Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் மீது மழையென பொழிந்த ஸ்கட் ஏவுகணைகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தான் மீது மழையென பொழிந்த ஸ்கட் ஏவுகணைகள்

1989ம் ஆண்டு ஏப்ரல் 7ம் தேதியன்று  காலை, பாகிஸ்தான் எல்லைப் பகுதியான தோர்காமில் இருந்த தபால் நிலையத்தை அழித்த சோவியத் ஸ்கட் ஏவுகணை, காபூலில் இருந்து ஏவப்பட்டது.

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சோவியத் ராணுவம் வெளியேறிய பிறகு, ஆப்கானிய அரசாங்கத்திற்கும் முஜாஹிதீன்களுக்கும் இடையிலான மோதல் அதிகரித்தது.

கட்டுரை தகவல்

  • வக்கார் முஸ்தபா

  • பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர்

  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

1989-ஆம் ஆண்டு ஏப்ரல் 7-ஆம் தேதி காலை, பாகிஸ்தான் எல்லைப் பகுதியான தோர்காமில் இருந்த தபால் நிலையத்தை அழித்த சோவியத் ஸ்கட் ஏவுகணை, காபூலில் இருந்து ஏவப்பட்டது.

இந்தத் தாக்குதலை ஆப்கானிய அரசாங்கத்தின் தெளிவான தூண்டுதல் நடவடிக்கை என்று பாகிஸ்தான் குற்றம்சாட்டியது.

இருப்பினும், ஆப்கானிஸ்தான் இதனை ஒரு "விபத்து" என்று குறிப்பிட்டதுடன் , மன்னிப்பு கேட்கவும் மறுத்துவிட்டது.

அப்போது, 1979-ல் 'முஜாஹிதீன்' என்று அழைக்கப்படும் போராளிகளுக்கு எதிராக ஆப்கானிய அரசாங்கத்திற்கு உதவ வந்திருந்த சோவியத் படைகளின் கடைசிப் பிரிவு, தனது தாய்நாட்டிற்குத் திரும்பியிருந்தது.

ஆனால் 1988 ஏப்ரலில் சோவியத் யூனியன், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே கையெழுத்தான ஜெனிவா உடன்படிக்கைகள் (இதன் கீழ் படைகள் வெளியேறுவது தொடங்கியது), தொடர்ந்து மீறப்பட்டு வந்தன.

யுனைடெட் பிரஸ் இன்டர்நேஷனல் அமைப்பின் ஜெரால்ட் நாட்லரின் 1988 நவம்பர் 2 அறிக்கையின்படி, நடுத்தர தூர ஏவுகணைகள் உட்பட தனது மிகவும் மேம்பட்ட ஆயுதங்களை ஆப்கானிஸ்தானுக்கு வழங்குவதாக சோவியத் யூனியன் அறிவித்தது.

இந்த அறிவிப்பின்படி, "அதிபர் நஜிபுல்லாவின் காபூல் அரசாங்கம் 'பாகிஸ்தான் ஆதரவு' கொண்டவை என்று விவரித்த கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களை எதிர்கொள்ள" இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

"இந்த ஆயுதங்கள் திரவ எரிபொருளால் இயங்கும், நிலப்பரப்பிலிருந்து நிலப்பரப்பைத் தாக்கும் ஸ்கட் ஏவுகணைகள் என்றும் இவை பாகிஸ்தானை எட்டும் திறன் கொண்டவை என்றும் அமெரிக்கா அடையாளம் கண்டது. பாகிஸ்தானுக்கு தனது 'முழு ஆதரவு' தொடரும் என்றும் அமெரிக்கா வெளிப்படையாக அறிவித்தது," என்று நாட்லர் எழுதியுள்ளார்.

