Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வொன்று அவசியம் - ஜனாதிபதி

19 Nov, 2025 | 07:12 PM

image

வடக்கு, கிழக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு புதிய அரசியல் தீர்வொன்று அவசியம் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்த கோரிக்கைக்கு அமைவாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் அந்தக் கட்சி பிரதிநிதிகளுக்கும்  இடையிலான சந்திப்பு இன்று (19) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

மாகாண சபைத் தேர்தல் மற்றும் புதிய அரசியலமைப்பொன்றின் அவசியம் குறித்து இதன் போது ஆராயப்பட்டதோடு, வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தொடர்ந்தும் பழைய அரசியல் தீர்வு  பொருத்தமற்றது என்பதால் அதற்காக புதிய அரசியல் தீர்வினை நோக்கிச் செல்ல வேண்டுமென அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இங்கு குறிப்பிட்டார். அதற்காக அனைவரின் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

வடக்கு மற்றும் கிழக்கு மக்கள் நீண்ட காலமாக பிரதேச மட்டத்தில் எதிர்கொள்ளும் மீன்படி மற்றும் காணி பிரச்சினைகள், உட்கட்டமைப்பு வசதி மற்றும் அபிவிருத்தி தேவைகள் என்பன குறித்தும் இதன் போது ஆராயப்பட்டது. பிரதிநிதிகள் முன்வைத்த சில பிரச்சினைகளுக்கு எதிர்காலத்தில் தீர்வு பெற்றுக் கொடுக்குமாறு அதே சந்தர்ப்பத்தில் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்

வடக்கு அபிவிருத்திக்காக அரசாங்கம்  முன்னெடுக்கும் எந்தவொரு திட்டத்திற்கும் தமது கட்சி ஒத்துழைப்பு வழங்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் சுட்டிக்காட்டினர்.

அத்தோடு, இனவாதத்திற்கு எதிராக அரசாங்கம் மேற்கொள்ளும் எந்தவொரு தீர்மானத்திற்கும் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சி என்ற வகையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் இங்கு சுட்டிக்காட்டினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி  சி.வி.கே. சிவஞானம் பாராளுமன்ற உறுப்பினர்களான எஸ். ஸ்ரீ தரன், எஸ். ராசமாணிக்கம், பி. சத்தியலிங்கம், ஜி. ஸ்ரீ நேசன்,ரீ. ரவிகரன், கே. கோடீஸ்வரன், கே. எஸ். குகதாசன் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்,  ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத்  குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே ஆகியோரும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.

WhatsApp_Image_2025-11-19_at_7.04.45_PM.

WhatsApp_Image_2025-11-19_at_7.04.45_PM_

WhatsApp_Image_2025-11-19_at_7.04.46_PM_

WhatsApp_Image_2025-11-19_at_7.04.47_PM_

WhatsApp_Image_2025-11-19_at_7.04.47_PM.

WhatsApp_Image_2025-11-19_at_7.04.48_PM.

WhatsApp_Image_2025-11-19_at_7.04.48_PM_

WhatsApp_Image_2025-11-19_at_7.04.49_PM_

WhatsApp_Image_2025-11-19_at_7.04.49_PM.

WhatsApp_Image_2025-11-19_at_7.04.50_PM.

WhatsApp_Image_2025-11-19_at_7.04.51_PM.

WhatsApp_Image_2025-11-19_at_7.04.50_PM_

https://www.virakesari.lk/article/230839

  • கருத்துக்கள உறவுகள்

இனப்பிரச்சினைக்குத் தீர்வு அடுத்த ஆண்டில் கிட்டும்!

846253880.jpg

தமிழரசுக் கட்சியிடம் ஜனாதிபதி அநுர உறுதி; அரசியற்கைதிகள் தொடர்பில் அவதானிப்பாராம்

தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான நடவடிக்கைகளை அடுத்த வருடம் முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியினரிடம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், அரசியற் கைதிகளின் விடுதலை தொடர்பில் அவதானம் செலுத்துவதாகவும் கூறியுள்ளார்.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம், பதில் எம்.ஏ.சுமந்திரன் பொதுச்செயலாளர் மற்றும் கட்சியின் 8 நாடாளுமன்ற உறுபினர்கள் கொண்ட குழுவினருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்றது. இதன்போதே, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பில் முக்கியத்துவம் கொடுத்து விவாதிக்கப்பட்டதுடன், அதற்கான நடவடிக்கை அடுத்த வருடத்தில் முன்னெடுக்கப்படும் என்று ஜனாதிபதியால் வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.

மாகாணசபைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல் ஆகியன அரசாங்கம் புதவிக்கு வந்து ஒரு வருடத்துக்குள் நடத்தப்படும் என்று தேசிய மக்கள் சக்தி அரசங்கம் தெரிவித்திருந்த நிலையில், அது தொடர்பிலும் தமிழழசுக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. இதன்போது, அந்த வாக்குறுதிகள் கணிசமானவை நிறைவேற்றப்பட்டுள்ளன. மாகாணத் தேர்தல் உள்ளிட்ட மிகுதி விடயங்கள் விரைவில் செயற்படுத்தப்படும் என்று ஜனாதிபதி அநுர கூறியுள்ளார். அத்துடன் மாகாணத் தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் முறைமை தீர்மானிக்கப்பட வேண்டிய அவசியத்தையும் ஜனாதிபதி அநுர சுட்டிக்காட்டியுள்ளார். 

அரசியற் கைதிகளின் விடயம் தொடர்பில் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலர் சுமந்திரன் ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டுசென்றார். தேசிய மக்கள் சகதியின் தேர்தல் விஞ்ஞாபனத் அரசியற் கைதிகள் என்ற சொற்தொடர் பயன்படுத்தப்பட்டுள்ளது ஆனால், அமைச்சர்கள் சிலர் அரசியற் கைதிகளே இல்லை என நாடாளுமன்றத்தில் கூறியுள்ளனர் என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார். அத்துடன், அரசியற் கைதிகளின் விடயத்தில் விரைவாக கோரிக்கையையும் தமிழரசுக் கட்சி முன்வைத்துள்ளது. இதன்போது. இந்த விடயத்தில் அவதானம் செலுத்தப்படும் என்ற வாக்குறுதி ஜனாதிபதியால் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் திருகோணமலையில் புத்தர் சிலைவைக்கப்பட்ட விடயம் தொடர்பிலும் தமிழரசுக் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. அங்கு எந்தக் காலத்திலும் புத்தர் சிலை இருக்கவில்லை. ஒரு விகாரை பக்கத்தில் இருந்திருக்கின்றது. அது சம்பந்தப்பட்ட ஒரு சின்னக் கட்டடம் அருகில் இருந்துள்ளது. அதைக் குளிர்பானம் விற்பனை செய்யும் நிலையமாக மாற்றினார்கள். அது அனுமதியில்லாமல் கட்டப்பட்ட கட்டடம். அதனை அகற்றுவதற்கு நீதிமன்றம் உத்தரவு இருந்தபோது, அதனை அகற்றாமல் தடுப்பதற்காக புத்தர் சிலை புதிதாகக் கொண்டு போய் வைக்கப்பட்டிருக்கின்றது. ஆகவே, இது நாங்கள் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விடயம் என்று தமிழரசுக் கட்சி ஜனாதிபதியின் கவனத்துக்குக் கொண்டு சென்றது. திரியாயில் இரண்டே இரண்டு பெளத்த குடும்பங்களுக்காக இரண்டு விகாரைகள் கட்டப்படுகின்றன. குச்சவெளி பிரதேசசெயலகத்தில் 38 விகாரைகள் புதிதாகக்கட்டப்படுகின்றன. பௌத்தர்கள் வாழும் இடத்தில், அவர்களுடைய வழிபாட்டுக்காக விகாரைகள் கட்டப்படுவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது ஆனால் ஓர் ஆதிக்கத்தை நிலைநாட்டிக்கட்டுவதற்காக அப்படிச்செய்வது இனங்களுக்கு இடையில் எந்தவித நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் ஜனாதிபதியிடம் தமிழரசுக் கட்சி சுட்டிக்காட்டியது. அந்தக் கருத்துக்களையும் ஜனாதிபதி கேட்டறிந்ததுடன், பல்வேறு விடயங்கள் தொடர்பில் தமிழர்சுக் கட்சியுடன் இணைந்து பணியாற்றுவேன் என்றும் அவர்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

https://newuthayan.com/article/இனப்பிரச்சினைக்குத்_தீர்வு_அடுத்த_ஆண்டில்_கிட்டும்!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.