத் தரப்பினர் சமாதானத்தை விரும்புபவர் அல்லர் என்பதை சர்வதேசத்திற்குக் காட்டியுள்ளது.

இந்த ஈனத்தனமான படுகொலையை த.தே.கூட்டமைப்பின் சார்பில் மிக வண்மையாகக் கண்டிக்கின்றேன். அவரை இழந்து தவிக்கும் மனைவி பிள்ளைகளுடன் நாம் ஆழ்நத் துயரைப் பகிர்ந்து கொள்கின்றோம். என அறிக்கையில் குறிப்பட்டுள்ளது.

இது பேரினவாதிகளின் கூச்சல்:

சமாதானப் பேச்சுக்களை நடத்திக் கொண்டே ஆயுதங்களைச் சேகரித்தவர்கள் தான் புலிகள் அதற்குச் தமிழ்ச்செல்வனே உதாரணம். பயங்கரவாத அரசின் வெளிவிவகார அமைச்சன்.

பொய் முகத்தோடு சர்வதேசத்தை ஏமாற்றி வந்தவர் தமிழ்ச்செல்வன். அவரைக் கொன்றது அரசிற்குக் கிடைத்த வெற்றி - பயங்கரவாத அரசின் பிரதமர்.

நன்றி : சுடர் ஒளி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.