இந்த அறிவிப்பின்படி, "அதிபர் நஜிபுல்லாவின் காபூல் அரசாங்கம் 'பாகிஸ்தான் ஆதரவு' கொண்டவை என்று விவரித்த கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்களை எதிர்கொள்ள" இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பட மூலாதாரம்,ZUBAIR MIR/AFP) (Photo by ZUBAIR MIR/AFP via Getty Images)

படக்குறிப்பு,ஜனவரி 1989, கிழக்கு நங்கர்ஹாரில் அரசாங்கப் படைகள் மீது ராக்கெட் தாக்குதலை நடத்த ஆப்கான் முஜாஹிதீன்கள் தயாராகின்றனர் (கோப்புப் படம்)

முதல் ஸ்கட் ஏவுகணை எப்போது ஏவப்பட்டது?

ஆப்கானிஸ்தான் தொடர்பான உடன்படிக்கைகளைச் செயல்படுத்தவும், விதிமீறல்களை விசாரிக்கவும் 1988 மே மாதம் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் தூதுக்குழு நிறுவப்பட்டது.

இந்தத் தூதுக்குழு 1990 மார்ச் வரை செயல்பட்டது.

'தி ஆக்ஸ்போர்டு ஹேண்ட்புக் ஆஃப் யுனைடெட் நேஷன்ஸ் பீஸ்கீப்பிங் ஆபரேஷன்ஸ்' கையேட்டின் படி, ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும் இந்தப் பணியின் தொடக்கத்திலிருந்தே தலையீடு செய்ததாகப் புகார் கூறின.

"ஆப்கானிஸ்தான், 1989-ன் தொடக்கத்திலிருந்தே முஜாஹிதீன்களின் எல்லை தாண்டிய நடமாட்டங்கள் மற்றும் அவர்களின் ராணுவ நடவடிக்கைகள் குறித்துப் புகார் செய்தது. பாகிஸ்தான், வான்வெளி அத்துமீறல்கள், ஆப்கானிய உளவு அமைப்புகளின் தாக்குதல்கள் மற்றும் பாகிஸ்தான் எல்லைக்குள் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்கள் குறித்துப் புகார் செய்தது" என்று அந்த கையேடு குறிப்பிடுகிறது.

ஆனால் தூதுக்குழுவின் கூற்றுப்படி, அவர்களுக்கு அரசியல் ஆதரவோ அல்லது வளங்களோ இல்லை. எனவே, அவர்களால் "மோதலில் ஈடுபட்ட தரப்பினரின் புகார்களை விசாரிக்காமல் எழுதி மட்டுமே வைக்க முடிந்தது, உடன்படிக்கைகளுக்குக் கட்டுப்படுமாறு அவர்களைக் கட்டாயப்படுத்த முடியவில்லை."

போர் தொடங்கியதிலிருந்து, லட்சக்கணக்கான ஆப்கானிய குடிமக்கள் பாகிஸ்தான் மற்றும் இரானில் அகதிகளாகத் தஞ்சமடைந்தனர். சோவியத் படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து, அதிபர் நஜிபுல்லாவின் அரசாங்கம் வீழ்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் , அவ்வாறு நடக்கவில்லை.

மைக்கேல் கிளவுட்ஃபெல்டர், தனது 'வார்ஃபேர் அண்ட் ஆர்ம்டு கான்ஃபிலிக்ட்ஸ்' என்ற நூலில், சோவியத் படைகள் வெளியேற்றத்திற்குப் பிறகு நஜிபுல்லா அரசாங்கம் உடனடியாக வீழ்ந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டதாக எழுதியுள்ளார்.

மேலும், "1986-ல், சோவியத் உளவுத்துறை நஜிப் அரசாங்கம் 6 முதல் 18 மாதங்கள் மட்டுமே நீடிக்கும் என்று மதிப்பிட்டது" என்றும் அவர் எழுதியுள்ளார்.

மைக்கேல் கிளவுட்ஃபெல்டரின் கூற்றுப்படி, "ஜலாலாபாத்தின் மிகப்பெரிய மற்றும் மோசமான விளைவுகளை ஏற்படுத்திய போர் 1989 மார்ச்சில் தொடங்கியது. ஆறு வார காலப் போருக்குப் பிறகு, முஜாஹிதீன்கள் ஆப்கானிய ராணுவத்தால் தோற்கடிக்கப்பட்டனர்."

