Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில் தேசிய சுனாமி ஒத்திகை நிகழ்வு!

1408970341.jpg

சுமாத்திரா தீவை அண்மித்த கடல் பகுதிகளில் பல சிறிய நிலநடுக்கங்கள் தொடர்ச்சியாக பதிவாகிவருவதனால் இலங்கையும் சுனாமிக்கு தயாரான நாடு என்ற வகையில் யாழ்ப்பாணம், களுத்துறை, மாத்தறை, மற்றும் மட்டக்களப்பு ஆகிய நான்கு மாவட்டங்களை பிரதானமாகக் கொண்டு நாட்டின் பிற மாவட்டங்களையும் உள்ளடக்கி தேசிய சுனாமி ஒத்திகை நிகழ்வானது இந்திய பெருங்கடல் பிராந்திய சுனாமி எச்சரிக்கை மையத்தின் கீழ் உள்ள 28 நாடுகளை உள்ளடக்கிய பிராந்திய அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின் ஒருபகுதியாக யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள பருத்தித்துறை கிராம உத்தியோகத்தர் பிரிவான J/401 இல்  நாளைய தினம்  05.11.2025 ஆம் திகதி புதன்கிழமை மு.ப 9.00 மணிக்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் தேசிய ரீதியாக சுனாமிக்கான ஒத்திகை நிகழ்வொன்று நடைபெறவுள்ளது. 

இது ஒரு ஒத்திகைச் செயற்பாடு என்பதனால் இது தொடர்பில் பொதுமக்கள் எவரும் குழப்பமடையத் தேவையில்லை என யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

https://newuthayan.com/article/யாழில்_தேசிய_சுனாமி_ஒத்திகை_நிகழ்வு!#google_vignette

  • கருத்துக்கள உறவுகள்

நாட்டில் நாளை சுனாமி ஒத்திகை

Nov 4, 2025 - 01:01 PM

நாட்டில் நாளை சுனாமி ஒத்திகை

உலக சுனாமி விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, இலங்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 5 மாவட்டங்களில் நாளை (5) இந்தியப் பெருங்கடல் சுனாமி தயார்நிலை ஒத்திகையை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 

இந்திய பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மையத்தின் கீழ் 28 நாடுகளை உள்ளடக்கிய பிராந்திய அமைப்பினால் இந்த ஒத்திகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

யுனெஸ்கோவின் அதிகாரப்பூர்வ வழிகாட்டுதல்களின் கீழ் நடத்தப்படும் இந்தப் ஒத்திகையானது யாழ்ப்பாணம், காலி, மட்டக்களப்பு, களுத்துறை மற்றும் மாத்தறை மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம சேவகர் பிரிவுகள் நடத்தப்படவுள்ளது. 

இந்தப் ஒத்திகையை உண்மையான சுனாமி அச்சுறுத்தல் எனக் கருதி அச்சமடையவோ அல்லது தவறாகப் புரிந்து கொள்ளவோ வேண்டாம் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmhk92eat01dyo29nkxclqrmb

  • கருத்துக்கள உறவுகள்

உலக சுனாமி தினத்தை முன்னிட்டு 4 மாவட்டங்களில் தயார்நிலை ஒத்திகை

04 Nov, 2025 | 05:28 PM

image

(இராஜதுரை ஹஷான்)

உலக சுனாமி விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட 4 கரையோர  மாவட்டங்களில்  புதன்கிழமை  (05) இந்தியப் பெருங்கடல் சுனாமி தயார்நிலை ஒத்திகை இடம்பெறவுள்ளது.

களுத்துறை, காலி, மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராம சேவகர் பிரிவுகள் ஊடாக சுனாமி அனர்த்த முன்னெச்சரிக்கை மற்றும் அபாய இழிவளவாக்கல் நடவடிக்கை ஒத்திகை இடம்பெறவுள்ளது.

இச்சந்தர்ப்பத்தின் போது வீண் அச்சம்கொள்ள வேண்டாம் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்துகிறது.

இந்திய பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மையத்தின் கீழ் 28 நாடுகளை உள்ளடக்கிய பிராந்திய அமைப்பினால் இந்த ஒத்திகை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்தப் ஒத்திகையை உண்மையான சுனாமி அச்சுறுத்தல் எனக் கருதி அச்சமடையவோ அல்லது தவறாகப் புரிந்து கொள்ளவோ வேண்டாம் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ  மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரால் (ஓய்வுநிலை) சம்பத் கொடுவேகொட குறிப்பிடுகையில், சுனாமி அனர்த்தத்தின் போது எவ்வாறு செயற்பட வேண்டும் என்பதை தெளிவுப்படுத்தும் வகையில் தான் இந்த ஒத்திகை இடம்பெறுகிறது.