யுபிஐ அமைப்பின் முகமது ஜியாவுதீனின் அறிக்கையின்படி, ஆப்கானிய 'முஜாஹிதீன்' தலைவர் குல்பதின் ஹெக்மத்தியார் டாக்காவில் இருந்தார். தனது இடைக்கால அரசாங்கத்தை வங்கதேசம் அங்கீகரிக்கும் என்று அவர் நம்பினார்.

அந்தச் சூழலில், ஏப்ரல் தொடக்கத்தில் பாகிஸ்தான் மீது ஸ்கட் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.

முன்னதாக, 1988 நவம்பர் 16 தேதியிட்ட யுபிஐ அறிக்கை, ஆப்கானிஸ்தானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை பாகிஸ்தானின் எல்லைக் கிராமம் ஒன்றைத் தாக்கியதில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 15 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் கூறியதாகக் குறிப்பிட்டிருந்தது.

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,நஜிபுல்லா அரசாங்கத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் முஜாஹிதீன் மற்றும் உஸ்பெக் போராளிகளுக்கு இடையேயான போரின் போது, காபூலுக்கு வெளியே ஒரு முஜாஹிதீன் ஒரு ஸ்கட் ஏவுகணையுடன் புகைப்படம் எடுத்துக்கொள்கிறார். இது சோவியத் தயாரிப்பாக இருக்கலாம். (கோப்பு புகைப்படம்)

முன்னதாக, 1988 நவம்பர் 16 தேதியிட்ட யுபிஐ அறிக்கை, ஆப்கானிஸ்தானில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை பாகிஸ்தானின் எல்லை கிராமம் ஒன்றைத் தாக்கியதில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 15 பேர் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் கூறியதாகக் குறிப்பிட்டிருந்தது.

ஆனால் அப்போது இந்த ஏவுகணைகள் சோவியத் யூனியனால் ஆப்கானிய ராணுவத்திற்கு வழங்கப்பட்டதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

அமெரிக்க நாளிதழான 'தி நியூயார்க் டைம்ஸ்' சிறப்பு செய்தியாளர் ஜான் எஃப். பர்ன்ஸ் அப்போது இதுகுறித்து எழுதியிருந்தார்.

அதில், "ஜலாலாபாத் மற்றும் பெஷாவர் இடையேயான சாலைக்கு அருகில் 1989 ஏப்ரல் 7 அன்று நடுத்தர தூர ஸ்கட் ஏவுகணை ஒன்று பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்ததை பாகிஸ்தான் உறுதிப்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை."

ஆப்கானிய அரசாங்கம், 'எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் விழுந்த அந்த ஏவுகணை தவறுதலாக ஏவப்பட்ட ஒன்று' என்று கூறியது.

ஜலாலாபாத்தை பாதுகாப்பதில் அரசாங்கப் படைகள் பெற்ற வெற்றிக்கு ஸ்கட் ஏவுகணைகளே காரணம் என சோவியத் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜலாலாபாத் விமான நிலையத்தின் வெளிப்புற எல்லைக்குள்ளேயே நிலைநிறுத்தப்பட்டிருந்த கொரில்லாப் போராளிகளைப் பின்வாங்கச் செய்வதில் இந்த ஏவுகணைகள் வெற்றிகரமாகச் செயல்பட்டதாக அவர் கூறினார்.

நகருக்கு தென்கிழக்கே 15 மைல் தொலைவில் உள்ள சமர் கெய்ல் என்ற அரசாங்க ராணுவ முகாமில் இருந்து கொரில்லாக்களை வெளியேற்றவும் இந்த ஏவுகணைகள் பயன்படுத்தப்பட்டதாக அவர் கூறினார்.

ஜலாலாபாத் விமான நிலையத்தின் வெளிப்புற எல்லைக்குள்ளேயே நிலைநிறுத்தப்பட்டிருந்த கொரில்லாப் போராளிகளைப் பின்வாங்கச் செய்வதில் இந்த ஏவுகணைகள் வெற்றிகரமாகச் செயல்பட்டதாக அவர் கூறினார்.

பட மூலாதாரம்,Universal Images Group via Getty Images

படக்குறிப்பு,ஆப்கானிஸ்தானில் இருந்து சோவியத் துருப்புகளை திரும்பப் பெறும் நடவடிக்கை மே 1988 இல் தொடங்கி பிப்ரவரி 1989 இல் முடிந்தது (கோப்பு புகைப்படம்)

பாகிஸ்தான் மீது ஸ்கட் ஏவுகணைத் தாக்குதல்கள் எப்போது நடந்தன?

1989-ஆம் ஆண்டு மே 4ம் தேதியன்று காலை 8:20 மணிக்கு, பன்னு மாவட்டத்தில் உள்ள ஆப்கானிய அகதிகள் முகாமை ஒரு ஸ்கட் ஏவுகணை தாக்கியது.

இதில் மூன்று ஆப்கானிய குடிமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 17 பேர் காயமடைந்தனர்.

1989-ஆம் ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பக்கர் மாவட்டத்திற்கு அருகே ஒரு ஸ்கட் ஏவுகணை விழுந்தது.

பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே கடுமையான பதற்றங்களைத் தூண்டிய மூன்றாவது தாக்குதல் இது என பிரிட்டிஷ் நாளிதழான 'தி இண்டிபெண்டண்ட்' குறிப்பிட்டிருந்தது.

அதன் பின்னர் சமாதான முயற்சிகளைத் தடுப்பதாக இரு நாடுகளும் ஒன்றையொன்று குற்றம் சாட்டிக்கொண்டன.

ஜூன் 23, 24 மற்றும் 26 ஆகிய தேதிகளில், நாளின் வெவ்வேறு நேரங்களில் ஆப்கானிஸ்தானில் இருந்து வீசப்பட்ட குண்டுகள் பாகிஸ்தானில் விழுந்தன, ஆனால் உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் இல்லை.

1989 ஆகஸ்ட் 15ம் தேதி காலை 8:45 மணிக்கு குர்ரம் ஏஜென்சியிலும், அக்டோபர் 1 இரவு 8:15 மணிக்கு வடக்கு வசிரிஸ்தான் ஏஜென்சியில் உள்ள ஆடம் கெல் அருகிலும் ஸ்கட் ஏவுகணைகள் விழுந்தன.

மேலும் அக்டோபர் 27-ஆம் தேதி குர்ரம் ஏஜென்சியின் டெடி மங்கள் பகுதியிலும் ஏவுகணைகள் விழுந்தன.

கிளவுட்ஃபெல்டரின் கூற்றுப்படி, காபூலைக் கைப்பற்றுவதற்கான முஜாஹிதீன்களின் இறுதித் திட்டம் 1989 டிசம்பரில் தொடங்கியது. ஆனால் அரசாங்கப் படைகள் அந்தத் தாக்குதலை முறியடித்ததால் அதுவும் தோல்வியடைந்தது.

இதன்பிறகு முஜாஹிதீன்கள் பிளவுபட்டு, பல்வேறு பிரிவினர் தத்தமது பகுதிகளுக்குப் பின்வாங்கினர்.

காபூலில் உணவுப் பற்றாக்குறையும் வறுமையும் அதிகரித்தன. 1990-ஆம் ஆண்டிற்குள் ஆப்கானிஸ்தானின் நிலைமை மோசமாக மாறியிருந்தது.

ஜனவரி 10 மதியம் 1:40 மணிக்கு, ஆப்கானிஸ்தானில் இருந்து ஏவப்பட்ட ஸ்கட் ஏவுகணை அட்டோக் மாவட்டத்தில் உள்ள ஹிசார் கிராமத்தில் விழுந்தது.