கடந்த காலங்களில் இவ்வாறான ஒத்திகை இடம்பெறும் போது உண்மையில் சுனாமி அனர்த்தம் இடம்பெற்று விட்டது என்று பொதுமக்கள் அச்சமடைந்தார்கள். ஆகவே வீண் அச்சமடைய வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

சுனாமி அனர்த்த முன்கூட்டிய சமிஞ்சை  வழங்குவதற்காக அமைக்கப்பட்ட 77 கோபுரங்களும் செயலிழந்துள்ளன. இந்த கோபுரங்களுக்கு சமிஞ்சை வழங்கிய செய்மதிகள் செயலிழந்துள்ளதால் இவை முற்றாக செயலிழந்துள்ளன என்றார்.

https://www.virakesari.lk/article/229497

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்ப்பாணத்தில் மாபெரும் சுனாமி ஒத்திகை!

05 Nov, 2025 | 01:03 PM

image

இந்து சமுத்திர பிராந்திய நாடுகளின் முன்னாயத்த நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்க்காக வருடாந்தம் ஒழுங்குசெய்யப்படுகின்ற பிராந்திய நாடுகளுக்கான சுனாமி ஒத்திகை பயிற்சி புதன்கிழமை (05) பருத்தித்துறை  மெதடிஸ்த பெண்கள் பாடசாலையில் ஆரம்பமாகியது.

காலை 9:15 மணியளவில் சுனமி எச்சரிக்கை ஒலி ஒலிக்கப்பட்டதை தொடர்ந்து மாணவிகள் வகுப்பு வகுப்பாக அணிவகுக்கப்பட்ட அங்கு உரியவர்கள் அறுவுறுத்தப்பட்டனர். 

வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில் இடைத்தங்கல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு அங்கு மருத்துவ வசதிகள், உணவு, உட்பட பல்வேறு வசதிகளும் ஏற்படு செய்யப்பட்டிருந்தன.

வட இந்து மகளிர் கல்லூரியில் வகுப்பு வகுப்பாக மாணவர்கள் பிரிக்கப்பட்டு தங்கவைக்கப்பட்டதுடன் கிராம மக்களும தங்கவைக்கப்பட்டனர்.

இதேவேளை ஒத்திகையின்போது பாதுகாப்பாக நகர்ந்த மக்கள், மணவர்களில் ஒருசிலரிற்கு சிறிய காயங்கள் ஏற்பட்டன. காயமடைந்தவர்களை இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், சென்ஜோன்ஸ் ஆம்புலன்ஸ் பருத்தித்துறை பொலிஸார் ஆகியோர் ஏற்றிவந்து வட இந்து மகளிர் கல்லூரியல் ஏற்பாடு செய்யப்பட்ட முதலுதவி சிகிச்சை நிலையத்தில் சிகிச்சையளிக்கப்பட்டனர்.

இவ் ஒத்திகை நிகழ்வில் வடமராட்சி வடக்கு பிரதேச செயலகம்,  இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், சென்ஜோன்ஸ் ஆம்புலன்ஸ் படைப்பிரிவு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை,  பருத்தித்துறை பொலிசார், கடற்படை, இராணுவம், சிறப்பு அதிரடி படை, பருத்தித்துறை மகரசபை தவிசாளர் மற்றும் உப தவிசாளர், கியூமெடிக்கா உட்பட பல்வேறு அமைப்புக்கள் திணைக்களங்கள் பங்குபற்றியிருந்தன.

இச் சுனமி ஒத்திகை நிகழ்வில் சுமார் 500 வரையான வடமராட்சி மெதடிஸ்த பெண்கள கல்லூரி மாணவர்கள் சுமார் 500க்கு மேற்பட்டோரும், பொதுமக்கள் சுமார் 250 பேரும் கலந்துகொண்டுருந்தனர். குறித்த ஒத்திகை நிகழ்வு வருடாந்தம் இடம் பெறுவது குறிப்பிடத்தக்கது.

1000901741.jpg

1000901589.jpg

1000901587.jpg

1000901533.jpg

https://www.virakesari.lk/article/229546

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.