ஜூன் 14 அதிகாலை 2:00 மணிக்கு, ஒரு ஸ்கட் ஏவுகணை குர்ரம் ஏஜென்சியில் உள்ள டெடி மங்கலைத் தாக்கியதில் ஆப்கானிய அகதி காயமடைந்தார்.

ஜனவரி 10 மதியம் 1:40 மணிக்கு, ஆப்கானிஸ்தானில் இருந்து ஏவப்பட்ட ஸ்கட் ஏவுகணை அட்டோக் மாவட்டத்தில் உள்ள ஹிசார் கிராமத்தில் விழுந்தது.

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறிய பிறகு, முஜாஹிதீன்களுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான போர் தீவிரமடைந்தது (கோப்பு புகைப்படம்)

ஜூன் 26ம் தேதி மாலை 4:15 மணிக்கு, குர்ரம் ஏஜென்சியின் பெவார் கோட்டலில் ஒரு ஸ்கட் ஏவுகணை விழுந்ததில் நான்கு ஆப்கானிய குடிமக்கள் காயமடைந்தனர்.

செப்டம்பர் 13 அன்று குர்ரம் ஏஜென்சியின் ஷாஹ்தால் அருகிலும், நவம்பர் 20 காலை 10:35 மணிக்கு கைபர் ஏஜென்சியின் அவால் கான் அருகிலும் மேலும் சில ஸ்கட் ஏவுகணைகள் விழுந்தன. இந்தத் தாக்குதல்களில் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை.

நவம்பர் 28 மதியம் 3:40 மணிக்கு, ஆப்கானிஸ்தானில் இருந்து ஏவப்பட்ட இரண்டு ஸ்கட் ஏவுகணைகள் குர்ரம் ஏஜென்சியில் உள்ள டெடி மங்களைத் தாக்கின.

பாகிஸ்தான் மண்ணில் ஆப்கானிஸ்தான் நடத்திய மிகப்பெரிய மற்றும் கொடிய தாக்குதல் இதுவாகும். மூன்று ஆப்கானிய குடிமக்கள் உட்பட இருபத்தெட்டு பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 15 பேர் காயமடைந்தனர்.

மொத்தம் 17 ஏவுகணைகள் பாகிஸ்தானுக்குள் விழுந்ததில், 35-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். ஆப்கானிய அரசாங்கத்தின் தாக்குதல்கள் ஆப்கானிஸ்தானுக்குள்ளேயும் நிற்கவில்லை.

முஜாஹிதீன்களின் கூற்றுப்படி, 1991-ஆம் ஆண்டு ஏப்ரல் 21-ஆம் தேதி, வடகிழக்கு ஆப்கானிஸ்தானில் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த குனார் மாகாணத்தின் தலைநகரான அசாதாபாத் மீது நடத்தப்பட்ட மூன்று ஸ்கட் தாக்குதல்களில் 300-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் 400 முதல் 500 பேர் காயமடைந்தனர்.

சோவியத் படைகள் வெளியேறிய பிறகு, நஜிபுல்லாவின் அரசாங்கம் மூன்று ஆண்டுகள் நீடித்தது.

அந்த நேரத்தில் நடந்த போர் ஒட்டுமொத்த நாட்டையும் சீரழித்தது.

நஜிபுல்லா இறுதியாக 1992 ஏப்ரல் 16-ஆம் தேதி பதவியைத் துறந்தார்.

இதனைத் தொடர்ந்து, முஜாஹிதீன்களின் பல்வேறு பிரிவுகள் தங்களுக்குள் போரிடத் தொடங்கின. 1994 ஜனவரி முதல் 1995 பிப்ரவரி வரையிலான 13 மாதங்கள், காபூல் மீது பீரங்கிகள் மற்றும் ராக்கெட்டுகளால் தாக்குதல் நடத்தப்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cddn3repvg8o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.